search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage"

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் நேற்று தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (வயது 36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அவர்கள் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழிக்கு வந்த ருச்சென்- யோங்சென் ஜோடிக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

    முன்னதாக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதேபோல மணமகன் யோங்சென்னும் பட்டு வேட்டி, மாலை அணிந்து மணமேடைக்கு வந்தார். மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    அப்போது அவர்களை சூழ்ந்து நின்ற நண்பா்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினா். பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நண்பர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    • தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.
    • மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ஏதென்ஸ்:

    உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பாளர்கள் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அவர்கள் தாங்கள் சட்டப்படி திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும், தங்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் பெரும்பாலான நாடுகள் இதனை சட்டப்பூர்வமாக அனுமதிக்கவில்லை.

    இந்த நிலையில் கிரீஸ் நாட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமணத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவுக்கு 176 உறுப்பினர்கள் ஆதரவுடன் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த சட்டத்தின் மூலம் ஒரே பாலினத்தை சேர்ந்த ஜோடியினர் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும் உரிமை வழங்கப்படுகிறது.

    இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதால் தன்பாலின ஈர்ப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏதென்ஸ் நகர வீதிகளில் அவர்கள் ஆடிப்பாடி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஒருவருக்கொருவர் இனிப்புகளை கொடுத்து மகிழ்ந்தனர். இது தொடர்பாக தன்பாலின ஈர்ப்பாளர்கள் அமைப்பின் தலைவர் ஸ்டெல்லா பெலியா கூறும் போது, "இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம் ஆகும்" என்று தெரிவித்தார்.

    இந்த திருமணத்துக்கு ஆர்த்த டாக்ஸ் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான கிரீஸ் முதன் முதலாக ஒப்புதல் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

    சேலம்:

    சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.


    இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.

    இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

    மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

    இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
    • கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்ட பாஸ்டன் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அமெதிலியா எம் டண்டன் ஆன்லைன் மூலம் ஆராய்ச்சியை மேற்கொண்டார்.

    இது குறித்து ஜன்னல் ஆப் செக்ஸ்வல் மெடிசினில் வெளியிடப்பட்ட ஆய்வு கட்டுரையில், கோவிட் 19 பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தாம்பத்தியம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.

    குறிப்பாக நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியலில் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களுக்கு பாலியல் நல்வாழ்வில் உடலில் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆன்லைன் ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்ட பெண்கள் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்தனர். மீதி பெண்கள் ஆசை தூண்டுதல் உணர்வு மற்றும் திருப்தி இல்லை என தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

    • இரட்டையர் டென்னிஸ் விளையாட்டில் பல உயரங்களை தொட்டவர், சானியா
    • 2010ல் சானியா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணம் முடித்தார்

    மும்பையில் பிறந்து ஐதராபாத்தில் வளர்ந்து, இந்திய பெண்கள் டென்னிஸ் விளையாட்டில் ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட பல போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர், சானியா மிர்சா (Sania Mirza).

    குறிப்பாக, இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல உயரங்களை தொட்டவர், சானியா.

    தனது 6-வது வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கிய சானியா, 17 வயதிலிருந்து தொழில்முறை டென்னிஸ் வீராங்கனையாக மாறினார்.

    2010ல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டார்.


    ஆனால், 2022 ஆண்டில் இருந்தே சானியா-சோயிப் ஜோடிக்குள் கருத்து வேற்றுமை நிலவுவதாகவும், இருவரும் பிரிய உள்ளதாகவும் உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வெளிவந்தன.

    2023ல் சோயிப் மாலிக், "ஒரு சூப்பர் பெண்மணிக்கு கணவன்" என மனைவியை குறித்து அதுநாள் வரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த பகுதியை நீக்கினார்.

    இந்நிலையில், தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் சமூக வலைதள கணக்கில் சானியா மிர்சா கவிதை வடிவில் சில மறைமுக கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    திருமணம் கடினமானது.

    விவாகரத்து கடினமானது.

    உங்களுக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

    இவ்வாறு சானியா பதிவிட்டுள்ளார்.

    மேலும் அந்த நீண்ட பதிவில், எடை குறைப்பு, சிக்கனமாக வாழ்தல், பிறருடன் உரையாடுவது உள்ளிட்ட விஷயங்களை குறித்தும் இதே போல் பதிவிட்டுள்ள சானியா, இறுதியாக, "வாழ்க்கை சுலபமாக இருக்கவே இருக்காது. எப்போதுமே கடினமாகத்தான் இருக்கும். ஆனால், நாம் நமக்கு எந்த "கடினம்" விருப்பமோ அதனை தேர்வு செய்ய முடியும். அதை அறிவுபூர்வமாக தேர்வு செய்யுங்கள்" என முடித்துள்ளார்.

    கணவர் சோயிப் மாலிக் உடனான பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து நீக்கி விட்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் இமானுவேல் விஜயன் (வயது 55). தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

    இவரது மூத்த மகனுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி கோவையில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரவேற்பு விழா 22-ந் தேதி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மனைவி சங்கரி(27) என்பவர் மண்டபத்திற்கு வந்திருந்தார்.

    பின்னர் சங்கரி மணமகனின் உறவினர் பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவதற்காக மற்றொறு அறைக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் நகைகளை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் கழற்றி ஒரு பையில் வைத்துள்ளார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அறைக்கு சென்று நகையை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்த பையில் ரூ.3.17 லட்சம் மதிப்பிலான 61 கிராம் நகைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

    • தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.
    • தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்தவர் டாக்டர் ஷஹானா (வயது26).

    இதற்காக அவர் அங்குள்ள குடியிருப்பில் தங்கியிருந்தார். இந்நிலையில் அவர் மருத்துவமனை இரவு பணிக்கு வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள், நள்ளிரவு 11.30 மணியளவில் அவர் தங்கியிருந்த குடுயிருப்புக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு டாக்டர் ஷஹானா சுயநினைவின்றி மயங்கி கிடந்தார்.

    இதனால் அதர்ச்சியடைந்த அவர்கள், அது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ஷஹானா இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு அனுப்பி வைத்தனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஷஹானா எழுதியிருந்த ஒரு கடிதம் சிக்கியது.

    அதில் அனைவருக்கும் பணம் தேவை, பணம் எல்லாவற்றையும் வெல்லும் என்று மட்டும் எழுதியிருந்தார். அதனடிப்படையில் ஷஹானா குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பல புதிய தகவல்கள் கிடைத்தன.

    ஷஹானாவுக்கும், அவரது நண்பரான மருத்துவர் ஒருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்துள்ளது. ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதிக வரதட்சணை கேட்டதாகவும், அதனை தராவிட்டால் திருமணம் நடக்காது என்றும் தெரிவித்ததாகவும் தெரிகிறது. அதிக தொகை வரதட்சணையாக கேட்டதால் ஷஹானா குடும்பத்தினரால் அந்த தொகையை கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

    இதன் காரணமாக ஷஹானாவை திருமணம் செய்யும் முடிவில் இருந்து அவரது நண்பர் பின்வாங்கியதாக தெரிகிறது. திருமணம் முடிவில் இருந்து மாப்பிள்ளை வீட்டினர் பின் வாங்கிய வேதனையில் ஷஹானா தற்கொலை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

    அதனடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதுகலை படிக்கும் பெண் மருத்துவர் ஒருவர், கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவனந்தபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கொடைக்கானல்:

    சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலைவாணி (வயது 20). இவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டலத்தைச் சேர்ந்த சஜின்ராஜ் (27) என்பவரும் பணியாற்றி வந்தார்.

    அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. சஜின்ராஜூம், காதலிப்பதாக கூறி இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கலைவாணி கேட்டபோது, சஜின்ராஜ் மறுத்து வந்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த கலைவாணி கடந்த சில நாட்களுக்கு முன்பு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பினார். இதனையடுத்து தனது காதலனுக்கு போன் செய்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த கலைவாணி ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சஜின்ராஜை தேடி வந்தனர்.

    சஜின்ராஜின் செல்போன் அவ்வப்போது ஆன் செய்து பின்னர் அணைத்து வைக்கப்பட்டது. இதனை வைத்து ஆய்வு செய்ததில் சஜின்ராஜ் கொடைக்கானலில் பதுங்கி இருப்பது உறுதியானது. மேலும் அவர் வேறு ஒரு பெண்ணை கொடைக்கானலில் திருமணம் செய்யவும் தயாராகி வந்தது கலைவாணிக்கு தெரிந்தது.

    இதனையடுத்து சென்னையில் இருந்து கொடைக்கானல் வந்த கலைவாணி அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சஜின்ராஜை கையும் களவுமாக பிடித்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். மேலும் அவர் அங்கிருந்து தப்பித்து விடாமல் இருக்க கொடைக்கானல் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்களது பெற்றோரிடமும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமா என கேட்டனர்.

    இதனிடையே கலைவாணியை தானே திருமணம் செய்து கொள்வதாக சஜின்ராஜ் போலீசாரிடம் தெரிவித்தார். மேலும் அவர்கள் போலீஸ் நிலையம் அருகிலேயே மாலை மாற்றி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். அவர்களை போலீசார் ஒற்றுமையுடன் வாழுமாறு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். சென்னையில் ஏமாற்றிய காதலனை கொடைக்கானலில் தேடி கண்டுபிடித்து இளம்பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    வழக்கு பதிந்து மகளிர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 33), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டை சேர்ந்த நளினி (26) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ம் நளினிக்கு நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்ற நளினி, கணவன் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலே வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அவரது கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் வாழப்பட்டை சேர்ந்த பாலாஜி (25) என்ற வாலிபரை நளினி 2-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார் நளினி, அவரது 2-வது கணவர் பாலாஜி, நளினியின் தந்தை கண்ணன், நளினியின் தாயார் லதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
    • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    குனியமுத்தூர்:

    தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

    செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

    நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

    நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

    மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    அகமதாபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

    இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.


    அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.


    அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.


    இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


    கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

    ×