search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aims hospital"

    மதுரையில் ரூ.1,264 கோடி செலவில் அமைய இருக்கும் ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரிக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார். பிரதமரின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. #PMModi #Aimshospital
    மதுரை:

    மதுரையில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி (அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரி) அமைக்க வேண்டும் என்பது தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனை ஏற்று மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.

    ரூ.1,264 கோடியில் அமையும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் 750 படுக்கை வசதி, 100 எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

    இந்த ஆஸ்பத்திரிக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    இதற்காக அவர், டெல்லியில் இருந்து நாளை காலையில் தனி விமானத்தில் மதுரை புறப்படுகிறார். பகல் 11.20 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மண்டேலா நகருக்கு வந்து, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி பேசுகிறார்.

    இந்த விழாவில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய மந்திரிகள் நட்டா, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள்.



    மேலும் இதே விழாவில் மதுரை, நெல்லை, தஞ்சையில் கட்டப்பட்டுள்ள ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ ஆஸ்பத்திரிகளையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

    அந்த விழா முடிந்ததும், அதன் அருகே நடைபெறும் பாரதீய ஜனதா மண்டல மாநாட்டுக்கு 12.05 மணிக்கு வந்து மோடி கலந்துகொள்கிறார். இதில் 10 நாடாளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த பாரதீய ஜனதா நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் பேசும் பிரதமர் மோடி, பின்னர் 12.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று, கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.

    பிரதமர் மோடியின் வருகையையொட்டி மதுரையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. #PMModi #Aimshospital
    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய எந்த தடையும் இல்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். #ministervijayabaskar #aimshospital

    மதுரை:

    தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    எய்ம்ஸ் விவகாரம் குறித்து வருகிற 9-ந்தேதி நானும், சுகாதாரத்துறை செயலாளரும் டெல்லி சென்று சுகாதாரத்துறை மந்திரியை சந்திக்க உள்ளோம்.

    எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து தமிழக அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து வருகிறது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துமவனை அமைய எந்த தடையும் இல்லை என்றார். #ministervijayabaskar  #aimshospital

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளு மன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது என்று தம்பிதுரை கூறினார். #thambidurai #aimshospital

    கோவை:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    தமிழர்களின் மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர். என்றென்றும் மக்கள் மனதில் எம்.ஜி.ஆர் நிலைத்திருக்கிறார் என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்ச்சியாக நூற்றாண்டு நிறைவு விழா அமையும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்து வமனை நிச்சயமாக அமைக்கப்படும். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் எக்காரணம் கொண்டும் நிறுத்தி வைக்கப்படாது.

    விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் ஏற்க மாட்டோம். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாடாளு மன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக நலனையும், தமிழக விவசாயிகள் நலனையும் பாதுகாக்கும் இயக்கமாக அ.தி.மு.க. இருக்கும். 2014 நாடாளுமன்ற தேர்தலை போல, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும். கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் பேசுவது என்ற முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் கருத்தில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வலிமை அ.தி.மு.க.வுக்கு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.


    அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க பாரதீய ஜனதா முயற்சி செய்கிறதா என்ற கேள்விக்கு, அது எனக்கு தெரியாது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணனிடம் தான் கேட்க வேண்டும். மக்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை தவிர்த்து, தேசிய கட்சிகளுக்கு இடமில்லை என்றார். #thambidurai #aimshospital

    உடனடியாக பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் அமைக்க வேண்டும் என ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். #GKVasan #Aimshospital
    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் வகையில் இப்போது மதுரைக்கு அருகேயுள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது. இனியாவது காலம் தாழ்த்தாமல் உடனடியாக பணிகளை தொடங்கி எய்ம்ஸ் மருத்துவமனையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கட்டிமுடித்து, அதனை செயல்படுத்த வேண்டும்.

    தமிழக மக்கள் நலன் காப்பதில் அதிலும் மக்களின் உடல்நலன் காப்பதில் தமிழக அரசுக்கு அதிக அக்கறை இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவமனைத் திட்டம் திட்டமிட்டப்படி அனைத்து வசதிகளுடனும் நடைமுறைக்கு வந்து, மக்களுக்கு சிறப்பு மருத்துவச் சேவை தொடர்ந்து கிடைத்திட தனது பங்களிப்பை முறையாக அளித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #GKVasan #Aimshospital
    ×