search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Beautician"

    • அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.
    • குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜர் புரத்தை சேர்ந்தவர் இமானுவேல் விஜயன் (வயது 55). தூத்துக்குடி தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார்.

    இவரது மூத்த மகனுக்கு கடந்த அக்டோபர் 20-ந் தேதி கோவையில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரவேற்பு விழா 22-ந் தேதி ஆறுமுகநேரியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வதற்காக திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் என்பவரின் மனைவி சங்கரி(27) என்பவர் மண்டபத்திற்கு வந்திருந்தார்.

    பின்னர் சங்கரி மணமகனின் உறவினர் பெண் ஒருவருக்கு மேக்கப் போடுவதற்காக மற்றொறு அறைக்கு சென்றார். அப்போது அந்த பெண்ணிடம் நகைகளை கழற்றி வைக்குமாறு கூறியுள்ளார். அதனை அந்த பெண்ணும் கழற்றி ஒரு பையில் வைத்துள்ளார்.

    நிகழ்ச்சி முடிந்ததும் அந்த அறைக்கு சென்று நகையை பார்த்தபோது அது மாயமாகி இருந்தது. அந்த பையில் ரூ.3.17 லட்சம் மதிப்பிலான 61 கிராம் நகைகள் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இமானுவேல் விஜயன் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார்.

    குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார் சந்தேகத்தின் பேரில் சங்கரியை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சங்கரியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த நகைகளை மீட்டனர்.

    • களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா நடந்தது
    • திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

    களக்காடு:

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு கோட்டம், திருக்குறுங்குடி சூழல் சரகத்தின் சார்பில், களக்காட்டில்3-வது கட்டமாக பெண்களுக்கு இலவச தையல் அழகு கலை பயிற்சி தொடக்க விழா, கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கும் விழா நடந்தது.

    களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக சூழல் மேம்பாட்டு திட்ட அதிகாரியும், துணை வனபாதுகாவலருமான அன்பு தலைமை தாங்கி பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    மேலும் கிராம வனக்குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளையும், மண்டல அளவிலான இறகு பந்து போட்டியில் வெற்றி பெற்ற களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இறகு பந்துகளையும் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்தியாவிலேயே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தான் 25 ஆண்டுகளாக சூழல்மேம்பாட்டு திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் கீழ் 263 கிராம வனக்குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது. 20 கோடி நிதியும் உள்ளது.

    பெண்களை மதிப்புமிக்கவர்களாக, மரியாதைக்குரியவர்களாக மாற்ற வேண்டும், அவர்கள் திறமையை வெளி கொண்டு வர வேண்டும், பெண்களுக்கு தன்நம்பிக்கையை கொடுக்க வேண்டும். அவர்கள் தங்களது சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதே வனத்துறையின் நோக்கமாகும்.

    இதற்காகத்தான் இந்த தையல் அழகு கலை பயிற்சியை அளித்து வருகிறோம். கிராமங்களில் பெண்கள் பீடி சுற்றும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இந்த தொழிலுக்கு மாற்றாக தையல் அழகு கலை பயிற்சியை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் பெண்களின் பொருளாதார நிலை மேம்படும்.

    பயிற்சி பெற்ற பெண்களுக்கு சூழல் மேம்பாட்டு திட்ட அலுவலகங்கள் மூலம் ஆர்டர் எடுத்து கொடுக்கப்படும். இதனை கிராம தொழிலாக மாற்றுவதே வனத்துறையின் லட்சியமாகும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் வன சரகர்கள் மீனா (திருக்குறுங்குடி சூழல் சரகம்), யோகேஸ்வரன் (திருக்குறுங்குடி), சிவலிங்கம் (கோதையாறு), களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், ஒய்வு பெற்ற ஆசிரியர் கோமதிநாயகம், பள்ளி தாளாளர் கல்யாண சுந்தரம், நகராட்சி கவுன்சிலர்கள் ஆயிஷா லக்கிராஜா, முகம்மது அலி ஜின்னா, சூழல் திட்ட வனவர்கள் திருக்குறுங்குடி அப்துல்ரஹ்மான், களக்காடு சிவக்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள், கிராம வனக்குழு தலைவர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இசக்கியம்மாள் நன்றி கூறினார்.

    • கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது.
    • தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள கட்டாலங்குளம் ஊராட்சியில் கிராமபுற பெண்களுக்கு அழகு கலை பயிற்சி நடைபெற்றது. இதில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.

    அழகு கலை பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 30 பெண்களுக்கு பஞ்சாயத்து அலுவலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பஞ்சாயத்து தலைவர் ஜேசுபால்ராயன், துணைத் தலைவர் மாரியம்மாள் ஆகியோர் கலந்து கொண்டு தேர்ச்சி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர். மேலும் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற பெண்களுக்கு வருகிற 20- ந் தேதி பரிசுகளும், கேடயங்களும் வழங்கப்படும் என்றும், பஞ்சாயத்து மூலம் கிராமப்புற பெண்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, தையல் பயிற்சிகளும் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறினர்.

    ×