search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "House Maintanence"

    • சமத்துவபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
    • சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெக்களூர் மக்கள் சமத்துவபுரம் பராமரிப்பு பணி தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.அதில், நாங்கள் அவினாசி வட்டம், தெக்களூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளை விலைக்கு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதற்கு பட்டா கேட்டு மனு அளித்துள்ளோம். தற்போது சமத்துவபுரம் வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள வேண்டும் என எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    ×