search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bullock cart"

    • விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.
    • இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    குனியமுத்தூர்:

    தமிழ் கலாசாரத்தை தலைநிமிர செய்யும் வகையில் கோவை மாவட்டம் போத்தனூர் அருகே செட்டிபாளையம் பகுதியில் ஒரு ருசிகர சம்பவம் நடந்து உள்ளது. அங்கு புதிதாக திருமணமான புதுமண தம்பதி மாட்டு வண்டியில் புகுந்த வீட்டுக்கு சென்று அசத்தி உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    கோவை செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த முருகேசன்- பாக்கி யலட்சுமி தம்பதியின் மகன் ஆனந்தகுமார். இவருக்கும் மெட்டுவாவி பகுதியை சேர்ந்த மகாலிங்கம்-சரோஜினி தம்பதியின் மகள் பவதாரணிக்கும் செட்டிபாளையம் செல்லாண்டியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்ததும் மணமக்கள் ஆனந்தகுமார்-பவதாரணி ஆகியோர் தமிழ் கலாசாரத்தை பிரதிபலிக்கும்வகையில் புகுந்த வீட்டுக்கு மாட்டு வண்டியில் செல்வதென முடிவு செய்தனர். தொட ர்ந்து அங்கு அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டி வரவழைக்கப்பட்டது. அதில் மணமக்கள் ஏறி அமர்ந்தனர். தொடர்ந்து மணமகன் ஆனந்தகுமார் மாட்டு வண்டியை ஓட்டினார். பக்கத்தில் அமர்ந்து இருந்த மணமகள் பவதாரணி மகிழ்ச்சியில் கைகளை அசைத்தபடி வந்தார்.

    செட்டிபாளையம் சாலையில் மாட்டுவண்டி யில் திருமண ஊர்வலம் சென்ற மணமக்களை நேரில் பார்த்து பொதுமக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

    இதற்கிடையே சமூகவலைதளத்தில் மணமக்கள் மாட்டுவண்டியில் திருமண ஊர்வலம் சென்ற காட்சியை ஒருசிலர் சமூகவலைதளத்தில் பகிர்ந்தனர். அது இணையதளங்களில் கடந்த 2 நாட்களாக வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து மணமகன் ஆனந்தகுமார் கூறியதாவது:-

    நான் பி.இ. சிவில் என்ஜினீயரிங் முடித்து உள்ளேன். பவதாரணி எம்.எஸ்.சி ஐ.டி முடித்து உள்ளார். எங்களின் குடும்பம் பரம்பரையாக விவசாயத்தை தொழிலாக கொண்டது. எனவே விவசாயம் என்பது எங்களின் கனவு மட்டுமல்ல. உணர்வுடன் ஒருங்கிணைந்தது.

    நாங்கள் எளிமைக்காக மட்டுமின்றி உரிமைக்காகவும் மாட்டுவண்டியை தேர்வு செய்து உள்ளோம். என்னதான் நாம் இன்றைக்கு மாடர்ன் உலகில் வாழ்ந்து வந்தாலும், விவசாயம் இல்லை என்றால் உயிர் வாழ முடியாது.

    மேலும் எந்த நாட்டில் விவசாயம் தோல்வி அடைகிறதோ, அங்கு அனைத்து துறைகளும் படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்கு தள்ளப்படும். இளைய தலைமுறையினர் தமிழ் கலாசாரத்தை பின்பற்றி, விவசாயத்தை ஊக்குவித்தால் மட்டும் போதும். நம் நாடு நிச்சயமாக வல்லரசாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வண்டியில மாமன் பொண்ணு, ஓட்டுறவன் செல்லக்கண்ணு என ஒரு சினிமா பாடல் உண்டு. புது தம்பதி மாட்டு வண்டியில் செல்லும் காட்சி அந்த பாடலை நினைவுப்படுத்தும் விதமாக உள்ளது.

    • புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
    • திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்,

    பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டனை சந்தித்து இந்திய மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமாபதி மற்றும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஒரு கோரிக்கை மனு வழங்கியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கோவிந்தநாட்டு ஊராட்சி புத்தூர் அரசு மணல் குவாரியில், மணல் அள்ளுவதற்காக லாரிக ளுக்கு அனுமதி வழங்கப்ப ட்டு, ஆன்லைன் மூலம் மணல்கள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தற்போது கோவிந்த நாட்டுசேரி ஊராட்சியில் அமைந்தி ருக்கும் புத்தூர் அரசு மணல் குவாரியில், மாட்டு வண்டி வைத்திரு ப்பவர்கள் மணல் அள்ளி பிழைப்பு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் அவர்கள் கூறும் போது, இங்கு இருக்கும் ஏழை எளிய நலிவுற்ற மாட்டு வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கு மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும், கும்பகோணம் மற்றும் திருவையாறு பகுதிகளில் சென்று மணல் எடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொழிலாளர்களின் நலன் கருதி புத்தூரில் அமைந்துள்ள மணல் குவாரியில் மாற்றி வண்டி வைத்திருக்கும் தொழிலாளர்கள் மணல் அள்ளுவதற்கு உத்தரவு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மாட்டு வண்டியில் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு மணப்பெண் வந்தார்.
    • இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள அளவாக்கோட்டையில் அண்ணாமலை சொக்க லிங்கம் என்ற தேவநாத னுக்கும், ஐஸ்வர்யா என்ற கல்யாணிக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மணமக்கள் மாலை கீழச்சிவல்பட்டி வந்தனர்.

    பின்னர் அங்கிருந்து சொந்த ஊரான பி.அழகா புரிக்கு, பழமை மாறாத பாரம்பரிய முறைப்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாட்டுவண்டியில், மின் னொளி அலங்காரத்தில், லாந்தர் விளக்குடன் மண மகள் மணமகனுடன் புகுந்த வீட்டிற்கு ஊர்வலமாகச் சென்றார். கீழச்சிவல்பட்டி யின் முக்கிய வீதிகளை கடந்து மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தரிசனம் புறப் பட்டனர். பி.அழகாபுரி வந்த மணமக்களுக்கு உற் றார் உறவினர்கள் சிறப் பான வரவேற்பு அளித்த னர். இவர்களின் இந்த மாறுபட்ட ஏற்பாடு கிராம மக்களின் கவனத்தை ஈர்த்தது.

    • சிங்கம்புணரி அருகே மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூரில் கொக்கன் கருப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிக்களரி விழாவை முன்னிட்டு 27-வது ஆண்டாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.

    சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த 31 மாடுகள் பங்கேற்றன. பெரியமாடுகளுக்கு 8 மைல் தூரமும், சின்னமாடுகளுக்கு 6 மைல் தூரமும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கொக்கன் கருப்பர் கோவிலில் இருந்து பெரிய மாடு, சின்ன மாடு என 2 பிரிவுகளில் போட்டி நடந்தது. பெரிய மாடுகள் எஸ்.வி.மங்கலம் வரையிலும், சின்ன மாடுகள் மருதிப்பட்டி வரையிலும் சென்று மீண்டும் காளாப்பூர் கொக்கன் கருப்பர் கோவிலை வந்தடைந்தது. ஆயிரக்கணக்காேனார் சாலையின் இருபுறமும் நின்று பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

    2 பிரிவுகளிலும் முதல் 4 இடங்களை பிடித்த மாடுகளின் உரிமையா ளர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

    • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

    மதுரை :

    தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

    மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    • மாட்டு வண்டி மீது மோட்டார்சைக்கிள் மோதியது.
    • இதில் கென்னடி பரிதாபமாக இறந்தார்

    திருவாரூர்:

    திருவாரூர் வடுவூர் அருகே உள்ள பேரையூர் கிராமத்தை சேர்ந்தவர் கென்னடி (வயது63). விவசாயி. இவர் தனது மோட்டார்சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது காஞ்சிக்குடிகாடு என்ற இடத்தில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த மாட்டு வண்டி மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கென்னடியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கென்னடி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து குறித்து வடுவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • அ.தி.மு.க. சார்பில் மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
    • செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை அருகே உள்ள வீழனேரி கிராமத்தில் அ.தி.மு.க. சார்பில் மாவட்ட பாசறை இணை செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் மாட்டு வண்டி பந்தயத்தை செந்தில் நாதன்

    எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் 2 பிரிவுகளாக நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், அருள்ஸ்டீபன், செல்வமணி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மாவடிபட்டி கிராமத்தில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டை அருகே மாவடிபட்டி கிராமத்தில் செல்வமுத்து மாரியம்மன் கோவிலில் மது எடுப்பு விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் மாட்டின் பல் அடிப்படையில் நடைபெற்றது.பந்தயத்தில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த மாட்டு வண்டி உரிமையாளர்கள், மாட்டு வண்டிகளுடன் வந்திருந்தனர்.

    முதலாவதாக நான்கு பல் கொண்ட மாடுகளுக்கு பந்தயம் நடத்தப்பட்டது. பந்தய தூரம் போய் வர 4 மைல் தூரமாக நிர்ணயிக்கப்பட்டது. இதில் 20 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டதால் பந்தயம் 2 பிரிவாக பிரித்து நடத்தப்பட்டது. பந்தயமானது மாவடிபட்டி- கல்லூர் சாலையில் நடைபெற்றது.பந்தயத்தின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு ரொக்கம், கோப்பை பரிசாக வழங்கப்பட்டது. பந்தயத்தில் கலந்து கொண்ட இளம் காளை கன்றுகள் குதிரையை போல் சீறிப்பாய்ந்து ஓடியதை அப்பகுதியில் இருந்த மக்கள் சாலையின் இருபுறமும் நின்று கண்டு ரசித்தனர்.

    • அழியாநிலையில் மாட்டுவண்டி எல்கை பந்தையம் நடைபெற்றது
    • பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சதய விழாவை முன்னிட்டு அறந்தாங்கி தாலுகா அழியாநிலை கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி எல்கை பந்தையத்தில் புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 54 ஜோடி மாடுகள் போட்டியில் பங்கேற்றன. 3 பிரிவுகளாக நடைபெற்ற பந்தையத்தில் பெரியமாடு பிரிவில் 10 ஜோடி மாடுகளும், நடுமாடு பிரிவில் 17 ஜோடி மாடுகளும், கரிச்சான்மாடு பிரிவில் 27ஜோடி மாடுகளும் போட்டியில் கலந்து கொண்டு சீரிப்பாய்ந்தன.

    பந்தையத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாடுகளுக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் ரசிகர்கள் திரண்டிருந்து பந்தையத்தை கண்டு ரசித்தனர். 15க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.விழாவினை வீரமுத்திரையர் சங்க இளைஞர்கள், கிராமத்தார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

    • நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.
    • குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.

    தமிழகத்தில் குலதெய்வ வழிபாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 56 கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரே நேரத்தில் மாட்டு வண்டிகளில் புறப்பட்டு தங்களது குல தெய்வங்களை வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குலதெய்வ வழிபாட்டிற்கு செல்வார்கள். இதற்காக 15 நாட்களை செலவிட்டு கமுதி அருகே உள்ள அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் புறப்பட்டு செல்வார்கள். 200 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நடைமுறையை கடைபிடித்து வருகின்றனர்.

    இவர்களின் குலதெய்வ கோவில்களுக்கு புறப்பட்டு செல்லும்போது விருதுநகர் மாவட்டம் சிவகாசி வரை ஒன்றாக செல்வார்கள். அதன் பின்னர் அங்கிருந்து 3 பிரிவாக பிரிந்து புதுப்பட்டி கூடமுடை அய்யனார் கோவில், கீழராஜகுலராமனின் உள்ள எர்ச்சீஸ்வரர் பொன் இருளப்பசுவாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள தைலாபுரம் மல்லி வீரகாளியம்மன் கோவில் ஆகியவற்றுக்கு செல்வார்கள்.

    முதலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்த 56 கிராம மக்கள் வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை குலதெய்வ கோவில்களுக்கு சென்று வருகின்றனர்.

    இந்த ஆண்டு நடைபெறும் குலதெய்வ வழிபாட்டுக்காக கடந்த 17-ந்தேதி 215 மாட்டு வண்டிகளில் 56 கிராம மக்கள் புறப்பட்டனர். அவர்கள் அகத்தாரிருப்பு கிராமத்தில் இருந்து மாட்டு வண்டிகளில் அணிவகுத்து சென்றனர்.

    தற்போதைய கால கட்டத்தில் போக்குவரத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டுவிட்டது. மாட்டு வண்டியில் செல்வது பழைய கால வழக்கமாக கருதப்படுகிறது. ஆனால் இந்த 56 கிராம மக்கள் காலங்கள் கடந்தாலும் தங்களது பாரம்பரியத்தை மீறக்கூடாது என்ற நோக்கத்தில் மாட்டு வண்டிகளில் செல்வதை முக்கிய நோக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக ஒரு மாட்டு வண்டிக்கு 15 நாட்களுக்கு ரூ.35 ஆயிரம் வரை வாடகை கொடுத்து தங்களது குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்கின்றனர்.

    சொந்த மாட்டுவண்டி வைத்திருப்பவர்கள் தங்களது மாட்டு வண்டிகளில் வந்து விடுகின்றனர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மாட்டு வண்டிகளை வாடகைக்கு எடுத்து செல்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு சமைக்க தேவையான பொருட்களையும் மாட்டு வண்டிகளில் எடுத்து செல்கின்றனர்.

    குலதெய்வ கோவிலை அடைந்ததும் அங்கு தங்கி இருந்து வழிபாடுகளை செய்கின்றனர். இதன் மூலம் 56 கிராம மக்களும் ஒருவரை யொருவர் அறிந்து கொண்டு குடும்ப சம்பந்தமான உறவுகளை மேம்படுத்தி கொள்கின்றனர். நகரங்களில் வசிப்பவர்கள் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைகூட அறியாத வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். அதனை நாகரீகமாகவும் கருதுகின்றனர்.

    தனித்தனி தீவுகளாக மாறிபோன மனிதர்களுக்கு மத்தியில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் 56 கிராம மக்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு ஒன்றாக செல்வது வேறு எங்கும் காண முடியாத காட்சியாக உள்ளது. மாட்டு வண்டிகளில் செல்லும்போது இயற்கையை ரசித்து செல்லும் வாய்ப்பும் ஏற்படுகிறது. இது சிறுவர், சிறுமிகள் மனதை மிகவும் கவருகிறது.

    இந்த மாட்டுவண்டி பயணம் 15 நாட்கள் தொடர்கிறது. சில நாட்கள் மட்டும் குல தெய்வ கோவில்களில் தங்கி இளைப்பாறுகின்றனர். அங்கு ஒன்றாக சமைத்து சாப்பிட்டு உறவினர்களுடன் உரையாடி மகிழ்கின்றனர்.

    இந்த பயணத்தில் சிறுவர், சிறுமியர் முதல் முதியவர்கள் வரை கலந்து கொள்கின்றனர். குல தெய்வ வழிபாட்டுக்கு புறப்பட்டு சென்ற சிலரிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-

    100 கிலோ மீட்டர் தூரத்தை 4 நாட்கள் கடந்து சென்று 7 நாட்கள் தங்கி இருந்து 3 கோவில்களிலும் வழிபாடுகள் நடத்தி விட்டு மீண்டும் மாட்டு வண்டியில் சொந்த கிராமங்களை சென்றடைவதை பல ஆண்டுகளாக வழக்கமாக வைத்துள்ளோம். மாட்டு வண்டி சொந்தமாக இல்லாதவர்களும் ரூ.35 ஆயிரம் வாடகை செலுத்தி மாட்டுவண்டி பூட்டி செல்கின்றோம்.

    மாட்டு வண்டி இல்லாதவர்கள் சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மாட்டுவண்டிகளை ஏற்பாடு செய்து குல தெய்வ கோவில்களுக்கு செல்கிறோம்.

    மாட்டு வண்டிகளில் சென்று வழிபட்டால்தான் எங்களுக்கு மகிழ்ச்சி கிடக்கிறது. பல ஆண்டுகளாக சென்று வந்தபோதிலும் எங்களுக்குள் எந்தவித மோதல்களும் ஏற்பட்டதில்லை. எங்கள் உறவு தொடர்ந்து நீடித்து வருகிறது. சொந்த பந்தங்களுடன் உறவாட இது வாய்ப்பாக இருக்கிறது.

    இந்த வழிபாட்டில் முதுகுளத்தூர், செல்வநாயகபுரம், கொம்பூதி, கமுதி, பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொள்கிறோம்.

    தமிழகத்தில் கொரோனா பரவியதால் கடந்த முறை செல்ல முடியவில்லை. 6 ஆண்டுகளுக்கு பின்னர் இப்போது மீண்டும் செல்கின்றோம். நமது முன்னோர்கள் காட்டிய வழியில் சென்றால் பல நன்மைகளை அடையலாம். ஆனால் அதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.

    இந்த வழிபாட்டை முதலில் தொடங்கியவர்கள் பாத யாத்திரையாக சென்று வந்துள்ளனர். அதன் பின்னர் மாட்டு வண்டிகளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    தற்போது மாட்டு வண்டி கிடைக்காதவர்கள் கார் மற்றும் டிராக்டர் போன்ற வாகனங்களில் சென்று வருகிறோம். குல தெய்வ கோவில்களுக்கு சென்று வந்தால் எதிலும் கிடைக்காத நிம்மதி கிடைக்கிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விருதுநகர் அருகே மாட்டுவண்டி தலையில் ஏறி வாலிபர் பலியானார்.
    • இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சாப்டூரை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் பொன்ராஜ்(வயது 30 )இவர் மாட்டு வண்டி ஓட்டி வந்தார். நேற்று அவர் கும்பமலை அடிவாரத்தில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது அவர் தலையில் மாட்டுவண்டி ஏறியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு பேரையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது பற்றிய புகாரின் பேரில் சாப்டூர் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.

    • பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது.
    • மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நெல்லை, மே.1-

    பாளை யூனியன் கீழநத்தம் ஊராட்சி மேலக்குளம் பெருமாள் சுவாமி கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி போட்டிகள் நடைபெற்றது. மாட்டு வண்டி போட்டியை தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான பரமசிவ அய்யப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    போட்டியானது மேலக்குளம் பகுதியில் இருந்து தொடங்கி 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பர்க்கிட் மாநகரம் வரை சென்று மீண்டும் மேலக்குளம் வந்தடைந்தது.

    தொடர்ந்து நடைபெற்ற குதிரை வண்டி போட்டியினை தமிழ்நாடு மாட்டு வண்டி போட்டி யாளர் சங்க தலைவர் வேலங்குளம் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். குதிரை வண்டி போட்டி மேலக்குளத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தூரம் வரை சென்று மீண்டும் மேலக்குளத்தை வந்தடைந்தது.

    போட்டியில் வெற்றி பெற்ற வண்டிகளுக்கு கோப் பையும், ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் கனக ராஜ், சுப்பையா, நவீன்போஸ், பரமராஜ் பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டி களுக்கான ஏற்பாடு களை மேலக்குளம் பெரிய பெருமாள், சுஜித்வேல், விஜய வேல் மற்றும் விழாக் கமிட்டி யினர் செய்திருந்தனர்.

    ×