search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cheift-Minister"

    • உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் முதல்-அமைச்சர் பங்கேற்கிறார்.

    திருப்பூர் :

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 24-ந் தேதி இரவு திருப்பூர் வருகிறார். இதையொட்டி முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆகியோர் தலைமை தாங்கினர். கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். இதில் காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

    வருகிற 24-ந் தேதி கோவை மாவட்டத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வடுகபாளையம், மன்றாம்பாளையம், நெகமம் வழியாக திருப்பூர் மாவட்டத்துக்கு இரவு வருகிறார். பல்லடத்தில் உடுமலை, பொள்ளாச்சி ரோடு சந்திப்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பல்லடம், மங்கலம் வழியாக திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் பாப்பீஸ் ஓட்டலில் தங்குகிறார். பின்னர் காலையில் அந்த ஓட்டலில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் சார்பாக நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார்.

    இந்த மாநாட்டில் திருப்பூர், ஈரோடு, கோவை, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டத்தை சேர்ந்த சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் பங்கேற்கிறார்கள். 25-ந் தேதி காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு குன்னத்தூர் வழியாக ஈரோடு செல்கிறார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    • நெல்லை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரெட்டியார்பட்டியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்டுள்ளது.
    • பகுதி 2-ல் மேலும் 700 வீடுகள் கட்டப்படுகிறது.

    நெல்லை:

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை சார்பில் தமிழகம் முழுவதும் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

    அதனை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நெல்லை மாவட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் ரெட்டியார்பட்டியில் ரூ.41 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் பகுதி1-ல் 480 வீடுகள் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு வீட்டின் சாவியை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

    தொடர்ந்து ரெட்டியார்பட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் விஷ்ணு ஆகியோர் சென்று ஆய்வு செய்தனர்.பின்னர் குழுக்கள் முறையில் மற்ற பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டது.

    பகுதி 2-ல் மேலும் 700 வீடுகள் கட்டப்படுகிறது. விரைவில் இந்த பணிகள் முடிந்து பயனாளிகளுக்கு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ×