என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பண்ருட்டி அருகே 2-வது திருமணம் செய்து கொண்ட இளம்பெண்
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சி.என். பாளையத்தை சேர்ந்தவர் அருண் பாண்டியன் (வயது 33), இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் பண்ருட்டி அடுத்த வாழப்பட்டை சேர்ந்த நளினி (26) என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ம் நளினிக்கு நடந்த பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்தது. ஆஸ்பத்திரியில் இருந்து தாய் வீட்டுக்கு சென்ற நளினி, கணவன் வீட்டுக்கு செல்லாமல் தாய் வீட்டிலே வசித்து வந்தார்.
இந்த நிலையில் அவரது கணவர் உயிரோடு இருக்கும்போது விவாகரத்து பெறாமல் வாழப்பட்டை சேர்ந்த பாலாஜி (25) என்ற வாலிபரை நளினி 2-வது திருமணம் செய்து கொண்டார்.இதுகுறித்து பண்ருட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் அருண் பாண்டியன் புகார் கொடுத்தார். இந்த புகாரை விசாரித்த மகளிர் போலீசார் நளினி, அவரது 2-வது கணவர் பாலாஜி, நளினியின் தந்தை கண்ணன், நளினியின் தாயார் லதா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்