search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீடூ"

    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். என்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார். #MeToo
    சென்னை:

    பிரபல பின்னணி பாடகி சின்மயி. இவர் ‘மீடூ’வில் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சின்மயிக்கு திரையுலகில் ஆதரவும், எதிர்ப்பும் இருந்தது. சின்மயி படங்களில் கதாநாயகிகளுக்கு டப்பிங் குரலும் கொடுத்து வந்தார்.

    இதற்கிடையே டப்பிங் யூனியனில் இருந்து திடீரென்று நீக்கப்பட்டார். அவர் உறுப்பினர் சந்தாவை 2 ஆண்டாக செலுத்த தவறியதால் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    இதுபற்றி சின்மயி கூறும்போது, டப்பிங் யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி தூண்டுதலின் பேரில்தான் நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து தன்னை நீக்க முடியாது என்று சின்மயி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    டப்பிங் யூனியனில் இருந்து என்னை அவர்கள் நீக்கம் செய்ய வேண்டுமென்றால் எனக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்க வேண்டும். அப்போதுதான் நான் விளக்கம் அளிக்க முடியும். ஆனால் இது அவர்களது சொந்த விதிமுறைபடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.



    நான் ஏற்கனவே வாழ்நாள் உறுப்பினர் சந்தாவை செலுத்தி உள்ளேன். அதற்கான வங்கி விவரங்கள் என்னிடம் உள்ளன. இதனால் சந்தா தொகை செலுத்தாததால் என்னை நீக்கியதாக கூறுவது தவறு. டப்பிங் யூனியனில் இருந்து என்னை நீக்கியது செல்லாது. ‘மீடு’ விவகாரத்தில் பாலியல் புகார்களை நான் கூறியதால் ராதாரவி என்னை நீக்கி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு எதிராக முன்னாள் மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் தொடர்ந்த வழக்கை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. #MJAkbar #MeToo #JournalistPriyaRamani
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் மீது பிரியாரமணி, கசாலா வகாப், ஷிமா ரகா, அஞ்சுபாரதி உள்ளிட்ட பிரபல பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து எழுந்த கடும் விமர்சனங்களைத் தொடர்ந்து மந்திரி பதவியை  ராஜினாமா செய்தார் அக்பர்.

    அதேசமயம், தன்மீது பாலியல் புகாரை முதலில் கூறிய பிரியா ரமணி என்ற பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே.அக்பர் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் கிரிமினல் இதற்கான மனுவை அளித்தார்.

    “பிரியா ரமணி வேண்டுமென்றே தீய நோக்கத்துடனும், உள்நோக்கத்துடனும் புகார் கூறியுள்ளார். அவர் மீது உரிய அவதூறு சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, எம்.ஜே.அக்பர் தரப்பு வாதத்தைக் கேட்ட நீதிமன்றம், அவதூறு வழக்கை விசாரணைக்கு ஏற்றது. அத்துடன் விசாரணை 31-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவித்தது.

    31-ம்தேதி எம்.ஜே.அக்பர் மற்றும் பிற சாட்சியங்கள் நேரில் ஆஜராகி தங்கள் சாட்சியம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    ‘பத்திரிகையாளர் பிரியா ரமணியின் பாலியல் புகார் தொடர்பான டுவிட்டர் பதிவால் நான் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். பிரியா ரமணி சொல்வது போன்ற எந்த தவறையும் நான் செய்யவில்லை. என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதால் பதவி விலகினேன்’ என எம்.ஜே.அக்பர் கூறினார். #MJAkbar #MeToo #JournalistPriyaRamani
    பெண் பத்திரிகயாளர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியான புகார்களின் எதிரொலியாக வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். #Metoo #MJAkbar
    புதுடெல்லி:

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீ டூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்துள்ளனர். 
     
    அவ்வகையில், மீ டூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளாகியிருக்கிறார். பிரபல பத்திரிக்கையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து இப்போது மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி என பொறுப்பில் இருக்கும் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். 

    அவர் மீதான புகார் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மத்திய மந்திரி எம்.ஜே. அக்பர் தன் மீதான பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலையும் அளிக்காமல் இருக்கிறார். அவர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவியில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், அரசுமுறைப் பயணமாக வெளிநாடு சென்றிருந்த அக்பர் சமீபத்தில்  டெல்லி திரும்பினார். தன்மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அவர், எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை, பொய்யாக ஜோடிக்கப்பட்டவை  என குறிப்பிடிருந்தார்.

    இந்நிலையில், இன்று மாலை தனது மந்திரி பதவியை எம்.ஜே. அக்பர் ராஜினாமா செய்தார்.

    தனிப்பட்ட முறையில் என்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக  தனிப்பட்ட முறையில் எதிர்கொள்ள விரும்புவதால் எனது பதவியில் இருந்து விலகுகிறேன் என வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜுக்கு அனுப்பியுள்ள ராஜினாமா கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். #Metoo #MJAkbar
    எம்.ஜே.அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனது பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலே தெரிவித்துள்ளார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    புதுடெல்லி :

    பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீ டூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில், மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி எம்.ஜே.அக்பரும் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்துள்ளனர்.

    மத்திய மந்திரி எம்.ஜே.அக்பர் பத்திரிகையாளராக இருந்தபோது பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில பெண்கள் புகார் செய்தனர். ‘இது பொய்யானது, கற்பனையானது’ என அவர் மறுத்துள்ளார். புகார் பற்றி மத்திய மந்திரி ராமதாஸ் அதவாலேவிடம் கருத்து கேட்டபோது அவர் கூறியதாவது:-



    பெண்களை துன்புறுத்தும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அவர்கள் நானா படேகர், எம்.ஜே.அக்பர் போன்று பிரபலமானவர்களாக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்பர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். ஆனால், ‘மீ டூ’ சிலரை பொய் புகாரில் சிக்கவைக்கும் தலமாக மாறிவிட வாய்ப்பு உள்ளது என்பது எனது கருத்து. அதுபோன்ற புகார்கள் குறித்து போலீசார் உறுதி செய்ய வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் அதவாலே கூறினார். #RamdasAthawale #MeToo #MJAkbar
    ×