என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமணம் மோசடி"

    ஆந்திராவில் 3 ஆண்களை திருமணம் என்னும் பெயரில் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடந்தது.

    மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே பல லட்சங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளார்.

    இதையடுத்து அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.இதையடுத்து அவரையும் பிரிந்துவிட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

    3-வதாக வேதம் செல்ல அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்த மகேஸ்வரர் ரெட்டி என்பவரின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். மனைவி இறந்து விட்டதால் மகேஸ்வர் ரெட்டி திரிஷாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திரிஷா பெயரில் பேங்க் அக்கவுண்டில் ரூ 5 லட்சத்தை மகேஸ்வர் ரெட்டி டெபாசிட் செய்தார். இதையடுத்து இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே மகேஷ்வர் ரெட்டி வீட்டிற்கு வந்த திரிஷாவின் தாயார் மேரம்மா, தனது மகள் பெயரில் வீடு நிலங்களை பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே திரிஷா உன்னுடன் குடும்பம் நடத்துவார். இல்லை என்றால் திரிஷாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக மகேஸ்வர ரெட்டியிடம். தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த மகேஸ்வர் ரெட்டி திரிஷா குறித்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினார். விசாரணையில் திரிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து திரிஷா அவரது தாயார் குறித்து வேதன் சர்லா போலீசில் மகேஸ்வர் ரெட்டி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திரிஷா மற்றும் அவரது தாயாரை தேடி வருகிறார்.
    திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் பிரபு (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இன்று காலை திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். இந்தநிலையில் பழனிவேல் பிரபு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.

    பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் போலீசார் புதுமாப்பிள்ளை பழனிவேல் பிரபுவை தேடி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பழனிவேல் பிரபு திருமண ஏற்பாடு செய்த பின்னர் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவர் சுறுசுறுப்பாக பத்திரிக்கை கொடுத்து வந்துள்ளார்.

    மணப்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. மாயமான பின்னர் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மணமகன் மாயமானதால் இன்று ஏற்பாடு செய்த திருமணம் நின்றது. இதனால் மணமகன்-மணமகள் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
    • திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.
    • பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார்.

    போரூர்:

    சென்னை தியாகராய நகர் பகுதியை சேர்ந்த 29 வயது இளம்பெண் அசோக் நகர் மாநகராட்சி சுகாதாரத்துறையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

    இவருக்கும் வேளச்சேரியைச் சேர்ந்த என்ஜினீயர் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

    அப்போது ஐ.ஐ.டியில் பணியாற்றுவதாக கூறிய பிரபாகரனுக்கு பெண் வீட்டார் 111 பவுன் நகை மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கார் ஆகியவற்றை வரதட்சணையாக கொடுத்துள்ளனர்.

    திருமணம் ஆன சில மாதங்களிலேயே தனது கணவர் மது பழக்கம் கொண்டவர் என்பது தெரிந்தது.

    மேலும் அவர் தினசரி இரவு மதுகுடித்துவிட்டு வந்து ரகளையில் ஈடுபட்டதால் அவர் மீது பெண் டாக்டருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை பற்றி விசாரித்ததில் தனது கணவர் பிரபாகரன் ஐ.ஐ.டி.யில் பணிபுரிந்து வருவதாக கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது தெரிந்ததும் பெண் டாக்டர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதற்கிடையில் பிரபாகரனுக்கு ஏற்கனவே வேறு ஒரு பெண்ணுடன் திருமணமாகி குழந்தை இருப்பதும் அதை மறைத்து தன்னை 2வதாக திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இந்த நிலையில் திருமணத்தின்போது பெண் டாக்டருக்கு கொடுத்த வரதட்சணை நகைகளையும் பிரபாகரன் கொஞ்சம் கொஞ்சமாக விற்று விட்டார்.

    இதுபற்றி கேட்டபோது பெண் டாக்டரை தினசரி அடித்து கொடுமைபடுத்தி துன்புறுத்தி வந்தார். மேலும் அவரது குடும்பத்தினரையும் பிரபாகரன் மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து பெண் டாக்டர் அசோக் நகர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடத்திய மகளிர் போலீசார் வரதட்சணை கொடுமை, ஆபாசமாக பேசுதல், நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பிரபாகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை அருகே 2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    அடிக்கடி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் மதுரையை சேர்ந்த திருமணமாகி மனைவியை இழந்த வாலிபர் ஒருவரை இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த இளம்பெண் தனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக இளம் பெண்ணை அழைத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்தார். பின்னர் இளம்பெண் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, வாலிபருடன் பேசக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பெற்றோருக்கு தெரியாமல் தனது 4 வயது பெண் குழந்தையுடன் இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×