search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "responsible"

    • மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
    • இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த 8-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் பெயர்கள் மத்திய குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் அகில இந்திய தலைவர் நரேன் ஜெட்டர்ஜி, தேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தமிழக புதிய பொறுப்பாளர்களை டெல்லி நேதாஜி பவனில் அறிவித்தார்.

    இதன்படி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.கர்ணன், மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.கர்ணன் திருப்பூருக்கு முதல்முறையாக வந்தார். அவருக்கு திருப்பூர் எல்லையான தாராபுரம் ரோடு கோவில்வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் துணைத்தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் காளீஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மேலும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் கர்ணனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கர்ணன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருப்பதுடன், மாநில துணைத்தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    • முதல்-அமைச்சர் அமைத்த குழுவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட முதல்-அமைச்சர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உள்ளார். அதன்படி தமிழ் காப்பாளர் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இணைத்தலைவர்களாக அமைச்சர் மெய்யநாதன், கணேசன், செயலாளராக கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரன், உறுப்பி னர்களாக டாக்டர்கள் ஜெயநந்தன், நாகநாதன், திண்டுக்கல் லியோனி, தமிழ் காமராசன், பர்வீன் சுல்தானா, நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தமிழ்த்தாயின் தவப்புதல் வன் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். இணைத் தலைவர் களாக அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், செந்தில்பாலாஜி, செயலாள ராக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ராஜேந்திரன், பொற்கோ, பேராசிரியர்கள் அருணன், மருதநாயகன், ராஜன் துறை மற்றும் கலிய பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், அரவிந்த ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    உத்தரகாண்ட், உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயத்துக்கு 70-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததற்கு அங்கு ஆட்சியில் உள்ள பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தினார். #UttarakandIllicitliquor #UPIllicitliquor #hoochdeaths #Priyankaandhi
    லக்னோ:

    உத்தரபிரதேசம் மாநிலத்தின் எல்லையோரத்தில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் மாவட்டம், பாலுப்பூர் ரூர்கி பகுதியில் கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. கடந்த 8-ம் தேதி நள்ளிரவு இம்மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை வாங்கிக் குடித்த பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
     
    இதில் 12 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது. பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

    மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். 

    நேற்று மாலை நிலவரப்படி ஹரித்துவார் மாவட்டத்தை சேர்ந்த 24 பேரும், உத்தரபிரதேசம் மாநிலம், சஹரான்பூர் எல்லைப்பகுதி வழியாக இங்கு வந்து கள்ளச்சாராயம் குடித்துவிட்டு சென்ற 46 பேரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோர சம்பவத்துக்கு உத்தரபிரதேசம் (கிழக்கு) மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இரங்கலும், கண்டனமும் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சுமார் 100 உயிர்களை பறித்த இந்த சம்பவத்துக்கு உத்தரகாண்ட் மற்றும் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆட்சி நடத்திவரும் பா.ஜ.க. அரசுகள் பொறுப்பேற்க வேண்டும். 

    இந்த சம்பவத்தின் மூலம் இந்த இரு மாநிலங்களிலும் கள்ளச்சாராய விற்பனை எந்த அளவில் நடைபெற்று வந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு  இம்மாநில அரசுகள் உடனடியாக உரிய நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்புகளை அளிக்க வேண்டும்’ என பிரியங்கா வலியுறுத்தியுள்ளார்.

    கள்ளச்சாராயம் விற்பனைக்கு துணைபோன உள்ளூர் அதிகாரிகள் 13 பேரை ஹரித்துவார் மாவட்ட நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது. இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர்களில் இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். #UttarakandIllicitliquor #UPIllicitliquor #hoochdeaths #Priyankaandhi
    விஜய் மல்லையா நாட்டை விட்டு தப்பி ஓடியதற்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளே காரணம் என்று மாயாவதி குற்றம்சாட்டினார். #Mayawati #VijayMallya
    லக்னோ:

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தான் வசித்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு லக்னோ நகரில் புது வீட்டில் குடியேறிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது நாடாளுமன்றம் மற்றும் விரைவில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    நாடாளுமன்ற தேர்தல் என்றாலும் சரி, மாநில சட்டசபை தேர்தல்கள் என்றாலும் சரி எங்களுக்கு மதிப்பளித்து கணிசமான தொகுதிகளை ஒதுக்கினால் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டியிடுவோம். இல்லையென்றால் பகுஜன் சமாஜ் தனித்தே களம் இறங்கும்.

    நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகளுக்கு சம பொறுப்பு உள்ளது. இதனால்தான் சில தொழில் அதிபர்கள் தொழில் முதலீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டை கொள்ளையடித்து விட்டு தொழில் அதிபர் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடியதற்கும் இந்த 2 கட்சிகளுமே முக்கிய காரணம்.



    பா.ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இது ஜனநாயகத்தின் மீது படியும் கறை ஆகும். இப்பிரச்சினையில் பா.ஜனதா ஆளும் மாநில அரசுகள் மெத்தனப் போக்கை கடைப்பிடிக்கின்றன.

    2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், மக்களை பிளவுபடுத்தி ஆட்சியை கைப்பற்ற பா.ஜனதா இதே தந்திரத்தை கையாள முயற்சிக்கிறது. கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. வாஜ்பாய் உயிருடன் இருந்தவரை ஒரு நாளும் பா.ஜனதா அவருடைய வழியை பின்பற்றி நடந்தது இல்லை. தற்போது பா.ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும், தங்களது தோல்விகளை மறைக்க வாஜ்பாயின் பெயரை பயன்படுத்தத் தொடங்கி உள்ளன. இதனால் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Mayawati #VijayMallya
    தூத்துக்குடி கலவரத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். #PonRadhakrishnan #ThoothukudiShooting
    ஆலந்தூர்:

    சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 3 நாட்களாக நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. அமைதியாக போராடி கொண்டு இருந்த மக்களிடையே மிகப்பெரிய கலவர சூழ்நிலை உருவாகி 13 உயிர்கள் பறிபோய்விட்டது. மத்திய அரசு துப்பாக்கி சூட்டுக்கு அனுமதி வழங்கியதாக பொய்யான பிரசாரங்கள் உள்நோக்கத்துடன் பரப்பப்படுவதை மக்கள் நம்ப வேண்டாம்.



    ஸ்டெர்லைட் ஆலையை பா.ஜனதா அப்போதே எதிர்த்தது. அந்த ஆலைக்கு எதிராக 95-96-ம் ஆண்டுகளில் பல போராட்டங்களை நடத்தினேன். 3 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து கைது செய்யப்பட்டேன். இந்த ஆலையை கொண்டு வர முழு காரணமாக இருந்தது தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. கட்சிகள் தான்.

    ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அப்போதைய மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ். மத்திய மந்திரியாக இருந்த ஆ.ராசா, பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ஆகியோரும் இதற்கு அனுமதி வழங்கியதில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர்.

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு ஆர்.எஸ்.எஸ். சொல்லி நடந்ததாக ராகுல்காந்தி கூறுகிறார். சோனியாகாந்தி காலத்தில் இருந்தே தமிழகத்துக்கும், தமிழ் இனத்துக்கும் நடந்த துரோகங்கள் எண்ணில் அடங்காது. ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகள் தமிழகத்துக்கு துரோகம் செய்து உள்ளன.

    கடந்த 99 நாட்களாக நடந்த போராட்டங்களில் எந்த சம்பவமும் நடக்காமல், 100-வது நாளில் கலவரம் எப்படி நடந்தது. இதில் பங்கேற்ற தீய சக்திகள் யார் என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்துக்கு எந்த திட்டமும் வரக்கூடாது என்று சில கூட்டம் செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது பயங்கரவாதிகள் புகுந்துவிட்டதாக கூறிய போதும், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

    ஆஷ்துரைக்கு வீரவணக்கம் என்று ஆங்கிலேயருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியவர்கள் மீது தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது. ஆள்வதற்கு தமிழக அரசுக்கு தகுதி இருக்க வேண்டும். விரைவில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #PonRadhakrishnan #ThoothukudiShooting

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வலியுறுத்தினார். #Thirunavukkarasar #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் காயம் அடைந்தவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை பார்த்து ஆறுதல் கூறுவதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் நேற்று தனித்தனியாக தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, நிருபர்களுக்கு தனித்தனியாக பேட்டி அளித்தனர்.

    அப்போது, திருநாவுக்கரசர் கூறியதாவது:-

    அராஜகமாக, காட்டுமிராண்டித்தனமாக போலீசார் நடந்து இருக்கிறார்கள். துப்பாக்கியால் சுட்டதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்தனர். 100-வது நாள் நடந்த போராட்டத்தில் 5 கிலோமீட்டர் தூரம் வரை அமைதியாக வந்துள்ளனர்.

    குறிப்பிட்ட இடத்திற்கு வந்த பிறகு போலீசார் துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். இதில் 12 பேர் இறந்துள்ளனர். ஜனநாயக நாட்டில் அறவழியில் நடந்த போராட்டத்திற்கு தீர்வு காணாமல் துப்பாக்கி குண்டுகள் மூலம் முடிவு கட்ட முயற்சி செய்து உள்ளனர். பாசிச ஆட்சி போல் இத்தனை பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்கு மூல காரணமான ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவருடன், முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு, நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    இதைத்தொடர்ந்து திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், “இந்த சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்த வன்முறைக்கு அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும்” என்றார்.

    எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் தெகலான் பாகவி கூறுகையில், “துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். தமிழக அரசு, காவல்துறை சேர்ந்து பொதுமக்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்தி உள்ளது. காவல்துறை திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு உள்ளது. காக்கை, குருவிகளை போல், மனிதர்களை படுகொலை செய்து உள்ளனர். இதற்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். அதேபோல், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும்” என்றார்.  #Thirunavukkarasar #SterliteProtest
    பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப புதிய மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதும், சிறந்த டாக்டர்களை உருவாக்குவதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை என ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் யோகேஷ் உள்ளிட்ட 16 டாக்டர்கள் மனு தாக்கல் செய்தனர். அதில், ‘நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய ஒதுக்கீட்டில் வெளிமாநிலங்களில் எங்களுக்கு இடம் கிடைத்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த எங்களது பெயர் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள தரவரிசை பட்டியலில் இடம் பெறாததால், தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவ கல்லூரியை தேர்வு செய்ய முடியவில்லை.

    எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டில் நாங்கள் தேர்வு செய்யப்பட்டு இருந்தாலும், மாநில ஒதுக்கீட்டின் கீழ் எங்களை சேர்க்க உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

    இதற்கு பதில் அளித்த தமிழக அரசு, ‘சம்பந்தப்பட்ட மாணவர்கள் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்ற போதும் ஏதாவது ஒரு கலந்தாய்வில் மட்டுமே அவர்கள் பங்கேற்க முடியும். அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றுவிட்டு, மாநில அரசின் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் உரிமை கோர முடியாது’ என்று கூறியது.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    மனுதாரர்கள் அனைவரும் மாநில அரசின் ஒதுக்கீட்டுக்கு தகுதியானவர்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுகளின்படி, இந்த கலந்தாய்வுகள் நடக்கின்றன. மனுதாரர்கள் ஏற்கனவே அகில இந்திய ஒதுக்கீட்டில் இடம் பெற்றவர்கள் என்ற காரணத்தால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்கிறேன். இந்தியாவில் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்ற டாக்டர்களின் தேவை அதிகரித்து வருகிறது.

    இந்த சூழலில் பட்டமேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும் இளம் டாக்டர்கள் அவர்கள் விரும்பும் பாடங்களையும், கல்லூரிகளையும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்காவிட்டால் அவர்களால் நாட்டுக்கு சிறந்த சேவையை அளிக்க முடியாது.

    எனவே நாடு முழுவதும் புதிய மருத்துவ கல்லூரிகளை, டாக்டர்கள் விரும்பும் துறைகளுடன் தொடங்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிக்க சிறந்த டாக்டர்களை உருவாக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

    இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 
    ×