search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த என்ஜினீயர் கைது
    X

    ராமநாதபுரத்தில் இளம்பெண் குளிப்பதை எட்டி பார்த்த என்ஜினீயர் கைது

    • வாலிபர் ஒருவர் இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.
    • சூர்யபிரசாத்தை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் 50 வயது பெண். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவரும் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர்.

    இந்நிலையில், சம்பவத்தன்று அவரது 23 வயது மகள் குளியலறையில் குளித்து கொண்டிருந்தார். அப்போது சத்தம் கேட்டு இளம்பெண்ணின் தாயார் வெளியே வந்து பார்த்தார். அப்போது வாலிபர் ஒருவர் குளியலறை அருகே நின்று கொண்டு இளம்பெண் குளிப்பதை கதவு சந்து வழியாக எட்டிப்பார்த்ததாக தெரிகிறது.

    இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்ணின் தாயார் அந்த வாலிபரை எச்சரித்தார். இதில் அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் இளம்பெண்ணின் தாயாரை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள் ஓடி வந்தனர்.

    அவர்களை பார்த்ததும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    அதில், இளம்பெண் குளிப்பதை எட்டிப்பார்க்க முயன்றது மதுரை மாவட்டம் வண்டியூரை சேர்ந்த சூர்யபிரசாத்(25) என்பதும், அப்பகுதியில் வாடகைக்கு குடியிருந்து சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரசாத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×