என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல பேசுவதா?- மு.க.ஸ்டாலினுக்கு கே.பி.முனுசாமி கண்டனம்
Byமாலை மலர்29 May 2018 7:33 AM GMT (Updated: 29 May 2018 7:34 AM GMT)
அரசியல் ஆதாயத்துக்காக சராசரி நபர்போல மு.க.ஸ்டாலின் பேசி வருவதாக கே.பி.முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #KPMunusamy #MKStalin
காவேரிப்பட்டணம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-
நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வரை கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கிறார். இவருக்கு அரசியல் செய்ய எந்த பிரச்சனையும் தற்போது கிடைக்கவில்லை. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் மூக்கை நுழைத்து கடுமையான வார்த்தைகளை உபயோகித்து அவதூறு பரப்பி வருகிறார். அவர் நாக்கை அடக்கி பேச வேண்டும். தொடர்ந்து அப்படி பேசினால் அடுத்த முறை நானே நேரடியாக சென்று வைக்கோவிற்கு பதில் அளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் கே.பி.முனுசாமி நிருபரிடம் கூறியதாவது:-
நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் அதை சந்திக்க தயார் என்று கூறி தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை புரிந்து ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுத்த முதல்வர் பழனிசாமிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் காவல்துறை மற்றும் தமிழக முதல்வர் மீது கொலை வழக்கு பதிய வேண்டும் என கூறி வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் என்ற பொறுப்பை உணர்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். அதை விடுத்து அரசியல் ஆதாயத்திற்கு சராசரி நபர் போல் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை முன் வைத்து வருகிறார். குறிப்பாக இவரது தந்தை கருணாநிதி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் 13முறை துப்பாக்கி சூடு நடந்துள்ளது. அப்படி என்றால் அந்த சமயத்தில் அவரது தந்தை மீது கொலை வழக்கு பதிவு செய்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #KPMunusamy #MKStalin
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X