என் மலர்
நீங்கள் தேடியது "பாராளுமன்றம்"
- தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?
- தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?
இன்று நடைபெற்ற பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் எந்தெந்த விவகாரங்கள் குறித்து உரையாற்றினார் என்பது குறித்து திமுக பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியதாவது:-
1. நெல் ஈரப்பதத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த ஒன்றிய அரசின் குழுவின் அறிக்கை மீதான் நடவடிக்கை என்ன?
2014ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையிலான ஈரப்பதத்தின் சதவீதம் குறித்த கொள்கை முடிவின் விவரங்கள் மற்றும் கொள்முதல் செய்யும் போது நெல்லில் உள்ள ஈரப்பதத்தின் விவரங்கள் கேட்டு திமுக மக்களவை உறுப்பினர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கணபதி ராஜ்குமார் மற்றும் தங்க தமிழ்செல்வன் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:
இந்த பருவத்தின் தீவிர மழை மற்றும் புயல்களை கருத்தில்கொண்டு நெல் கொள்முதல் ஈரப்பத விதிமுறைகளில் தற்காலிக தளர்வுகளை அரசாங்கம் வெளியிட்டுள்ளதா?
திருத்தப்பட்ட ஈரப்பத வரம்பு(கள்), செல்லுபடியாகும் காலம் மற்றும் தளர்வு பொருந்தும் மாநிலங்கள்/மாவட்டங்கள் யாவை?
தானியங்களின் தரத்தைப் பாதுகாக்கவும் சேமிப்பு/போக்குவரத்து உதவிகள் வழங்கவும் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அறுவடை செய்யப்பட்ட பயிர்களை ஆய்வு செய்வதற்காக ஒன்றிய அரசு அனுப்பிய மூன்று குழுக்கள் தமிழ்நாட்டில் உள்ள DPCகள் மற்றும் பண்ணைகளில் சேகரித்த நெல் மாதிரிகளின் ஆய்வறிக்கை மற்றும் அரசு அதன்மீது எடுத்துள்ள நடவடிக்கை என்ன?
2. தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகள் குறைந்து வருகின்றனவா?
கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும், குறிப்பாக தமிழ்நாட்டில், தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலி (AIR) சேவைகளை விரிவுபடுத்துவதற்காக அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து மக்களவையில் திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி எழுப்பினார்.
கிராமப்புறங்கள், மலைப்பகுதி, கடலோர மற்றும் எல்லைப் பகுதிகளில் முழுமையாக வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் கிடைக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை?
தமிழ்நாட்டில் பிரசார் பாரதியின் கீழ் புதிய டிரான்ஸ்மிட்டர்கள், கோபுரங்கள், டிஜிட்டல் ஸ்டுடியோக்கள் மற்றும் எஃப்.எம். அலைவரிசைகளை நிறுவியதன் தற்போதைய நிலை என்ன?
தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் தமிழ் உட்பட மற்ற பிராந்திய மொழி ஒளிபரப்பை விரிவுபடுத்த அரசாங்கம் திட்டமிடாதது ஏன்?
கல்வி, விவசாயம், கலாச்சாரம் மற்றும் அவசரகாலத் தொடர்புத் தேவைகளுக்காக பொது ஒலிபரப்பை அனைவரும் பயன்படுத்துவதை உறுதிசெய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாவை? என்று அவர் கேட்டுள்ளார்.
3. தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களின் விரிவாக்கம் செயல்படுத்துவது எப்போது?
நாடு முழுவதும் பசுமை ஹைட்ரஜன், கடல்சார் காற்றாலை மற்றும் சேமிப்பு வசதியுடன் கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை விரிவுபடுத்த அரசாங்கத்திடம் உள்ள திட்டங்கள் குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் செல்வம் கேள்வி எழுப்பினார்கள். அதன் விவரங்கள்:
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டில் பசுமை ஹைட்ரஜன் மையங்கள், கடல்சார் காற்றாலைப் பண்ணைகள் அல்லது எரிசக்தி சேமிப்பு வசதிகளை நிறுவுவதற்கு ஒன்றிய அரசு முடிவு செய்யப்பட்டுள்ளதா?
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இதுபோன்ற பசுமை ஹைட்ரஜன் அல்லது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சேமிப்புத் திட்டங்களுக்காக சாத்தியக்கூறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?
இதுபோன்ற திட்டங்களை நிறைவு செய்வதற்கும், விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கம் ஏதேனும் காலக்கெடு அல்லது செயல்திட்ட இலக்குகளை நிர்ணயித்துள்ளதா?
4. அங்கன்வாடிப் பணியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துக!
ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (ICDS) திட்டம் மற்றும் மிஷன் போஷன் 2.0 திட்டத்தின்கீழ் அங்கன்வாடிப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்துவது குறித்து ஒன்றிய அரசின் திட்டம் என்ன என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.
கடைசியாக மதிப்பூதியம் உயர்த்தப்பட்ட தொகையின் விவரங்கள், 2021 ஆம் ஆண்டு முதல் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட தேசிய அளவிலான விருதுகளின் விவரங்கள் குறித்தும் கேட்டுள்ளார்.
மேலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள கூடுதல் வேலைகளான தரவு உள்ளீட்டுப் பணிச்சுமை குறித்து அரசு ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கென பிரத்யேகமான குறை தீர்க்கும் அமைப்பு உருவாகக் வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
5. கள்ளக்குறிச்சியில் தண்டவாளங்களை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் மின்மயமாக்கல், சிக்னல் அமைப்புகளின் மேம்பாடுகள் மற்றும் தண்டவாளங்களை புதுப்பித்தல் செய்யப்பட்ட இரயில் தண்டவாளங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை திமுக மக்களவை உறுப்பினர் மலையரசன் கேட்டுள்ளார்.
தண்டவாளங்களை மேம்படுத்தும் பணிகள் நடந்தபோது அதற்குப் பின்னரும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் விபத்துக்களைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் என்ன? நீளமான பற்றவைக்கப்பட்ட தண்டவாளங்கள், அதிவேகத் தண்டவாளக் கண்காணிப்பு மற்றும் தானியங்கித் தண்டவாள ஆய்வு அமைப்புகள் போன்ற நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றனவா?
மேம்படுத்தப்பட்ட வழித்தடங்களில் வேகத்தையும் சரக்கு ஏற்றிச் செல்லும் திறனையும் மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்த விவரங்கள்? மற்றும் மேம்படுத்தப்பட்ட தண்டவாளங்களைப் பராமரித்தல் மற்றும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்வதற்கான திட்டங்கள் குறித்த விவரங்களையும் மலையரசன் எம்.பி. கேட்டுள்ளார்.
6. தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு என்ன?
தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களின் விவரங்கள் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
நிலுவையில் உள்ள இரயில்வே திட்டங்களுக்காக அனுமதிக்கப்பட்ட நிதியின் அளவு மற்றும் கடந்த மூன்று ஆண்டுகள் மற்றும் நடப்பு ஆண்டில் விடுவிக்கப்பட்ட நிதிகளின் விவரங்கள், திட்டங்களை முடிப்பதற்கான காலக்கெடு மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பெறப்பட்ட இரயில்வே திட்டங்களுக்கான முன்மொழிவுகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?
7. பேரிடர் காலத்தில் தொடர்ச்சியாக தொலைத்தொடர்பு சேவைகள் பெறுவதற்கான வழிகள் என்ன?
தொலைத்தொடர்பு வலையமைப்பில் பேரிடர் அபாயத்தைத் தாங்கும் திறனுக்காகச் செயல்படுத்தப்பட்டுள்ள நெறிமுறைகள் மற்றும் அமைப்புகளின் விவரங்கள் குறித்து திமுக எம்.பி. அருண் நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில், பிராந்திய வாரியாக நடத்தப்பட்ட பேரிடர் தாங்கும் திறன் ஒத்திகைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மற்றும் இத்துறையில் மேம்பட்ட பேரிடர் மேலாண்மைக்காக உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கவும் முன்மொழியப்பட்ட நடவடிக்கைகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
8. இரயில்வேயில் பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் என்ன?
பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக தேசிய ரயில்வே மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் அதிவேகப் பாதைகள், சரக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழித்தடங்களுக்கான கோரிக்கைகள்மீது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து தருமபுரி அ. மணி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்திற்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் வழித்தடங்களின் விவரங்கள், அவற்றின் பாதை அமைப்பு, உத்தேச செலவு மற்றும் தற்போதைய நிலை ஆகியவையின் விவரங்கள் என்ன? இந்த மாவட்டங்களில் அதிவேக/சரக்கு போக்குவரத்திற்கான வழித்தடங்களைக் கண்டறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதா? மேற்கண்ட மாவட்டங்களில் ரயில்வே பாதுகாப்பு, நவீன சிக்னல் அமைப்புகள் மற்றும் தண்டவாள மேம்பாட்டை மேம்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் யாவை? மற்றும் இவை முடிவுக்கு வரும் காலக்கெடு என்ன எனவும் அவர் கேட்டுள்ளார்.
9. கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா NH-36 சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்
தமிழ்நாட்டின் டெல்டா பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணத்தால் தேசிய நெடுஞ்சாலை-36 (அல்லது அதன் தொடர்புடைய பகுதி) உட்பட பல நான்கு வழி நெடுஞ்சாலைப் பகுதிகள் கட்டமைப்பு சேதம், விரிசல்கள் மற்றும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதை குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் எம்.பி. கேள்வி எழுப்பினார்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளுக்கும் உடனடி ஆய்வு மற்றும் சேத மதிப்பீட்டிற்கு உத்தரவிட வேண்டும் என்றும் தொடர்ச்சியான சேதங்களைத் தடுக்க, இந்தச் சாலைகளைச் சீரமைத்து, காலநிலைக்கு தகுந்தவாறு மாற்றுவதற்கான திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.
பாதுகாப்பான இணைப்பை உறுதி செய்வதற்கும், உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்கும், டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் பாதிக்கப்படும் நெடுஞ்சாலைப் பகுதிகளுக்கு சிறப்பு நிதி அல்லது முன்னுரிமை அடிப்படையில் பழுதுபார்க்க அமைச்சகம் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
10. தமிழ்நாட்டிற்கு எதிராக இருக்கும் தேசிய கல்விக் கொள்கை – ஒன்றிய அரசு திருத்தம் செய்வது எப்போது?
தேசிய கல்விக் கொள்கையின் (NEP) சில விதிகள் தமிழ்நாட்டின் பாடத்திட்ட வடிவமைப்பு, மொழி கொள்கை மற்றும் உள்ளூர் கல்வி முன்னுரிமைகள் ஆகியவற்றிற்கு எதிராக இருப்பது குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு கேள்வி எழுப்பியுள்ளார்.
மாநில சுயாட்சிக்கு ஆபத்து ஏற்படும் வகையில் உள்ள இந்த விசயங்கள் தொடர்பாக தமிழ்நாடு அரசு கொடுத்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை என்ன? ஒன்றிய மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான அதிகார சமநிலையை மதிக்கும் அதே வேளையில், தேசிய கல்விக் கொள்கையானது கூட்டாட்சி அமைப்புடன் ஒத்துப்போவதை உறுதி செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் என்ன? என்றும் டாக்டர் கனிமொழி சோமு எம்.பி. கேட்டுள்ளார்.
11. பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களுக்கான கவுன்சலிங் வழங்க நடவடிக்கை என்ன?
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ள சிறுவர்கள், சிறுமிகள், மாற்றுப் பாலினத்தவர் மற்றும் பாலின அடையாளத்திற்கு உட்படாத மாணவர்களின் பாலினம் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிறதா என திமுக மாநிலங்களவை உறுப்பினர் ராஜாத்தி சல்மா கேள்வி எழுப்பினார்.
நாடு முழுவதும் பள்ளி அளவில் மாற்றுப் பாலின மாணவர்களுக்காக அரசாங்கம் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனை வழிமுறைகள் வழங்க உதவி மையங்களை உருவாக்குகிறதா? என்றும் பள்ளிகளில் மாற்றுப் பாலின மாணவர்களது குடும்பத்தினருக்கான மனநல ஆலோசனைகளை வழங்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் யாவை? எனவும் அவர் கேட்டுள்ளார்.
- இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
- பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
டெல்லியில் அமைந்துள்ள பாராளுமன்ற கட்டிடம் மீது கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் நடத்திய இந்த தாக்குதலில் போலீசார், பாதுகாப்புப்படையினர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த நிகழ்வு வருடந்தோறும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில் தாக்குதலில் வீர மரணடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்பட மூத்த தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
தாக்குதல் நினைவாக பாராளுமன்றத்தில் அமைக்கப்பட்ட நினைவிடத்தில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் உள்பட பலரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
- ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் வலியுறுத்தினார்.
- மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும்
கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த், இன்று அம்மாவட்டத்தின் மீனவ சமூகங்களைப் பாதிக்கும் அவசரப் பிரச்சினைகளை எழுப்பி, அதற்கு உடனடியாக மத்திய அரசு தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் பேசிய அவர், "தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் நிலவும் பாதுகாப்பு நெருக்கடி, நம்பகமான ஆழ்கடல் தகவல் தொடர்பு அமைப்பு இல்லாதது மற்றும் தற்போதைய கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள்" ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
மீன்பிடித்தலுக்கும் விவசாயத்திற்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளைச் சட்டங்கள் பெரும்பாலும் அங்கீகரிப்பதில்லை என்றும், இது முரண்பாடுகளை உருவாக்கி கடலோரக் குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்கு அச்சுறுத்தலாக அமைகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் மீனவ சமூகங்களின் தனித்துவமான சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் யதார்த்தங்களை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இதற்காக கடல்சார் விஞ்ஞானிகள், சமூகப் பொருளாதார மற்றும் சட்ட வல்லுநர்கள், கடலோர பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் மக்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு உயர்நிலைக் நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று விஜய் வசந்த் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
அந்தக் குழுவானது மீன்பிடி மற்றும் விவசாய வாழ்வாதாரங்கள் குறித்து ஒரு ஆழமான ஆய்வை நடத்த வேண்டும். தற்போதுள்ள கடல்சார் விதிமுறைகளை மறுஆய்வு செய்ய வேண்டும், மேலும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக அறிவியல் அடிப்படையிலான, பங்கேற்பு சீர்திருத்தங்களை முன்மொழிய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு நீண்ட கால செயல் திட்டம் அவசியம் என்றும், கடலோர வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதிலும் கடல் சுற்றுச்சூழல் அமைப்பைப் பேணிப் பாதுகாப்பதிலும் அக்குழுவின் பரிந்துரைகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
- பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?
- ராகுலின் வெளிநாட்டு பயணத்தை விமர்சித்த பாஜகவுக்கு பிரியங்கா காந்தி பதிலடி
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது.
பாஜகவின் விமர்சனங்களுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "பிரதமர் மோடி தனது வேலை நாட்களில் பாதியை வெளிநாட்டு பயணங்களிலேயே கழிப்பவர். பிரதமரின் பயணங்கள் மீது வராத விமர்சனம், ராகுல் காந்தி மீது மட்டும் வருவது ஏன்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 15-ந்தேதி ஜெர்மனி புறப்பட்டு செல்கிறார். 20-ந்தேதி வரை அவர் ஜெர்மனியில் இருப்பார்.
இந்திய காங்கிரசின் அயல நடத்தும் விழாவில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். வருகிற 17-ந்தேதி அவர் பெர்லினில் புலம் பெயர்ந்த இந்தியர்களை சந்திக்கிறார்.
அதோடு ஐரோப்பிய நாடுகளில் உள்ள அனைத்து காங்கிரஸ் வெளிநாட்டு தலைவர்களையும் ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அயலக காங்கிரசில் அதிக அளவில் உறுப்பினர்களை இணைப்பது, அமைப்பை வலுப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்துகிறார். இந்த பயணத்தின்போது ஜெர்மனி மந்திரிகளையும் ராகுல்காந்தி சந்திக்கிறார். அவருடன் காங்கிரசின் அயலக அணி தலைவர் சாம் பிட்ரோவும் உடன் செல்கிறார்.
இந்த நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் ராகுல்காந்தி ஜெர்மனி பயணம் மேற்கொள்வதை பா.ஜ.க. விமர்சித்துள்ளது. இது குறித்து பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-
வெளிநாட்டு நாயகன் மீண்டும் தன்னால் முடிந்ததை செய்கிறார். வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். பாராளுமன்ற கூட்டத் தொடர் வருகிற 19-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஆனால், ராகுல் காந்தி வருகிற 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை ஜெர்மனி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் ஒரு பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர்-சுற்றுலாத் தலைவர். பீகார் தேர்தலின்போதும் அவர் வெளிநாட்டிலும், பின்னர் வனச்சவாரியும் மேற்கொண்டார்.
இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.
- வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
- இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி பாராளுமன்றத்தின் சிறப்பு விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவையில் வந்தே மாதரம் பாடல் சிறப்பு விவாதத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
மக்களவையில் விவாதத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* புனித பாடல் குறித்த விவாதத்தை தொடங்கி வைப்பதில் பெருமை அடைகிறேன்.
* இந்திய நாட்டின் விடுதலைக்கு முக்கியப் பங்காற்றிய பாடல் வந்தே மாதரம்.
* வந்தே மாதரம் என்பதற்கு தாய் மண்ணே தலை வணங்குகிறேன் என்பது பொருள்.
* தலைமுறைகளைக் கடந்து உத்வேகம் அளித்து வருகிறது வந்தே மாதரம் பாடல்.
* வந்தே மாதரம் பாடலில் நூற்றாண்டு விழா, நெருக்கடி நிலையின்போது தற்செயலாக அமைந்து விட்டது.
* வந்தே மாதரம் பாடலால் தான் இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தது.
* இந்த விவாதத்தின் மூலம், எதிர்கால சந்ததியினர் வந்தே மாதரம் குறித்து கற்பிக்கப்படுவர்.
* இந்தியாவின் போர் முழக்க பாடலாக வந்தே மாதரம் இருக்க வேண்டும்.
* God Save the Queen பாடலை இந்தியர்கள் பாட வேண்டும் என பிரிட்டிஷார் விரும்பினர்.
* பிரிட்டிஷாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வந்தே மாதரம் பாடல் அமைந்தது.
* இந்தியர்களின் உறுதியை பறைசாற்றும் பாடலாக வந்தே மாதரம் விளங்குகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுகிறது.
- பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்
பரபரப்பான அரசியல் சூழலில் பாராளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் கடந்த 1 ஆம் தேதி தொடங்கியது. வருகிற 19-ந் தேதி வரை இந்த கூட்டம் நடைபெறுகிறது.
SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் சில நாட்களுக்கு பாராளுமன்றம் முடங்கியது. திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்றது.
இந்நிலையில், நாட்டின் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு இன்று கொண்டாடப்படுவதால் அதன் வரலாறு குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் நடைபெறுகிறது.
'வந்தே மாதரம்' இயற்றப்பட்டதன் 150வது அண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவையில் பிரதமர் மோடி இன்று 10 மணி நேர சிறப்பு விவாதத்தை தொடங்கி வைத்து உரையாற்ற உள்ளார்
இதன் மூலம் வந்தே மாதரம் பாடல் குறித்து பல்வேறு முக்கியமான, அறியப்படாத தகவல்கள் தெரியவரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வந்தே மாதரம் பாடலில் இருந்து முக்கிய வரிகள் கடந்த1937-ம் ஆண்டு நீக்கப்பட்டதே இந்தியாவின் பிரிவினைக்கு காரணம் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
- மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் தொடர்பான கேள்விக்கு மத்திய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில்,
* ரெயில் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏராளமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
* முன்பதிவு செய்யும்போது விருப்பத்தை தேர்வு செய்யாவிட்டாலும் முன்னுரிமை அடிப்படையில் 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண் பயணிகளுக்கு ரெயிலில் லோயர்பெர்த் வழங்கப்படும்.
* மூத்த குடிமக்கள், 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்கள், கர்ப்பிணியர் ஆகியோருக்கு ரெயிலில் கீழ் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது.
* இதற்காக, ஸ்லீப்பர் வகுப்பில், ஒரு பெட்டிக்கு ஆறு முதல் ஏழு பெர்த்களும், மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் நான்கு முதல் ஐந்து பெர்த்களும், இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் மூன்று முதல் நான்கு பெர்த்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
* ராஜ்தானி, சதாப்தி உட்பட அனைத்து மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களுக்கு சிறப்பு முன்பதிவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
* ஸ்லீப்பர், மூன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு 'ஏசி' பெட்டிகளில் தலா நான்கு பெர்த்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ரெயில் பயணத்தில் கீழ் படுக்கைகள் காலியாக இருந்தால், வேறு பெர்த்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்கள், கர்ப்பிணியருக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்படும்.
* மாற்றுத்திறனாளிகள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் ரெயில் பெட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* அகலமான கதவுகள், அகலமான பெர்த்கள், சக்கர நாற்காலியை நிறுத்தும் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கழிப்பறைகளும் அவர்களுக்கு தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளன.
* பார்வை குறைபாடு உள்ள பயணியர் வசதிக்காக, 'ப்ரெய்லி' எழுத்துகளுடன் கூடிய அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. நவீன அம்ரித் பாரத் மற்றும் வந்தே பாரத் ரெயில்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது.
- திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது - டி.ஆர்.பாலு
பாராளுமன்றத்தின் இருஅவைகளிலும் குளிர்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், SIR குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அவை நடவடிக்கை முடங்கியுள்ளது.
இதனிடையே, இன்று திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி இருஅவைகளிலும், ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். அதற்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, திருப்பரங்குன்றம் விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. மேலும் இவ்விவகாரம் அரசு சார்ந்த விவகாரம் கிடையாது எனக்கூறி விவாதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நண்பகல் 12மணிவரை ஒத்திவைப்பட்டது. இதன்பின் மக்களவை கூடியதும் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனிடையே பேசிய டி.ஆர்.பாலு, திருப்பரங்குன்றம் விவகாரம் மிகுந்த கவலை அளிக்கிறது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உத்தரவை பிறப்பித்த நீதிபதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர். தனிநீதிபதி அளித்த தீர்ப்பால் திருப்பரங்குன்றத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. திருப்பரங்குன்றத்தில் 2014-ல் அளித்த உயர்நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என்றார்.
டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து பேசிய மத்திய அமைச்சர் எல்.முருகன், நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, நீதிபதி சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் என டி.ஆர்.பாலு எம்.பி. பேசியதற்கு மத்திய அமைச்சர் கிரஷ் ரிஜிஜூ கண்டனம் தெரிவித்தார்.
இதனிடையே நீதிபதி சாமிநாதன் குறித்த டி.ஆர்.பாலுவின் பேச்சு அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மக்களவையில் தி.மு.க.- பா.ஜ.க. எம்.பி.க்கள் மாறிமாறி கோஷமிட்டனர்.
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது.
- திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கி இருந்தனர். இதனால் பாராளுமன்றத்தில் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் இருஅவைகளும் கூடியதும் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் சபாநாயகர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி மக்களவையில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டனர்.
இதனை தொடர்ந்து, நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் பாராளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மறுத்ததால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
- பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும்.
- பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
புதுடெல்லி:
புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியாவதை தொடர்ந்து, இந்த வரிக்கு பதிலாக கூடுதல் வரி விதிக்க வகை செய்யும் 2 மசோதாக்கள் கடந்த 1-ந்தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
இதில் பான் மசாலா போன்ற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேச பாதுகாப்பு செஸ் மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
விவாதத்தை தொடங்கி வைத்து நிதி மந்திரி நிர்மலா சீதராமன் பேசும்போது கூறியதாவது:-
பான் மசாலாவுக்கு கலால் வரி விதிக்க முடியாத நிலையில், பான் மசாலா உற்பத்திக்கு வரி விதிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, நுகர்வுக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யுடன் சேர்த்து, அரசு ஒரு தனி செஸ் மசோதாவைக் கொண்டுவருகிறது.
பாவப்பொருட்கள் என்ற முறையில் பான் மசாலா அலகுகளின் உற்பத்தி திறனின் மீது வரி விதிக்கப்படும். இந்த வரி விதிப்பதன் மூலம் இந்த பொருட்களின் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கிறோம்.
அதேநேரம் அத்தியாவசிய பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் வரி விதிக்கப்படாது.
பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி, சுகாதார விழிப்புணர்வு அல்லது பிற சுகாதாரம் சார்ந்த திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் மாநிலங்களுக்கு பகிரப்படும்.
பான்மசாலாவுக்கு தொடர்ந்து 40 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். அதற்கு மேல் பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி திறனுக்கு சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படும்.
இந்த செஸ், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 2 களங்களான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அர்ப்பணிப்பு மற்றும் கணிக்கக்கூடிய வளத்தை உறுதி செய்யும் என்று கூறினார்.
- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
- தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், 2-வது நாளாக நேற்றும் தடை விதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர். இதனிடையே, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவாகரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தக்கோரி தி.மு.க. சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தி.மு.க.வின் மக்களவைக்குழு தலைவர் டி.ஆர். பாலு மற்றும் மாநிலங்களவைக் குழு தலைவர் திருச்சி சிவா ஆகியோர் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.






