search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர்கள் தான் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள் - கமல்ஹாசன் தாக்கு
    X

    அமைச்சர்கள் தான் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள் - கமல்ஹாசன் தாக்கு

    நான்கு அமாவாசைக்குள் மக்கள் நீதி மய்யம் கட்சி காணாமல் போகும் என்று கூறிய அமைச்சர்களுக்கு கமல் ஹாசன் கடும் பதிலடி கொடுத்துள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்ய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டி விபரம்:-

    கே:- தகாத உறவு குற்றமல்ல என்ற தீர்ப்பு பற்றி?

    ப:- அதை வரவேற்கிறேன். கலாச்சாரம் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறும்.

    கே:- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 2, 4 அமாவாசைக்குள் கமல் கட்சி காணாமல் போய்விடும் என்று கூறி இருக்கிறாரே?

    ப:- அவர்களுக்கு வைக்க வேண்டிய கெடு அதிகமாக உள்ளது. அவர்கள் ‘அம்மா’வாசைக்கு பிறகு வந்தவர்கள்.

    கே:- எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா?

    ப:- இல்லை.

    கே:- அரசியல் ஒரு சாக்கடை என்பதை ஒப்புக் கொள்வீர்களா?

    ப:- மாட்டேன். ஏனென்றால் நாங்களும் அரசியலுக்கு வந்துள்ளோம்.

    கே:- மக்கள் நீதி மய்யத்திற்கு வரவேற்பு இல்லை என்று அமைச்சர்கள் பேசுவது?

    ப:- மக்கள் நீதி மய்யத்திற்கு மக்களிடம் எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும். தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் அது தெரிந்திருக்கும்.



    கே:- சினிமா பாடல்கள் வைத்து கிண்டல் பேசுகிறார்களே?

    ப:- சினிமா பார்த்து கற்றுக்கொண்டோம் என்று ஒப்புக்கொண்டார்கள் அதுவே போதும்.

    கே:- கிராம சபை கூட்டத்திற்கான விழிப்புணர்வு எந்த அளவுக்கு உள்ளது?

    ப:- ‘மக்கள் நீதி மய்யம்’ கிராமசபை கூட்டங்களின் அவசியத்தை முன்னெடுக்கும். அக்டோபர் 2-ந்தேதி கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெற உள்ளது. கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு 7 நாட்களுக்கு முன்னரே தண்டோரா இசைக்கும் கடமை அரசுக்கு உள்ளது.

    ஆனால் அது முறையாக நடத்தப்படுவது இல்லை. கிராம சபை கூட்டத்தில் வெற்றி கிடைத்ததாக நம்புகிறோம். ஆனால் அங்கு நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகல் எங்களுக்கு கிடைப்பதில்லை. அது கிடைக்க வேண்டும். பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    Next Story
    ×