search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேட் கம்மின்ஸ்"

    • மும்பைக்கு எதிராக போட்டியில் டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள்.
    • அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என டு பிளெசிஸ் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் போது எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார்.

    வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார்
    • யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என பெயர் எடுத்துள்ளார்

    இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் விளையாடி வருகிறார். யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசி விக்கெட் எடுப்பதால் யார்க்கர் கிங் நடராஜன் என அவர் பெயர் எடுத்துள்ளார்.

    இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் நடராஜன் அந்த அணிக்காக இதுவரை 50 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

    நேற்று சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி மோதியது. அப்போட்டியில் தான் நடராஜன் இந்த சாதனையை படைத்துள்ளார்.

    இதற்கு முன்னதாக நடைபெற்ற ஹைதராபாத் - கொல்கத்தா அணிக்கு இடையிலான போட்டியில் தனது 50வது ஐபிஎல் விக்கெட்டை நடராஜன் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதனிடையே, நேற்றைய போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தனது 50-வது ஐ.பி.எல் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    • ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான்.
    • உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் அரங்கேறும் 18-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இந்த போட்டிக்கு முன்னதாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் டோனியை ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் வெகுவாக பாராட்டி உள்ளார்.

    இது குறித்து பேட் கம்மின்ஸ் கூறியதாவது:-

    நீங்கள் எந்த அணிக்காக விளையாடுகிறீர்கள் என்பதைப் பாருங்கள், நீங்கள் ஒரு கேப்டனாக இருந்தாலும் அல்லது ஒரு வீரராக இருந்தாலும், எப்போதும் ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். எங்கள் ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியும், அது மிகவும் நல்லது.

    ஒரு கேப்டனாக எனது முக்கிய பணி என்பது சிறந்த ஆட்டத்தை வெளிக் கொண்டு வருவதுதான். அத்துடன் எதிரணியின் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். ஆனால் மகேந்திர சிங் டோனியை போன்ற ஒருவரை என்னால் தந்திரமாக மிஞ்ச முடியும் என்று நான் நினைக்கவில்லை.

    அதனால் அவரை புத்திசாலித்தனமாக முந்த முயற்சி எதுவும் பண்ண மாட்டேன். டோனி ஒரு மகத்தான வீரர். எனவே உங்கள் அணி வீரர்களிடம் இருந்து சிறந்ததை வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள். அதுவே முழுமையாக வேலை செய்யும் என்று நான் நம்புகிறேன்.

    என்று கூறியிருக்கிறார்.

    • 2023 சீசனில் தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் கேப்டனாக செயல்பட்டார்.
    • கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத். கடந்த 2023 சீசனில் அந்த அணியின் கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் எய்டன் மார்கிராம் செயல்பட்டார். இவரது தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்படவில்லை.

    இந்த நிலையில் 2024 சீசனுக்கான அணியின் கேப்டன் பெயரை அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரும், அந்த அணியின் கேப்டனுமான பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுவார் என சன்ரைசர்ஸ் ஐதராபாத் தெரிவித்துள்ளது.

    பேட் கம்மின்ஸை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்தது. ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 2-வது வீரர் இவராவார்.

    பேட் கம்மின்ஸ் இதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடரஸ், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்குகாக விளையாடியுள்ளார்.

    இவரது தலைமையில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகியவற்றை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்குகிறது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் தனது முதல் போட்டியில் மார்ச் 23-ந்தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மார்ச் 17-ந்தேதி மும்பை இந்தியன்ஸ் அணியையும், மார்ச் 31-ந்தேதி குஜராத் டைட்டன்ஸ் அணியையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    • கேப்டனாக கம்மின்ஸ் 100 விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
    • 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றார்.

    நியூசிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 383 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கேமரூன் க்ரீன் 174 ரன்களைச் சேர்த்தார்.

    இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கிளென் பிலீப்ஸ், மேத் ஹென்றி ஆகியோரைத் தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறியதால், முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 179 ரன்களில் ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலீப்ஸ் 71 ரன்களையும், மேட் ஹென்றி 42 ரன்களையும் சேர்த்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் நாதன் லையன் 4, ஜோஷ் ஹசில்வுட் 2, கம்மின்ஸ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜாம்பவான்கள் பட்டியலில் அவர் இணைந்தார். இதுவரை 47 இன்னிங்ஸ்களில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    கேப்டனாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய 10-வது வீரர் என்ற சாதனையை கம்மின்ஸ் படைத்துள்ளார். மேலும் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய 2-வது ஆஸ்திரேலிய கேப்டன் என்ற பெருமையை கம்மின்ஸ் பெற்றார்.

    இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான் கான் 71 இன்னிங்சில் 187 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்திலும், ரிச்சி பெனாட் (ஆஸ்திரேலியா) 56 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 138 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்திலும் உள்ளனர். இப்பட்டியளில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் 58 இன்னிங்சில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள்

    இம்ரான் கான் - 187 விக்கெட்டுகள் (71 இன்னிங்சில்)

    ரிச்சி பெனாட் - 138 விக்கெட்டுகள் (56 இன்னிங்சில்)

    கேரி சோபர்ஸ் - 117 விக்கெட்டுகள் (69 இன்னிங்சில்)

    டேனியல் வெட்டோரி - 116 விக்கெட்கள் (54 டெஸ்ட் இன்னிங்சில்)

    கபில் தேவ் - 111 விக்கெடுகள் (58 டெஸ்ட் இன்னிங்சில்)

    வாசிம் அக்ரம் - 107 விக்கெட்டுகள் (46 டெஸ்ட் இன்னிங்சில்)

    பிஷன் பேடி - 106 விக்கெட்டுகள் (39 டெஸ்ட் 106 விக்கெட்டுகள்)

    ஷான் பொல்லாக் - 103 விக்கெட்கள் (50 டெஸ்ட் இன்னிங்சில்)

    ஜேசன் ஹோல்டர் - 100 விக்கெட்டுகள் (63 டெஸ்ட் இன்னிங்சில்)

    பாட் கம்மின்ஸ் - 100 விக்கெட்டுகள் (47 இன்னிங்சில்)*

    • டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது.
    • பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றது.

    இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவில் பேட் கம்மின்ஸ் அதிக தொகைக்கு ஏலம் போனார். ரூ.20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலம் எடுத்தது.

    இவர் இவ்வளவு தொகைக்கு தகுதி ஆனவரா என்பது குறித்து கருத்து சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் அவர் அந்த தொகைக்கு தகுதியானவர் என்பது போல அவரது பல சாதனைகளை இந்த ஆண்டு படைத்துள்ளார். ஆஸ்திரேலிய கேப்டனான பேட் கம்மின்ஸ் தலைமையில் தொடர்ச்சிய ஐசிசி கோப்பைகளை வென்று சாதித்துள்ளது.

    இவர் தலைமையிலான முதலில் டெஸ்ட் சாம்பியன் டிராபியை கைப்பற்றியது. இந்தியா - ஆஸ்திரேலிய மோதிய இறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களும் இந்தியா 296 ரன்களும் எடுத்தது. அடுத்து 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியாவுக்கு 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனை சேஸ் செய்த இந்திய அணி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

    இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிராபியை ஆஸ்திரேலியா தட்டிச் சென்றது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு ரூ.13.2 கோடியும், இந்திய அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசு தொகை வழங்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இங்கிலாந்தில் ஆஷஸ் தொடர் நடைபெற்றது. முதல் 2 டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவும் கடைசி 2 டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்ட் டிரா ஆனது. இதன்மூலம் தொடர் சமனில் முடிந்தது. இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு மிகவும் நெருக்கடியை கொடுத்ததாக முன்னாள் வீரர்கள் பலரும் அவரை பாராட்டினர்.

    இதனையடுத்து நடந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதலில் தடுமாறிய ஆஸ்திரேலிய அணி கடைசி வரை போராடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்த இறுதிப் போட்டியிலும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணியே வெற்றி பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது.

     

    இதமட்டுமல்லாமல் தற்போது நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா அணி கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது டெஸ்ட்டில் அவர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    டெஸ்டில் ஆஸ்திரேலிய கேப்டன் ஒருவர் 10 விக்கெட் எடுப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 1989-ம் ஆண்டு சிட்னியில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ஆலன் பார்டர் 11 விக்கெட் எடுத்திருந்தார். கம்மின்ஸ் இதுவரை 252 விக்கெட் (57 டெஸ்ட்) கைப்பற்றி இருக்கிறார். டெஸ்டில் 250-க்கு மேல் விக்கெட் வீழ்த்திய 10-வது ஆஸ்திரேலிய பவுலர் ஆவார்.

    இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், '2023-ம்ஆண்டு எங்களுக்கு நம்ப முடியாத ஒரு ஆண்டாக அமைந்தது. நிறைய கிரிக்கெட்.... நிறைய வெற்றி (உலகக் கோப்பை உள்பட). திரும்பி பார்க்கும் போது, 2023 சிறப்பு வாய்ந்த ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும். என்றார்.

    • பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
    • ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்றது. கடந்த 26-ந்தேதி தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் 318 ரன்கள் சேர்த்த நிலையில், பாகிஸ்தான் 264 ரன்னில் சுருண்டது.

    பின்னர் 54 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிறகு 187 ரன்கள் எடுத்திருந்தது. அலேக்ஸ் கேரி 16 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய அலேக்ஸ் கோரி 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆஸ்திரேலியா 262 ரன்னில் ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் அணி சார்பில் ஷாஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா ஆகியோர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

    ஒட்டுமொத்தமாக ஆஸ்திரேலியா 316 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    317 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் விளையாடியது. தொடக்க வீரர்கள் சபீக் 4 ரன்னிலும் இமாம் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து கேப்டன் மசூத்- பாபர் அசாம் ஜோடி நிதானமாக விளையாடினர்.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மசூத் 60 ரன்களில் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து பாபர் அசாம் 41 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சகீல் 24, ரிஸ்வான் 35, சல்மான் 50, ஜமால் 0, அஃப்ரிடி 0, ஹம்சா 0 என சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    இதனால் பாகிஸ்தான் அணி 237 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலியா 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஜனவரி 3-ந் தேதி தொடங்குகிறது.

    • ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போனார்கள்.
    • இந்தியாவின் ஹர்ஷல் படேல் 11.75 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    இந்நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடர் ஏலத்தில் அதிகம் விலை போன வீரர்களின் விவரம் வருமாறு:

    மிட்செல் ஸ்டார்க்: ரூ.24.75 கோடி (கொல்கத்தா நைட்ரைடர்ஸ்)

    பாட் கம்மின்ஸ்: ரூ.20.50 கோடி (சன்ரைசர்ஸ் ஐதராபாத்)

    டேரில் மிட்செல்: ரூ.14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)

    ஹர்ஷல் படேல்: ரூ.11.75 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)

    அல்ஜாரி ஜோசப்: ரூ.11.50 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

    • ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்சை 20.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
    • ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    துபாய்:

    17-வது ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் 214 பேர் இந்தியர்கள், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள்.

    ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போவார்கள் என முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் இத்தொடரில் மிகவும் அதிக விலைக்கு ஏலம் போனார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

    ஏற்கனவே, ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 6.8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

    இங்கிலாந்தின் சாம் கர்ரன் 18.50 கோடி ரூபாய்க்கு கடந்த தொடரில் ஏலம் போனார் என்பதே மிகவும் அதிகமாகும்.

    • ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.
    • மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்தார்.

    13-வது உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 6-வது முறையாக உலகக் கோப்பை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயகம் திரும்பினார். அவர் விமான நிலையத்தில் இருந்து எந்தவித வரவேற்பும் இன்றி நடந்து சென்றார். உலகக் கோப்பையை வென்ற கேப்டன் வரும் போது எந்தவித வரவேற்பும் இன்றி சென்றது இந்திய ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

    ஒரு பக்கம் மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையை காலுக்கு கீழ் வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மறுபக்கம் பேட் கம்மின்ஸ் எந்தவித ஆரவாரமின்றி செல்கிறார். கோப்பையை வென்றதை அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்து கொள்கிறார்கள் என இந்திய ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். 

    இந்த கோப்பை இந்திய அணி வென்றிருந்தால் ரசிகர்கள் அதை கொண்டாடிருப்பார்கள். கேப்டனுக்கு பிரம்மாண்ட வரவேற்பு கொடுத்து அசத்திருப்பார்கள். ஒவ்வொரு வீரருக்கும் அந்த மாநிலத்தில் கவுரவம் வழங்கப்பட்டிருக்கும் என்பது மிகையாகாது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார்.
    • இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

    அகமதாபாத்:

    13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரங்கேறியது.

    இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்து உலகக் கோப்பை கைப்பற்றியது.

    இந்த உலகக் கோப்பையை கைப்பற்றியதன் மூலம் கல்யாணம் முடிந்த அடுத்த வருடமே உலகக் கோப்பை வென்ற 4-வது கேப்டன் என்ற சாதனையை பேட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 2002-ம் ஆண்டு ஜூன் 2-ந் தேதி திருமணம் முடித்தார். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றினார்.


    அதுபோல இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி 2010-ம் ஆண்டு ஜூலை 4-ந் தேதி திருமணம் செய்து கொண்டார். 2011-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை வென்றார்.


    அவரை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மார்கன் 2018-ம் ஆண்டு நவம்பர் 3-ந் தேதி திருமணம் செய்து 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வென்றார்.


    இந்த வரிசையில் பேட் கம்மின்ஸ் இணைந்துள்ளார். இவர் 2022-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த ஆண்டுக்கான உலகக் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளார்.


    கிரிக்கெட்டில் இதுபோன்ற சுவாரஸ்மான விஷயங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. அதில் இதுவும் ஒன்று.

    • உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது.
    • 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டிலும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. லீக் போட்டிகள், அரையிறுதி என விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இன்று (நவம்பர் 19) நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்டுள்ளது.

    முன்னதாக 2003-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே நாடுகள் இணைந்து நடத்திய இந்த தொடரில் ஆஸ்திரேலியா அணி சாம்பயன் பட்டத்தை வென்று அசத்தியது.

    2003 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் முன்னேறின. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இறுதிப் போட்டி நடைபெற்ற தினம், மைதானத்தை சுற்றி மேகமூட்டமாக காணப்பட்டதால், முதலில் பந்துவீசி எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டி, போட்டியில் வெற்றி பெறலாம் என்று அப்போதைய இந்திய அணி கேப்டன் சவுரவ் கங்குலி திட்டமிட்டிருந்தார்.

    எனினும், மைதானத்தின் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் மாறிப் போக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா அணி 350-க்கும் அதிக ரன்களை குவித்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 250-க்கும் குறைந்த ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து கோப்பையை வெல்லும் கனவை பறிக்கொடுத்தது.

    கடந்தமுறை போன்றே, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் மாலை பொழுதில் பனிப்பொழிவு இருக்கும் என்பதால், ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பந்துவீசினால் போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றிடலாம் என கணித்திருக்கிறார்.

    20 ஆண்டுகளுக்கு முன்பும் இதேபோன்ற சூழலில் சவுரவ் கங்குலியின் கணிப்பு தவறியதை போன்றே, பேட் கம்மின்ஸ்-இன் இன்றைய கணிப்பும் தவறி, இந்திய அணி கோப்பை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

    ×