search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Samathuvapuram"

    • உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை உருவாக்கியவர்.
    • அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    சென்னை:

    சிவசேனா கட்சி (யுபிடி) மாநில முதன்மை செயலாளர் சுந்தரவடிவேலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    உலகிலேயே முதன் முதலாக யாருக்கும் தோன்றாத சமத்துவ சமுதாயத்தை சொல்லிலே மட்டும் இல்லாமல், எழுத்திலே மட்டும் இல்லாமல் செயலிழை செய்து காட்டி சாதித்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் கலைஞரின் நூற்றாண்டு தினத்தை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 100 சமத்துவ புரங்களை அமைத்து அதற்கு கலைஞர் சமத்துவபுரம் என்று பெயர் சூட்டி, கலைஞர் சமத்துவ படங்கள், அனைத்து புதிய தலைமுறையை புதிய பொருளாதார ஏற்றத்தை, புதிய மாற்றத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் உருவாக்கி, அடுத்த நூற்றாண்டில் உலகிற்கு தமிழ்நாடு முன்மாதிரியாய் அமைந்திட 100 கலைஞர் நூற்றாண்டு சமத்துவபுரங்கள் அமைத்திட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • சமத்துவபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
    • சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெக்களூர் மக்கள் சமத்துவபுரம் பராமரிப்பு பணி தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.அதில், நாங்கள் அவினாசி வட்டம், தெக்களூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளை விலைக்கு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதற்கு பட்டா கேட்டு மனு அளித்துள்ளோம். தற்போது சமத்துவபுரம் வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள வேண்டும் என எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    • பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    உடன்குடி:

    உடன்குடி யூனியனுக்குட்பட்ட பரமன்குறிச்சி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலை கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

    இந்த பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.

    திட்ட பணிகளின் மதிப்பீடு என்ன? முறையாக நடக்கிறதா? என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

    இதில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், உடன்குடிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, கே.டி.சி. தினகர், பெத்தாமுருகன், மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளைச் செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×