search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புத்தக திருவிழா"

    • நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.
    • போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி

    திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் ஜோசப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் புத்தக திருவிழா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொது நூலகத்துறையின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) பொதுமக்களுக்கு கட்டுரை போட்டியும், வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது.

    ஒவ்வொரு நூலகத்திலும் காலை 11 மணிக்கு நடைபெறும் கட்டுரை போட்டியில் பொதுமக்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள பொதுநூலகத்துறையின் கீழ் செயல்படும் நூலகத்துக்கு சென்று கலந்து கொள்ளலாம். அதிகபட்சம் 2 மணி நேரம் வழங்கப்படும்.

    கட்டுரைப்போட்டியின் தலைப்பு புத்தக வாசிப்பு என்ன செய்யும்? என்பதாகும். இதேபோல் புத்தக வாசிப்பு பற்றிய வாசகம் எழுதும் போட்டியும் நடக்கிறது. 4 வரிகளுக்கு மிகாமல் வாசகம் எழுதி நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 8825790004, 9487317509 ஆகிய வாட்ஸ்-அப் எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்ப வேண்டும்.

    போட்டிகளில் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பங்கேற்கலாம். இந்த தகவலை மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

    • விருதுநகரில் 2-வது புத்தக திருவிழா வருகிற 16-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து, விருதுநகர்-மதுரை சாலையில் கே.வி.எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்காட்சி மைதானத்தில் வருகிற 16-ந்தேதி முதல் நடைபெற உள்ளது.

    தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புத்தக திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மேலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்த புத்தக திருவிழாவில் தினந்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி போன்ற பல்வேறு போட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள், நாட்டுப்புற கலை நிகழ்ச்சி கள், சிறப்பு எழுத்தாளர்கள் பங்கேற்கும் சொற்பொழிவு கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் இலக்கிய நிகழ்ச்சிகள், சுழலும் சொல்லரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன.மேலும் புத்தக திருவிழா நடைபெறும் நாட்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் அரசு அலுவலர் களுக்கான கலை நிகழ்ச்சிகளும், மாலை 4 மணி முதல் 5 மணி வரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. மாலையில் தலைசிறந்த ஆளுமைகள் கலந்து கொள்ளும் சிறப்புரைகள், பட்டிமன்றம், இலக்கிய அரங்கு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

    • அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது.

    சேலம்:

    சேலத்தில் அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

    முதல்- அமைச்சர் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடமும் வாசிப்பு பழக்கத்தை அதகரிகத்து அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்கும் வகையில் புத்தக வாசிப்பை ஒரு மக்கள் இயக்கமாக எடுத்துச் செல்லும் நோக்கத்தோடும் மாவட்டங்களில் புதிய நூலகங்கள் அமைத்தல், அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட புத்தக திருவிழா பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரிடையே மிகுந்த வரவேற்பையும், பாராட்டையும் பெற்றது. அதேபோன்றும் இந்த ஆண்டும் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சேலம் புத்தக திருவிழா வருகின்ற 22.11.2023 (புதன்கிழமை) தொடங்கி 03.12.2023 (ஞாயிற்றுக்கிழமை) வரை 12 நாட்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறவுள்ளது.

    இப்புத்தகக் கண்காட்சியில் சேலம் மாவட்ட பண்பாடு, கலாச்சாரம் சார்ந்த கலை நிகழ்ச்சி கள் நடத்திடவும், மாணவர்க ளுக்கு பயன்படும் மின்நூல் மற்றும் மின் பொருண்மை பதிப்பாளர்களின் படைப்பு களைக் கொண்ட விற்பனை யகங்கள் அமைத்திட வும், அரிய வகை புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும், வாசிப்பு அரங்கங்கள், பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வாசிப்பு அரங்கம், ஒளி, ஒலி அமைப்புடன் கூடிய அரங்கங்கள் இடம்பெறவுள்ளன. நிகழ்ச்சி நடைபெறும் அனைத்து நாள்களிலும் தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களின் கருத்தரங்கம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் நடைபெறவுள்ள இப்புத்தகக் கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது
    • சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20 முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புத்தகத் திருவிழா வருகிற 20-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவில் சுமாா் 50-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு பல்வேறு புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

    புத்தகத் திருவிழா நடைபெறும் அனைத்து நாள்களிலும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இலக்கிய சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    நிகழ்ச்சிகளில் கலைஞா்கள், எழுத்தாளா்கள் பங்கேற்று விழாவை சிறப்பிக்க உள்ளனா்.புத்தகத் திருவிழாவில் உணவகங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. மாணவா்கள், பொதுமக்களின் புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்துக்காக இலவசமாக நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில் அனைவரும் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.
    • பின்னர் உடனடியாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்ப ட்டினத்தில் நெய்தல் புத்தகத் திருவிழா இன்று தொடங்கப்பட்டது. வருகிற 9-ம் தேதி வரை புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை ஏராளமான மாணவர்கள், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தகத் திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டு இருந்த ஒவ்வொரு அரங்குகளையும் பார்வையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் அரசு கல்லூரியை சேர்ந்த மாணவி மற்றும் பள்ளி மாணவி ஒருவர் என 2 பேர் திடீரென்று மயக்கம் அடைந்தனர். அப்போது அங்கு இருந்த தோழிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி டைந்தனர். பின்னர் உடனடி யாக ஆம்புலன்சுக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதன் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது.‌

    கடலூர்:

    கடலூர் 30 மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச்சில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நெய்தல் புத்தக திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 9-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நெய்தல் புத்தக திருவிழா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்று காலை கடலூரில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட விளையாட்டு சிவா வரவேற்றார். மினி மாரத்தான் போட்டி கடலூர் டவுன்ஹாலில் இருந்து தொடங்கி சில்வர் பீச் வரை சென்று முடிவடைந்தது. இதில் மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா, மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள் பாபு, சுபாஷினி ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆராய்ச்சி படிப்புகளில் மாணவர்கள் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும் என அரியலூர் புத்தக திருவிழாவில் தொல். திருமாவளவன் பேசினார்
    • படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும்

    அரியலூர்:

    அரியலூரில் நடைபெற்று வரும் புத்தக திருவிழாவின் 6-நாம் நாளான இன்று தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது,தமிழக மக்கள், இளைஞர்களிடையே படிக்கும் வேட்கை உருவாகியுள்ளன என்பதை இந்த புத்தகத்திருவிழா உணர்த்துகிறது.ஆகையால் தான் நாவல்கள், சிறுகதைகள் என ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகி கொண்டிருக்கிறது. அறிவியல், ஆராய்ச்சி படிப்புகளில் அதிகம் நாட்டம் செலுத்த வேண்டும்.

    படிக்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு எங்கிருந்தாலும் புத்தககம் வீடு தேடி வரும். படிக்க வேண்டும் என்ற ஈடுபாடு அனைவருக்கும் வேண்டும். புத்தகங்களை படிப்பதால் வீடு மட்டுமன்றி, நாடும் வளர்ச்சி அடையும்.பள்ளிகளில் பாடபுத்தகங்கள் வரையறுக்கப்படுகின்றன. இதற்காக வல்லுநர்கள் கொண்ட குழு அமைக்கப்படுகின்றன. பள்ளியில் இதனை தேர்வு செய்து பயிலும் மாணவர்கள் தற்போது அதிகம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் தான் இந்த மாற்றம் உள்ளது. முன்பெல்லாம் படிப்பு என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளாதது.

    அப்போது, பெற்றோருக்கும் அந்த உந்துதல் இல்லை. படிக்காமல் இருக்கின்றோமே என்ற எண்ணம் ஏற்படவும் இல்லை.ஆனால், தற்போது பள்ளி செல்லவில்லை என்றால் மதிப்பு இல்லை. பாடத்திட்டங்களை தாண்டி படிக்கும் மாணவர்கள் உயர்ந்த நிலையை அடையலாம். பாடத்திட்டங்களை தாண்டி படித்தவர்கள் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். அந்த காலக்கட்டத்தில் கலாச்சாரம் எவ்வாறு இருந்தது என்பதை எல்லாம் உணர வரலாறு புத்தகங்களை அனைவரும் படிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கம்
    • இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும்.

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழா நிறைவுநாள் நிகழ்ச்சி கோணம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இதில் கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தமிழ்நாடு அரசு இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே அறிவுசார்ந்த புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வழக்கப்படுத்திக்கொள்ளும் நோக்கில் அனைத்து மாவட்டங்களிலும் அதற்கென நிதி ஒதுக்கீடு செய்து, புத்தகத்திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் கடந்த 14-ந் தேதி தொடங்கிய புத்தக திருவிழா நேற்று வரை தொடர்ந்து 11 நாட்கள் நடந்தது. ஒவ்வொரு நாளும் மாவட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் புத்தக அரங்குகளை பார்வை யிட்டதோடு, தொடர்ந்து 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் வாங்கி பயனடைந்துள்ளனர்.

    வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, பள்ளிக்கல்வித்துறையில் எண்ணும், எழுத்தும் மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்டம், சமூகநலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பொதுசுகாதாரத்துறை, காவல்துறை, வனத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் இந்த புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் நமது சமுதாயத்தை குறிப்பாக, குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதே ஆகும். புத்தகம் வாசிப்பானது நம்முடைய தனிப்பட்ட வளர்ச்சியில் ஒரு பெரிய பங்கு வகிப்பதால், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகம் வாசிப்பதில் ஊக்குவிக்க வேண்டும்.

    மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பொதுமக்கள் மாணவ-மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    மாவட்ட மைய நூலகம் பல்லாயிரக்கணக்கான அறிவுசார்ந்த நூலகங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. அதை போல் கிராமப்புற மற்றும் நகர்புற பகுதிகளில் 21 கிளை நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. மேலும் கிராமப்புறங்களில் மொத்தம் 109 கிராமபுற நூலகங்கள் செயல்பட்டு வருகிறது.

    தற்போதைய தொழில்நுட்பவியல் காலத்தில் மாவட்ட மைய நூலகங்கள் டிஜிட்டல் மையமாக மாற்றும் திட்டம் கொண்டுவரப்பட்டு, மாவட்ட மைய நூலகம் முழுமை யாக கணினி மயமாக்கப்பட் டுள்ளது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, ஒவ்வொரு ஆண்டும் நூலகங்களை புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இளைய தலை முறையினர், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்ட அனைவரும் அறிவு சார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டு வாழ்வில் ஏற்றம் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசினையும், வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள், கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட சிறந்த படைப்பாளிகள் மற்றும் நன்கொடை வழங்கியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள்.

    நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேது ராமலிங்கம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுப்பையா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்புகழேந்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விமலா ராணி, தாசில்தார்கள்ராஜேஷ் (அகஸ்தீஸ்வரம்), வினை தீர்த்தான் (தோவாளை), தனிவட்டாட்சியர் கோலப்பன் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    • 4-ம் புத்தகத் திருவிழா இன்று முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.
    • வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி:

    தமிழக மக்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் வகையிலும், வரலாற்றை தெரிந்து கொள்ளவும், கல்வி, வேலை வாய்ப்பிற்காக பயிலும் மாணவர்கள், இளைஞர்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து மாவட்டங்களிலும் ஆண்டுதோறும் புத்தகத்திருவிழா நடத்த உத்தரவிட்டு அதற்கான நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார்.

    இதன்மூலம் மாணவர்கள், இளைஞர்கள் ஒரே இடத்தில் அனைத்து வகையான புத்தகங்களையும் தள்ளுபடி விலையில் வாங்க முடியும். அதன்படி, தூத்துக்குடி-எட்டயபுரம் சாலை சங்கரப்பேரி விலக்கு பகுதியில் தூத்துக்குடி மாவட்டத்தின் 4-ம் புத்தகத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 1-ந் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    அதனை தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார். இதில் மேயர் ஜெகன்பெரியசாமி, கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரம்மசக்தி, மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இப்புத்தகத் திருவிழாவில் 110 புத்தக அரங்குகள், 10 அரசுதுறை அரங்குகள், பாரம்பரிய உணவு வகைகளை அறிந்து கொள்ளும் வகையில் தனியாக 40 அரங்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வருகிற 28-ந்தேதி முதல் நெய்தல் கலைத்திரு விழாவும் நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமையை, தமிழரின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறையுடன் இணைந்து சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, வசவப்பபுரம், பறம்பூர் ஆகியவற்றில் கிடைத்த முதுமக்கள் தாழி, மட்டுமல்லாமல் பண்டைய தமிழ் வரலாறு எப்படி வளர்ந்தது? என்பது குறித்து மாதிரி செயல்வடிவம் புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது.

    புத்தகத் திருவிழாவிற்கு வந்து செல்வதற்கு புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாலை நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என மேயர் ஜெகன்பெரியசாமி கூறி உள்ளார்.

    • 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது
    • 22-ந்தேதி பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்தகி நட்ராஜ் பரதநாட்டிய நிகழ்ச்சி

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் புத்தக திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சி தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகி களுடனான கலந்தாலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் பேசியதாவது:-

    பொதுமக்கள், இளைஞர்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் புத்தக வாசிப்பு திறனை ஊக்கப்படுத்தும் வகையில், 14-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை மாபெரும் புத்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்த மாபெரும் புத்தக கண்காட்சியில் 100-க்கும் அதிகமான அரங்குகள் வாயிலாக பொது அறிவு, தொழில்நுட்பம், அறிவியல், வரலாற்று சரித்திரம் உள்ளிட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட வுள்ளது.

    இப்புத்தக கண்காட்சியினை வருகிற 14-ந்தேதி தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிடுகிறார். 15-ந்தேதி திருக்குறள் பயில்வோம் என்ற தலைப்பிலும், 16-ந்தேதி வாழ்வை வளமாக்கும் வாசிப்பு என்ற தலைப்பிலும், 17-ந்தேதி கல்வி அதிகாரமளிக்கும் ஒரு கருவி என்ற தலைப்பிலும், 18-ந்தேதி வாசிப்பை நேசிப்போம் மற்றும் குமரி மண்ணும், மணமும் என்ற தலைப்பிலும், 19-ந்தேதி புத்தகம் என்ற தலைப்பிலும், 20-ந்தேதி நானும் என் படைப்புகளும் மற்றும் புத்தகம் பேசுகிறது என்ற தலைப்பிலும், 22-ந்தேதி புத்தகம் தரும் புத்தாக்கம் என்ற தலைப்பிலும், 23-ந்தேதி தமிழால் தலை நிமிர்வோம் என்ற தலைப்பிலும், இலக்கிய துறை சார்ந்த பல்வேறு ஆர்வலர்கள் கருத்துரை வழங்கவுள்ளார்கள்.

    மேலும், 15-ந்தேதி (சனிக்கிழமை) பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், ஊக்கமது கைவிடேல் என்ற தலைப் பிலும், 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பட்டி மன்ற புகழ் சுகிசிவம் சிகரங்களை நோக்கி என்ற தலைப்பிலும், 17-ந்தேதி நீயா, நானா புகழ் கோபிநாத், ஆவனா என்ற தலைப்பிலும், 21-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் முனை வர் பர்வீன் சுல்தானா உண்டு தீர்த்தோம், உழுது பார்த்தோம் என்ற தலைப்பிலும் கருத்துரை வழங்க உள்ளனர்.

    22-ந்தேதி பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்தகி நட்ராஜ் பரதநாட்டிய நிகழ்ச்சியும், 23-ந்தேதி சங்கரின் சாதக பறவைகள் இன்னிசை நிகழ்ச்சியும், 24-ந்தேதி பட்டிமன்ற புகழ் கலைமாமணி பேராசிரியர் முனைவர்.கு.ஞான சம்மந்தம் குழுவினரின் இலக்கியங்கள் காலத்தை வென்று நிற்பதற்கு பெரிதும் காரணம் படைப்பாளிகளா? படிப்பாளிகளா? என்ற தலைப்பில் மாபெரும் பட்டிமன்றம் நடைபெறுவதோடு, புத்தக கண்காட்சி நடைபெறும். ஒவ்வொரு நாளும் கன்னியாகுமரி மாவட்டத் திற்குட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி, பறையாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், களியல் ஆட்டம், சிலம்பாட்டம், களரி பைட், தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்ட மண்ணின் கலைகள் நடைபெறவுள்ளது.

    எனவே, மேற்குறிப்பிட்ட நாள்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பொது மக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு புத்தகத் திருவிழா மற்றும் புகைப்பட கண்காட்சியினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தக கண்காட்சியுடன் இணைந்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி என்ற புகைப்பட கண்காட்சியும் நடைபெறவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட வருவாய் அலுவலர் சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், பத்மநாபபுரம் சப்-கலெக்டர் கவுசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.
    • தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாணவர்கள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா கடந்த 25-ந்தேதி தொடங்கி வருகிற (ஏப்ரல்) 2-ந்தேதி உடன் முடிவடைகிறது.

    இதில் சுமார் 60 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு தமிழ்நாட்டின் புத்தக வெளியீட்டாளர்களின் படைப்புகள் காட்சி படுத்தப்பட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெற்று வருகிறது.

    மேலும், மகளிர் சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    தினமும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்ககள் பலர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில், இதில் மக்கள் பங்கேற்கும் விதமாக திருத்துறைப்பூண்டி பாலம் சேவை நிறுவன செயலாளரும், சமூக சேவகருமான செந்தில்குமார் கடந்த ஒரு வாரமாக திருத்துறைப்பூண்டி நகராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மைக் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார்.

    இவரது விழிப்புணர்வு மூலம் இதுவரை 2 ஆயிரத்து 542 இளைஞர்கள் புத்தக திருவிழாவில் கலந்து கொண்டு சுமார் ரூ.30 ஆயிரம்-க்கு புத்தகம் வாங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

    மேலும், ரூ. 6 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை சிறை துறைக்கு தானமாக வழங்கியுள்ளதாகவும் கூறினார்.

    இவரது இந்த பணியை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    • பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், நடைபெற்று வருகிறது.
    • 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாவது நீலகிரி புத்தக திருவிழா-2023 கடந்த 5-ந் தேதி தொடங்கியது. சர்வதேச கணிதவியல் தினத்தையொட்டி சிந்தனை கவிஞர் கவிதாசன் வெல்வதற்கே வாழ்க்கை என்ற தலைப்பிலும், நடிகரும், தமிழ் இலக்கிய பேச்சாளருமான ஜோ.மல்லூரி தமிழ் எங்கள் ஞானச் செருக்கு என்ற தலைப்பிலும் பேசினர். விழாவில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், தமிழ் பற்றாளர்கள் கலந்துகொண்டு பேசினர். முக்கிய நிகழ்ச்சியாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு புத்தக கண்காட்சியை பார்வையிட்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். தொடந்து புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தினமும் மாவட்ட நிர்வாகம் சார்பில், பள்ளி மாணவ-மாணவிகள், பழங்குடியினர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகிறது. கடந்த 5-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடந்த புத்தக திருவிழாவில் ரூ.10.70 லட்சம் மதிப்பில் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. 24,095 பார்வையாளர்கள் புத்தக அரங்கினை பார்வையிட்டனர்.

    ×