search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marriage fraud"

    • விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
    • போலீசார் மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பரமத்திவேலூர் :

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கள்ளிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மகன் தனபால் (வயது 37). நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சோழவந்தான் பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தியா (27). இவர்கள் 2 பேருக்கும் கடந்த 7-ந் தேதி பரமத்திவேலூர் அண்ணா நகர் அருகே உள்ள புதுவெங்கரையம்மன் கோவிலில் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

    இந்த திருமணத்தில் பெண் வீட்டார் சார்பில் மணமகளின் அக்காள் மற்றும் மாமா என 2 பேர் மட்டுமே வந்திருந்ததாக‌ கூறப்படுகிறது. திருமணத்திற்கு ஏற்பாடு செய்த திண்டுக்கல் மாவட்டம் தாதன்குளத்தை சேர்ந்த புரோக்கர் பாலமுருகன் (45) என்பவர் திருமணம் முடிந்த பின்னர் அதற்கான கமிஷன் தொகையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை பெற்று கொண்டு மணமகளின் அக்கா மற்றும் மாமா என்று கூறி வந்த 2 பேரையும் அழைத்து கொண்டு சென்று விட்டார்.

    இந்த நிலையில் புதுமாப்பிள்ளை தனபால் பல கனவுகளுடன் தனது வாழ்க்கையை தொடங்கினார். ஆனால் 2 நாட்களில் தனபாலுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. 3-வது நாளில் தனபால் காலையில் எழுந்து பார்த்தபோது ‌‌தனது ஆசை மனைவி சந்தியாவை காணாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சந்தியாவை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதையடுத்து தனபால் உடனே மனைவி சந்தியா, புரோக்கர் பாலமுருகன் மற்றும் உறவினர்களாக வந்த 2 பேருக்கு போன் செய்தபோது, அனைவரது செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகத்தின் பேரில் வீட்டில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது திருமண பட்டு சேலை மற்றும் சந்தியா கொண்டு வந்த துணிமணிகள் இல்லாததை கண்டு திடுக்கிட்ட தனபால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

    இதுகுறித்து தனபால் வேலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இது ஒருபுறம் இருக்க அதே பகுதியை சேர்ந்த ஒரு நபருக்கு திருமணம் செய்து கொடுக்க மணமகளை தேடியபோது வேறு ஒரு புரோக்கர் மூலம் சந்தியாவின் போட்டோ வந்ததை அறிந்த தனபால் அந்த நபர் மூலம் சந்தியா, புரோக்கர் மற்றும் உடன் வந்தவர்களை பிடிக்க எண்ணினார்.

    அதன்படி அந்த நபர் திருமணம் செய்து கொள்ள தனது விருப்பத்தை மதுரை மேலவாசல் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த புரோக்கர் தனலட்சுமியிடம் (45) கூறினார். பின்னர் மணமகனின் போட்டோவையும் புரோக்கரிடம் கொடுத்தனர். அதில் மணமகளுக்கு மாப்பிள்ளையை பிடித்துள்ளது என தனலட்சுமி செல்போனில் கூறியதையடுத்து திருமணத்தை முடிவு செய்தனர்.

    இதையடுத்து நேற்று முன்தினம் காலை திருச்செங்கோட்டில் உள்ள கோவிலில் திருமணம் செய்ய முடிவு செய்து மணப்பெண் சந்தியா மற்றும் தனலட்சுமியின் உறவினர் என கூறப்பட்ட 4 பேர் உள்பட 5 பேர் ஒரு காரில் திருச்செங்கோடு வந்தனர். அப்போது அங்கு நின்ற தனபால் மற்றும் அவருடைய உறவினர்கள் சேர்ந்து சந்தியா, அவருடன் வந்தவர்களை மடக்கி பிடித்து வேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதாவது மதுரை, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த இவர்கள் சந்தியாவுக்கு இதுவரை 6 திருமணங்களை நடத்தி வைத்து நகை, பணம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.

    தற்போது சந்தியாவுக்கு திருச்செங்கோட்டில் நடைபெற இருந்தது 7-வது திருமணம் ஆகும். இதையடுத்து சந்தியா, புரோக்கர் தனலட்சுமி, மதுரை மாவட்டம் வில்லாபுரம் அம்மாச்சியார் கோவில் தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மெக்கானிக் கவுதம் (26), மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மேல்நாச்சியாபுரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கார் டிரைவர் ஜெயவேல் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான புரோக்கர் பாலமுருகன் மற்றும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேட்டமலை பகுதியை சேர்ந்த ரத்தினம் மகன் அய்யப்பன் (28) ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கைதான 'கல்யாண ராணி' சந்தியா ஒவ்வொரு திருமணத்தின்போதும் மணமகன் வீட்டில் இருந்து நெருங்கி பழகி நகை மற்றும் பணத்தை திருடிவிட்டு மாயமாகி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் இந்த மோசடியில் ஒரு கும்பலே ஈடுபட்டுள்ளதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சினிமா போல நடந்த இந்த சம்பவம் குறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் சந்தியா மற்றும் புரோக்கர்கள் எத்தனை இடங்களில் இதுபோல் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார்.
    • அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    விருதுநகர்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 23). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் தனது தாயுடன் சென்னையில் வசித்து வந்தார்.

    அங்கு சித்ராவுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த அஜித் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டு சென்னையிலேயே குடித்தனம் நடத்தி வந்தனர்.

    அஜித்திற்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்துவிட்டு தகராறு செய்தபடி இருந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

    கணவரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து கோவில்பட்டிக்கு வந்து தனது தாயுடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சித்ரா மறுமணம் செய்ய முடிவு எடுத்துள்ளார். இதற்காக ஒரு திருமண தகவல் மையத்தில் பதிவு செய்திருந்தார்.

    அதில் தனது பெயர், முகவரி, தொடர்பு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்திருந்தார். இந்தநிலையில் வாலிபர் ஒருவர் சித்ராவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசி, தான் பெண் பார்த்து வருவதாகவும், ஆகவே உங்களது புகைப்படத்தை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து சித்ரா அந்த வாலிபருக்கு தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் அனுப்பி இருக்கிறார். அதன்பேரில் அந்த வாலிபர் சித்ராவை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். ஆனால் அந்த வாலிபரின் செயல் சித்ராவுக்கு பிடிக்காததால் தன்னை தொடர்பு கொள்ள வேண்டாம் என கூறியிருக்கிறார்.

    இருந்தபோதிலும் அந்த வாலிபர் சித்ராவின் செல்போனுக்கு பேசியபடி இருந்திருக்கிறார். அப்போது அவர் பெங்களூருவில் உள்ள வங்கியில் வேலை பார்ப்பதாகவும், தனது தாய்-தந்தையுடன் இருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

    மேலும் சித்ராவை திருமணம் செய்ய விரும்புவதாகவும், ஆவகே அவரை சந்திக்க கோவில்பட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அதற்கு சித்ராவும் சம்மதித்துள்ளார். அதன்படி நேற்று காலை கோவில்பட்டி பஸ் நிலையத்தில் தனது இரு சக்கர வாகனத்துடன் சித்ரா காத்திருந்தார்.

    அப்போது அவருடன் பேசிய வாலிபர் பஸ்சில் இருந்து இறங்கி வந்தார். ஓட்டலுக்கு சாப்பிட செல்லலாம் என்று கூறி இருக்கிறார். இதையடுத்து அவர்கள் இருவரும் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சித்ராவின் இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

    அங்கு சாப்பிட்டு விட்டு புறப்பட்டபோது அந்த வாலிபர் சித்ராவின் கழுத்தில் தங்கச்சங்கிலி என்று கூறி ஒரு செயினை அணிவித்தார். மேலும் சித்ரா அணிந்திருந்த செயினை கழற்றி தனது கழுத்தில் அணிந்து கொண்டார். பின்பு இருவரும் இரு சக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு திரும்பிச் சென்றனர்.

    அப்போது இருசக்கர வாகனத்தை அந்த வாலிபரே ஓட்டி வந்தார். சித்ரா வைத்திருந்த அவரது கைப்பை மற்றும் செல்போனை அந்த வாலிபர் வாங்கி வைத்துக் கொண்டார். திடீரென அவர் வாகனத்தில் பழுது இருப்பது போல் தெரிகிறது என கூறியிருக்கிறார். அதனை சரி செய்து வருவதாக கூறி சித்ராவை ஒரு இடத்தில் நிற்க வைத்து விட்டு சென்றார்.

    ஆனால் வெகு நேரமாகியும் அந்த வாலிபர் திரும்பி வரவில்லை. தனது செல்போனும் அந்த வாலிபரிடம் சிக்கிக் கொண்டதால் அவரை தொடர்பு கொள்ள முடியாமல் சித்ரா தவித்தார். சாத்தூரில் பலமணி நேரமாக காத்திருந்த சித்ரா, அந்த வாலிபர் தன்னை ஏமாற்றி நகை, இருசக்கர வாகனம் மற்றும் செல்போனுடன் சென்றதை அறிந்தார்.

    பின்னர் வேறு வழியில்லாமல் அங்கு நின்ற முதியவர் ஒருவரிடம் பணம் வாங்கிக்கொண்டு பஸ்சில் தனது ஊருக்கு சென்றார். அங்கு சென்று அந்த வாலிபர் அணிவித்த நகையை சோதனை செய்தபோது அது கவரிங் நகை என்பது தெரியவந்தது.

    திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி தனது நகை, இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவைகளை பறி கொடுத்தது குறித்து சாத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் சித்ரா புகார் செய்தார்.

    தன்னிடம் நூதன மோசடி செய்த வாலிபர் பெயர், ஊர், முகவரி உள்ளிட்ட எந்த விவரமும் சித்ராவுக்கு தெரியவில்லை. இதனால் சித்ராவை ஏமாற்றிய வாலிபர் யார்? என்று போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கோவை:

    கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் பிரபு (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவருக்கு திருமணம் நடத்துவதற்காக பெற்றோர் ஏற்பாடு செய்தனர். இன்று காலை திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது. உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வந்தனர். இந்தநிலையில் பழனிவேல் பிரபு நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தான் பணிபுரியும் நிறுவனத்திற்கு சென்றுவிட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றார்.

    அதன் பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.

    பின்னர் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் வினோத் தலைமையில் போலீசார் புதுமாப்பிள்ளை பழனிவேல் பிரபுவை தேடி வருகிறார்கள்.

    இந்தநிலையில் பழனிவேல் பிரபு திருமண ஏற்பாடு செய்த பின்னர் அதிருப்தி எதுவும் தெரிவிக்கவில்லை. திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த அவர் சுறுசுறுப்பாக பத்திரிக்கை கொடுத்து வந்துள்ளார்.

    மணப்பெண்ணிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாகவும் தெரிகிறது. மாயமான பின்னர் அவர் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

    திருமணம் பிடிக்காததால் மாயமானாரா? அல்லது வேறு யாராவது அவரை கட்டாயப்படுத்தி அழைத்து சென்றார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். மணமகன் மாயமானதால் இன்று ஏற்பாடு செய்த திருமணம் நின்றது. இதனால் மணமகன்-மணமகள் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
    ஆந்திராவில் 3 ஆண்களை திருமணம் என்னும் பெயரில் ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் நந்தியால் மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் மேரம்மா. இவரது மகள் திரிஷா (வயது 24). திரிஷாவுக்கும் ஆவுக்கு பேட்டை, சென்னம் பள்ளியை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவருக்கும் முதல் திருமணம் நடந்தது.

    மல்லிகார்ஜுடன் சில மாதங்கள் மட்டுமே வாழ்ந்த திரிஷா அவரைவிட்டு பிரிந்து தனது தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவரிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே பல லட்சங்களை பறித்துக்கொண்டு வந்துள்ளார்.

    இதையடுத்து அத்மகூர் மண்டலம் கொத்த பள்ளியை சேர்ந்த சீனிவாஸ் ரெட்டி என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இவரிடமும் சில மாதங்கள் மட்டுமே குடும்பம் நடத்தினார். கணவன் மனைவி இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.இதையடுத்து அவரையும் பிரிந்துவிட்டு வீட்டில் இருந்த நகை பணத்தை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டிற்கு வந்துவிட்டார்.

    3-வதாக வேதம் செல்ல அடுத்த ரங்காபுரத்தை சேர்ந்த மகேஸ்வரர் ரெட்டி என்பவரின் மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். மனைவி இறந்து விட்டதால் மகேஸ்வர் ரெட்டி திரிஷாவை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 1-ந் தேதி திரிஷா பெயரில் பேங்க் அக்கவுண்டில் ரூ 5 லட்சத்தை மகேஸ்வர் ரெட்டி டெபாசிட் செய்தார். இதையடுத்து இருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் 5-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணமான சில நாட்களிலேயே மகேஷ்வர் ரெட்டி வீட்டிற்கு வந்த திரிஷாவின் தாயார் மேரம்மா, தனது மகள் பெயரில் வீடு நிலங்களை பதிவு செய்து கொடுத்தால் மட்டுமே திரிஷா உன்னுடன் குடும்பம் நடத்துவார். இல்லை என்றால் திரிஷாவை தன்னுடைய வீட்டிற்கு அழைத்து செல்வதாக மகேஸ்வர ரெட்டியிடம். தெரிவித்தார்.

    இதனால் சந்தேகம் அடைந்த மகேஸ்வர் ரெட்டி திரிஷா குறித்து பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினார். விசாரணையில் திரிஷாவுக்கு ஏற்கனவே இரண்டு பேருடன் திருமணம் நடந்தது தெரியவந்தது.

    இதையடுத்து திரிஷா அவரது தாயார் குறித்து வேதன் சர்லா போலீசில் மகேஸ்வர் ரெட்டி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சீனிவாஸ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள திரிஷா மற்றும் அவரது தாயாரை தேடி வருகிறார்.
    கோவை அருகே 2-வது திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண், வாலிபருடன் மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள காந்தி மாநகரை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவருக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 4 வயதில் பெண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இவரது கணவர் இறந்துவிட்டார். அதன்பிறகு இளம் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    அடிக்கடி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் தங்களது மகளை கண்டித்தனர். மேலும் வாலிபர் உடனான காதலை கைவிடுமாறு அறிவுறுத்தினர்.

    மேலும் மதுரையை சேர்ந்த திருமணமாகி மனைவியை இழந்த வாலிபர் ஒருவரை இளம்பெண்ணுக்கு திருமணம் செய்வது என முடிவு செய்தனர். இதனால் தங்களை பிரித்து விடுவார்கள் என்ற பயத்தில் இருந்த இளம்பெண் தனக்கு நடக்க இருக்கும் திருமணம் குறித்து தனது காதலனிடம் தெரிவித்தார். அவர் உடனடியாக இளம் பெண்ணை அழைத்துச் சென்று அந்த பகுதியில் உள்ள கோவிலில் நண்பர்கள் முன்னிலையில் அவரை திருமணம் செய்தார். பின்னர் இளம்பெண் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனது வீட்டிற்கு திரும்பிச் சென்றார். இந்த விவகாரம் இளம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் அவரை வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது, வாலிபருடன் பேசக்கூடாது என தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பெற்றோருக்கு தெரியாமல் தனது 4 வயது பெண் குழந்தையுடன் இரண்டாவதாக திருமணம் செய்த வாலிபருடன் ஓட்டம் பிடித்தார்.

    இதுகுறித்து பெண்ணின் பெற்றோர்கள் புகார் அளித்தனர் அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×