என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ministers"
- மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டியள்ளார்.
- மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.
மதுரை
மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் காலானை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்ட பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை செல்லூர் ராஜூ வழங்கினார்.இதை தொடர்ந்து அவர் கூறிய தாவது:-
மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளரை இன்று சந்தித்து பொதுமக்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளோம்.மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.
முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் அதிக அளவில் தண்ணீர் இருந்தும் மதுரை மக்களுக்கு குடிநீரை போதுமான அளவிற்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 4 நாட்க ளுக்கு ஒரு முறை சில வார்டு களுக்கு குடிநீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதனால் பழைய குழாய்களில் கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சியான நாங்கள் சொல்வதை விட தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகளவில் புகார் தெரி வித்துள்ளனர். நாங்கள் கோரிக்கை வைத்தால் அரசிய லுக்காக செய்கிறார் கள் என்பார்கள். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சிகளே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளது.
மதுரையில் 2 அமைச்சர் கள் இருக்கிறார்கள்.நிதி மற்றும் பத்திரப்பதிவு துறைகளை வைத்திருக்கும் அந்த அமைச்சர்கள் மதுரைக்கு எந்த ஒரு புதிய திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தப்ப டவில்லை. கலைஞர் நூலகம் மட்டுமே பணிகள் நடக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது.
எனவே மாநகராட்சி ஆணையாளர் மத்திய-மாநில அரசு துறைகளில் இருந்து மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயை உடனடியாக பெற்று நிதி ஆதாரத்தை பெருக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. வார்டுகளில் இந்த பணிகளை செய்வ தில் பாரபட்சம் காட்டப் பட்டு வருகிறது. இந்த நிலையை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 96-ம் ஆண்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேர் இருந்தோம். அப்போதைய மேயர் குழந்தைவேலு எங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார். ஆனால் இப்போது 15 கவுன்சிலர்கள் அ.தி.மு.க. சார்பில் இருந்தும் மேயர் மாமன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தர வில்லை. இருக்கை ஒதுக்கீடு மற்றும் அலுவலகம் தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மதுரை மாநகராட்சி பகுதி களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை உடனடியாக நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். எனவே மதுரை மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
- கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்
உடன்குடி:
உடன்குடி யூனியனுக்குட்பட்ட பரமன்குறிச்சி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலை கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.
திட்ட பணிகளின் மதிப்பீடு என்ன? முறையாக நடக்கிறதா? என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.
இதில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், உடன்குடிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, கே.டி.சி. தினகர், பெத்தாமுருகன், மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளைச் செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து அத்தொகுதியில் தேர்தல் நடத்தைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரத சாகு கூறியதாவது:-
![](https://img.maalaimalar.com/InlineImage/201901031234276844_1_1gaja._L_styvpf.jpg)
கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அமைச்சர்கள் புயல் நிவாரண ஆய்வுகள் நடத்த முடியாது. அதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
அனுமதி இல்லாமல் திருவாரூர் தொகுதிக்குள் நுழையும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
புயல் சம்பந்தமாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ள நிவாரண நிதி, பொருட்கள் ஆகியவற்றை வழங்க எந்த தடையும் இல்லை. ஆனால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அரசியல் கட்சிகளிடமிருந்து புகார்கள் வந்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விதி மீறி செயல்படும் எந்தவொரு செயலும் தடுக்கப்படும்.
தேர்தல் ஆணைய சட்ட விதிகளின்படிதான் திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள 19 தொகுதிகளுக்கு கோர்ட்டின் உத்தரவுகளை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு இருக்கிறது.
19 தொகுதி தேர்தல் தொடர்பாக அடிக்கடி ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணைய உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வாக்கு எந்திரங்கள், 303 வாக்குசாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன. வெளிப்படையான, சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை கண்டிப்பாக பதிவு செய்ய வேண்டும்.
இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை தடுக்க தீவிர கண்காணிப்பு செய்யப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை அதிகாரிகள், மத்திய அதிகாரிகள், பண விநியோகத்தை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். இது கண்காணிப்பு பணிக்கு மேலும் வலுசேர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #Tiruvarurconstituency
பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.
ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய தீவிரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812031304395256_1_mdgdxis0._L_styvpf.jpg)
சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.
சக மந்திரிகளான சுக்ஜிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பீந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மித்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
இந்தநிலையில் சித்துவுக்கு மேலும் 2 மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை, போக்குவரத்துதுறை மந்திரி அருணா சவுத்ரி, வனத்துறை மந்திரி சாதுசிங் தரம்சோத் ஆகியோர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளனர்.
சித்துவின் கருத்து துரதிருஷ்டவசமானது. அவரது இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. கேப்டன் அமரீந்தர் சிங் எங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவர். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சிக்கு அவர் தான் கேப்டன். கடந்த சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி முக்கிய பங்காற்றினார்.
அதேநேரத்தில் ஒட்டு மொத்த காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி இருக்கிறார். இந்த உண்மையை யாரும் மறுக்கவில்லை. ஆனால் கேப்டன் அமரீந்தர் சிங் பற்றி சித்துவின் விமர்சனம் துரதிருஷ்டவசமானது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மந்திரி சாதுசிங் தரம் சோத் கூறும்போது, ‘‘சித்து தன்னை ஒரு மந்திரி என்பதை மறந்துவிடக்கூடாது. டெலிவிசன் காமெடி ஷோ மாதிரி கிடையாது. மூத்த தலைவர்களை அவர் மதிக்க வேண்டும். சித்து முதல்- மந்திரியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். #NavjotSinghSidhu
சண்டிகார்:
பாகிஸ்தானில் நடந்த கர்தார்பூர் திட்ட அடிக்கல் நாட்டு விழாவில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் மந்திரியுமான நவ்ஜோத்சிங் சித்து கலந்து கொண்டார். பாகிஸ்தான் அழைப்பை ஏற்று அவர் சென்று வந்தார்.
ஆனால் பஞ்சாப் முதல்- மந்திரி அமரீந்தர்சிங்கோ பாகிஸ்தான் அழைப்பை நிராகரித்தார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபடுவதால் அவர் பாகிஸ்தான் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
இதுகுறித்து நிருபர்களின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது முதல்-மந்திரி அமரீந்தர்சிங்கை மறைமுகமாக சித்து தாக்கி விமர்சனம் செய்தார். அவர் கூறும் போது, ‘‘ராகுல்காந்தி தான் எனக்கு கேப்டன். பாகிஸ்தானுக்கு அவர்தான் என்னை அனுப்பினார். கேப்டனுக்கு (அமரீந்தர்சிங்) கேப்டன் ராகுல்காந்தி தான். அவர் ராணுவ கேப்டன்’’ என்றார்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201812021220164483_1_Punjabdsd._L_styvpf.jpg)
சித்துவின் இந்த விமர்சனம் பஞ்சாப்பில் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போர்க்கொடி எழுந்துள்ளது.
சக மந்திரிகளான சுகிந்தர் சிங் ரன்ட்வா, ராஜிந்தர் பாஜ்வா, சுக்பிந்தர் சிங் சர்காரியா, ரானா குர்மிக்சிங் ஆகிய 4 பேர் சித்துவுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ஆவார். அதே வேளையில் பஞ்சாபில் கட்சிக்கு அமரீந்தர்சிங்தான் தலைவர். பஞ்சாபில் மீண்டும் காங்கிரசை ஆட்சியில் அமர்த்தியது அவர்தான்.
அப்படி இருக்கும் போது தன்னுடைய கேப்டனாக அம்ரீந்தர் சிங்கை சித்து நினைக்கவில்லை என்றால் மந்திரி பதவியில் இருந்து அவர் விலகவேண்டும். அதன்பிறகு ராகுல்காந்தி என்ன வேலை கொடுத்தாலும் செய்யலாம்.
தனது கருத்துக்காக சித்து முதல்-மந்திரி அமரீந்தர் சிங்கிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தலைவராக ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #NavjotSinghSidhu
![](https://img.maalaimalar.com/InlineImage/201811301815268958_1_sirisena-1._L_styvpf.jpg)
திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810301032030671_1_mks._L_styvpf.jpg)
ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
சுதந்திர போராட்ட வீரர்களான மருதுபாண்டியர்களின் 217-ம் ஆண்டு நினைவுதினம் திருப்பத்தூரில் நேற்று அரசு விழாவாக நடைபெற்றது. இதையொட்டி மருதுபாண்டியர்கள் வாரிசுதாரர் ராமசாமி தலைமையில் மணிமண்டபம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டது. இதைதொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.காமராசு, ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், கடம்பூர் ராஜூ, மாபா பாண்டியராஜன், மணிகண்டன் ஆகிய 7 அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கோகுல இந்திரா, பி.ஆர். செந்தில்நாதன் எம்.பி., சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட ஆவின் தலைவர் கே.ஆர்.அசோகன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201810252114578830_1_87webjrc._L_styvpf.jpg)
முன்னதாக திருப்பத்தூர் வந்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுக்கு ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர செயலாளர் இப்ராம்ஷா ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.நாகராஜன், கரு.சிதம்பரம், புதுத்தெரு முருகேசன், வக்கீல் ராஜசேகர், ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன், ராமநாதபுரம் மாவட்ட முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து, ஜெயலலிதா பேரவை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் சரவணன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, முன்னாள் எம்.எல்.ஏ. சுப.மதியரசன், தி.மு.க. மாவட்ட முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, கே.எஸ்.நாராயணன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், நெடுஞ்செழியன், நகர செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய இளை ஞரணி துணை அமைப்பாளர் கண்ணன் மற்றும் மகளிரணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புராம், ராம.அருணகிரி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் பழனியப்பன், பாபா அமீர்பாதுஷா, வட்டார தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ம.தி.மு.க. சார்பில் அதன் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் செவந்தியப்பன், பாண்டியன், கோட்டையிருப்பு கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் கே.கே.உமாதேவன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நடிகர் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதுதவிர பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், வர்த்தக சங்கத்தினர், மாணவ-மாணவிகள், சமுதாய பிரமுகர்கள் கலந்துகொண்டு மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கூட்டத்தில் மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் கரூர் முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் செங்கல்பட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆப்பூர் வரலட்சுமி மதுசூதனன் பேசும்போது கூறியதாவது:-
தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடைபெறுவதில்லை. குட்கா ஊழல், மின்வாரிய ஊழல், பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சித்துறைகளில் மெகா ஊழல்கள் நடைபெறுகிறது.
இதை எதிர்க்கட்சியான தி.மு.க. சுட்டிக் காட்டினாலும், ஆளும் தரப்பினர் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து கிடக்கிறது. திட்டப்பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் பணம் இல்லை என்கிறார்கள்.
ஊழல் செய்யும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சருக்கு தைரியம் இல்லை. ஏனென்றால் அவர் மீதே லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் உள்ளது. என்னை மாட்டி விட்டால் உன்னை மாட்டி விடுவேன் என்று அமைச்சர்கள் மிரட்டுவதால் எடப்பாடி பழனிசாமி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் தலைவர் மு.க.ஸ்டாலின் இவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் தொழில் அதிபர் ஆப்பூர் மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் செங்கை தாமஸ், ஒன்றிய செயலாளர் எம்.கே. தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி சென்னை அடையாறில் சிவாஜி மணிமண்டபத்தில் உள்ள அவரது சிலைக்கு துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, மா.பா. பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
ராம்குமார், நடிகர்கள் பிரபு, விக்ரம்பிரபு, விஜயகுமார், டைரக்டர்கள் ஆர்.வி.உதயகுமார், பி.சி.அன்பழகன் ஆகியோரும் சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சிவாஜி சிலைக்கு மாலை அணிவித்த பின் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-
![](https://img.maalaimalar.com/InlineImage/201810011240582576_1_sivajistatue._L_styvpf.jpg)
மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசனுக்கு வேறு சிலை வைக்க வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்தால் அது பற்றி அரசு பரிசீலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் பிரபு கூறியதாவது:-
சிவாஜி கணேசனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அடையாறு மணிமண்டபத்தில் உள்ள சிவாஜி கணேசன் சிலையின் கீழ் கருணாநிதியின் பெயரை பொதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அரசு தரப்பில் அதை பரிசீலிப்பதாக கூறியுள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டி விபரம்:-
கே:- தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு பற்றி?
ப:- அதை வரவேற்கிறேன். கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்.
கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2, 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறாரே?
ப:- அவர்களுக்கு வைக்க வேண்டிய கெடு அதிகமாக உள்ளது. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.
கே:- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?
ப:- இல்லை.
கே:- அரசியல் ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொள்வீர்களா?
ப:- மாட்டேன். ஏனென்றால் நாங்களும் அரசியலுக்கு வந்துள்ளோம்.
கே:- மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு இல்லை என்று அமைச்சர்கள் பேசுவது?
![](https://img.maalaimalar.com/InlineImage/201809281344327073_1_jayakumar._L_styvpf.jpg)
கே:- சினிமா பாடல்கள் வைத்து கிண்டல் பேசுகிறார்களே?
ப:- சினிமா பார்த்து கற்றுக்கொண்டோம் என்று ஒப்புக்கொண்டார்கள் அதுவே போதும்.
கே:- கிராம சபை கூட்டத்திற்கான விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது?
ப:- ‘மக்கள் நீதி மய்யம்’ கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும். அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா இசைக்கும் கடமை அரசுக்கு உள்ளது.
ஆனால் அது முறையாக நடத்தப்படுவது இல்லை. கிராம சபை கூட்டத்தில் வெற்றி கிடைத்ததாக நம்புகிறோம். ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
![sidkick sidekick](/images/sidekick-open.png)