search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Pandiarajan"

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு தம்பிதுரை மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் கடந்த 4-ந்தேதி முதல் தலைமை கழகத்தில் பெறப்பட்டு வந்தது. இதில் 10-ந்தேதி வரை 1200-க்கும் மேற்பட்டவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்தனர்.

    மனு தாக்கல் செய்வதற்கு அதிகம் பேர் முன்வந்ததால் விருப்ப மனுபெறும் தேதி 14-ந் தேதி வரை நீடிக்கப்பட்டிருந்தது.

    இதையொட்டி ஏராளமான கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை 5 மணி வரை மனுக்களை பெற்றுபூர்த்தி செய்து தலைமை கழகத்தில் வழங்கினார்கள். மொத்தம் 1,737 பேர் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.

    தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் மத்திய சென்னை தொகுதியில் விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    இவர் மத்திய சென்னைக்கு உட்பட்ட அண்ணாநகரில் வசித்து வருவதால் இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

    சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி கரூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.
    இதேபோல் தம்பிதுரையும் கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளார்.

    கரூர் தொகுதியில் இப்போது எம்.பி.யாக இருப்பவர் தம்பிதுரை. பாராளுமன்ற துணை சபாநாயகரான இவர் பிரதமர் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். பா.ஜனதா கட்சியையும் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

    எனவே அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி ஏற்பட்டால் தம்பிதுரைக்கு கரூர் தொகுதி மீண்டும் கிடைக்காது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

    அதனால்தான் அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி கரூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ராஜேந்திரநாத் குமார் தேனி தொகுதியில் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளார்.

    மைத்ரேயன் எம்.பி. தென்சென்னை, மத்திய சென்னைக்கும், டி.ஜி.வெங்கடேஷ்பாபு வட சென்னையிலும் போட்டியிட விருப்பமனு கொடுத்துள்ளனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது அ.தி.மு.க. சார்பில் 4500-க்கும் மேற்பட்டவர்கள் விருப்பமனு வாங்கி இருந்தனர். இதில் பலர் ஜெயலலிதா பெயரில் விண்ணப்பம் செய்திருந்தனர்.

    அவர் மறைந்த பிறகு நடைபெறும் முதல் பாராளுமன்ற தேர்தலுக்கான விருப்பமனுவை 1,737 பேர் மட்டுமே வாங்கி உள்ளனர். இது ஜெயலலிதா இருந்தபோது வாங்கிய விண்ணப்பங்களை விட 3 மடங்கு குறைவாகும். #ADMK
    கீழடியில் மார்ச் இறுதிக்குள் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். #MinisterPandiarajan
    மதுரை:

    மதுரை உலகத்தமிழ் சங்கத்தில், சீனக்கவிஞர் யூ.சி.யின் திருக்குறள் ஆய்வு கருத்தரங்கம் இன்று நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா.பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். முன்னதாக அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 4 அருங்காட்சியகங்களை சீரமைக்க ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடந்து வருகிறது.

    மாவட்டந்தோறும் அருங்காட்சியகம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் பத்திரமாக உள்ளன.

    முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் மைசூரில் உள்ளது. தேவைப்படும் நேரத்தில் அதனை தருவதாக உறுதி அளித்துள்ளனர்.

    2 மற்றும் 3-ம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் சென்னையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. 4-ம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்டவை கீழடியிலேயே உள்ளன. அங்கு 5-ம் கட்ட பணியும் நடந்து வருகிறது.

    மார்ச் இறுதிக்குள் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர், கொற்கை பகுதியில் அகழாய்வு பணிகள் தொடங்குவது குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan
    தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று கூறிய மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    திருவள்ளூர்:

    திருவள்ளூரில் அ.தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியின் மகன் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இடைத்தேர்தல் அறிவிக்கும் முன்பே பொறுப்பாளர்களை நியமித்த கட்சி அ.தி.மு.க தான். கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதைவிட இருமடங்கு வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெறும்.

    அதற்காக அ.தி.மு.க நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அனைவரும் தயாராக இருக்கிறார்கள். பூந்தமல்லி தொகுதி பொறுப்பாளராக நான் இருப்பதால் 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்.


    திமுக ஆட்சிக்கு வந்தால் ஊழல் அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுகிறார்.

    ஸ்டாலினின் ஆணவப் பேச்சால் தான் ஆர்.கே.நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தனர். பிரியாணி கடை யை அடித்து உடைப்பதும், பியூட்டி பார்லரில் பெண்களை தாக்குவதும், பேன்சி ஸ்டோரை அடித்து உடைக்கும் தி.மு.க. வினரை முதலில் கட்டுக்கோப்போடு நடத்துங்கள். உங்கள் அராஜகத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தேர்தலில் யார் ஜெயிப்பது, யாரை எங்கே அனுப்புவது என்று பார்த்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #MinisterPandiarajan #DMK #MKStalin
    தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம் என்று தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜ‌ன் கூறினார். #MinisterPandiarajan #ADMK
    நெல்லை:

    தமிழக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜ‌ன் இன்று நெல்லை அரசு அருங்காட்சியகத்துக்கு வந்தார். அருங்காட்சியகத்தை ஆய்வு செய்த அவர் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பழங்கால சிலைகள் மற்றும் பொருட்களை பார்வையிட்டார். பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நெல்லை அரசு அருங்காட்சியகம் ரூ.2.8 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. புதிதாக கேலரி, கலையரங்கம் கட்டப்பட உள்ளது. தரங்கம்பாடி அருங்காட்சியகத்தை உலகத்தரம் வாய்ந்ததாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ.4.8 கோடியில் புனரமைக்கும் பணிகள் நடக்க உள்ளன.

    புதுக்கோட்டை, திருச்சி அருங்காட்சியகங்களும் தரம் உயர்த்தப்பட உள்ளன. திருவண்ணாமலை, தேனி ஆகிய இடங்களில் புதிய அருங்காட்சியகம் அமைக்க அரசு ரூ.8 கோடி ஒதுக்கியுள்ளது.

    தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடியில் அகழாய்வுகள் நடந்துள்ளன. ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகளை வைப்பதற்கு அங்கேயே அகழ் வைப்பகம் அமைக்க மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.

    அகழ் வைப்பகம் அமையும் இடங்களில் மற்ற‌ கட்டிடங்கள் இருக்கக்கூடாது. அதை கருத்தில் கொண்டு அகழ் வைப்பகம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கீழடியில் அகழ்வைப்பகம் அமைக்க மத்திய அரசு ரூ.1 லட்சம் ஒதுக்கியுள்ளது.

    மதுரையில் ரூ.56 கோடியில் உலகத்தரம் வாய்ந்த பழந்தமிழர் கண்காட்சி, ஐந்திணை பூங்கா, தமிழ்தாய் சிலையுடன் அமைக்கப்பட இருக்கிறது. அரியலூரில் திறந்தவெளி மியூசியம் அமைய உள்ளது. அருங்காட்சியகங்களில் மாணவர்களின் கலைதிறன்களை வளர்க்க பல்வேறு பயிற்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள அருங்காட்சியகங்களை ஆண்டுக்கு 10 லட்சம்பேர் மட்டுமே பார்வையிட்டு வருகிறார்கள்.

    இதை 20 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ-மாணவியர் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியகத்தை பார்வையிட அறிவுறுத்தியுள்ளோம். இதன்மூலம் பார்வையாளர் எண்ணிக்கை 20 லட்சமாக உயரும். சென்னை அருங்காட்சி யகத்தில் 6 விதமான வரலாற்று கண்காட்சிகள் அமைக்கப்படும்.



    அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தாய் கழகத்துக்கு திரும்பி வரவேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ள‌ன‌ர். எனவே கட்சியை விட்டு சென்ற‌வர்கள் மீண்டும் வரவேண்டும்.

    தற்போது அ.தி.மு.க.வில் ஏராளமானோர் சேர்ந்து வருகிறார்கள். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். ஜெயலலிதா கூறியதுபோல் நூறாண்டுகாலம் இந்த ஆட்சி நீடிக்கும்.

    இப்போது தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளோம். கடந்தமுறை உள்ளாட்சி தேர்தலின்போது அ.தி.மு.க.வினர் 1 லட்சம் பேர் பதவிக்கு வந்தார்கள். வரும் தேர்தலில் இன்னும் அதிகமானோர் பதவிக்கு வருவார்கள்.

    இவ்வாறு அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.   #MinisterPandiarajan #ADMK
    ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என சுப்பிரமணிய சாமி கூறியதற்கு தமிழக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். #SubramanianSwamy #MaFoiPandiarajan
    சென்னை:

    இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து தெரிவித்துள்ளார். அவரது கருத்து வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்த, அனைத்து தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கி உள்ளன.

    சுப்பிரமணிய சாமியின் இந்த கருத்துக்கு தமிழக அமைச்சர் மாஃபா. பாண்டியராஜனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னை ஆவடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-



    சுப்பிரமணிய சாமியின் கருத்துக்கள் பாஜகவின் கருத்துக்கள் அல்ல என நேற்று கூறியிருக்கிறார்கள். எனவே, இதற்கும் மறுப்பு வரும் என நினைக்கிறோம். எனவே, இதை பாஜக கருத்தாக பார்க்கவில்லை. சுப்பிரமணிய சாமியின் தனிப்பட்ட கருத்து. அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவருடைய கருத்து ஏற்புடையது அல்ல. எந்த சூழ்நிலையிலும் அந்த மாதிரி இழிநிலை இந்தியாவுக்கு வரும் என நாங்கள் நினைக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #SubramanianSwamy #MaFoiPandiarajan

    கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் முயற்சியில் சி.பி.ஐ.யுடன் தொல்லியல் துறையும் இணைந்து செயல்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். #ministerpandiarajan
    திருவள்ளூர்:

    திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தமிழ்நாடு பொன்விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி, கலைப்பண்பாடு மற்றும் விளையாட்டு துறைகளின் வாயிலாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

    இதற்கு தமிழ் ஆட்சிமொழி கலைப்பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் தலைமை தாங்கி பேசினார். பின்னர் அவர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ்களையும், பரிசுகளையும் வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    1998-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள 33 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோவில்களில் உள்ள சிலைகளை அடையாளம் வைத்து அதற்கு ஒரு பதிவேடு உருவாக்கி பராமரிக்கப்பட்டு வந்தது. இந்திய தொல்லியல் துறையினர், தமிழக தொல்லியல் துறை சார்பில் 48 ஆயிரம் சிலைகளை ஆவணப்படுத்தும் பணியை கடந்த 2013-ம் ஆண்டில் முடித்தனர். 13 ஆயிரம் சிலைகள் ஆவணப்படுத்தப்படவில்லை என கூறுகின்றனர்.

    எவ்வளவு சிலைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. அவை எங்கு உள்ளது, போன்ற பணிகளை ஒருங்கிணைக்கும் பணிகள் ஒளிவு மறைவு இல்லாமல் நடத்தப்பட்டு வருகிறது. ஆவணப்படுத்தாத சிலைகள் உள்ளதா எனவும் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தமிழக முதல்-அமைச்சரின் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். தற்போது சிலைகளை மீட்டு வரும் பணி சி.பி.ஐ.யிடம் மாற்றப்பட்டுள்ளது. இதற்கு காரணம் என்னவென்றால் சிலைகளை தேடும் வேலை தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும், உலக அளவிலும் நடக்கிறது. இதனை மத்திய அரசின் அமைப்பு செய்கிறது.

    மத்திய அரசிடம் இந்த பணி ஒப்படைக்கப்பட்டதால் தொல்லியல் துறை மூடப் பட்டது என அர்த்தம் கிடையாது. சிலைகள் மீட்கும் பணியில் சி.பி.ஐ.யுடன் இணைந்து தொல்லியல் துறையும் செயல்படும்.

    சிலைகள் கடத்தப்பட்டது கோவில்கள் மட்டுமல்லாமல் அருங்காட்சியகத்திலும் நடந்துள்ளது. அதை நாங்கள் மீட்டுள்ளோம். சிலை மீட்பு பணிகளை சரியாக செய்யவில்லை என குற்றம் சாட்டிய மு.க.ஸ்டாலின் தற்போது நேர்மாறாக கூறி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) திவ்யஸ்ரீ, தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உமா, கலைப்பண்பாட்டுத்துறை மண்டல உதவி இயக்குனர் குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerpandiarajan
    நீட் தேர்வு வினாத்தாளில் தமிழ் மொழிபெயர்ப்பில் தவறு கிடையாது என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Neetexam #MinisterPandiarajan

    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகமும், அனைத்திந்திய தமிழ்ச் சங்க பேரவையும் இணைந்து நடத்திய ‘‘தமிழ் சங்கமம்’’ (இந்திய தமிழ்ச் சங்கங்களின் மாநாடு) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இன்று காலை நடைபெற்றது.

    இதில் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    பின்னர் அவர் நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    உலகத் தமிழ்ச் சங்க கூட்டமைப்பு மாநாடு தஞ்சையில் இன்று நடந்தது. இந்தியாவில் இருக்கும் 50 சங்கங்களின் நிகழ்வாக 3 நாட்கள் மாநாடு நடை பெறுகிறது.

    உலக தமிழ் சங்கங்களின் உறுப்பினர் சார்ந்த அமைப்பாக இது உருமாற்றப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள 150-க்கும் மேற்பட்ட நல்ல தமிழ் சங்கங்கள், இந்தியாவில் உள்ள 200 தமிழ் சங்கங்கள், உலகம் முழுவதும் உள்ள 100 சங்கங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து நிறுவன ரீதியாக உறுப்பினர்களை மதுரையில் உள்ள தமிழ் சங்கத்துக்கு தர இருக்கிறோம்.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உலக தமிழ் சங்கங்களை உருமாற்றம் தற்போது நடந்து வருகிறது. இதற்கு செயற்குழு, பொதுக் குழு உருவாக்கம் செய்து உருமாற்றப்படுகிறது. இதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘தெற்குவை’ திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து நீட் தேர்வு விவகாரத்தில் தமிழ்பெயர்ப்பில் தவறு என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளாரே? என்று நிரூபர்கள் கேட்டனர்.

    அதற்கு பதில் அளத்த அமைச்சர் பாண்டியராஜன் ‘‘நீட் தேர்வு தமிழில் வினாத்தாள் மொழி பெயர்ப்பு சரியாக உள்ளது. சி.பி.எஸ்.இ. மீது தான் தவறு உள்ளது’ என்றார்.

    பேட்டியின் போது தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் உடன் இருந்தார்.

    நீட் தேர்வு மொழிபெயர்ப்புக்கும் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #NeetExam #MinisterPandiarajan

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் சங்கர மட வளாகத்தில் ஜயேந்திரர் பண்மணிமாலை நூல் வெளியீட்டு விழா நடை பெற்றது. காஞ்சி சங்கராச் சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட்டு அருளுரை வழங்கினார்.

    முதல் பிரதியை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், வேளாக்குறிச்சி சத்தியஞான மகாதேவ தேசிய பரமாச் சாரிய சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதினம், சிவஞான பாலய்ய சுவாமிகள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலின் தொகுப்பாசிரியர் ராமமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் பேசியதாவது:-

    இந்த விழாவில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. இந்த நூலின் கவிதை வரிகள் பாரதியாரின் கவிதை வரிகள், பிள்ளைத்தமிழ், அபிராமி அந்தாதி போன்றும் வெண்மணி மாலை போன்றும் தொகுக்கப்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தாமிரவருணி புஷ்கரணி திருவிழா ஒரு சரித்திர நிகழ்வாக அமையும். ஆதினங்கள் மடாதிபதிகள் அனைவரும் ஒன்று கூடி நடத்தும் அற்புத விழாவாக அது அமையும்.

    தமிழ்மொழியின் பெருமையை பறைசாற்றும் விதமாக ஆயிரம் தமிழ்ப்படைப்புகளை வெளியிட விழாக்குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விழா சிறப்பாக நடைபெற தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைதொடர்ந்து அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    நீட் தேர்வு தமிழ் வினாத் தாள் மொழி பெயர்ப்பு விவகார குளறுபடிக்கு தமிழக அரசுதான் காரணம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

    இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு எந்த ஒரு மொழி பெயர்ப்பாளரையும் பரிந்துரை செய்யவில்லை. சி.பி.எஸ்.இ. சார்ந்த வல்லுனர்களை வைத்துத்தான் வினாத் தாளை மொழி பெயர்த்துள்ளனர். இதற்கு முழுப் பொறுப்பு சி.பி.எஸ்.இ.யை சாரும். இதற்கும் தமிழக மொழிபெயர்ப்புத் துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் திருப்பனந்தாள் காசிமட திருஞான சம்பந்தர் தம்பிரான் சுவாமிகள், சிதம்பரம் மெளனமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், பூனம்பட்டி ஆதினம் ராஜசரவண மாணிக்க வாசக சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், கோவை காமாட்சிபுர ஆதினம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், சூரியனார் கோயில் ஆதினம் சங்கரலிங்க தேசிக பராமாச்சாரிய சுவாமிகள், டாக்டர் சுதா சேஷைய்யன்,கவிஞர் குருநாதன் ரமணி, வாலாஜாபாத்.பா.கணேசன், வி.சோமசுந்தரம், காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #NeetExam #MinisterPandiarajan

    இளைய தலைமுறை சாதிக்க நாட்டுப்புறக் கலைகள் உதவும் என்று மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். #TNMinister #Pandiarajan
    மதுரை:

    மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் இளந்தமிழர் இலக்கிய பட்டறையின் 7-ம் ஆண்டு நிறைவு விழா இன்று நடைபெற்றது.

    தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல் பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் இதில் பங்கேற்று பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் இளைஞர்கள் எழுச்சி பெறவே இளந்தமிழர் இலக்கிய பட்டறை உருவாக்கப்பட்டுள்ளது. நாம் இறந்தபின் என்ன விட்டுச்சென்றோம் என்பது முக்கியமல்ல. இருக்கும் போது என்ன செய்தோம், சாதித்துள்ளோம் என்பது தான் முக்கியம்.

    இளந்தமிழர் இலக்கிய பட்டறை வாயிலாக இளைய தலைமுறையினர் திறன் மேம்பட்டு இருக்கும். பேச்சு, பழகும் திறன், புரிதல் தன்மை, கேட்கும் திறன் ஆகியவையும் மேம்பட்டு இருக்கும் என்று நம்புகிறேன்.

    தமிழ் பெண் சாந்தி என்பவர் பழங்கால பொருட்களின் ஆயுட்கால வயதை கண்டறியும் வகையில் ஒளி சார்ந்த பகுத்தாய்வு என்கிற கண்டுபிடிப்பை உருவாக்கி உலக அளவில் சாதித்துள்ளார் என்பது நாம் அனைவரும் பெருமைப்படக்கூடிய விஷயம்.

    இளந்தமிழர் இலக்கிய பட்டறை மூலம் தப்பாட்டம், கும்பாட்டம் உள்ளிட்ட 10 கலைகள் காண்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஏதாவது ஒன்றை பழகும் அனுபவம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புறக்கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

    இதன் வாயிலாக இந்த பிரிவை சேர்ந்தவர்கள்தான் இந்த கலைகளை நிகழ்த்த வேண்டும் என்ற சாதி, மத தடைகளை தாண்டி இளைய தலைமுறை சாதிக்க நாட்டுப்புறக்கலைகள் உதவும்.

    அமெரிக்காவில் தமிழர் கூட்டமைப்பு சார்பில் அங்குள்ள இளைய தலைமுறையினருக்கு நாட்டுப்புறக்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். “அதோ அந்த பறவை” பாடலில் பண்டைய இசைக் கருவியான ‘யாழ்’ கருவியை காண்பித்திருப்பார்.

    உலக புகழ்பெற்ற திரைப்படம் வாயிலாக தமிழர்களின் நாட்டுப்புற கலை ஒன்றை உலகம் முழுவதும் பிரபலபடுத்தியது எம்.ஜி.ஆரின் சீரிய சிந்தனை.


    இளைய தலைமுறையினர் தமிழ் மொழி, கலை பண்பாட்டுடன் சேர்ந்து செயல்படும்போது அவர்களின் பார்வை மாறுபடும். அப்போதுதான் நாம் தமிழர் என்ற கர்வத்தோடு தமிழில் கையெழுத்திடும்போது பெருமையாக இருக்கும். தமிழ் இணைய கழக இணையதளத்தில் பிரத்யேக ‘ஆப்’ ஒன்றை உருவாக்கி இளந்தமிழர் இலக்கிய பட்டறையினர் தங்களது படைப்புகளை பதிவிட வேண்டும். நானும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன்.

    தமிழகத்தில் நாட்டுப்புற கலைஞர்களில் 33 ஆயிரம் பேர் தமிழ் வளர்ச்சி வாரியத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அடுத்த கட்டமாக ஒரு லட்சம் பேரை இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இளந்தமிழர் இலக்கிய பட்டறையின் அடுத்த நிகழ்வு தஞ்சை மாவட்டத்தில் நடைபெறும். நாட்டுப்புற கலைகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில்தான் தமிழக பட்ஜெட்டில் தமிழ் பண்பாட்டு மையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கிராம புறங்களில் தமிழ் சோறுபோடுமா என்ற சொலவடை உண்டு. ஆனால் இன்றைக்கு தமிழ் சோறு மட்டுமல்ல அதற்கு மேலும் போடும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    முன்னதாக விழாவிற்கு வந்த அமைச்சர் பாண்டிய ராஜன் நிருபர்களிடம் கூறுகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழர்களின் பழங்கால வரலாற்று ஆய்வு நடந்து வருகிறது. இதில் போதிய அளவுக்கு பழங்கால சின்னங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. 4-ம் கட்ட அகழாய்வு பணி வருகிற செப்டம்பர் மாதத்தோடு நிறைவு பெறும். தேவைப்பட்டால் 5-ம் கட்ட அகழாய்வும் நடைபெறும்.

    கீழடியில் கண்டு பிடிக்கப்பட்ட பழங்கால பொருட்களின் மூலம் அருங்காட்சியகம் அமைக்கப்படும். உலக தமிழ் சங்கத்தில் ரூ.50 கோடி மதிப்பில் ஐந்தினை பூங்கா அமைக்க விரைவில் டெண்டர் விடப்படும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் இதுநிறைவுபெறும். இதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றார். #TNMinister #Pandiarajan
    சென்னை மெரினா கடற்கரையில் தொல்காப்பியருக்கு சிலை வைக்கப்படும் என அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.#TNMinister #Pandiarajan
    தஞ்சாவூர்:

    தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பாண்டியராஜன் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் பண்பாட்டு மையம் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் 2 லட்சம் மாணவர்களை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறேன்.

    இதற்காக தமிழ் பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். மேலும் இப்பல்கலைக்கழகத்தில் அகராதி சார்ந்த இணைச்சொல், எதிர்சொல், சொல் செயலி போன்றவற்றை ஒருங்கிணைக்கும் விதமாக சொற்குவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை இயங்க தொடங்கிவிட்டது. இதேபோல ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஜோகனஸ்பர்க் பல்கலைக்கழகம், மலேசியா பல்கலைக்கழகம், யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த ஆண்டு தமிழ் ஆய்வு இருக்கை தொடங்கப்பட உள்ளது.

    தமிழின் தொன்மையை உலகத்துக்கு வெளிச்சம்போட்டு காட்டுவதற்காக யுனெஸ்கோவின் உலக புத்தகம் என்ற அங்கீகாரத்தை திருக்குறளுக்கு பெற்றுத்தர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழில் ஆய்வு மாணவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் தமிழ் இணையவாசல் உருவாக்கப்பட உள்ளது. தமிழுக்கு 63 மாநில அரசு விருதுகளும், 8 மத்திய அரசு விருதுகளும் வழங்கப்பட்டு வருகிறது.

    தொல்காப்பியருக்கு சென்னை மெரினா கடற்கரையில் சிலை வைக்கப்படும். தமிழ் பல்கலைக்கழகத்தை உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் 100 இடங்களுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். #TNMinister #Pandiarajan 
    இல.கணேசனுக்கு ம.பொ.சி. விருது வழங்கப்பட உள்ளது. இவ்விருதை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் வழங்குகிறார்

    சென்னை:

    ம.பொ.சி.யின் மகள் மாதவி பாஸ்கரன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்த்தாயின் தவப்பு தலைவர், எல்லைகளையெல்லாம் மீட்டு புதிய தமிழகம் படைத்த போராட்ட வீரர், விடுதலை போராட்ட வீரர் என நாட்டிற்காக சிலம்புச்செல்வர் ம.பொ.சி. செய்த தியாகங்கள் அளவிட முடியாதது. ம.பொ.சி.யின் 113-வது பிறந்த நாள் நாளை 26-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) சென்னையில் நடைபெற உள்ளது.

    எங்களுடைய சிலம்புச் செல்வர் டாக்டர் பத்மஸ்ரீ ம.பொ.சி. அறக்கட்டளை சார்பில் அன்றைய தினம் காலை 9 மணிக்கு தியாகராயநகர் போக் சாலையில் அமைந்தள்ள ம.பொ.சி.யின் உருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்படுகிறது.

    அன்றைய தினம் மாலை 5 மணிக்கு தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள ராமகிருஷ்ணா பள்ளி அரங்கத்தில் இல.கணேசன் எம்.பி. தலைமையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி.-ஒரு பன்முக பார்வை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது.

    இதனை தொடர்ந்து தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தலைமையில் இல.கணேசன் எம்.பி., இளங்கோகுமனன், குடத்தை மாலி ஆகியோருக்கு 2018-ம் ஆண்டு ம.பொ.சி. விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ம.பொ.சி.யின் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    நாளை காலை நடக்கும் கருத்தரங்கை தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ‌ஷம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கிறார். ம.பொ.சி. பற்றி கல்வியாளர் வ.வே.சு, திருப்பூர் கிருஷ்ணன், மரபின் மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்தானா ஆகியோர் பேசுகிறார்கள்.

    விழா ஏற்பாடுகளை மாதவி பாஸ்கரன், செந்தில் ம.பொ.சி. செய்துள்ளனர். #Tamilnews

    கவர்னர் பன்வாரிலால் ஆய்வு செய்வதில் தவறு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterPandiarajan

    சென்னை:

    கவிஞர் கண்ணதாசன் 92-வது பிறந்த நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அப்போது அமைச்சர் பாண்டியராஜன் நிரூபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக கவர்னர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்லும்போது தமிழக அரசின் பணிகள், திட்டங்களை வலுப்படுத்துவது மாதிரிதான் உள்ளது.

    எந்த இடத்திலும் நாங்கள் தவறு செய்ததாக கவர்னர் சொல்லவில்லை. அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும்போது அதிகாரிகள் அளவில் அவர் ஆய்வு செய்வது எங்களை பொறுத்தவரை எந்த பிரச்சினையும் இல்லை.

    ஆனால் தி.மு.க.வினர் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவதும், எதிர்ப்பு தெரிவிப்பதும் தேவையில்லாதது. சட்டரீதியாகவும் சரி கிடையாது. தார்மீக ரீதியாகவும் சரி கிடையாது. கவர்னர் ராஜ்பவனில் இருந்து கொண்டுதான் பணியாற்ற வேண்டும் என்று நினைப்பது தவறு.

    அரசியல் சாசன சட்டப்படி அவருக்கு உள்ள கடமையை அவர் செய்கிறார். தூய்மை இந்தியா திட்டம் போன்றவற்றை மக்களிடம் கொண்டு செல்ல கவர்னர் செயல்படுகிறார்.

    முன்னாள் கவர்னர் சென்னாரெட்டியை மாற்ற வேண்டும் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு காரணம் வேறு. அந்த உதாரணம் இந்த கவர்னருக்கு பொருந்தாது.

    சென்னாரெட்டி அரசின் திட்டங்களை எதிர்த்தார். இதனால் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் இப்போதைய கவர்னர் நெகட்டிவ் ஆக எதுவும் சொல்லவில்லை. எங்களை ஊக்கப்படுத்தி தான் வருகிறார்.

    பயங்கரவாதிகளை ஒடுக்காவிட்டால் தமிழகம் சுடுகாடாக மாறும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது ஏற்புடையது அல்ல. உண்மை நிலவரத்துக்கும், அவர் சொல்வதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது. பயங்கரவாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்கி இருக்கிறோம்.

    தமிழகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடத்தினாலும் முடிந்தவரை வன்முறைகள் இல்லாத நிலைவரை அனுமதிக்கிறோம். ஒரு வருடத்தில் 27 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக போராட்டம் தமிழகத்தில்தான் நடந்துள்ளது. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பேணப்படுகிறது.

    எம்.ஜி.ஆர். காலத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இரும்புகரம் கொண்டு ஒடுக்கினார். அந்த நாளில் இருந்து நக்சலைட்டுகள் தலைதூக்க விடாமல் ஜெயலலிதா பார்த்துக்கொண்டார்,

    நெல்லூரில் இருந்து நேபாளம் வரை நக்சலைட்டுகள் பரவி இருந்த நிலையிலும் தமிழகத்தில் அவர்களால் தலைவைத்து படுக்க முடியவில்லை. இப்போது கூட முளையிலேயே கிள்ளி எறிந்ததால் தமிழகம் அமைதியாக திகழ்கிறது.

    பா.ஜனதா ஆட்சி நடத்தும் மாநிலங்களை விட தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைவாகதான் உள்ளது. இது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும் உண்மைக்கு மாறாக அவர் கூறி வருகிறார்.

    சேலம்-சென்னை பசுமை வழி சாலை அமைக்கப்படுவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை விட நன்மைகள்தான் அதிகம். இதில் எவ்வளவு நிலங்கள் சாலைக்காக எடுக்கப்பட உள்ளது போன்ற விபரங்களை ஏற்கனவே முதல்-அமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterPandiarajan

    ×