search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மந்திரிகள்"

    • பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது
    • கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

    தெலுங்கானா மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் தீவிரம் முனைப்பு காட்டி வருகிறது.

    இந்த தேர்தலில் கர்நாடகா பார்முலாவை காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது பெண்களுக்கு மாதந்தோறும் 2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என 6 முக்கிய வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் கர்நாடக மாநிலத்திலேயே நிறைவேற்றப்படவில்லை இங்கும் நிறைவேற்றமாட்டார்கள் என சந்திரசேகர ராவ் கட்சி வேட்பாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.

    இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கர்நாடகா காங்கிரஸ் மந்திரிகளை தேர்தல் களத்தில் காங்கிரஸ் இறக்கிவிட்டுள்ளது

    கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா துணை முதல் மந்திரி சிவக்குமார் மற்றும் 10 அமைச்சர்கள் தெலுங்கானா மாநிலத்தில் முகாமிட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    கர்நாடக மாநில துணை முதல் மந்திரி சிவக்குமார் பிரசாரம் செய்யும் பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் ஏற்படுகிறது தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது.

    நேற்று தெலுங்கானா மாநிலத்தில் சித்தராமையா பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அப்போது கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அளிக்கப்பட்ட 5 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இன்னும் ஒரு வாக்குறுதி விரைவில் செயல்படுத்தப்படும்.

    தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி தனது 6 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றும் என்றார்.

    கேரளாவில் முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் அனைத்து சொத்து விபரங்களையும் யார் வேண்டுமானாலும் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட அம்மாநில கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. #Kerala
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்த கேபினட் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், முதல்வர் மற்றும் அனைத்து மந்திரிகளின் முழு சொத்து விபரங்களை யாரும் எளிதில் பார்க்கும் வகையில் அரசு இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டது. 

    மேலும், சமீபத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பணிகளை மேற்கொள்வது தொடர்பாகவும் பல முடிவுகள் எடுக்கப்பட்டது.
    இன்னும் ஆறு மாதங்களுக்குள் மடிக்கணினி கற்றுக்கொள்ளாத மந்திரிகள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி கூறியுள்ளார்.
    காட்மாண்டு:

    நேபாளத்தில் கே.பி. சர்மா ஒளி, கடந்த பிப்ரவரி மாதம் 2-வது முறையாக பிரதமர் ஆகி உள்ளார். அவர் அந்த நாட்டில் அதிரடி திட்டங்களை அமல்படுத்தப்போவதாக கூறி உள்ளார். அந்த வகையில் இன்னும் 6 மாதங்களில் பிரதமர் அலுவலகம், காகிதம் பயன்படுத்தாத அலுவலகமாக மாறும் என்று அறிவித்து உள்ளார். எல்லாமே கணினிமயமாகி விடும்.

    கூட்டங்கள், ஆலோசனைகள், செயல்திட்டங்கள் என அனைத்துமே மடிக்கணினி மூலமாகவே விவாதிக்கப்படுமாம்.

    மடிக்கணினியை இயக்குவது எப்படி என்பதை மந்திரிகள், தங்கள் உதவியாளர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு விட வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

    அப்படி 6 மாதங்களுக்குள் மந்திரிகள் மடிக்கணினியை இயக்க கற்றுக்கொள்ளாவிட்டால் அவர்களுக்கு விடை கொடுக்க வேண்டியது (பதவி நீக்கம்) நேரும் என்றும் அவர் வெளிப்படையாகவே அறிவித்து இருக்கிறார்.
    ×