search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ministers"

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    • விருதுநகரில் புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
    • சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் வாசிப்பு பழக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது என விழாவில் அமைச்சர்கள் பேசினர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக மாவட்ட நிர்வாகமும், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமும் இணைந்து விருதுநகர் கே.வி.எஸ்.மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதா னத்தில் நேற்று புத்தக திருவிழா தொடங்கியது.

    இந்த புத்தக கண்காட்சி வருகிற 27-ந் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது. முதலாவது விருதுநகர் புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் புத்தக கண்காட்சியை தெடாங்கி வைத்தனர். பின்னர் அவர்கள் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ் சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில், புத்தக வாசிப்பு முக்கிய பங்குவகிக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே புத்தக வாசிப்புப் பழக்கத்தை ஊக்கப்படுத்த வேண்டும்.

    புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்ல சென்னை புத்தகக்காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், இலக்கிய சிந்தனைமிக்க தமிழ் மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில் புத்தகக் காட்சிகள் மற்றும் இலக்கியத் திரு விழாக்கள் நடத்தப்படும் என முதல்வர் அறிவித்தார்.

    அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள், மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு திட்டங்கள் தொடர்பான கண்காட்சிகள், தொல்லியல் துறை மூலம் வெம்பக்கோட்டை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் சிறுவர்கள் விளையா டுவதற்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய விளையாட்டு பகுதிகள் மற்றும் பல்வேறு வகையான உணவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் அனைத்துத் தரப்பு மக்களும், மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர்கள் பேசினர்.

    • 12 ந்தேதி காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், நடைபெற உள்ளது.
    • சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், மாவட்டக் கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையிலும், எனது (இல.பத்மநாபன்) முன்னிலையிலும் நடைபெறஉள்ளது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழக செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறைஎன்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொள்ள உள்ளார்கள்.அதுசமயம், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட மாநில.

    மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற நகர, பேரூர் கழக நிர்வாகிகள், இந்நாள் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்டக் கழக பிரதிநிதிகள், சார்பு அணிகளின் இந்நாள்- முன்னாள் நிர்வாகிகள். கழகத்தின் செயல் வீரர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • 221-வது நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி- மக்கள் தொடா்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியா்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் மருது பாண்டி யா்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.

    முன்னதாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருதுபாண்டியா்களின் நினைவு மண்டப வளா கத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினார்.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினா் மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளா் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவுத்தூணுக்கு அமைச்சா்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும்் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டா ட்சியா் பிரபா கரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராஜசெல்வன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மருதுபாண்டியா்களின் வாரிசுதாரா்கள் கலந்து கொண்டனா்.

    • நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.
    • தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஆண்டுதோறும் நடத்தப்ப டும் அரசு பொருட்காட்சி கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக நடத்தப்படவில்லை.

    இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பொருட் காட்சி வ.உ.சிதம்ப ரனார் மணி மண்டபத்தின் அருகே நாளை நாளை (செவ்வாய்க் கிழமை) தொடங்குகிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சி மாநகராட்சி திடல் அருகில் உள்ள அண்ணா கலையரங் கத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.

    சபாநாயகர் அப்பாவு பொருட்காட்சியை தொடங்கி வைக்கிறார். விழாவில் செய்தித்துறை அமைச்சர்கள் சாமிநாதன், ராஜகண்ணப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். விழாவில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசுகிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ெஜயசீலன், மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.

    பொருட்காட்சியில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

    அரசு பொருட்காட்சி தினசரி மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும். அரசுத்துறை அரங்குகளில் தமிழக அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலர்கள் பொது மக்களுக்கு விளக்கம் அளிப்பார்கள்.

    பொதுமக்களின் வசதிக்காக நாளை முதல் நிறைவு நாள் வரை தினமும் மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த, பொருட்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர் கள் வரை கண்டுகளித்திடும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் உள்ளன. பெண்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருட்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டிகள் உள்ளன. 

    • பூலாங்குறிச்சியில் அரசு கல்லூரி பொன்விழா நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    • ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் சிவலிங்கம் செட்டியார் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் பொன்விழா ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவில் அமைச்சர்கள் பொன்முடி, பெரியகருப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கல்லூரியில் சிவலிங்கம் சிலையை திறந்து வைத்து பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கல்லூரியின் பொன்விழா மலரை வெளியிட்டு சிறப்பாக பயிலும் மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

    சென்னை வாழ் பூலாங்குறிச்சி நகரத்தார் சங்கத்தின் சார்பில் பூலாங்குறிச்சி ஊராட்சி சார்பி்ல் ரூ.5.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச கணினி மையம், ரூ.1.20 லட்சம் மதிப்பில் புணரமைக்கப்பட் கிராம நிர்வாக அலுவலகத்தை அமைச்சர்கள் திறந்து வைத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பொன் முத்துராமலிங்கம் (கல்லூரி கல்வி இணை இயக்குனர், மதுரை மண்டலம்), அபிராமி ராமநாதன் (படம் தயாரிப்பாளர் மற்றும் தொழிலதிபர்), நல்லம்மை அபிராமி ராமநாதன், ஆவின் பால்வளத் தலைவர் சேங்கைமாறன், திருப்பத்தூர் வட்டாட்சியா; திரு.வெங்கடேசன், கல்லூரி முதல்வர் முத்துச்சாமி, ஊராட்சி மன்றத்தலைவர் சுதாகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனா்.
    • புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தனா். அதேபோல தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தாராபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வா் ஆா்.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு திருப்பூர் வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். இதில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வருகிற 24-ந் தேதி கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடுகபாளையம், மன்றாம்பாளையம், நெகமம் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு இரவு வருகிறார். பல்லடத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பல்லடம், மங்கலம் வழியாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் பாப்பீஸ் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் காலையில் அந்த ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள். 25-ந் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு குன்னத்தூர் வழியாக ஈரோடு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    • ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது
    • பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் ஏழை- எளிய மக்களுக்கு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முலம் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை அமைச்சர் அன்பரசன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

    ஏழை-எளிய மக்களுக்காக ஆலந்தலை பகுதியில் தமிழ் நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கட்டும் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.48.95 மதிப்பில் 400 சதுர அடியில் 450 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

    இந்த குடியிருப்பு பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார்.வரும் காலங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    75சதவீத கட்டுமான பணி முடிந்து விட்டது. மீதம் உள்ள பணிகள் முடிந்ததும் பயனாளிகளுக்கு வழங்கப்படும். பயனாளிகள் ரூ.1.66லட்சம் கட்ட வேண்டும். பணம் கட்டியதும் அவர்கள் பெயருக்கு உரிய ஆவணங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவருடன் தமிழக மீன் வளம் மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.


    • தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கூறியிருந்தது.
    • தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு, போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு கூறியிருந்தது.

    பேரணி

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போதை பொருள் விழிப்புணர்வு பேரணியை சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன். மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணவன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணப்பிராண், மாநில தி.மு.க. மாணவரணி துணைச்செயலாளர் உமரிசங்கர், முன்னாள் எம்.எல்.ஏ டேவிட் செல்வின், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்ரூபன், மாவட்ட கவுன்சிலர் செல்வக்குமார், மாவட்ட அவைத்தலைவர் அருணாச்சலம், தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ராமஜெயம், விவசாய அணி செயலாளர் ஆஸ்கர், தொண்டரணி செயலாளர் வீரபாகு, வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரகுராமன், மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் ரெங்கசாமி, ஒன்றிய செயலாளர்கள் மாடசாமி, ஜெயக்கொடி, சுப்பிரமணி, அரசு வக்கீல் பூங்குமார், மாவட்ட கல்வி அலுவலர் பாலதாண்டாயுதம், மாவட்ட உணவு வழங்கல் பாதுகாப்பு நியமண அலுவலர் மாரியப்பன், சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொற்செல்வன், மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன்இசக்கி, மருத்துவ கல்லூரி பொறுப்பு டீன் ராஜேந்திரன், தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஸ்டாலின், மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி விழிப்புணர்வு பேரணிக்கு முன்பாக தப்பாட்டம் கலைநிகழ்ச்சியும் சிறுவர், சிறுமிகளின் சிலம்பாட்டத்துடன் சென்ற ஊர்வலத்தில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மருத்துவ கல்லூரி மருத்துவமணையில் ஊர்வலம் நிறைவு பெற்றது. பின்னர் அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர்கள், உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • மதுரையில் 2 அமைச்சர்கள் இருந்தும் புதிய திட்டங்கள் எதுவும் வரவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர்ராஜூ குற்றச்சாட்டியள்ளார்.
    • மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.

    மதுரை

    மதுரை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் காலானை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இன்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

    அப்போது மதுரையில் நிறைவேற்றப்பட வேண்டிய முக்கிய திட்ட பணிகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை செல்லூர் ராஜூ வழங்கினார்.இதை தொடர்ந்து அவர் கூறிய தாவது:-

    மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளரை இன்று சந்தித்து பொதுமக்களுக்கு உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்து கோரிக்கை மனுக்களை வழங்கி உள்ளோம்.மதுரை மாநகராட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக பொது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறது. தெருவிளக்குகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதிலும் முறையாக பணிகள் நடை பெறவில்லை.

    முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் அதிக அளவில் தண்ணீர் இருந்தும் மதுரை மக்களுக்கு குடிநீரை போதுமான அளவிற்கு வழங்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 4 நாட்க ளுக்கு ஒரு முறை சில வார்டு களுக்கு குடிநீர் வழங்க ப்பட்டு வருகிறது. இதனால் பழைய குழாய்களில் கழிவு நீர் கலந்து சுகாதாரமற்ற குடிநீரை பொதுமக்கள் குடிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

    இந்த பிரச்சினைகளை எதிர்க்கட்சியான நாங்கள் சொல்வதை விட தி.மு.க கூட்டணியில் உள்ள ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிகளவில் புகார் தெரி வித்துள்ளனர். நாங்கள் கோரிக்கை வைத்தால் அரசிய லுக்காக செய்கிறார் கள் என்பார்கள். ஆனால் தி.மு.க. கூட்டணி கட்சிகளே மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து உள்ளது.

    மதுரையில் 2 அமைச்சர் கள் இருக்கிறார்கள்.நிதி மற்றும் பத்திரப்பதிவு துறைகளை வைத்திருக்கும் அந்த அமைச்சர்கள் மதுரைக்கு எந்த ஒரு புதிய திட்டங்களையும் இதுவரை செயல்படுத்தப்ப டவில்லை. கலைஞர் நூலகம் மட்டுமே பணிகள் நடக்கின்றது. மதுரை மாநகராட்சி பகுதியில் உள்ள 100 வார்டுகளிலும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் தான் தொடர்ந்து செயல் படுத்தப்பட்டு வருகிறது.

    எனவே மாநகராட்சி ஆணையாளர் மத்திய-மாநில அரசு துறைகளில் இருந்து மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயை உடனடியாக பெற்று நிதி ஆதாரத்தை பெருக்க கோரிக்கை விடுத்துள்ளோம். அவரும் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். மதுரை மாநகராட்சி பகுதிகளில் தூய்மை பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் அ.தி.மு.க. வார்டுகளில் இந்த பணிகளை செய்வ தில் பாரபட்சம் காட்டப் பட்டு வருகிறது. இந்த நிலையை அதிகாரிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 96-ம் ஆண்டு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 8 பேர் இருந்தோம். அப்போதைய மேயர் குழந்தைவேலு எங்களுக்கு உரிய மரியாதையை கொடுத்தார். ஆனால் இப்போது 15 கவுன்சிலர்கள் அ.தி.மு.க. சார்பில் இருந்தும் மேயர் மாமன்றத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்களுக்கு உரிய அங்கீகாரத்தை தர வில்லை. இருக்கை ஒதுக்கீடு மற்றும் அலுவலகம் தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    மதுரை மாநகராட்சி பகுதி களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பணிகளை உடனடியாக நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம். எனவே மதுரை மக்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அடிப்படை வசதிகளை விரைந்து செய்து தர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட பரமன்குறிச்சி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலை கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்ட பணிகளின் மதிப்பீடு என்ன? முறையாக நடக்கிறதா? என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

    இதில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், உடன்குடிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, கே.டி.சி. தினகர், பெத்தாமுருகன், மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளைச் செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×