search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kp munusamy"

    • கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
    • சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார்.

    அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருப்பது கே.பி.முனுசாமி அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் (ஓ.பி.எஸ்) பக்கம் வரப்போகிறார் என்பதுதான்.

    உண்மையில்லை என்று கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.

    இப்படி திடீரென்று புகைவதற்கு காரணம் சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தானாம். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை சி.வி.சண்முகம் வாசிக்க தயாராக இருந்த நிலையில் கே.பி.முனுசாமி வாசித்து விட்டார். அன்று தொடங்கிய பிரச்சினைதான். இதுவரை அவர்கள் ராசியாகவில்லை.

    அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது முனுசாமியை முணுமுணுக்க வைத்திருக்கிறது.

    சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார். ஆனால் 'கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்' என்று எடப்பாடி பழனிசாமியும் இருந்து விட்டார்.

    சி.வி.சண்முகம் தாராளமாக மடியை அவிழ்க்கிறார். ஆனால் கே.பி.முனுசாமி துட்டு அவிழ்க்க யோசிக்கிறார். அப்போ இ.பி.எஸ். இப்படித்தானே இருப்பார் என்று கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.

    • கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார்.
    • சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.முனுசாமி எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கிறார்.

    அதே அணியில் இருக்கும் சி.வி.சண்முகத்துடன் கருத்து வேறுபாடு இருக்கிறது. அவர்களுக்குள் இருக்கும் ஈகோ பிரச்சினை பொதுக்குழு மேடையிலேயே வெடித்தது.

    இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகத்துக்கு வந்தபோது அவருடன் அமர கே.பி.முனுசாமிக்கு இருக்கை போடவில்லை.

    இதனால் கோபத்தில் வெளியேறிய கே.பி.முனுசாமியை சமாதானப்படுத்தி செய்தியாளர் சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி தன் அருகில் அவரை வைத்துக் கொண்டார்.

    இந்த நிலையில் சமீபத்தில் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றபோதும் கே.பி.முனுசாமியை அழைத்து செல்லவில்லை. இது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியது. சி.வி.சண்முகத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னை புறக்கணிப்பதாகவும் ஆதங்கப்பட்டார்.

    கடந்த 2 வாரங்களாக இ.பி.எஸ். வீட்டுப் பக்கம் கே.பி.முனுசாமி எட்டிப்பார்க்க கூட இல்லை. சொந்த ஊரில் இருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை.

    இதனால் அவர் அதிருப்தியில் இருப்பது கட்சியினர் மத்தியில் வெளிப்படையாக தெரிந்தது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி கே.பி.முனுசாமியை தங்கள் பக்கம் இழுப்பதற்கான முயற்சியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தீவிரமாக இறங்கி உள்ளது.

    அவர் விரைவில் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

    இதுபற்றி கே.பி.முனுசாமியை தொடர்பு கொண்டு பேசியபோது அவர் கூறியதாவது:-

    வைரஸ் காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். என்னைப்பற்றி தவறாக வதந்தி பரப்பப்படுகிறது. எப்போதும் அணி மாறி கொண்டிருக்கும் அளவுக்கு நான் தரம் தாழ்ந்து போகவில்லை. நான் ஓ.பி.எஸ். அணிக்கு செல்ல மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர்.
    • ஓ.பன்னீர்செல்வம் சுய சிந்தனை இல்லாதவர்.

    கிருஷ்ணகிரி :

    கிருஷ்ணகிரி மாவட்டம் புளியஞ்சேரியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்தவிதமான தியாகமும் செய்யாதவர் ஓ.பன்னீர்செல்வம். அவர் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

    சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்தவித சூழ்நிலையிலும் அ.தி.மு.க.வில் சேர்ந்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும். பல்வேறு காலக்கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் அவர் இருந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து, அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர்.

    அ.தி.மு.க.வில் உள்ள ஒரு தலைவர் நாட்டின் பிரதமர் சொன்னார் என்பதற்காகதான் நான் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டேன் என சொன்னால், அவர் எவ்வளவு சந்தர்ப்பவாதியாக இருக்க வேண்டும். அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார்.

    அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது.
    • அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம் என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

    வேலூர்:

    வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு காட்பாடியில் ரெயில்வே மேம்பாலத்தை திறந்து வைத்தார்.

    இதையடுத்து அவர் மீது 6 பிரிவுகளின் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதையடுத்து அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி இன்று வேலூர் ஜெயிலில் உள்ள எஸ்.ஆர்.கே.அப்புவை நேரில் சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது;-

    காட்பாடியில் நீண்ட காலமாக ரெயில்வே பாலத்தை திறக்காததால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அவரை வேண்டுமென்றே ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

    வருகிற 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு திட்டமிட்டபடி நடந்தே தீரும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார். தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் பொதுக்குழுவிற்கு ஏற்கனவே அனுமதி அளித்து விட்டார்.

    பணம் கொடுத்து மாவட்ட செயலாளர்களை ஈபிஎஸ் வளைப்பதாக டிடிவி தினகரன் கூறிவருகிறார். அவருக்கு எச்சரிக்கை விடுக்கிறோம், அவர் இந்த கட்சியால் ஆதாயம் பெற்று சுபயோகத்தை அனுபவித்து கொண்டிருப்பவர் அவருக்கு கட்சியை பற்றி பேச அருகதை கிடையாது. தொடர்ந்து இதுபோல் அவர் பேசினால் வழக்கு போட்டு அவரை நீதிமன்றத்தில் நிற்க வைப்போம்.

    சசிகலா பாவம் நானும் இருக்கிறேன் என பேசி வருகிறார். அவரை பற்றி பேச அவசியம் இல்லை. உண்மையாக உழைத்தவர்களை உயிர்தொண்டர்களை பிரிக்க முடியாது கட்சியினால் ஆதாயம் அடைந்த சந்தர்ப்பவாதிகள், விரக்தியில் பேசி வருகிறார்கள்.

    தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளுக்காக போராடும் அ.தி.மு.க.வினரை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறோம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளுக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் அஞ்சாது.

    தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது, அரசு தவறும் பட்சத்தில் மக்கள் பிரச்சினையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்களில் ஈடுபடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், முன்னாள் எம்.பி. ஹரி, வேலூர் மாவட்ட பொருளாளர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி சதீஷ்குமார், தாஸ், பி.எஸ்.பழனி உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
    • பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.

    பி.பார்மில் கையெழுத்திடுவது தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த கையெழுத்தையும் போடக்கூடிய தார்மீக பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.

    காரணம் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு பொதுக்குழு, செயற்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அந்த கூட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது.

    குறிப்பாக அந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதையும் விவாதிக்க கூடாது என்றும் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அவர் அணுகியது, கட்சி கட்டுபாட்டை மீறிய செயல்.

    அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது என்பதை கவனித்து ஆலோசனை வழங்க வேண்டும். எதிராக செயல்படக்கூடாது. கட்சியின் பொதுக்குழு அதே நாளில் திட்டமிட்டப்படி நடைபெறும்.

    கட்சியில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 70 பேரும், 66 எம்.எல்.ஏ.க்களில் ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 பேர் தவிர 63 பேரும், தலைமை கழக நிர்வாகிகளில் 74-ல் 70 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களில் 2685 பேரில் 2582 பேர் உள்பட 99 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.

    எதிர்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தி.மு.க.வை பரமவிரோதி என்று ஜெயலலிதா கூறினார்.

    ஆனால் பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வலுவான கட்சிகள்.

    தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.

    பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். #kpmunusamy #kamal #admk

    திருவாரூர்:

    மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று (22-ந் தேதி) திருவாரூர் வன்மீகபுரம் அம்மா அரங்கில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த 120 ஜோடி மணமக்களின் திருமண விழா நடைபெற்றது.

    விழாவிற்கு திருவாரூர் மாவட்ட கழக செயலாளரும் உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை அமைச்சருமான இரா.காமராஜ் தலைமை வகித்தார். பாராளுமன்ற உறுப்பினர்கள் நாகை கே.கோபால் தஞ்சாவூர் கு.பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    திருமண நிகழ்ச்சியில் அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், தமிழக அமைச்சர்களான திண்டுக்கல் சி.சீனிவாசன், இரா.துரைக்கண்ணு, வெல்ல மண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மணமக்களுக்கு தங்கத்தாலி, பட்டுப்புடவை, வேட்டி உள்ளிட்ட 70 வகையான திருமண சீர்வரிசை பொருட்கள் மாவட்ட அ.தி.மு.க.வின் சார்பில் வழங்கப்பட்டது.

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ரகசியமாக நடைபெற்று வருகிறது. விரைவில் யார்- யார் எங்களுடன் கூட்டணி என்பதை அறிவிப்போம்.

    தேர்தல் சமயத்தில் கொள்கை அடிப்படையிலும், வெற்றி நோக்கத்தின் அடிப்படையிலும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். அ.தி.மு.க , பா.ஜனதா இடையே கொள்கை வேறுபாடு இருந்தாலும் மக்கள் நலன் கருதியும், வெற்றி நோக்கம் கருதியும் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா, பா.ம.க. வுடன் எண்ணிக்கை அடிப்படையிலான கூட்டணியை வைத்துள்ளோம்.

    நடிகர் கமல்ஹாசன் அரசியலில் ஒரு குழந்தை. அவர் பேசுவதெற்கெல்லாம் பெரியவர்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.


    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூருக்கு வந்ததும் தினகரனையும் அவரது குடும்பத்தாரையும் எண்ணிப் பார்த்தேன்.

    பிரதமர் நரேந்திர மோடி தினகரனின் குடும்பத்தார் பாக்கெட்டில் இருப்பது போல் நாடகமாடினார்கள்.

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வரமாட்டார்கள் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் எங்களுடன் பா.ம.க. வந்த விட்டது. இப்போது காசு கொடுத்து கூட்டணி வைத்ததாக கூறி வருகிறார்கள்.

    தி.மு.க.விடம் காசு இல்லையா. ஆசியாவிலேயே பணக்கார குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். நீங்களும் காசை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டியது தானே?. இது காசுக்காக சேர்ந்த கூட்டணி அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #kamal #admk 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம் சாட்டி வருகிறார் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    சென்னை:

    கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து, கொடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடும்படி கோரிக்கை வைத்துள்ளார்.

    இந்நிலையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் எம்பிக்கள் இன்று மாலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்தனர். அப்போது அவர்கள் கொடநாடு வீடியோ தொடர்பான விஷயங்களை விவரித்தனர்.

    அதன்பின்னர், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் விளக்கினோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் எங்களுக்கு சாதகமான பதிலை கூறினார். 

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் ஸ்டாலின் அரசியல் ஆதாயத்திற்காக குற்றம்சாட்டி வருகிறார். பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைவோம் என தெரிந்தவுடன் புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார். #Kodanad #TNGovernor #KPMunusamy #MKStalin
    புதிய உறுப்பினர் சேர்க்கை முடிந்ததும் அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும் என்று கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    தஞ்சாவூர்:

    அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.முனுசாமி தஞ்சையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு நலத் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன் அடைந்துள்ளனர். அவரது வழியிலேயே தற்போது முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் அறிவிக்கும் திட்டங்களும் மக்கள் பயன் பெறும் வகையில் சென்றடைகிறது.

    மேலும் இந்த அரசு புதிய புதிய திட்டங்களை மக்களுக்கு கொண்டு வருவதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

    கடந்த ஓராண்டாக தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்கள் எத்தனை தங்கும் விடுதிகளில் தங்கியிருந்தார்கள். கடைசியில் குற்றாலத்தில் தங்கியிருந்து சொகுசு வாழ்க்கையை அனுபவித்தார்கள். அப்போதெல்லாம் அவர்கள் மக்களை நினைத்து பார்க்காமல் தற்போது தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் நோக்கில் தினகரன் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து நாடகம் நடத்துகிறார்.

    அ.ம.மு.க. என்பது ஒரு கட்சியே இல்லை. தினகரன் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டவர் . அவருக்கும் எங்கள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

    கட்சியில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகிறது. மீண்டும் இதில் புதுப்பித்து கொண்டால் மட்டுமே அவர்கள் கட்சியில் உறுப்பினராக இருக்க முடியும். இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பில் சசிகலா உறுப்பினராகவில்லை. எனவே அவர் கட்சியில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே கட்சியிலேயே இல்லாத ஒருவர் எப்படி பொதுச் செயலாளர் பதவி வகிக்க முடியும்.?

    ஆர்.கே.நகர் தேர்தலில் தினகரன் டோக்கன் கொடுத்து வாக்குகள் வாங்கினார் என்றால், அப்போது மக்கள் ஏமாந்தார்கள். தங்களை தினகரன் ஏமாற்றி விட்டார் என்று விரட்டி அடித்தார்களே அது நாடு முழுக்க தெரிந்தது. ஆகவே இந்த தேர்தலில் அ.ம.மு.க. 20 தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்.

    தற்போது அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது. இந்த பணி தொண்டர்களிடம் முழுமையாக சென்றடைந்த பிறகு தலைமை முடிவு செய்து பொதுச்செயலாளர் தேர்வு முறையாக நடைபெறும்.

    சந்திரபாபு நாயுடுவை மு.க.ஸ்டாலின் சந்திப்பது அவர்கள் மாநிலத்திற்கு தேவை என்பதாலும், மு.க.ஸ்டாலினுக்கும் வேறு வழியில்லை என்பதாலும் அவர் சந்தித்தார். ஆனால் அ.தி.மு.க. தமிழக மக்களிடையே வலுவான கட்சி என்பதால் நாங்கள் யாரையும் சந்திக்க அவசியம் இல்லை.

    சர்கார் படத்தில் இலவசங்களை விமர்சித்து காட்சிகள் வந்தது. அந்த படத்தை இயக்கிய முருகதாஸ் அரசு எந்த அடிப்படையில் இலவசங்கள் வழங்கியது என்று தெரியாமல் எடுத்துள்ளார்.

    இந்த படத்தை கொண்டு வந்தது மாறன் சகோதரர்கள். அரசியலில் ஆதாயம் தேடுவதற்காகவும், மு.க.ஸ்டாலினை திருப்தி படுத்துவதற்காகவும் இது போன்று படத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதில் முருகதாசும், நடிகர் விஜய்யும் பலிகடா ஆகி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார். #ADMK #KPMunusamy #Sarkar #Vijay #ARMurugadoss #TTVDhinakaran #18MLAs
    டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது என கேபி முனுசாமி தெரிவித்துள்ளார். #kpmunusamy #dinakaran #metoo

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கரூர் மாணிக்கம் இல்லத் திருமண விழா நடந்தது. இதில் கே.பி.முனுசாமி பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டி.டி.வி. தினகரனின் செயல்பாடுகள் சூதாட்டம் ஆடுவது போன்று உள்ளது. அப்பாவி தொண்டர்களை ஏதேனும் சொல்லி, ஏமாற்றும் நிலையில் உள்ளார். ஆனால் தொண்டர்களை ஏமாற்ற முடியாது.


    நம் நாடு பல்வேறு மதங்கள் கலாச்சாரங்கள் சார்ந்தது. அந்த உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில் நடத்தப்பட வேண்டும். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கின்றது என பொறுத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

    ஒரு காலத்தில் பெண்களை இந்த சமூகம் பாரபட்சமாக நடத்தியதுண்டு. அப்போது பெண்கள் பாலியல் தொல்லை குறித்து வெளியே சொல்வதற்கு வாயப்பில்லாமல் இருந்தது. மேலும் வெளியில் சொன்னால் மானம் மரியாதை போய் விடும் என்ற பயமும் இருந்தது. ஆனால் இப்போது மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார். #kpmunusamy #dinakaran #metoo

    ஜெயலலிதாவுக்கு தெரியாமல் மாயத்தோற்றத்தை உருவாக்கி அதில் தங்களை சிக்க வைத்து தன்னை அரசியாக நினைத்து ஆட்சி செய்தவர் சசிகலா என முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசினார். #KPMunusamy #ADMK

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியில் அ.தி.மு.க. சார்பில் காவிரி நதி நீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியால் தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பயங்கரவாதிகள நடமாட்டம் இருப்பதை அவர் நிரூபிக்கட்டும். தமிழகத்தில் சமூகவிரோத சக்திகள் வேண்டுமானால் இருக்கலாம். பயங்கரவாதிகள் இல்லை.

    மத்தியில் ஆளும் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதி கூட கிடையாது. ஆனால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து தமிழகத்தில் சிறு குக்கிராமங்களில் கூட சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

    ஆனால் மத்தியில் ஆளும் பா.ஜ.க. மாநிலங்களில் எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது. தமிழகத்தில் கவர்னர், பிரதமருக்கு கூட கருப்பு கொடி காட்டுகிறார்கள். இது போன்ற செயல்களால் எந்த பயனும் இல்லை.

     


    மோடி சிறந்த பிரதமராக இல்லை. அவர் ஆட்சிக்கு அப்பாற்பட்டு, கட்சிக்கு அப்பாற்பட்டு மக்கள் உரிமையை நிலை நாட்டவில்லை. அந்த வகையில் தமிழக மக்களின் பிரச்சினையை தீர்க்காதவர் பிரதமரே அல்ல.

    உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை மற்றும் காவிரி நதி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கும் தீர்ப்பை நாம் பெற்றுள்ளோம். இதனை வைத்து சிலர் மத்தியில் ஆளும் பா.ஜனதாவுக்கு நாங்கள் அடிமை, எடுபிடி என கூறுவது தவறு.

    ஏனென்றால் தமிழகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அ.தி.மு.க. மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எங்களின் தேவைகளுக்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் அடிமை அல்ல. பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறோம்.

     


    தினகரனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தினகரன் குடும்பத்தினர் ஜெயலலிதாவை ஏமாற்றிய கூட்டம். அவரது இறப்புக்கு காரணமான கூட்டம்தான் தினகரன். 

    ஜெயலலிதாவுடன் சசிகலா இருந்தபோது அவருடைய அலவலகத்துக்கு வரும் போதெல்லாம் அவருக்கு தெரியாமல் ஒரு மாய தோற்றத்தை உருவாக்கியுள்ளார். அந்த தோற்றத்தில் எங்களையும் சிக்க வைத்து தொடர்ந்து தன்னை ஒரு அரசியாக நினைத்து ஆட்சி செய்தவர் சசிகலா. அவர் கட்சியையும் ஆட்சியையும அழிக்க நினைத்ததால்தான் சிறையில் உள்ளார். அது போல் தினகரனும் நினைத்தால் அவரும் சிறைக்குதான் செல்வார்.

    இவ்வாறு அவர் பேசினார். #KPMunusamy #ADMK

    உயர்கல்வி, சுகாதாரத்தில் பா.ஜனதா ஆளும் மாநிலங்களை விட தமிழகம் முன்னிலையில் உள்ளதாக அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறினார்.
    கிருஷ்ணகிரி,

    முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளருமான கே.பி.முனுசாமி கிருஷ்ணகிரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    6 மாதங்களுக்குள் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல் வரும் என தினகரன் கூறி உள்ளார். ஜோதிடர் போல் தினகரன் நடந்து கொள்கிறார். மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சில சமயங்களில் ஏதேதோ கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஏற்கனவே திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து தமிழகம் முன்னேறவில்லை என சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

    இன்று தமிழகம் சுகாதாரத்துறையில் முன்னிலையில் உள்ளது. அவர்களுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் சுகாதாரத்தில் 7-வது இடங்களுக்கு மேல் உள்ளது. இதனை அவர் மறந்து விட்டு பேசுகிறார். இதேபோல் உயர்கல்வியில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது. 12-ம் வகுப்பு முடித்த பிறகு 49 சதவீதம் மாணவர்கள், உயர்கல்வியில் தமிழகத்தில் தான் சேருகிறார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் பல மாநிலங்களில் கிராமங்களில் சாலை வசதி இல்லை.

    எனவே பொன்.ராதாகிருஷ்ணன் தன் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் நிலையை புரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் அவர் தேவையில்லாத கருத்துக்களை சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக கிருஷ்ணகிரியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் 500 பேருக்கு தலா ரூ.500 மதிப்புள்ள அரிசி, மளிகை பொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
    அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #KPMunusamy #MKStalin
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-

    நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்கு சராசரி நபர் போல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக இவரது தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 13முறை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படி என்றால் அந்த சமயத்தில் அவரது தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.


    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இவருக்கு அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் நாக்கை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து அப்படி பேசினால் அடுத்த முறை நானே நேரடியாக சென்று வைக்கோவிற்கு பதில் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
    ×