search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Section"

    • பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார்
    • நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் 'லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்' என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார். இது காதல், நகைச்சுவை திரைப்படமாகும். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்தை 'செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ' மற்றும் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் மற்றும் விக்னேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில வாரங்களாக மலேசியா மற்றும் சிங்கப்பூரில் நடந்தது.இந்நிலையில்

    நயன்தாரா 2 மகன்களை கையில் வைத்திருக்கும் புகைப்படங்களையும், நயன்தாரா அவர்களுடன் விளையாடும் புகைப்படங்களையும் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பதிவில் விக்னேஷ் நேற்று பகிர்ந்தார். 

    "படப்பிடிப்பு பணிகள் காரணமாக வாரக்கணக்கில் குடும்பத்தினரிடம் இருந்து பிரிந்து இருக்கிறேன்". தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதை தவறவிட்டேன். விரைவில் தனது அன்பு குழந்தைகள், மனைவி நயன்தாராவை அரவணைக்க காத்திருக்கிறேன்" என குடும்பத்தை பிரிந்த ஏக்கத்தில் அவ்வாறு விக்னேஷ் பதிவிட்டு இருந்தார்.




    இந்நிலையில் நடிகை நயன்தாரா இன்று இணைய தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விக்னேஷ் - நயன்தாரா ஜோடியாக கட்டிப்பிடித்து அன்போடு தழுவும் படங்கள், இரட்டை குழந்தைகளை பாசத்துடன் கொஞ்சுவது போன்ற படங்களைப் பகிர்ந்துள்ளார். 

    நயன்தாரா வெளியிட்டுள்ள இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. படப்பிடிப்பிற்காக வீட்டை விட்டு பிரிந்து சென்ற கணவர் மீது நயன்தாரா தனது காதலை அதில் வெளிப்படுத்தி உள்ளார். நயன்தாரா இணையத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

    'சிங்கப்பூரில் இருந்து 20 நாடுகளுக்குப் பிறகு திரும்பிய உங்களை ( விக்னேஷ்) பார்த்தபோது நாங்கள் மூவரும் எப்படி உணர்ந்தோம் என்பதை விளக்க முடியவில்லை. நாங்கள் உங்களை மிகவும் தவறவிட்டோம். நான் உங்களை நேசிக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • விழிப்புணர்வு உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் நிலையத்தில் உள்ள பொது நாட்குறிப்புகள், வழக்கு சுற்று பதிவேடு, 7 ஆண்டுகள் நிலுவையில் உள்ள வழக்குகளின் கோப்பு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கோப்புகளை ஆய்வு மேற்கொண்டார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைபர் கிரைம் குற்றங்கள், பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    மேலும் சாலை பாதுகாப்பு விதிமுறைகள், போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு உள்ளி ட்டவற்றை மேற்கொள்ள வேண்டும் என போலீசாரிடம் அறிவுறு த்தினார். முன்னதாக தமிழ்நா டு காவல்துறை சார்பில் தியாகதுருகம் போலீஸ் நிலைய வளாகத்தில் உள்ள பல் பொருள் அங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா, நிலைய எழுத்தர் சீனிவாசன், தனிப்பிரிவு போலீசார் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது விரைந்து தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்ைக மனுக்களை பெற்றார்.

    இந்த கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திற னாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.

    இம்மனுக்களை மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

    இதில் தையல் எந்திரம் வேண்டி மனு அளித்த மனுதாரரின் மனுவை உடனடியாக பரிசீலனை செய்து பயனாளிக்கு மாவட்ட சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், தனித்துணை கலெக்டர் அனிதா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) முத்துக்கழுவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் வித்யா உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    ×