search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர்கள் மரியாதை"

    • 221-வது நினைவு தினத்தையொட்டி மருதுபாண்டியா்கள் சிலைகளுக்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
    • சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் உள்ள நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் செய்தி- மக்கள் தொடா்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மருது பாண்டியா்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியா்களின் 221-வது நினைவு தின விழா நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் அமைச்சர்கள் பெரியசாமி, சாத்தூர் ராமசந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், பி.மூர்த்தி, பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் மருது பாண்டி யா்களின் திருவுருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.

    முன்னதாக, கலெக்டர் மதுசூதன் ரெட்டி மருதுபாண்டியா்களின் நினைவு மண்டப வளா கத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து மாியாதை செலுத்தினார்.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினா் தமிழரசிரவிக்குமார், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினா் மாங்குடி, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணி ப்பாளா் செந்தில்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.அதனைத்தொடா்ந்து, திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியா்களின் நினைவுத்தூணுக்கு அமைச்சா்கள், கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் மற்றும்் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மாியாதை செலுத்தினர்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன், தேவகோட்டை கோட்டா ட்சியா் பிரபா கரன், திருப்பத்தூர் பேரூராட்சித் தலைவா் கோகிலாராணி, செய்தி-மக்கள் தொடா்பு அலுவலா் சண்முகசுந்தரம், உதவி மக்கள் தொடா்பு அலுவலா் (செய்தி) ராஜசெல்வன், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்) ராஜா, திருப்பத்தூர் வட்டாட்சியா வெங்கடேசன், பேரூராட்சி செயல் அலுவலா் ராதாகிருஷ்ணன் மற்றும் மருதுபாண்டியா்களின் வாரிசுதாரா்கள் கலந்து கொண்டனா்.

    ×