search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்கள்"

    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.

    ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

    வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில

    காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.

    பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    • விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    • பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

    பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
    • மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை, தனது நிர்வாகக்கட்டுப்பாட்டில் உள்ள தொன்மையான கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்குகள் நடத்துதல், புதிய ராஜகோபுரங்களை கட்டுதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கோவில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் , வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று ஈரோடு மாவட்டம், திண்டல் வேலாயுத சுவாமி கோவில் வளாகத்தில் அக்கோவிலுக்கு ரூ.2.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய ஐந்து நிலை ராஜகோபுரம், சென்னிமலை, சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ. 93 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள பசுமடம், தங்கமேடு, தம்பிக்கலை அய்யன் சுவாமி கோவிலில் ரூ. 22 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வணிக வளாகம், பவானி சங்க மேஸ்வரர் கோவிலில் ரூ. 51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் யானை மணிமண்டபம் மற்றும் ரூ. 34.50 லட்சம் மதிப்பீட்டிலான பணியாளர் குடியிருப்பு மராமத்துப் பணிகள், அந்தியூர், செல்லீஸ்வரர் கோவிலில் ரூ. 60 லட்சம் மதிப்பீட்டில் மதில் சுவர் கட்டும் பணி என மொத்தம் 5 கோவில்களில் ரூ. 4.76 கோடி மதிப்பீட்டிலான 6 திருப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, கட்டுமானப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இப்பணிகளில் ரூ.2.11 கோடி மதிப்பீட்டிலான பணி உபயதாரர் நிதியின் மூலமாகவும், ரூ. 2.65 கோடி மதிப்பீட்டிலான பணிகள் அந்தந்த கோவில் நிதியின் மூலமாகவும் மேற்கொள்ளப் படுகின்றன. நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, அந்தியூர் எம்.பி.எம்.எல்.ஏ.க்கள் ப.செல்வராஜ் ஏ.ஜி.வெங்கடாசலம், டாக்டர் சி. சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் சு. நாகரத்தினம், ஈரோடு மண்டல இணை ஆணையர் அ.தி. பரஞ்சோதி, துணை ஆணையர் ரா.மேனகா, மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் சிவக்குமார், உதவி ஆணையர்கள் சாமிநாதன், அன்னக்கொடி கலந்து கொண்டனர்.

    • தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.
    • மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை என் மண், என் மக்கள் யாத்திரை மேற்கொண்ட போது பொதுமக்களிடம் பேசியதாவது :-

    என் மண், என் மக்கள் யாத்திரை அரசியல் மாற்றத்தை கொடுக்கும். ஊழல் என்னும் பெருச்சாளி இருந்தால் நாடு வளர்ச்சி பெறாது.

    ஊழல் இல்லாத மோடி ஆட்சியில், உலகநாடுகள் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய அமைச்சர்கள் 76 பேர் மீது குண்டூசி ஊழல் செய்ததாக கூட குற்றச்சாட்டு கிடையாது.

    ஆனால், தமிழகத்தில் உள்ள 35 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் மீது நீதிமன்றங்களில் ஊழல் வழக்குகள் நடைபெற்று வருகிறது. தற்போது ஊழல் வழக்கில் பொன்முடிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டு அமைச்சர், எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர் சிறைக்கு செல்வார். ஊழல் வழக்கில் 6 மாதம் சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜிக்கு, எவ்வித மக்கள் பணிகள் செய்யாமலே, இலாகா இல்லாத அமைச்சராக மாதம் ரூ.1.05 லட்சம் ஊதியம் பெறுகிறார். அடுத்த 3 அமைச்சர்கள் ஊழல் வழக்கில் சிறைக்கு செல்ல உள்ளனர்.

    2016-ம் ஆண்டு நீட்தேர்வு வந்தபிறகு ஏழை, விவசாய குடும்பத்தில் இருந்து மாணவர்கள் பலர் மருத்துவபடிப்பில் சேர்ந்துள்ளனர்.

    தி.மு.க.நீட் எதிராக மாணவர்களை திசை திருப்பி, அவர்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக மாற்றுக்கின்றனர்.

    5 முறை தமிழகத்தை ஆட்சி செய்த தி.மு.க. 5 அரசு மருத்துவக் கல்லூரிகள், 15 தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்கியது. ஆனால் 9 ஆண்டுக்கால மோடி ஆட்சியில் தமிழகத்தில் 15 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட 2,250 மருத்துவ இடங்கள் உருவாக் கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிதியை பெருக்குவதற்காக தான் நீட்டை தி.மு.க. எதிர்க்கிறது. செவிலியர்கள், டெட் தேர்வை எழுதிவிட்டு ஆசிரியர் பணிக்காக காத்தி ருப்பவர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் என தமிழகத்தில் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    காமராஜர் ஆட்சிக் காலத்தில் 18 ஆயிரம் பள்ளிக் கூடங்களை கட்டினார். தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளிகளில் 13 ஆயிரம் வகுப்பறைகள் கட்டிடங்கள் இல்லாமல், ஒரே வகுப்பறையில் 1-ம், 2-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி கற்க வேண்டி நிலை உள்ளது. தமிழகத்தின் மொத்த கடன் ரூ.8.23 லட்சம் கோடியாக உள்ளது. ஒவ்வொரு ஒரு ரேஷன் அட்டை மீதும் ரூ.3.61 லட்சம் கடன் உள்ளது.

    மகளிருக்கு உரிமைத் தொகை ரூ.1000 கொடுத்துவிட்டு, 20 சதவீதம் மின்கட்டணம், 30 சதவீதம் சொத்துவரி, பால், தயிர் விலைகளை உயர்த்திவிட்டனர். அப்படி என்றால், மகளிருக்கு உரிமைத்தொகை மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழை வளர்ப்பதாக கூறும் தி.மு.க.பித்தலாட்டம் செய்கிறது. கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 55 ஆயிரம் மாணவர்கள் தமிழ் மொழி பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. ஆனால், மோடி தமிழின் பெருமையை உலக அரங்கிற்கு எடுத்து சென்றுள்ளார். திருக்குறள் பெருமையை பேசுகிறார். எனவே, 3வது முறையாக மோடியை பிரதமராக அவரது கரத்தை அனைவரும் வலுப்படுத்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
    • இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    ஆத்தூர்:

    தி.மு.க. இளைஞரணி 2-வது மாநில மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வருகிற பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பாக நடத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

    இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்த மாநாடு குறித்த மோட்டார் சைக்கிள் பேரணியை கன்னியாகுமரியில் தொடங்கி வைத்தார். அந்த பேரணி 234 தொகுதிகளுக்கும் சென்று கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்தது. இந்த ஊர்வலத்தில் வந்தவர்களை அமைச்சர் கே.என்.நேரு பாராட்டியதுடன் தானும் மோட்டார் சைக்கிளை ஓட்டி உற்சாகபடுத்தினார்.

    மாநாட்டு பணிகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்றும் வரும் நிலையில் பந்தலுக்காக பில்லர்கள் நடப்பட்டு விரைவில் தகர கூரைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. பிரமாண்ட முகப்பு தோற்றத்துடன் பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பந்தல் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1.5 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளை நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தினமும் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

    இந்நிலையில் இன்று காலை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் ஆகியோர் மாநாட்டு பந்தலை ஆய்வு செய்தனர். அப்போது பந்தல் அமைக்கும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு செய்தனர். அதில் இனி வரும் நாட்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் விரிவான ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் மாநாட்டு திடலில் ஒரே நேரத்தில் உணவு உண்ணக்கூடிய அளவில் உணவு அரங்கம், கழிப்பிட வசதி, சாலை வசதிகளும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளையும் அமைச்சர்கள் பார்வை யிட்டனர்.

    இந்த ஆய்வின்போது மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்ட அவை தலைவர் கருணாநிதி, நெசவாளர் அணி அமைப்பாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.எல்.ஏ. சின்னதுரை, தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் முத்துலிங்கம், ஒன்றிய செயலாளர்கள் அன்பு என்கிற மருதமுத்து, சிவராமன், மூர்த்தி, பெத்ததநாயக்கன் பாளையம் நகர செயலாளர் வெங்கடேசன், பேரூராட்சி தலைவர் பழனியம்மாள், ஏத்தாப்பூர் பேரூர் செயலாளர் பாபு, பேரூராட்சி தலைவர் அன்பழகன், ராஜாமணி, வார்டு கவுன்சிலர்கள் கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் தகவல் தொழில் நுட்ப பிரிவு ரகு, தனபால், ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மதுரையில் நடந்த நடப்போம், நலம் பெறுவோம் திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் இன்று சென்னை, பெசண்ட் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சி வாயிலாக அனைத்து மாவட்டங்களிலும் "நடப்போம் நலம் பெறுவோம்" திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் "நடப்போம் – நலம் பெறுவோம்" ஆரோக்கிய நடைபயண திட்டத்தை அமைச்சர்கள் மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுரை மாவட்டத்தில் நடைப்பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் முதல் தொடங்கி ஐய்யர் பங்களா சந்திப்பு வழியாக மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் நுழைவு வாயில் வரை மொத்தம் (8கி.மி) தூரம் ஆரோக்கியம் நடை பயண பகுதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபாதையில் பயணிப்பவர்களுக்கு வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதி, ஓய்வறை கள், இருக்கை வசதிகள், கழிப்பறை மற்றும் பாதுகாப்பு வசதி களுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன், மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், கூடுதல் கலெக்டர் மோனிகா ராணா, மதுரை அரசு ஆஸ்பத்திரி டீன் ரத்தினவேல், துணை மேயர்நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார்.
    • மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் என்ற கோஷத்துடன் பா.ஜ.க மாநில தலைவர் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். கம்பத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது,

    கம்பத்தில் சாகுபடியாகும் திராட்சை சுவை மிகுந்தது. ஆனால் தற்போது கஞ்சா விற்பனையின் தலைநகரமாக மாறியுள்ளது. ஆனால் இதைபற்றி ஆட்சியாளர்களுக்கு கவலை இல்லை. மத்திய அரசின் திட்டங்களை முதலமைச்சர் மாநில அரசின் திட்டங்களை போல காட்டி வருகிறார். கேரளாவின் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் இடமாக தமிழகம் மாறி வருகிறது. இதனை முதலமைச்சர் தட்டி கேட்பதில்லை. காரணம் கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடப்பதால் கூட்டணியில் பிளவு வந்துவிட கூடாது என்பதற்காக மவுனம் காக்கிறார்.

    முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தவும், பேபி அணையை பலப்படுத்தவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகை அணை தூர்வாரப்படவில்லை. கண்ணகி கோவிலை கேரளாவிற்கு தாரை வார்த்துவிட்டனர்.

    சனாதனம் குறித்து பட்டத்து இளவரசர் உதயநிதி புதிய தத்துவம் கூறி உள்ளார். கோவிலில் எவ்வாறு சாமி கும்பிட வேண்டும் என இவர்கள் சொல்லி தர தேவையில்லை. ஏற்றத்தாழ்வு, சாதிய பாகுபாடு இருக்க கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். சனாதனம் பற்றி பேசும் உதயநிதி தனது தாயாரை கோவிலுக்கு செல்ல கூடாது என கூற முடியுமா? அதனால்தான் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் தி.மு.கவை தீய சக்தி என்று கூறி வந்தனர்.

    ஒரேநாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு என முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது சுய சரிதையில் குறிப்பிட்டுள்ளார். பெரும்பாலான கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் தி.மு.க மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. விடுதலை செய்யப்பட்ட பல தி.மு.க அமைச்சர்களின் வழக்குகள் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. அவர்கள் எந்தெந்த சிறையில் இருப்பார்கள் என்பது தெரியாது. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளை கைபற்றி மோடி 3வது முறையாக பிரதமர் ஆவார் இவ்வாறு அவர் பேசினார்.

    3ஆம் நாள் பயணமாக இன்று தேனி நகர் பொம்மைய கவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவிலில் இருந்து பங்களா மேடு வரை பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    • மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    கன்னியாகுமரி:

    பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் "நடப்போம் நலம் பெறுவோம்" என்னும் நோக்கத்தின் அடிப்படையில் பொதுமக்களுடன் அமைச்சர்கள் பங்கேற்ற நடைபயண நிகழ்ச்சி கன்னியாகுமரியில் இன்று காலை நடந்தது.

    அதிகாலை 5.30 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மனோதங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், சுகாதார துறையினர் செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த நடைபயணம் சிலுவை நகர், சீரோ பாய்ண்ட், நான்கு வழி சாலை, ரெயில்வே மேம்பாலம், முருகன்குன்றம் வழியாக பரமார்த்தலிங்கபுரம் மின் வாரிய அலுவலகம் முன்பு வரைசென்று திரும்பி மீண்டும் அதே வழியாக தொடங்கிய இடமான சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் நிறைவடைந்தது.

    மொத்தம் 8 கிலோ மீட்டர் தூரம் இந்த நடைபயணம் நடந்தது. இன்று காலை தொடங்கிய இந்த நடைபயணம் காலை 7 மணிக்கு நிறைவடைந்தது. அதன்பிறகு சன் செட் பாயிண்ட் கடற்கரையில் மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. இந்த நடை பயணத்தில் பங்கேற்றவர்களுக்கு குடிநீர், பானக்காரம், கடலை மிட்டாய் மற்றும் சத்து உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.
    • ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14-ந் தேதி தி.மு.க. பைல்ஸ்-1 என்ற பெயரில் தி.மு.க.வை சேர்ந்த தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 12 பேர் மீது முறைகேடு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அவர்களின் சொத்து பட்டியலை வீடியோ வாக வெளியிட்டார்.

    அதில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி., ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, கவுதம் சிகாமணி, சபரீசன், கலாநிதி மாறன் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு உள்ள சொத்து விவரங்களை பட்டியலிட்டு இருந்தார்.

    அதில் தமிழகத்தில் தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளின் சொத்து மதிப்பு ரூ.3,478.18 கோடி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் சொத்து மதிப்பு ரூ.34,184.71 கோடி என்றும் தெரிவித்து இருந்தார்.

    இந்த வகையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்களின் சொத்து மதிப்பு ரூ.1 லட்சத்து, 34 ஆயிரம் கோடி என்றும் அண்ணாமலை தெரிவித்து இருந்தார்.

    இந்த சொத்து பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் நாளைக்கு (வெள்ளி) 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையை தொடங்க உள்ள நிலையில், அண்ணா மலை கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. பைல்ஸ்-2 என்ற பெயரில் ஏராளமான ஆவணங்கள் அடங்கிய ஊழல் புகார்களை மிகப்பெரிய 'டிரங்க் பெட்டி'யில் வைத்து வழங்கினார்.

    அதில் 9 அமைச்சர்களின் சொத்து விவரங்கள், அவர்களது பினாமி சொத் துக்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பாக எந்தெந்த வகை யில் பணம் சம்பாதித்தனர். அந்த சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது போன்ற விவரங்களை அதில் பட்டியலிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அந்த 9 அமைச்சர்கள் யார்-யார்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இதில் ரூ.5 ஆயிரத்து 600 கோடி ஊழல் பற்றி மட்டும் வெளியில் தெரிவிக்கப் பட்டது.

    மற்ற விவரங்களை நாளை தொடங்கும் பாத யாத்திரையின் போது அண்ணாமலை வெளியிடுவார் என்று கூறியுள்ளனர்.

    ஒவ்வொரு துறை வாரியாக ஆவணங்களை சேகரித்து அதில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர் என்ற விவரங்களை பட்டியலிட்டு அதை பெரிய டிரங்க் பெட்டியில் வைத்து கவர்னரிடம் அண்ணாமலை வழங்கி இருப்பதால் அடுத்த கட்டமாக கவர்னரின் நடவ டிக்கை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசுக்கும் கவர்னருக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் இந்த ஊழல் புகார்கள் மீது வழக்கு தொடர லஞ்ச ஒழிப்பு துறைக்கு அவர் பரிந்துரைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

    இதுகுறித்து கவர்னர் தனது சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க உள்ளதாகவும் தெரிகிறது. அவர் வழக்கு தொடர பரிந்துரைத்தால் 9 அமைச்சர்களும் விசார ணையை சந்திக்க நேரிடும்.

    இதனால் 9 அமைச்சர்க ளுக்கு எந்த நேரத்திலும் சிக்கல் உருவாகும் நிலை ஏற்படும். அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிற சூழ்நிலையில் 9 அமைச்சர்கள் மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினால் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதை எவ்வாறு கையாளுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் அண்ணாமலை வெளியிட்ட தி.மு.க.வின் 2-ம் பாகம் சொத்து பட்டியல் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.

    • முதல்-அமைச்சர் அமைத்த குழுவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட முதல்-அமைச்சர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உள்ளார். அதன்படி தமிழ் காப்பாளர் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இணைத்தலைவர்களாக அமைச்சர் மெய்யநாதன், கணேசன், செயலாளராக கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரன், உறுப்பி னர்களாக டாக்டர்கள் ஜெயநந்தன், நாகநாதன், திண்டுக்கல் லியோனி, தமிழ் காமராசன், பர்வீன் சுல்தானா, நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தமிழ்த்தாயின் தவப்புதல் வன் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். இணைத் தலைவர் களாக அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், செந்தில்பாலாஜி, செயலாள ராக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ராஜேந்திரன், பொற்கோ, பேராசிரியர்கள் அருணன், மருதநாயகன், ராஜன் துறை மற்றும் கலிய பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், அரவிந்த ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    • கோவில்முன்பு மெகா மண்டபம் கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.
    • இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    உடன்குடி:

    பிரசித்தி பெற்ற தசராபெருந்திருவிழா நடைபெறும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தண்டுபத்து சண்முககனி நாடார் பிச்சமணியம்மாள் அறக்கட்டளை சார்பில் கோவில்முன்பு மெகா மண்டபம்கட்டும்பணி தொடக்கவிழாகோவில் கலையரங்கத்தில் நடந்தது.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ., உடன்குடியூனியன் சேர்மன் பாலசிங், உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்துசமயஅறநிலை துறைஅமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

    இந்நிகழ்ச்சியில் மண்டப நன்கெடையாளர் தண்டுபத்து ராமசாமி, தி.மு.க.முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜே.ஜெகன், முன்னாள் அறங்காவலர்குழுத் தலைவர் கண்ணன், உடன்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, மாவட்ட அமைப்பாளர் இளைஞரணி ராமஜெயம், மாவட்ட துணைஅமைப்பாளர் வர்த்தக அணி ரவிராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாய்ஸ், நகர இளைஞரணி செயலாளர் அஜய், மாவட்ட பிரதிநிதிகள் தன்ராஜ், ராஜாபிரபு,

    மகேஸ்வரன், ஜெயபிரகாஷ், சிராசூதீன், செட்டியாபத்து பஞ்சாயத்து தலைவர்பாலமுருகன், உடன்குடி கூட்டுறவு கடன்சங்க தலைவர் அஸ்ஸாப்கல்லாசி, குலசேகரன்பட்டிணம் பஞ்சாயத்து துணைதலைவர் கணேசன், படுக்கபத்து ராமநாதஆதித்தன்,

    தண்டுபத்து திலகர்.எள்ளுவிளை கிளைசெயலாளர் மோகன், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் சிவசுப்ரமணியம், தூத்துக்குடி தெற்கு மாவட்ட முன்னாளபொருளாளர் நடராஜன், உடன்குடி ஜெயராமன் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×