இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் இளநரையை போக்கும் ஷாம்பூ

இளைஞர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரைதான்.வீட்டிலேயே சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கலாம்.
இனி வீட்டிலேயே தயாரிக்கலாம் இளநரையை போக்கும் ஷாம்பூ
Published on

இன்றைய இளைஞர்கள் அதிகம் சந்திக்கும் ஒரு பிரச்சனை என்றால் அது இளநரைதான். அதற்கு காரணம் நமது உணவு முறையாக இருக்கலாம், காலநிலை மாற்றமாக இருக்கலாம், இல்லை முன்னோர்களின் வழியில் வந்தவையாகக்கூட இருக்கலாம்.

பெண்களுக்கு கூந்தல் அழகு. கூந்தலை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக, அழகாக வைத்திருக்க உதவும் மருந்துகள் பற்றி பார்ப்போம். வீட்டிலேயே சீயக்காயை பயன்படுத்தி இளநரையை போக்கும் ஷாம்பு தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

சீயக்காய்- ஒரு கிலோ

வெந்தயம்- 50 கிராம்

பச்சை பயறு- 50 கிராம்

காயவைத்த எலுமிச்சம் பழம் தோல்- 50 கிராம்

கறிவேப்பிலை- 50 கிராம்

ஒரு கிலோ சீயக்காய் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெந்தயம், பச்சைபயறு, எலுமிச்சை தோல், கறிவேப்பிலை ஆகியவற்றை காய வைத்து எடுத்து பொடியாக்கி சேர்க்க வேண்டும்.

இந்த பொடியுடன் சாதம் வடித்த தண்ணீர் அல்லது வெந்நீர் பயன்படுத்தலாம். சீயக்காய் பவுடரில் வெந்நீர் சேர்த்து பசையாக்கி கொள்ளவும். இதை தலையில் சேர்த்து குளித்துவர தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். இளநரை சரியாகும்.

சீயக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உடல் உஷ்ணம், பித்தம் குறையும். ஷாம்புகளை பயன்படுத்துவதால் முடி வெளுப்பாக வாய்ப்புள்ளதால் சீயக்காய் பொடியை பயன்படுத்துவது நல்லது.

X

Maalai Malar
www.maalaimalar.com