search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பணிமனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
    X

    உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் புதிய பணிமனை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

    • புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனா்.
    • புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தனா். அதேபோல தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தாராபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வா் ஆா்.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×