search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடல்நீர்"

    • பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
    • இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க 2003-ம் ஆண்டு நெம்மேலி மற்றும் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் தினமும் தலா 100 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

    இந்த 2 சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பெறப்படும் குடிநீர் சென்னையின் மொத்த குடிநீர் தேவையில் 30 சதவீதத்தை பூர்த்தி செய்து வருகிறது. இதனால் நெம்மேலியில் கூடுதலாக ரூ.1516.82 கோடி செலவில் 2-வது சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. தினமும் 15 கோடி லிட்டர் திறன் உடைய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக மிகப்பெரிய குழாய்கள் அங்கு பதிக்கப்பட்டு வந்தது. உவர்நீரை வெளியேற்றும் குழாயும் கடலில் பதிக்கப்பட்டன. இது மட்டுமின்றி சோழிங்கநல்லூரில் பெரிய அளவில் கீழ்நிலை நீர்த்தேக்கம் மற்றும் 48 கி.மீ. தூரம் வரை குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் அனைத்து பணிகளும் முடிந்து 4 மாதங்களுக்கு முன்பு பரீட்சார்த்த முறையில் சோதனை ஓட்டமும் தொடங்கியது.

    சோழிங்கநல்லூர், உள்ள கரம், ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்க்கட்டளை, மூவரசம்பேட்டை, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    இந்த பணிகள் அனைத்தும் இறுதிக்கட்டத்துக்கு வந்ததால் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் உயர் அதிகாரிகள் நெம்மேலிக்கு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலையின் பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டன. இதனால் வருகிற 24-ந்தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதை நேரில் வந்து தொடங்கி வைக்கிறார்.

    இதன்மூலம் தென்சென்னையில் பல்லாவரம் வரை 12 பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்களுக்கு கடல் குடிநீர் வினியோகிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏற்கனவே இ.சி.ஆர். பேரூரில் 40 கோடி லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் 3-வது திட்டப்பணிகள் ரூ..4,276.44 கோடியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தை 2026-ல் முடிக்க பணிகள் விரைவுப்ப டுத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.
    • திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன.

    சென்னை:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் ரூ.1,516.82 கோடிசெலவில் தினமும் 15 கோடி லிட்டர் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகளை சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மேலும் கடல்சார் பணிகள், கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த பணிகளை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார்.

    இந்த திட்டப்பணிகள் தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் 2-வது அலகின் கட்டுமான பணிகள் வேகமாக வருகின்றன. இந்த திட்டத்தில் கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக கடலில் 835 மீட்டர் குழாய் பதிக்கும் பணிகள் முடிந்துள்ளன. மீதமுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் குழாய் பதிக்கப்படும். இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உள்கொணரும் குழாயாகும்.

    மேலும் நிராகரிக்கப்பட்ட உவர் நீர் வெளியேற்றும் குழாய் 600 மீட்டர் நீளத்துக்கு கடலுக்கு அடியில் பதிக்கப்பட்டு உள்ளது. இன்னும் 36 மீட்டர் அளவுக்கு குழாய் பதிக்க வேண்டியுள்ளது. இந்த திட்டத்தின் அனைத்து பணிகளையும் ஜூலை மாதம் இறுதிக்குள் முடித்து சோதனை ஓட்டம் நடத்தப்படும்.

    இந்த கடல்நீரை குடி நீராக்கும் நிலையத்தில் இருந்து பெறப்படும் 15 கோடி லிட்டர் குடிநீர் வேளச்சேரி, ஆலந்தூர், பரங்கிமலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசம் பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம், பல்லாவரம், பழையமகாபலிபுரம் சாலை பகுதிகளுக்கு ஆகஸ்டு மாதம் முதல் வினியோகம் செய்யப்படும். இதன் மூலம் 9 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும்.
    • 3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.

    இந்த ஆலை கடந்த 2013-ம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வகையில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து திருவான்மியூர், பெருங்குடி, ஈஞ்சம்பாக்கம், பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் தற்போது ஓரளவு குடிநீர் பிரச்சினை குறைந்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக்காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது.

    ரூ.1,260கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் வைகயில் 2-வது புதிய ஆலை கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.

    தற்போது 2-வது ஆலை கட்டுமான பணிகள் 85 சதவீதம் முடிந்து உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்நிலையில் வரும் ஆண்டுகளில் சென்னையின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன 3-வது ஆலையை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர்நிலை ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும் பகுதி, மீன்வள பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்பட உள்ள 2-வது மற்றும் 3-வது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 சதவீத குடிநீர் தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, சூலேரிக்காட்டில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலையில் 2-வது ஆலை அமைக்கும்பணி முடியும் நிலையில் உள்ளது. சுமார் 85 சதவீத பணிகள் முடிந்து உள்ளது.

    எனவே இன்னும் 3 மாதத்தில் இந்த 2-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும். இங்கு தற்போது 3-வது ஆலை அமைக்க திட்டமிடப்பட்டு ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த பணி முடிய குறைந்தது 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும்.

    3-வது ஆலையில் சுமார் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. 2-வது, 3-வது ஆலை பயன்பாட்டுக்கு வரும்போது சென்னையின் குடிநீர் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்ய முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுகிறது.
    • 10 கி.மீ தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கொண்டல் தலைப்பி–லிருந்து உருவாகும் உப்பனாறு கொண்டல், வள்ளுவக்குடி, அகணி, சீர்காழி, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், எடமணல் திருநகரி, வழுதலைக்குடி வழியாக சென்று திருமுலைவாசலில் கடலில் கலந்து வருகிறது. இந்த உப்பனாறு மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் மேம்பட்டு வந்தது.

    இந்நிலையில் கோடை காலங்களில் கடல் நீர் உப்பனாற்று முகத்துவாரம் வழியாக 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு உப்புகுந்து நிலத்தடி நீர் முழுதும் பாதிக்கப்பட்டு உவர் நீராக மாறி வருகிறது.

    இதனால் சீர்காழி அருகே பனமங்கலம் பகுதியில் கடல் நீர் உட்புகுவதை தடுக்க அப்பகுதி மக்கள் ம.தி.மு.க மாவட்ட செயலாளர் மார்கோனி நிதியுதவியுடன் தற்காலிகமாக மண் அணை அமைத்து வருகின்றனர்.

    மழைக்காலங்களில் பெய்த மழை நீரால் நிலத்தடி நீர் தற்போது மேம்படுத்தப்பட்டுள்ள நிலையில் கோடைக்காலம் துவங்க உள்ளதால் கடல் நீர் உட்புகுந்து வருவதை தடுக்க மண் அணையை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இதன் மூலம் பனமங்கலம், துறையூர், கோடங்குடி, குமாரநத்தம், வரவுக்குடி, ஆதமங்கலம், கொண்டல், வள்ளுவக்குடி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கடல் நீர் உட்புகுவது தடுக்கப்–படுவதோடு நிலத்தடி நீர் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்–படுவதாக அப்பகுதி கிராம மக்கள், விவ–சாயிகள் தெரிவிக்கின்றனர்.

    பனமங்கலம் பகுதியில் அரசு நிரந்தரமாக தடுப்பணை அமைக்க வேண்டும், 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தடுப்பணை அமைத்திட வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும்.
    • தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது.

    சீர்காழி:

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் திருக்கழிப்பாலை -மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வலியுறுத்தி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் அளக்குடி பகுதியில் நேரில் சென்று கொள்ளிடம் ஆற்றில் பார்வையிட்டார்.

    அப்போது பொதுப்பணித் துறை அதிகாரியிடம் திட்ட வரைப்படத்தினை பார்வையிட்டு விவரம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கொள்ளிடம் ஆற்றில் திருக்கழிப்பாலை அளக்குடி கிராமங்களுக்கு இடையே கடல்நீர் உட்புகுவதை தடுப்பதற்கு தடுப்பணை கட்ட வேண்டும். இவ்வழியாக கடல் நீர் 22 கி.மீ உட்புகுந்துள்ளது. கோடை காலத்தில் நீர் நிலைகள் உப்பு நீராக மாறிவிடுகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த நீண்ட நாளாக வலியுறுத்தப்படுகிறது.

    இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தடுப்பணை கட்ட வலியுறுத்தினேன். அதன்படி இப்பகுதி ஆய்வு செய்யப்பட்டு ரூ.580 கோடியில் தடுப்பணை கட்ட அரசு பரிசீலனையில் உள்ளது. இதன் மூலம் 25 கிலோ மீட்டர் தண்ணீரை தேக்கிவைக்க முடியும். 200 கிராமங்கள் பயன் அடையலாம். அரசு உடனடியாக தடுப்பணை கட்ட வேண்டும்.காலநிலை மாற்றத்தினை எதிர் கொள்ளும் வகையில் அரசு திட்டங்கள் தயார் செய்து செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் அதிக அளவு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்றார்

    .டெல்லி நீர் மேலாண்மை ஆணையம் மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக திட்ட அறிக்கையைவிவாதிக்கும் வகையில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இந்த கூட்டம் வரும் 23ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதற்குள் தமிழக அரசு தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் சட்டரீதியாக இதற்கு தடை பெற வேண்டும். தமிழ்நாடு அரசின் அனுமதி இல்லாமல் காவிரிப்படுகையில் கர்நாடக அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும்.

    மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கர்நாடக பாஜக அரசுக்கு ஆதரவாக இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.2017ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்ட ரூ.430 கோடி அப்போதைய அ.தி.மு.க அரசால் ஒதுக்கப்ப–ட்டது. முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் தனது தொகுதிக்கு திட்டத்தை மாற்றி எடுத்து சென்றதாக குற்றச்சாட்டு உள்ளது. தற்போதைய ஆட்சியாளர்கள் உடனடியாக தடுப்பணை கட்டும் விவகாரத்தில் முக்கியத்துவம் அளித்து செயல்படுத்த வேண்டும். தடுப்பணை கட்ட தாமதித்தால் எனது தலை–மையில் போராட்டம் நடத்தப்படும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடப்பது தடுக்கப்பட வேண்டும் என்றார்.

    அப்போது பா.ம.க மாவட்ட செயலாளர் சித்தமல்லி.ஆ.பழனிசாமி, மாவட்ட தலைவர் ரெ.அன்ப–ழகன், மாநில இளைஞர் சங்க துணை செயலாளர் ஜி.வி.முருகவேல், ஒன்றிய கவுன்சிலர் சிவபாலன், ஒன்றிய செயலாளர்கள் பாலதண்டாயுதம், தியாகராஜன், குமார், நகர செயலாளர் சின்ணையன், செயற்குழு உறுப்பினர் தேனூர்.ரவிச்சந்திரன், நகர செயலாளர் சின்னையன், நீர்வளத்துறை காவிரி வடிநில கோட்ட உதவி செயற்பொறியாளர் கே.மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×