search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் கைது"

    • விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
    • பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    தக்கலை:

    குமரி மாவட்டம் திங்கள்நகர் பகுதியை சேர்ந்தவர் விஜில்ஜோண்ஸ் (வயது 40). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பெங்களூருவில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில் விஜில் ஜோண்ஸ் முகநூலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மனோ தங்கராஜ் ஆகியோரை பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது குறித்து குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. வக்கீல் அணி அமைப்பாளர் ஜோசப்ராஜ் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். ஆனால் புகார் கூறப்பட்ட விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரம் தொடாபாக மதுரை ஐகோர்ட் கிளையிலும் ஜோசப் ராஜ் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் விஜில் ஜோண்சை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி அவரை பிடிக்க தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்தனர். அங்கு அவரை கைது செய்தனர்.

    பெங்களூருவில் கைது செய்யப்பட்ட விஜில் ஜோண்ஸ் இன்று தக்கலைக்கு அழைத்து வரப்பட்டார்.

    முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி முகநூலில் அவதூறு கருத்துகள் வெளியிட்டது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் பத்மநாபபுரம் கோர்ட்டில் விஜில் ஜோண்சை ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • மனைவி மற்றும் 2 குழந்தைகளை ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
    • பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.

    சேலம்:

    சேலம் திருவா கவுண்டனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மகள் ஆர்த்தி (28), இவருக்கு கண்ணன் என்பவருடன் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்ணன் இறந்து விட்டார்.

    இந்த நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயரான அமெரிக்காவில் வசித்து வரும் 57 வயதான பாஸ்கர் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு காரில் சென்ற போது பாஸ்கர் மனைவி மற்றும் 2 குழந்தைகளை சீலநாயக்கன்பட்டி பகுதியில் சாலையில் ஓடும் காரில் இருந்து தள்ளி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஆர்த்தி, கணவர் பாஸ்கரை இரவு முழுவதும் தேடினார். அப்போது சேலம் முள்ளுவாடி கேட் அருகே பாஸ்கருக்கு சொந்தமான விடுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்றார். அங்கு பாஸ்கரிடம், ஆர்த்தி முறையிட அங்கிருந்த போலீசார் ஆர்த்தியை விசாரணைக்கு அழைத்தனர்.

    அப்போது நான் ஏன் விசாரணைக்கு வர வேண்டும் என ஆர்த்தி கேட்டார். மேலும் தன்னை அடித்து கொடுமைபடுத்திய கணவர் மீது நான் தான் புகார் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து பாஸ்கரை ரோந்து வாகனத்தில் ஏற்றி போலீஸ் நிலையத்திற்கு புறப்பட போலீசார் முயன்றனர்.


    இதனால் ஆத்திரம் அடைந்த ஆர்த்தி போலீசாரின் வாகனம் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அப்போது அவர் கூறுகையில், 2 மகன்களையும் பார்த்து கொள்வதாக கூறி பாஸ்கர் என்னை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தற்போது எனது 2 மகன்களையும் பார்த்து கொள்ள முடியாது என கூறி என்னையும் எனது குழந்தைகளையும் அடித்து துண்புறுத்துகிறார்.

    இதனால் மன வேதனை அடைந்த நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க முற்பட்டேன், இதையறிந்த பாஸ்கர் என் மீது பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

    மேலும் 40 வயது என்று கூறி என்னை திருமணம் செய்து கொண்டார். தற்போது தான் 57 வயது என தெரிய வந்துள்ளது. எனது வயது கொண்ட அவரது முதல் மனைவியின் மகள் அமெரிக்காவில் டாக்டருக்கு படித்து வருகிறார். தற்போது அமெரிக்காவுக்கு செல்ல தயாராகி விட்ட அவர் தன்னை அடித்து விரட்டி டார்ச்சர் செய்கிறார். என்னை கொடுமைபடுத்தி எனது 2 மகன்களை வெளியேற்றி கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இது குறித்து போலீசாரிடம் புகார் அளிக்க உள்ளேன் என்றார்.

    இதற்கிடையே ஆர்த்தியை அப்புறப்படுத்திய போலீசார் அங்கிருந்து போலீஸ் காரில் பாஸ்கருடன் புறப்பட்டு சென்றனர். தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று இது தொடர்பாக ஆர்த்தி புகார் அளித்தார்.

    மேலும் போலீசார் விசாரணை நடத்திய போது, சீலநாயக்கன்பட்டி பகுதியில் சென்ற போது காரில் இருந்து பாஸ்கர், ஆர்த்தி மற்றும் அவரது குழந்தைகளை கீழே தள்ளி விட்டதாக புகார் கூறினார். மேலும் அது தொடர்பான வீடியோக்களும் சமூக வலை தளங்களில் வைரலானது.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பாஸ்கர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ததுடன் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே பாஸ்கர் சேலம் டவுன் போலீசில் கொடுத்த புகாரின் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தொழில் மேம்பாட்டு அமைப்பில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் அமித் கெய்க்வாட்.
    • லஞ்சம் வாங்கியபோது நாசிக் ஊழல் தடுப்பு பிரிவினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    மகாராஷ்டிர மாநிலத்தில் தொழில் மேம்பாட்டு அமைப்பில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் அமித் கெய்க்வாட். இவர் காண்டிராக்டர் ஒருவரிடம் நிலுவையில் உள்ள பில் தொகையை சரி செய்து கொடுப்பதற்காக ரூ. 1 கோடி லஞ்சம் பெற்றுள்ளார்.

    அவர் லஞ்சம் வாங்கியபோது நாசிக் ஊழல் தடுப்பு பிரிவினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    • சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார்.
    • திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் திருமாவளவன் (வயது 24). என்ஜினீயரான இவர், சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரை சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திருமாவளவன், தனது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரங்கராஜ்(24), கடலூர் கோதண்டராமபுரத்தை சேர்ந்த அப்பர்சுந்தரம் மகன் அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த கண்ணாலன் மகன் சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு கடலூர் முதுநகருக்கு வந்தார்.

    அப்போது சாலையில் நடந்து வந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்றார். இதை அந்த பகுதி மக்கள் பார்த்து, சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனால் பதறிப்போன பெற்றோர், இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வந்தனர். மேலும் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனிடையே 4 பேரும் சிறுமியை கடத்திக்கொண்டு கடலூர் எஸ்.பி. அலுவலக சாலையில் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்த காரை மடக்கி அதில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் திருமாவளவன் உள்பட 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.
    • சரோஜ் சர்மா உடலை வெட்டிய என்ஜினீயர் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி, சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.

    ஜெய்ப்பூர்:

    டெல்லியில் ஸ்ரத்தா வாக்கர் என்ற 27 வயது இளம்பெண்ணை அவரது காதலன் அப்தாப் கொடூரமாக கொன்று உடலை 35 துண்டுகளாக வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதே போல டெல்லி பாண்டவ நகரில் மகன் உதவியுடன் கணவரை துண்டு துண்டாக வெட்டிய வீசிய பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த சம்பவங்களை போலவே ராஜஸ்தானிலும் ஒரு கொடூர கொலை நடந்துள்ளது. இது பற்றிய விபரம் வருமாறு:-

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வித்யா நகரை சேர்ந்தவர் சரோஜ் சர்மா. இவரது கணவர் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூரில் வசிக்கின்றனர்.

    இதனால் சரோஜ் சர்மாவுடன் அவரது கணவரின் அண்ணனும், அவரது மகனான அனுஜ் சர்மா (வயது 32) என்ற வாலிபரும் வசித்து வந்தனர். அனுஜ் சர்மா என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். கடந்த 11-ந் தேதி அனுஜ் சர்மாவின் தந்தை வெளியூர் சென்றிருந்தார்.

    அப்போது சரோஜ் சர்மா கோவிலுக்கு சென்றதாகவும், அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை எனவும் அனுஜ் சர்மா போலீசில் புகார் செய்துள்ளார்.

    அதன் பேரில் போலீசார் சரோஜ் சர்மாவை தேடி வந்தனர். மேலும் இதுபற்றி அவர் சரோஜ் சர்மாவின் மகள் பூஜாவிடமும் கூறி உள்ளார். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் தனது வீட்டிற்கு சென்றபோது அங்கு அனுஜ், சமையல் அறையில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    இதைக்கண்ட பூஜா எப்படி இங்கு ரத்தம் வந்தது என கேட்டார். இதற்கு பதில் அளித்த அனுஜ், தனது மூக்கில் இருந்து ரத்தம் கசிவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த பூஜா இதுபற்றி தனது சகோதரியிடம் கூறினார்.

    பின்னர் இருவரும் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீட்டில் சோதனை செய்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அனுஜ் சர்மா இரவு நேரங்களில் சூட்கேசை வெளியே எடுத்து செல்லும் காட்சிகள் இருந்தது.

    அதன் மூலம் நடந்த விசாரணையில் சரோஜ் சர்மா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று அவரை கைது செய்தனர்.

    விசாரணையில், சம்பவத்தன்று அனுஜ் சர்மா, தான் டெல்லி செல்ல விரும்பியதாகவும், அதற்கு பெரியம்மா எதிர்ப்பு தெரிவித்ததாகவும், இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்ததாகவும், பின்னர் அவரது உடலை சமையல் அறைக்கு கொண்டு சென்று அங்கு வைத்து மார்பிள் கட்டர் மூலம் உடலை சிறு சிறு துண்டுகளாக வெட்டியதாகவும் கூறினார்.

    மேலும் வெட்டப்பட்ட உடல் பாகங்களை சூட்கேசில் மறைத்து எடுத்து சென்று ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் காட்டு பகுதியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் கூறினார்.

    மொத்தம் 10 துண்டுகளாக சரோஜ் சர்மா உடலை வெட்டிய அவர் சில உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் சுற்றி எடுத்து சென்று சில இடங்களில் மண்ணில் புதைத்து வைத்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து சரோஜ் சர்மாவின் உடல் பாகங்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல் பாகங்களை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாலிபர் ஒருவர் இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.
    • சூர்யபிரசாத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சம்பவத்தன்று அவரது 23 வயது மகள் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு இளம்பெண்ணின் தாயார் வெளியே வந்து பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளியலறை அருகே நின்று கொண்டு இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாயார் அந்த வாலிபரை எச்சரித்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்க்க முயன்றது மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்த சூர்யபிரசாத்(25) என்பதும், அப்பகுதியில் வாடகைக்கு குடியிருந்து சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.
    • பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், சன்னதி தெருவைச் சேர்ந்தவர் சர்வபொம்மன் (வயது 25). பட்டய கணக்காளருக்கு படித்து வருகிறார். இவரிடம் வேங்கைவாசல், மாம்பாக்கம் பிரதான சாலையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேச பாலாஜி (24) என்பவர், கடந்தாண்டு அறிமுகமானார். அப்போது அவர், தான் பட்டய கணக்காளர் படிப்பு முடித்துவிட்டு பங்குச்சந்தையில் முதலீடு தொடர்பான தொழில் செய்து வருவதாக கூறினார்.

    மேலும் சர்வபொம்மனிடம் தன்னிடம் பணம் கொடுத்தால் அதனை பங்குச் சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கி கொடுப்பதாகவும் கூறினார். அதை நம்பிய சர்வபொம்மன், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்காக பிரசன்ன வெங்கடேச பாலாஜியிடம் சுமார் ரூ.70 லட்சத்துக்கு மேல் கொடுத்தார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட அவர், அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிவிட்டார். இது குறித்து சர்வபொம்மன் சேலையூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரித்தனர்.

    அதில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி வீட்டை காலி செய்துவிட்டு பெங்களூரு சென்றது தெரிந்தது. தனிப்படை போலீசார் பெங்களூரு சென்று விசாரித்ததில் அங்குள்ள நிறுவனத்தில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரிந்து வருவதும், நண்பர்களுடன் கேரளாவுக்கு சுற்றுலா சென்றிருப்பதும் தெரிந்தது.

    கேரளா சென்றிருந்த அவர் பெங்களூரு திரும்பும் வழியில் கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்தபோது அங்கு வைத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் இருவரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் 3 பேரையும் சேலையூர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் பிரசன்ன வெங்கடேச பாலாஜி இதுபோல் பங்கு சந்தையில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாக கூறி சர்வபொம்மன் உள்பட பலரிடம் ரூ.15 முதல் ரூ.20 கோடிக்கும் மேல் பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரசன்ன வெங்கடேச பாலாஜியை நேற்று மாலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து 2 விலை உயர்ந்த கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    • ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டது தொடர்பாக திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இளம்பெண் புகார் அளித்தார்.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த 27 வயது பெண் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் இணையதள பக்கத்தை பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அந்த பெண்ணை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த அந்த பெண் மனஉளைச்சல் மிகுந்த மனவேதனை அடைந்தார்.

    பின்னர் சம்பவத்தன்று திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வந்தனர். இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நாமக்கல் மாவட்டம் கருங்குமாரன்பாளையத்தை சேர்ந்த நடேசனின் மகன் சக்திவேல் (வயது 27) என்ஜினீயர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது தான் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், தற்போது காதலித்த பெண் என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டு எப்போதும் அவினாசியை சேர்ந்த காதலியின் தோழியிடம் அதிகமாக பேசி வந்துள்ளார். இது குறித்து காதலிடம் கேட்டபோது எனக்கு உன்னை விட எனது தோழி தான் முக்கியம் என கூறினார். இதனால் தோழி மீது உள்ள ஆத்திரத்தில் இது போன்ற படத்தை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாக கூறினார். இதனையடுத்து திருப்பூர் மாவட்டம் சைபர் கிரைம் போலீசார் சக்திவேலை கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

    • திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.
    • பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த என்ஜினீயர் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய பிரபாகரனுக்கு பெண் வீட்டார் 111 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

    திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவர் மது பழக்கம் கொண்டவர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர் தினசரி இரவு மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பற்றி விசாரித்ததில் தனது கணவர் பிரபாகரன் ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையில் பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும் அதை மறைத்து தன்னை 2வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.

    இதுபற்றி கேட்டபோது பெண் டாக்டரை தினசரி அடித்து கொடுமைபடுத்தி துன்புறுத்தி வந்தார். மேலும் அவரது குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×