என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Workshop"

    வேதாரண்யம் அருகே வயலில் அறுவடை செய்து வைத்திருந்த எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா குரவப்புலத்தை சேர்ந்தவர் மனோகரன் இவர் தனக்கு சொந்தமான வயலில் எள் சாகுபடி செய்து இருந்தார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு எள்செடிகளை அறுவடை செய்து வயலில்பட்டறையாக வைத்து மூடி வைத்திருந்தார் சம்பவத்தன்று எள் பட்டறைக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டனர்.

    இதில் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள எள் மற்றும் எள் செடிகள் முற்றிலும் எரிந்து சேதமானதுஇதுகுறித்து மனோகரன்வேதாரண்யம் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். வேதாரண்யம் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    • ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் வெளியிடும் தளங்கள் என்ற தலைப்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது
    • கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நூலகர் ஜெ.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தேசிய மின்நூலக அமைப்பின் சார்பில், "ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடும் நெறிமுறைகள் மற்றும் வெளியிடும் தளங்கள்" என்ற தலைப்பில் மாணவிகளுக்கு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நூலகர் உண்ணாமலை வரவேற்று பேசினார். கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி நூலகர் ஜெ.ஆறுமுகம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அனைத்து முதுகலை மாணவிகளும் கலந்துகொண்டனர். முதுகலை ஆங்கிலத்துறை மாணவிகள் எல்.எலிசபெத் பெர்சியால், ஜெ.ஹரிவர்ஷினி ஆகியோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். பொருளியல்துறை தலைவர் மற்றும் பேராசிரியை எம்.சண்முகவல்லி நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேசிய மின்நூலக அமைப்பின் உறுப்பினர்களான பொருளியல் துறை பேராசிரியை எம்.சண்முகவல்லி, நூலகர் உண்ணாமலை, வணிக நிர்வாகிவியல் பேராசிரியை தெய்வ வீரலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் சார்பில் முதலாமாண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
    • தமிழ்த்துறைத் தலைவர் மாணவர்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதை விளக்கி கூறினார்

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட அணி எண்.43-ன் சார்பில் முதலாமாண்டு நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவரும், முன்னாள் திட்ட அதிகாரியுமான பேராசிரியர் கு.கதிரேசன் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், நாட்டு நலப்பணித்திட்டம் மூலம் மாணவர்கள் சமூகத்திற்கு எவ்வாறு சேவை செய்ய முடியும் என்பதை விளக்கி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட அதிகாரி அபுல்கலாம் ஆசாத் செய்திருந்தார். மாணவர் சுபாஷ் நன்றி கூறினார்.

    • தொழில்முனைவோர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
    • மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்து பேசினார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் வசதியாக்க நிறுவனம் (எம்.எஸ்.எம்.இ.) மாவட்ட குறு, சிறு தொழில்கள் சங்கம், மாவட்ட தொழில்மையம் சார்பில் தொழில்முனைவோர்களுக்கான பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு குறித்த பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கில் எம்.எஸ்.எம்.இ. சென்னை உதவி இயக்குனர் சி.பி.ரெட்டி அறிமுக உரையாற்றினார். இந்த பயிலரங்கை மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா தொடங்கி வைத்து பேசுகையில், கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு தற்போது சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள புதிய உற்சாகத்துடன் செயல்பட்டு வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பூஜ்ய குறைபாடு பூஜ்ய விளைவு சான்றிதழ்களை பெறுவதின் மூலம் மத்திய, மாநில அரசுகளின் கூடுதல் மானியங்களை பெறலாம். தொழில் நிறுவனங்கள் இச்சான்றிதழ்பெற www.zed.msme.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கூறினார். இந்த கூட்டத்தில் எம்.எஸ்.எம்.இ. இணை இயக்குனர் சுரேஷ் பாபுஜி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் செந்தில்குமார், ஆலோசகர் கார்த்திகேயன், மாவட்ட சிறு, குறு தொழில் முனைவோர் சங்க தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி இயக்குனர் கிரண்தேவ் சட்லூரி நன்றி கூறினார்."

    • புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் அமைச்சர்கள் தொடங்கிவைத்தனா்.
    • புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    உடுமலை :

    திருப்பூா் மாவட்டம் உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டும் பணியின் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் புதிய கட்டடத்துக்கான கட்டுமானப் பணிகளைத் தொடங்கிவைத்தனா். அதேபோல தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் பணிமனை மற்றும் ஆய்வக கட்டடம் கட்டுமானப் பணிகளையும் தொடங்கிவைத்தனா். முன்னதாக, தாராபுரத்தில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் சாா்பில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கான கட்டட கட்டுமானப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கிவைத்தனா்.

    இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், உடுமலை வருவாய் கோட்டாட்சியா் ஜஷ்வந்த் கண்ணன், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையம் முதல்வா் ஆா்.ஜெயகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை முகாம் நடந்தது.
    • முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அனைத்து முதலாமாண்டு மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்ற வழிகாட்டுதழும் அறிவுரை பகர்தலும் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது. முஹம்மது சதக் அறக்கட்டளை கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் ஹமீது இபுராஹிம் முன்னிலையில் இந்த பயிற்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.

    தூத்துக்குடி மாவட்ட உயிர் மருத்துவ பொறியாளர் மற்றும் எழுத்தாளருமான முகம்மது யூசுப் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும் போது கூறியதாவது:-

    முதலாமாண்டு மாணவ, மாணவிகள் தங்களுடைய கல்லூரி படிப்பை முடித்தவுடன் வேலை தேடி செல்பவர்களாக இல்லாமல் வேலை வாய்ப்பை உருவாக்க கூடியவர்களாக இருக்க வேண்டும். மேலும் கல்லூரி மாணவ-மாணவிகள் வாழ்க்கையில் வளம் பெற ஆசிரியர் பங்களிப்பு மட்டுமல்லாது பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளின் அன்றாட நடவடிக்கைகளை உற்று நோக்க வேண்டும்.

    இன்றைய இளம் தலைமுறையினர் ஜாதிய பாகுபாடுகளை களைந்து வேற்றுமையில் ஒற்றுமைக் காண ஆசிரியர் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிக அவசியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் முஹம்மது சதக் தஸ்தகீர் மெட்ரிக் பள்ளி முதல்வர் நந்தகோபால் வாழ்த்தி பேசினார். முன்னதாக வணிகவியல் துறைத் தலைவர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். ஆங்கிலத் துறை தலைவர் சீனி சுல்தான் இபுராஹிம் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் முகம்மது யூசுப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

    • அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2 கோடியில் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை பணிமனையை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
    • அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

    மாணவர்கள் தொழிற்ப யிற்சி பெறுவதன் மூலம், வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதியான வேலைவாய்ப்பை பெறவும், சமூக பொருளா தார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் மாணவர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில் திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்க புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில், விருதுநகர் அரசினர் தொ ழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.05 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய தீயணைப்பு தொழில்நுட்பம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு மேலாண்மை என்ற புதிய தொழிற்பிரிவிற்கான பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, இந்த புதிய பணிமனை மற்றும் வகுப்பறை கட்டிட வளாகத்தில் கலெக்டர் மேகநாத ரெட்டி குத்து விளக்கேற்றி வைத்து, வகுப்பறைகளை பார்வை யிட்டார்.

    பின்னர், இந்த ஆண்டி ற்கான பயிற்சி யாளர்கள் சேர்க்கைக்கு அனுமதி க்கப்பட்ட தொழிற்பி ரிவு பயிற்சி யாளர்க ளுக்கு சேர்க்கை ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, தொழிற்ப யிற்சி நிலைய வளாகத்தில் கலெக்டர் மே கநாதரெட்டி மரக்க ன்றினை நட்டு வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், மண்டல பயிற்சி இணை இயக்குநர்(திருநெல்வேலி) செல்வக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ராதாகிருஷ்ணன், நிலைய மேலாண்மை குழு உறுப்பினர் பிருந்தாவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • ஒர்க்‌ஷாப்பில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது. இதனைத்தொடர்ந்து அவர் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது 2பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று சி.சி.டி.வி. கேமராவில் காணப்பட்ட இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததை மகேஷ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் திருப்பூர் புதுரோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சேகர் (43 ), மற்றொருவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (53) தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி உள்ளனர்.

    இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் குறித்த பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான பணி முன்னேற்ற ஆய்வுக்கூட்டம் சென்னை சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது.

    இதில் 2021-22-ம் கல்வியாண்டில் சிறுபான்மையின மாணவ-மாணவிகளின் கல்வி உதவித்தொகை விவரங்கள், வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டு பள்ளி வாசல்களில் பணிபுரியும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் குறித்த திட்டங்கள், சிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்கள், தமிழக அரசு சிறுபான்மையின சமூக மக்களின் நலனுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நலத்திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

    பின்னர் பயனாளிகள் தேர்வில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அலுவலர்களுக்கு ஆலோசனைகளை இயக்குநர் வழங்கினார்.

    முஸ்லீம் பெண்கள் உதவும் சங்கம் மற்றும் கிறிஸ்தவ பெண்கள் உதவும் சங்கங்களின் பயனாளிகளை நேரடியாக கள ஆய்வு செய்து பயனாளிகளிடம் சங்கங்களின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தார்.

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கம் மூலம் பயனடைந்த பயனாளிகளிடம் சிறுபான்மையின நலத்திட்டங்களால் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடைந்த விவரத்தை கேட்டறிந்து, ஆய்வு செய்தார்.இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஞானவேல் உட்பட மாவட்ட முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்க கவுரவச் செயலாளர்கள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    குமரியில் ஒர்க்ஷாப் மற்றும் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் காலையில் பள்ளியை திறக்க வந்த போது பள்ளியில் உள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் அலுவலக அறை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மணிகண்டன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பள்ளியில் இருந்த 2 ஒலிபெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது58). இவர் மொட்டவிளை பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றிருந்தார்.

    பின்னர் மறுநாள் காலையில் ஒர்க்ஷாப் திறக்க வந்த போது ஒர்க்ஷாப்பின் தகவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒர்க்ஷாப் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நின்றிருந்த கார்களிள் இருந்த ரேடியோ செட், ஷாக்கி, லைட் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    ×