search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage"

    • படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
    • திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து.

    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். திரையுலகம் தவிர்த்து இவர் கூறும் பல்வேறு கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் அமையும். தமிழில் இவர் சந்திரமுகி 2 படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

    சமீபத்தில் அம்பானி இல்ல திருமணத்தில் நடனம் ஆடுவது பற்றி இவர் தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகின. அந்த வரிசையில், குடும்ப உறவு மற்றும் திருமணம் பற்றி கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

    "ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்ற கனவு கொண்டுள்ளனர். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன். நான் எப்போதும் குடும்பத்துடன் தான் இருப்பேன். எனது குடும்பம் எனக்கு முக்கியம். ஐந்து ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அது காதல் திருமணமாக இருந்தால் நல்லது," என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.
    • ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார்.

    பொதுவாக ஒரே ராசி ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்வதை அனைவரும் தவிர்ப்பது நல்லது. ஒரே ராசி - ஒரே நட்சத்திரத்தில் திருமணம் செய்யும் போது கோச்சார நிலைப்படி இருவருக்கு ஒரே மாதிரியான கிரக சாரத்தை ஏற்படுத்தும்.

    பையனுக்கு, அஷ்டமத்தில் குரு வந்தால் பெண்ணிற்கும் அந்த நேரத்தில் குரு அஷ்டமத்தில் வரும் (காரணம் இருவரும் ஒரே ராசி அல்லது நக்ஷத்திரம் என்பதால்) அதே போல ஏழரைச் சனியும் இருவருக்கும் வந்தால் சேர்ந்தே வரும். இதனால் பாதிப்புகள் மிக அதிகமாக இருக்கும். திக்கு முக்காடி போய்விடுவார்கள். ஏனெனில் கணவருக்கு மோசமான கோச்சார கிரக நிலை இருந்தால் மனைவிக்கு அந்த சமயத்தில் சுபமான அல்லது மிதமான கோச்சார பலன் இருத்தல் அவசியம்.

    அப்போது தான் கொஞ்சமாவது சிரமப்படாமல் ஒருவர் கஷ்டப்பட்டாலும் இன்னொருவர் குடும்பத்தை நடத்துவார். இதனால் தான் ஒரே ராசியிலோ ஒரே நட்சத்திரத்திலோ திருமணம் செய்யக் கூடாது என்கின்றனர் பெரியவர்கள்.

    • நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
    • தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது.

    சிலர் ஜோதிடரை சந்தித்து 10 -ல் எது முக்கிய பொருத்தம் என்று கேட்பது உண்டு. ஆனால், ராமர் சீதைக்கு கூட எனது கணக்கில் எட்டு பொருத்தம் தான் காட்டுகிறது. ஆக நாம் யாருக்குமே பத்து பொருத்தம் என்பது அதிர்ஷ்டம்தான். ஆனால் குறைந்தது நான்கு பொருத்தமாவது இருத்தல் அவசியமாம். நான்கு பொருத்தத்திற்கு கீழ் போனால் திருமணம் செய்யாமல் இருப்பது உத்தமம். பொருத்தம் பார்த்து தான் திருமணம் செய்கிறோம்.

    எனினும் ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைவது இல்லை?

    அனைத்து பொருத்தங்களும் பார்த்து தான் திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. எனினும் திருமணம் நிலைக்காமல் போக பல காரணங்கள் உண்டு. நிறைய பேர் என்ன செய்கிறார்கள் என்றால், ஒரு ஜோதிடரை அணுகி நட்சத்திர அடிப்படையில் பொருத்தம் உள்ளதா என்று மட்டும் பார்த்து விட்டு அவசர கதியில் திருமணத்தை முடித்து விடுகிறார்கள். ஆனால் ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தை ஆராய மறந்து விடுகிறார்கள்.

    ஒரு ஆண் அல்லது பெண்ணின் ஜாதகத்தில் லக்கனம் மற்றும் இரண்டாம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் அந்த வரனை எடுப்பதை விட எடுக்காமல் இருப்பது நல்லது. காரணம் அது ராகு-கேது தோஷம். இந்த மாதிரி தோஷம் உள்ளவர்களுக்கு திருமண வாழ்க்கை நினைத்தபடி இருக்காது. திருமண வாழ்க்கை அதிக சோதனை நிறைந்து இருக்கும். அதே போல ஏழாம் இடத்தில் சனி, செவ்வாய் இருத்தல் நல்லது அல்ல. ஆக இவை எல்லாம் ஒரு காரணம்.

    இன்னொரு காரணம் திருமணம் செய்ய தேர்ந்தெடுத்த நாளில் சந்திராஷ்டமம் இருத்தல் கூடாது. அதே போல ஒரு குறிப்பிட்ட சுப லக்கினத்தில் (நல்ல நேரத்தில்) திருமணம் செய்வார்கள். இந்நிலையில் அந்த நேரத்திற்கு உரிய லக்கினத்திற்கு அதிபதி நீச்சம் அல்லது லக்னத்திற்கு 6,8,12 இல் மறைந்தோ அல்லது வக்கிரம் அடைந்தோ இருக்கக் கூடாது. இது ரொம்ப முக்கியம்.

    இதேபோல ராகு தசையில் திருமணம் செய்வது, முடிந்தவரை ஆண், பெண் இருவரில் யாருக்கு ராகு தசை இருந்தாலும் அல்லது நடந்தாலும் சம்மந்தியாக வரும் நபரை பற்றி நன்கு விசாரித்து பின் திருமணம் செய்யவும். ஆக, இனி பெற்றோர்கள் மேற்படி இவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் பிள்ளைகளின் இல்லறம் என்றும் இனிக்கும்.

    • கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.
    • மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    திருமணப் பொருத்தம் என்பது ஆண், பெண் என இரு பாலரின் நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டு அவை இரண்டிற்கும் எந்த அளவிற்கு ஒத்துப்போகும் என்பதை கணக்கிடுவதே ஆகும்.

    ஒரு காலத்தில் 22 பொருத்தங்கள் பார்க்கப்பட்டது பிறகு காலத்தின் மாற்றதால் 22 என்ற இந்த எண்ணிக்கை மெல்லக் குறைந்து 12 பொருத்தம் பார்த்தால் போதும் என்ற நிலை வந்தது இன்றைய காலத்தில் 10 பொருத்தங்கள் இருந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துள்ளது.

    பத்து பொருத்தங்கள்

    1. தினப் பொருத்தம் - ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.

    2. கணப் பொருத்தம் - மங்களம் உண்டு.

    3. மகேந்திரப் பொருத்தம் - செல்வம் விருத்தியாகும்.

    4. ஸ்த்ரீ தீர்க்கம் - செல்வம் சேரும். சொத்துக்கள் வாங்க முடியும். சொத்துக்கள் முதலில் தங்கும்.

    5. யோனி கூடம் - கணவன், மனைவியின் தாம்பத்தியம் ருசிக்கும்.

    6. ராசிப் பொருத்தம் - வம்சம் விருத்தி அடைந்து செழிக்கும்.

    7. ராசி அதிபதி பொருத்தம் - கரு சீக்கிரத்தில் உண்டாகும்.

    8. வசியப் பொருத்தம் - கணவன், மனைவி இருவரும் அன்யோன்யமாக இருப்பார்கள்.

    9. ரஜ்ஜுப் பொருத்தம் - கடைசி வரை பெண் சுமங்கலியாக இருப்பாள்.

    10. வேதை பொருத்தம் - தம்பதிகளுக்கு பெரிய துக்கங்கள் வராமல் காக்கும்.

    • பீகாரில் பத்தாம் வகுப்பு தேர்வு கடந்த மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி முடிந்தது.
    • விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பாட்னா:

    பீகார் மாநிலத்தில் கடந்த மாதம் 15-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி 23-ம் தேதி முடிவடைந்தது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தபின் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரது விடைத்தாள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இதுதொடர்பாக, அந்த மாணவி தனது விடைத்தாளில், விவசாயியான எனது அப்பாவுக்கு வருமானம் குறைவு. எனவே நிதி நெருக்கடியால் படிப்பை கைவிடும்படி கூறிவருகிறார். தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் திருமணம் செய்துவைப்பதாக கூறியுள்ளார். தயவுசெய்து எனக்கு நல்ல மதிப்பெண் தந்து எதிர்காலத்தை காப்பாற்ற உதவுங்கள் என தெரிவித்துள்ளார்.

    மாணவியின் இந்த கோரிக்கை சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
    • ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    அரியானா மாநிலம் சோனிபட் பகுதியை சேர்ந்தவர் சந்தீப் என்ற காலா ஜதேயிதி. பிரபல தாதாவான இவர் மீது 76-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவரது தலைக்கு அரியானா போலீசார் ரூ.7 லட்சம் பரிசு அறிவித்த நிலையில், 2021-ம் ஆண்டு போலீசாரால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    டெல்லி துவாரகா பகுதியை சேர்ந்தவர் பெண் தாதாவான அனுராதா சவுத்ரி. இவரை அப்பகுதியில் மேடம் மின்ஸ் ரிவால்வர் ராணி என்றே அழைத்து வந்தனர். இவர் மீதும் ஏராளமான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டு நிச்சயமும் நடந்தது. அதன்படி கோர்ட்டில் பரோல் கேட்டு விண்ணப்பித்தனர். திருமணத்திற்காக இருவருக்கும் பரோல் வழங்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து டெல்லி துவாரகா செக்டார் 3-ல் சந்தோஷ் கார்டன் என்ற மகாலில் தாதா தம்பதியான காலா ஜதேயிதி-அனுராதா சவுத்ரியின் திருமணம் நடைபெற்றது.


    இதில் 2 தாதாக்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தாதாக்களின் எதிரிகளால் அசம்பாவிதம் நடைபெறக்கூடும் என கருதப்பட்டதால் திருமணம் நடைபெற்ற மண்டபத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆயுதம் ஏந்திய 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து தாதா தம்பதியினர் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

    • முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
    • தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    தெற்கு டெல்லியில் உள்ள டெவ்லி எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் கவுரவ் சிங்கால் (வயது29). உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. அவரது வீட்டில் இருந்து திருமண ஊர்வலம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு கவுரவ் சிங்காலுக்கும் அவரது தந்தைக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தந்தை, கூர்மையான ஆயுதத்தால் கவுரவ் சிங்காலுவை தாக்கி கொலை செய்தார். இதையடுத்து அவரது தந்தையை போலீசார் கைது செய்தார்.

    முதற்கட்ட விசாரணையில், கவுரவ் சிங்கால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. அவர் வேறொரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதை குடும்பத்தினர் ஏற்கவில்லை. இது தொடர்பாக தந்தை-மகன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இப்பிரச்சினையில் கவுரவ் சிங்கால் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    • தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
    • போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டம், சோமூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 25). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் அரசு தேர்வுகளுக்கு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்தவர் பவானி (வயது 19). இவர் தாந்தோணிமலையில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ. வரலாறு இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

    பவானியின் தாய், தந்தையர் கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். இதனால் பவானி பெரியப்பா, பெரியசாமி மற்றும் உறவினர்கள் ஆதரவில் இருக்கிறார்.

    இந்த நிலையில் பவானி மற்றும் தனபால் ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். இந்த விவரம் தனபால் வீட்டுக்கு தெரிந்து, அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தனபால் தனது காதலி பவானியுடன் கரூர் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.

    ஆதரவற்ற பெண்ணை தனபால் கரம்பிடிப்பதை அறிந்த அவரது நண்பர்கள் அங்கு வந்தனர். இதை தொடர்ந்து போலீஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் கோவிலில் கரூர் கவுன்சிலர் வசுமதி பிரபு மற்றும் உறவினர்கள் தலைமையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

    திருமணம் செய்து கொண்ட ஜோடிக்கு அந்த பகுதியில் நின்ற அனைவரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தாய், தந்தையை இழந்து உறவினர்கள் ஆதரவில் வளர்ந்து வந்த பவானிக்கு கவுன்சிலர் வசுமதி பிரபு படிப்பு உதவி அளித்து வந்த நிலையில். தற்போது திருமணத்திற்கு தேவையான மாங்கல்யம் உள்ளிட்ட செலவுகளையும் ஏற்று உதவி செய்தார் .

    • ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.
    • திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

    ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை நேற்று கரம் பிடித்தார்.

    கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது.

    திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பாக்னானிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இந்நிலையில், பிரதமர் மோடி நடிகை ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

    அந்த கடிதத்தில், " திருமண விழாவிற்கு என்னை அழைத்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

    ஜாக்கியும் ரகுலும் வாழ்நாள் முழுவதும் நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் பயணத்தைத் தொடங்குகின்றனர். அவர்களின் திருமணத்தின் நல்ல சந்தர்ப்பத்தில் மனமார்ந்த வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

    பிரதமர் மோடியின் வாழ்த்து கடிதத்தை கண்டு குஷியான நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும், ஜாக்கி பாக்னானியும் நன்றி தெரிவித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு பகிர்ந்துள்ளனர்.

    மேலும், இந்த கடிதத்தை தாங்கள் பிரேம் செய்து வைத்துக் கொள்வோம் என்றும் அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்தவர்.
    • 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்.

    தமிழ் சினிமாவின் பிரபல நடிகை ப்ரீத் சிங். நடிகர் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து பிரபலமானார்.

    தொடர்ந்து, சூர்யாவுடன் என்ஜிகே, சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களிலும் ஹீரோயினாக நடித்தார்.

    தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். 

    இந்நிலையில், ரகுல் ப்ரீத் சிங் தனது நீண்ட நாள் காதலனான ஜாக்கி பாக்னானியை இன்று கரம் பிடித்தார்.

    கடந்த 2020ம் ஆண்டு முதல் இருவரும் காதலித்து வந்த நிலையில், 2021ம் ஆண்டில் தங்களுக்கிடையேயான உறவை அறிவித்தனர்.

    இதைதொடர்ந்து, திருமண தேதி இன்று குறிப்பிட்டிருந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளும் நடந்து வந்தது. 

    கோவாவில் பீச் ஓரத்தில் உள்ள பகுதியில் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும், ஜாக்கி பாக்னானிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலலந்துக் கொண்டனர்.

    திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், திருமண புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது பாலின பாகுபாடு
    • 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டதாகக் கூறி ஒரு பெண்ணை வேலையை விட்டு நீக்குவது "பாலின பாகுபாடு மற்றும் சமத்துவமின்மையின் மோசமான ஒன்று என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    1988 ஆகஸ்டில் ராணுவ செவிலியர் சேவையில் இருந்த லெப்டினன்ட் செலினா ஜான், திருமணம் செய்து கொண்டார் என்பதற்காக பணியில் இருந்து நீக்கப்பட்ட வழக்கை விசாரிக்கும் போது, உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

    திருமணம் செய்து கொண்டார் என்பதை காரணமாக கூறி வேலையை விட்டு நீக்கப்பட்ட, ராணுவத்தில் செவிலியராக இருந்தவருக்கு 8 வாரத்திற்குள் ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

    குறிப்பிட்ட காலத்திற்குள் அவருக்கு இழப்பீடு பணம் வழங்க படாவிட்டால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து பணம் செலுத்தும் தேதி வரை தொகைக்கு ஆண்டுக்கு 12% வட்டி வசூலிக்கப்படும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    • தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
    • மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.

    இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் நேற்று தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (வயது 36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அவர்கள் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழிக்கு வந்த ருச்சென்- யோங்சென் ஜோடிக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.

    முன்னதாக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதேபோல மணமகன் யோங்சென்னும் பட்டு வேட்டி, மாலை அணிந்து மணமேடைக்கு வந்தார். மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.

    அப்போது அவர்களை சூழ்ந்து நின்ற நண்பா்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினா். பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நண்பர்களிடம் வாழ்த்து பெற்றனர்.

    ×