search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "school robbery"

    குமரியில் ஒர்க்ஷாப் மற்றும் அரசு பள்ளியின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு பகுதியில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது. நேற்று வழக்கம் போல் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். பின்னர் காலையில் பள்ளியை திறக்க வந்த போது பள்ளியில் உள்ள ஆசிரியர் ஓய்வு அறை மற்றும் அலுவலக அறை கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    மேலும் சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் மணிகண்டன் கொல்லங்கோடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது பள்ளியில் இருந்த 2 ஒலிபெருக்கி மற்றும் விளையாட்டு உபகரணங்களை கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. கைரேகை நிபுணர்களும் அங்கு வர வழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    மேலும் சம்பவம் குறித்து கொல்லங்கோடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல் காரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் (வயது58). இவர் மொட்டவிளை பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அவர் ஒர்க் ஷாப்பை பூட்டி விட்டு சென்றிருந்தார்.

    பின்னர் மறுநாள் காலையில் ஒர்க்ஷாப் திறக்க வந்த போது ஒர்க்ஷாப்பின் தகவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஒர்க்ஷாப் உள்ளே சென்று பார்த்த போது அங்கு நின்றிருந்த கார்களிள் இருந்த ரேடியோ செட், ஷாக்கி, லைட் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் ராமகணேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் ஆகியோர் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே காவலாளியை கட்டிப்போட்டு பள்ளியில் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்- வத்தலக்குண்டு சாலையில் சிலுக்குவார்பட்டியில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் முருகன் (வயது40) என்பவர் காவலாளியாக உள்ளார்.

    நேற்று இரவு இவர் பணியில் இருந்தபோது 3 மர்ம நபர்கள் அவரிடம் விலாசம் கேட்பதுபோல வந்தனர். பின்னர் திடீரென அவரை தாக்கி கீழே தள்ளினர்.

    மேலும் முருகனை பள்ளி கேட் முன்பு கட்டிப்போட்டு விட்டு உள்ளே புகுந்தனர். அலுவலக அறையில் இருந்த கம்ப்யூட்டர், லேப்டாப், கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அள்ளிச் சென்றனர்.

    இன்று காலையில் அவ்வழியே வந்த மக்கள் முருகனின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பள்ளி நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்தபோது அலுவலக அறையில் இருந்த பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை அறிந்தனர்.

    காயம் அடைந்த முருகனை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கொள்ளைபோன பொருட்களின் முழு விவரம் தெரியவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×