search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counsel"

    • திருச்சுழியில் கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குரு பூஜை விழா வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வா கிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மாலையணி வித்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் விருதுந கர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தியாகி இமா னுவேல் சேகரன் நினைவி–டத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமு றைகள் மற்றும் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் வருவது குறித்த ஆலோசனைக் கூட் டம் திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் பேசும்போது, வருகிற செப் டம்பர் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரானாரின் குருபூஜை விழா நடைபெறு கிறது. இதனையொட்டி திருச் சுழி மற்றும் நரிக்குடி வழி யாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சா வடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனு மதி பெற்று அரசு வகுத் துள்ள வழித்தடங்களில் வருவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறி முறை களையும் தவறாது கடை பிடித்து அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் தங்களது ஒத்து ழைப்பை வழங்க வேண்டு மெனவும் திருச்சுழி கேட்டுக் கொண்டார்.

    மேலும் தியாகி இமானு வேல் சேகரனாரின் குரு பூஜையை முன்னிட்டு நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண் டன், நரிக்குடி சரக இன்ஸ் பெக்டர் ஜெகநாதன் ஆகி யோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் சுழி மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்க ளில் இருந்து சமுதாய தலை வர்கள், கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சுழி மற்றும் நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள், அனைத்து பிரிவுக ளின் காவலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    ×