search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thambidurai"

    மேகதாது விவகாரத்தை மறைக்கும் விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் இணக்கமாக இருப்பதாக தம்பிதுரை குற்றம்சாட்டினார். #MakedatuIssue #Thambidurai
    புதுடெல்லி:

    கர்நாடக அரசின் மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராக மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்பிய அதிமுக எம்பிக்கள் 31 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து இன்று அதிமுக எம்பியும், துணை சபாநாயகருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக அதிமுக உறுப்பினர்கள் ஜனநாயக வழியில் போராடினார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை செவிசாய்க்கவில்லை.



    தமிழகத்தின் உரிமை காக்கப்படவேண்டுமானால், மேகதாது அணை கட்டப்படுவதை தடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடைக்காது. மேகதாது அணைத் திட்ட ஆய்வுப் பணிக்கு மத்திய நீர்வள ஆணையம் தந்த ஒப்புதலை திரும்ப பெற வேண்டும்.

    இதற்காக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்திய எம்பிக்களை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். இத்தகைய செயல் ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த போராட்டம் இதோடு நின்றுவிடாது. அவைக்கு வராவிட்டால்கூட பாராளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே தொடர்ந்து போராட்டம் நடத்துவோம்

    காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் பாராளுமன்றத்தில் இணக்கம் உள்ளது. இதைத் தான் கேம் பிக்சிங் என்பார்கள். மேகதாது விவகாரத்தை மறைக்கவே ரபேல் விவகாரத்தை காங்கிரஸ் எழுப்புகிறது. ரபேல் விவகாரத்திற்குப் பதிலளிப்பதுபோல் மேகதாது விவகாரத்தை பாஜக மறைக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MakedatuIssue #Thambidurai

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க.வுடன் அதிமுக, பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #bjp #parliamentelection
    கரூர்:

    கரூரில் இன்று உலக  முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக தெருமுனை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான்,சீனா நாடுகள் இந்திய ரூபாய் கள்ளநோட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விடுகிறார்கள். அந்த பணம் தான் தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை மத்திய அரசு தீவிரமாக கண் காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை நான் பாராட்டுகிறேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பான வெள்ளை அறிக்கையை தொழில்துறை அமைச்சர் சம்பத்திடம்தான் கேட்க வேண்டும். தேர்தல் நெருங்கும் போது கூட்டணி பற்றி முடிவு எடுக்கப்படும்.

    எனக்கு தெரிந்தவரை பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பா.ஜ.க. வுடன் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்த வில்லை. மேலும் கூட்டணி தொடர்பாக பா.ஜ.க., அ.தி.மு.க.வுக்கு எந்தவித நெருக்கடியும் அளிக்க வில்லை. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #bjp #parliamentelection
    மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறப்புக்கு காரணம் தி.மு.க.தான் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    கரூர்:

    கரூரில் நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மேகதாதுவில் அணை கட்டுவது தேவையற்ற ஒன்று. இது தொடர்பான வரைவு அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதித்தது புதிராகவே உள்ளது. இது குறித்து பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் குரல் எழுப்பி, தமிழக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவோம்.

    பெங்களூரு மக்களுக்கு தண்ணீர் வேண்டும் எனில், 2 மாநில எல்லையான ஒகேனக்கல்லில் அணை கட்டலாம். இதன் மூலம் மின்உற்பத்தியும் நடக்கும். ஆனால் அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் கட்சி மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை கையாள்கிறது. தி.மு.க. அந்த கூட்டணியில் இருக்கிறது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டு, மேகதாதுவில் அணை கட்டுவதை தடுப்போம் என தி.மு.க. கூறுவது வேடிக்கையாக உள்ளது.



    வருகிற பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அ.தி.மு.க. தலைமை கழகம் தான் முடிவு எடுக்கும். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்திய பிரதமரை தேர்வு செய்வதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமில்லை. பா.ஜ.க.வோ, காங்கிரசோ கனவில் கூட இனி தமிழகத்தினை ஆள முடியாது.

    கஜா புயல் பற்றி பாராளுமன்றத்தில் எடுத்துரைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அப்போது கஜா பாதிப்பின் முழு விவரத்தையும் எடுத்து கூறி நிவாரணம் கேட்போம். கஜா புயல் சேதத்தை பார்வையிட பிரதமர் ஏன் வரவில்லை? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்புகிறார். ஆனால் தேசிய கட்சி என்று சொல்கிற காங்கிரசின் தலைவரும், பிரதமர் வேட்பாளருமான ராகுல் காந்தி புயல் பாதிப்புகளை பார்வையிட வந்தாரா?.

    கருணாநிதி பிறந்த மண்ணான திருவாரூரில் புயல் பாதிப்பு பணிகளை மேற்கொள்ள மு.க.ஸ்டாலின் வந்தாரா?. தி.மு.க. தொடர்ந்த வழக்கே ஜெயலலிதாவின் இறப்புக்கு காரணம். அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ். பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருக்கும் போது அவதிப்பட்டார். பின்னர் வழக்கில் வெற்றி பெற்ற போதும் கூட, மேல்முறையீடு செய்து மீண்டும் அவரை சிறையில் அடைத்தனர். இதற்கெல்லாம் வருகிற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். #JayalalithaDeath #DMK #Thambidurai
    தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு எனவும் அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது எனவும் தம்பிதுரை எம்.பி. கூறியுள்ளார். #Thambidurai #ADMK
    பாராளுமன்ற மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. செய்தியாளர்களிடம் இன்று பேசும்பொழுது, தேசிய கட்சிகள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம் என்பது பகல் கனவு.  அவர்கள் கனவில் கூட தமிழகத்தை ஆள முடியாது என கூறினார்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வருவார் என்பதில் அ.தி.மு.க. முக்கிய பங்காற்றும்.  மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபொழுது அவதிப்பட்டார்.  அவருக்கு கர்நாடகாவில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி உரிய உதவிகளை செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.

    முன்னதாக, மேகதாது உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளுக்கும் திராவிட கட்சிகள் தான் காரணம் என்றும், இதுகுறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா? என மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சவால் விடுத்திருந்தார்.



    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய தம்பிதுரை, மேகதாது திட்டத்திற்கு அனுமதி அளித்தது யார்? என்னுடன் பொன்.ராதாகிருஷ்ணன் விவாதிக்க தயாரா? என்று பதில் சவால் விடுத்துள்ளார். #Thambidurai #ADMK
    நெஞ்சுவலியால் அப்போலோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ள மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital
    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. அவருக்கு அஞ்சலி செலுத்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில் தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. 

    இதையடுத்து நெஞ்சுவலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  



    இந்நிலையில்,  நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரையை  முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று இரவு நேரில் சந்தித்தனர். அப்போது அவரது உடல் நலம் குறித்து விசாரித்து அறிந்தனர். #Admk #Thambidurai #EdappadiPalaniswami #OPanneerselvam #ApolloHospital 
    பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. கூறினார். #Thambidurai #PonRadhakrishnan
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. சுற்றுப்பயணம் செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்கள் வாங்கி வருகிறார்.

    இந்த நிலையில் இன்று 5-வது கட்டமாக மருங்காபுரி ஒன்றியம் கன்னி வடுகப்பட்டி பகுதியில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் தம்பிதுரை மற்றும் ரத்தினவேல் எம்.பி., கலெக்டர் ராசாமணி ஆகியோர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர். அப்போது தம்பிதுரை எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.18 ஆயிரம் கோடி நிதியை தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் நான் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னும் வழங்கவில்லை. மத்திய அரசு தருகிற நிதியும் மக்களின் வரிப்பணம்தான். எனவே திட்டப்பணிகளை நிறைவேற்ற காலம் தாழ்த்தாமல் நிதியை வழங்கவேண்டும்.

    பல்வேறு திட்டங்களை அறிவிக்கும் மத்திய அரசு அதற்கான நிதியை ஒதுக்கவில்லை. ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்ற திட்டத்தை அறிவித்தது. ஒரு கிராமத்தை தத்தெடுக்க வேண்டும் என்றால் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும்.

    அப்படி ஒதுக்கும் பட்சத்தில் பாராளுமன்ற தொகுதியின் மற்ற பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்ற நிதி பற்றாக்குறை ஏற்படும். எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு செயல்பட வேண்டும். நிதி வரவில்லை என்றாலும் தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது.



    இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை கூறும் என்னை பா.ஜ.க.வை விமர்சிக்கிறேன் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறி, என்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். சுய பரிசோதனை என்ன? அனைத்து பரிசோதனையும் செய்ய தயார். அவரும் நாடு முன்னேற வேண்டும் என்று பாடுபடுகிறார். நானும் அது போல்தான். அவர் ஒரு கட்சியில் இருக்கிறார். நானும் ஒரு கட்சியில் இருக்கிறேன். மற்றப்படி தனிப்பட்ட முறையில் எங்களுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாக கருதவில்லை. தி.மு.க. வின் உதவியுடன் தான் தமிழகத்தில் சி.பி.ஐ. உள்ளிட்ட சோதனைகள் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Thambidurai #PonRadhakrishnan #ADMK #BJP

    திமுக ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #Thamidurai #DMK #ADMK
    கரூர்:

    கரூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட் அரவக்குறிச்சி பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மனு பெற்றார்.

    அப்போது அவர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூர் பாராளுமன்ற தொகுதியில் 40 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. இதுவரை 10 ஆயிரம் கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொது மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்றுள்ளேன். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைத்து கிராம மங்களுக்கும் செல்வேன்.

    இந்த ஆட்சி நல்லாட்சி என்பதில் மக்கள் மிகுந்த நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இன்னும் 3 ஆண்டு காலம் ஆட்சி சிறப்பாக செயல்படும். இதில் பல்வேறு நல்ல திட்டங்களும் செயல்படுத்தப்படும் என மக்கள் நம்புகிறார்கள்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனநாயக முறைப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சி இருக்கும்போது எந்தெந்த திட்டங்கள் மக்கள் ஒப்புதலுடன் நிறை வேற்றப்பட்டது என அவர் விளக்க வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு தி.மு.க. ஆட்சியின்போது நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஒப்புதலுடன் தான் அவர்கள் நிலத்தை வழங்கினார்களா? குறை சொல்ல வேண்டும் என்பதற்காக புழுதிவாரி தூற்றுவது ஏற்புடையது அல்ல.



    கவர்னர் அலுவலகத்தில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில்தான் நக்கீரன் கோபால் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசியல் அமைப்பு தலைமை அங்கீகாரம் படைத்தவர் கவர்னர். அவரைப் பற்றி கருத்து கூறவோ, விமர்சிக்கவோ விரும்பவில்லை.

    ஆனால் அதே நேரத்தில் கவர்னர் புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? கருத்து சுதந்திரம் இந்த ஆட்சியில் முழுமையாக இருக்கிறது. அதற்காக அந்த சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தகூடாது.

    இந்த ஆட்சி யாருடைய குரல் வளையையும் நசுக்கவில்லை. இந்த அரசை செயல்படாத அரசு என்று கூறி வருபவர்கள் இப்போதாவது நாங்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

    ரபேல் விமான ஒப்பந்தத்தை பொறுத்தவரை பிரான்ஸ் மற்றும் இந்திய நிறுவனங்கள் புரிந்துணர்வு செய்துகொண்ட ஒப்பந்த அடிப்படையில்தான் வாங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

    தற்போது வரை காங்கிரஸ் கூட்டணியில் தான் தி.மு.க. அங்கம் வகித்து வருகிறது. ஆனால் இதுவரை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தியை பிரதமர் ஆக்குவோம் என்று கூறவில்லை. பிரதமர் வேட்பாளராக நிறுத்துவோம் என்று கூட தெரிவிக்கவில்லை. ஏனென்றால் பா.ஜ.க.வுடன் தி.மு.க. மறைமுக தொடர்பு வைத்துள்ளது. அவர்களுடன் கூட்டணி வைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #MKStalin
    அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல என்றும் எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு என்றும் தம்பிதுரை தெரிவித்துள்ளார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    கரூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் பாராளுமன்ற தொகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டு மனுக்கள் பெற்று வருகிறார். இன்று அவர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள காகித ஆலை பகுதியில் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த நிதியும் மத்திய அரசின் கைக்குள் சென்று விட்டது. ஜி.எஸ்.டி. வரிக்கு அ.தி.மு.க. கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    அதனால் வியாபாரிகள் மற்றும் ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெட்ரோல்- டீசல் விலை உயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பெட்ரோல்- டீசல் விலையை ரூ.10 வரை மத்திய அரசு குறைத்திருக்க வேண்டும்.


    அ.தி.மு.க.வை பார்த்து அணையும் விளக்கு என்று மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. அணையும் விளக்கு அல்ல. எல்.இ.டி. விளக்கு போல் 5 வருட கியாரண்டியுடன் பிரகாசமாக எரியும் விளக்கு.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எத்தனை அணிகள் போட்டியிட்டாலும் அ.தி.மு.க.வுக்கு கவலையில்லை. 40 தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #Thambidurai #DMK #MKStalin
    தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார். #thambidurai #tngovt ##methaneproject
    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மு. தம்பித்துரை, அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மக்களிடம் நேரில் சென்று குறைகள் கேட்டு மனுக்கள் பெற்று வருகின்றனர். இன்று கரூர் மூக்கினாங்குறிச்சி பகுதியில் மனுக்கள் பெற்ற போது மு.தம்பித்துரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

    மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் 2 இடங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்வது அவர்களாக இருந்தாலும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டியது தமிழக அரசு தான். தமிழகத்தை பொறுத்தமட்டில் விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்திற்கும் அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது. ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்வதில் கவர்னர் விரைவில் நல்ல முடிவு எடுப்பார் என்றார். 

    2016 சட்டமன்ற தேர்தலின் போது அரவக்குறிச்சியில் தேர்தலை நிறுத்த நீங்கள் (மு.தம்பித்துரை) தான் காரணம் என முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி குற்றம் சாட்டியுள்ளாரே? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், தேர்தல் கமிஷன் எனக்கு தனி அதிகாரம் எதுவும் அளிக்கவில்லை. ஒருவேளை அப்படி இருக்கிறதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த தேர்தலை பொறுத்தவரை தேர்தல் கமிஷன்தான் தேர்தலை நிறுத்தியது.

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #tngovt ##methaneproject
    சசிகலாவை பார்க்க தம்பிதுரை , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார் என்று செந்தில்பாலாஜி கூறினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    கரூர்:

    கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தினகரன் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜி க.பரமத்தியில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நான் வாக்கு சேகரிக்க சென்ற போது தொகுதி மக்கள் முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற சட்டமன்றத்தில் வலியுறுத்தினேன். சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், துறை செயலர்களுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் நான் அமைச்சராக இருந்த போது கரூர் மாவட்டத்திற்கு 5ஆண்டுகளில் ரூ.500 கோடிக்கு மேல் பல்வேறு சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்பட்டது.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் யார் முதல்வராக வேண்டும் என்ற நிலை ஏற்பட்ட போது சசிகலா, டி.டி.வி.தினகரன் வழி காட்டுதல்படி எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக முடிவு செய்தோம். அவரை முதல்வராக தேர்வு செய்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. விரைவில் நல்ல தீர்ப்பு வரும். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை மாற்றி விட்டு டி.டி.வி. தினகரனை முதல்வர் ஆக்குவோம். அதன்பின்னர் தொகுதி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்.


    அ.தி.மு.க. ஆட்சியின் போது க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் மாநில அரசு மூலம் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வர முயற்சித்த போது, தற்போதைய துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அரசிடம் இருந்து ரூ.1000 கோடி நிதி பெற்று தருவதாக கூறினார். இதனால் நான் மாநில அரசு மூலம் கொண்டு வருவதற்கான முயற்சியை கைவிட்டேன். ஆனால் இப்போது வரை அந்த நிதியை அவர் பெற்றுத்தரவில்லை.

    எவ்வளவோ இடைஞ்சல்களுக்கு மத்தியில் 2 முறை நீதிமன்றம் சென்று இந்த உண்ணாவிரதம் நடைபெற்றுள்ளது. இது அறவழி போராட்டம். இந்த உண்ணாவிரதம் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் உண்ணாவிரத த்தில் அவர் பேசியதாவது:-

    ஆர்.கே.நகர் தேர்தலில் முதன் முதலில் டி.டி.வி. தினகரன் போட்டியிட்ட போது தேர்தலை நிறுத்த எடப்பாடி பழனிச்சாமியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் சதி செய்தனர். ஏனென்றால் தினகரன் வெற்றி பெற்று முதல்வராகி விடுவாரோ? என்று எண்ணி அவர்கள் இந்த சதி செயலை செய்துள்ளனர்.

    இதற்காக ஆர்.கே. தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததாக அவர்களாகவே ஒரு துண்டு சீட்டை தயார் செய்து தேர்தலை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு நடைபெற்ற தேர்தலில் சூழ்ச்சிகளை முறியடித்து டி.டி.வி.தினகரன் வெற்றி பெற்றார். அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் எத்தனையோ பைல்கள் இருக்கும். ஆனால் பணப் பட்டுவாடா செய்ததற்கான துண்டு சீட்டு மட்டும் கிடைத்தது எப்படி என்று தெரியவில்லை. எனவே இதில் சதி நடந்துள்ளது.

    தமிழகத்தில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது எதிர்க்கட்சியினரின் கோரிக்கைகளை ஏற்று அதனை நிறைவேற்றினார். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அரவக்குறிச்சி தொகுதியை புறக்கணித்து வருகிறது.


    சிறையில் இருக்கும் சசிகலாவை பார்க்க பாராளுமன்ற துணை சபாநாயகர் , ஒரு எம்.பி. மூலம் தூது விட்டுள்ளார். ஆனால் சசிகலா, டி.டி.வி. தினகரனை சந்திக்கும்படி தெரிவித்துள்ளார். இதையடுத்து தினகரனிடம் பேசிய தம்பிதுரை, இரவில் வந்து சந்திக்க வருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் காலையில் என்னை சந்திக்க வாருங்கள். சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

    தினகரன் அ.தி.மு.க. வையும், சின்னத்தையும் கைப்பற்றி விடுவார் என்பதால், இப்போதே தம்பிதுரை துண்டு போட்டு வைத்துக்கொள்ள முயற்சிக்கிறார். இனி அவர் கரூர் தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் பெற முடியாது.

    தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய மக்களை உயிர்பலி வாங்கிய துரோகி எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்கிறேன். இதற்காக என் மீது எந்த வழக்கு வேண்டுமென்றாலும் தொடரட்டும். அதனை சந்திக்க தயாராக உள்ளேன். 

    இவ்வாறு அவர் பேசினார். #senthilbalaji #sasikala #thambidurai #dinakaran

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது என்று தம்பிதுரை கூறினார். #thambidurai #aimshospital

    கோவை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழர்களின் மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். என்றென்றும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் நிலைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா அமையும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது.

    விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நலனையும், தமிழக விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக அ.தி.மு.க. இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்றார். #thambidurai #aimshospital

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு எதிராக பாராளுமன்றத்தில் அதிமுக எம்பிக்கள் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது என்று தம்பிதுரை எம்.பி. கூறினார். #thambidurai #parliament #rajivkillers

    கரூர்:

    கரூர் சேங்கலில் இன்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் கூறியதாவது:-

    குற்றச்சாட்டுக்கு உள்ளான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் நிற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை குற்றப் பின்னணி உள்ள அரசியல்வாதிகள் அதிகம் கிடையாது என்பது எனது கருத்து.

    பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். விலை உயர்வை ஏற்றுக் கொள்ள முடியாது. முந்தைய காங்கிரசின் தவறான கொள்கையால் இந்த விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. அதே கொள்கையைத்தான் இப்போதைய மத்திய அரசும் கடைபிடிக்கிறது.


    தனியார் வசமிருக்கும் விலை நிர்ணய உரிமையை ரத்து செய்ய வேண்டும். இது தொடர்பாக பாராளு மன்றத்தில் குரல் கொடுப்போம். இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. போராட்டம் நடத்துவது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முடிவு செய்வார்கள். என்னை பொருத்த மட்டில் 50 எம்.பி.க்கள் இருக்கிறோம். பாராளுமன்றத்தில் போராடினாலே விலை குறைய வாய்ப்புள்ளது. அதுவே போதும்.

    மத்தியில் காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சியின் போது, இலங்கையில் ஈழத்தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னர், இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சே கலந்து கொண்டார். தற்போது போருக்கு இந்தியா உதவியதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே இதற்கு காரணமான காங்கிரஸ்-தி.மு.க. கட்சியினர் மீது போர் குற்ற நடவடிக்கை எடுக்க மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். 

    ராஜீவ்காந்தி மாபெரும் தலைவர். அவர் கொலை செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. இருப்பினும் குற்றவாளிகள் 27 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து விட்டார்கள். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். அவரின் வழியில் தற்போதைய அரசும் , குற்றவாளிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார். #thambidurai #parliament #rajivkillers

    ×