என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.
    X

    திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்கள் - கனிமொழி எம்.பி.

    • விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகள் தொடங்குகிறது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந்தேதி (திங்கட் கிழமை) நடைபெறுகிறது.

    15 ஆண்டுகளுக்கு பின்னர் வெகு விமரிசையாக நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் நடைபெற்ற பல்வேறு கட்ட திருப்பணிகள் நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது.

    கும்பாபிஷேக விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வரு வார்கள் என எதிர்பார்க் கப்படுகிறது.

    இதையொட்டி விழாவுக்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    கும்பாபிஷேக விழா வருகிற 1-ந்தேதி யாகசாலை பூஜைகளுடன் தொடங்குகிறது. இதையொட்டி பிரமாண்ட யாகசாலை மண்டபங்களும் அமைக்கப்பட்டு உள்ளது.

    கும்பாபிஷேகத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் நடைபெற்று வரும் இறுதிகட்ட பணிகளை அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

    கோவில் வளாகம் கும்பாபிஷேகம் நடைபெறும் இடம், யாகசாலை மண்டப பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வரும் கும்பாபிஷேக இறுதி கட்ட பணிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    ஆய்வின்போது கலெக்டர் இளம்பகவத், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஆல்பர்ட்ஜான், கோவில் தக்கார் அருள் முருகன், இந்துசமய அறநிலையத்துறை அதிகா ரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து தக்கார் அலுவலகத்தில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பின்னர் அமைச்சர் பி.கே.சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கும்பாபிஷேக யாகசாலை மற்றும் அதன் பாதுகாப்பு பணி, கோவில் சார்பில் கட்டப்பட்ட 52 அறைகளின் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    கும்பாபிஷேகத்தின்போது கோவில் வளாகம் மற்றும் கோவில் விமான தளத்தில் எவ்வளவு பக்தர்களை அனுமதிக்க முடியும் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இறுதி கட்ட ஆய்வு நடத்தி வருகிற 2-ந் தேதி தெரியவரும். பக்தர்களுக்கு தேவையான தற்காலிக வாகன நிறுத்தும் இடங்கள், கோவில், உபயதாரர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அன்னதானம் வழங்கும் இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கழிப்பிடம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும், பாதுகாப்பு, மருத்துவ வசதிகளும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. 90 சதவீதத்திற்கும் மேலான கும்பாபிஷேக பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தக்கார் அருள் முருகன், மாவட்ட கலெக்டர் இளம் பகவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான், அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், கோவில் இணை ஆணையர் ஞானசேகரன், திண்டுக்கல் மண்டல இணை ஆணையர் கார்த்திக் உள்பட அறநிலையத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×