search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகாதாரம்"

    • எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
    • உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    சென்னை:

    சென்னை புளியந்தோப்பில் மாநகராட்சியின் இறைச்சி கூடம் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆடு மற்றும் மாடுகள் வெட்டப்பட்டு மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. சென்னை நகரில் உள்ள பெரும்பாலான இறைச்சி கடைகளுக்கு இங்கிருந்து தான் விற்பனைக்கு இறைச்சி கொண்டு செல்லப்படுகிறது.

    மற்ற நாட்களைவிட ஞாயிற்றுக்கிழமைகளில் 5 ஆயிரம் ஆடுகள் அங்கு வெட்டப்படுகின்றன. கிலோ ரூ.700 வரை விற்கப்படுகிறது. ஆனால் இறைச்சி கடைகளில் ஆட்டு இறைச்சி கிலோ ரூ.900 வரை விற்கப்படுகிறது.

    புளியந்தோப்பு இறைச்சி கூடத்தின் முன் பகுதியில் சிலர் ஆட்டு இறைச்சி விற்பனை செய்து வருகின்றனர். அங்கு கிலோ ரூ.600-க்கு ஆட்டு இறைச்சி கிடைக்கிறது.

    மட்டன் கடைகளில் கிலோ ரூ.900-க்கு விற்கும்போது அங்கு எப்படி ரூ.600-க்கு விற்கப்படுகிறது என்பதற்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.

    ராஜஸ்தான், சூரத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனைக்கு சனிக்கிழமை ஆடுகள் கொண்டு வரப்படும். ஒரு லாரிக்கு 350 ஆடுகள் வீதம் கொண்டு வரும்போது நெரிசலில் சிக்கி அவற்றில் 4 அல்லது 5 ஆடுகள் செத்து விடுவது வழக்கம். ஒரு லாரியில் 5 ஆடுகள் என்றால் 10, 15 லாரிகளில் வரும் போது 50 ஆடுகளுக்கு மேல் வழியில் இறந்து விடுகிறது.

    இறந்துபோன ஆடுகளை அந்த பகுதியில் உள்ள சிலர் குறைந்த விலைக்கு வாங்கி, சுத்தம் செய்து பிரீசரில் வைத்து பாதுகாக்கின்றனர்.

    மறுநாள் காலையில் அதனை வெட்டி விற்பனைக்கு கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

    இறந்த ஆடுகளை பதப்படுத்தி உண்பது சுகாதார மற்றதாகும். உயிரோடு உள்ள ஆடுகளை வெட்டி பயன்படுத்துவது தான் பாதுகாப்பானதாகும்.

    ஆனால் இறைச்சி கூடத்தின் முன்பு சிலர் இதனை தொழிலாக செய்து வருகின்றனர். செத்து போன ஆட்டு இறைச்சிக்கும் உயிரோடு வெட்டிய ஆட்டு இறைச்சிக்கும் பார்க்கும் போது வேறுபாடு தெரியாது.

    இறைச்சி கடைகளை விட கிலோவிற்கு ரூ.300 குறைவாக கிடைப்பதால் அதனை மக்கள் தெரியாமல் வாங்கி சென்று பயன்படுத்துகின்றனர்.

    ஆனால் இதுபோன்ற சாகின்ற ஆடுகளை இறைச்சி கூடத்தில் தூக்கி எறிந்து விடுவார்கள். கூடத்தில் உள்ள வியாபாரிகள் இந்த செயலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் வெளியே சிலர் கடை வைத்து சுகாதாரமற்ற ஆட்டு இறைச்சி விற்பதை அதிகாரிகள் கண்டு கொள்வது இல்லை.

    மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தான் இறைச்சி கூடம் முழுவதும் உள்ளது. அப்படி இருக்கும் போது மலிவான விலையில் ஆட்டு இறைச்சி விற்பனை செய்வதை ஏன் தடுக்க முடியவில்லை என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    • தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் அன்சாரி. இவர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

    இங்கு தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம்கள் கேரள மாநிலத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிறுவனத்தில் சுகாதாரமற்ற முறையில் ரசாயன பொருட்களை கொண்டு ஐஸ்கிரீம் தயாரிக்கப்படுவதாகவும், செங்கோட்டையில் தயாரித்து கேரள பெயர்களை அச்சிட்டு லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பப்படுவதாகவும் புகார் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து தென்காசி வட்டார உணவு பாதுகாப்பு அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் அந்த நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சுகாதாரமற்ற முறையில் உரிய பாதுகாப்புகளின்றி ஐஸ் கிரீம்கள் தயாரிக்கப்படுவது தெரிய வந்தது. மேலும் ஐஸ்கிரீம் தயாரிப்பதற்காக ரசாயன பொருட்கள் பயன்படுத்தியதும், பல்வேறு பெயர்களை கொண்ட லேபிள்கள் அச்சடிக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட 270 லிட்டர் ஐஸ்கிரீம்களை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    • முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.
    • தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 16,17,18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் தற்போதும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

    அதிகனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேபோல் புதியம்புத்தூர் அருகே உள்ள குளங்களும் உடைந்ததால் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

    குறிப்பாக முத்தம்மாள் காலனி , பாத்திமா நகர், ராஜகோபால் நகர், புஷ்பா நகர், கதிர்வேல் நகர், பாரதி நகர், கே.டி.சி. நகர், ஸ்டேட் பாங்க் காலனி, நேதாஜி நகர், சின்னக்கண்ணு புரம், ரஹ்மத் நகர், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 அடிக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

    இதனால் கடந்த 6 நாட்களாக அப்பகுதி பொது மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை ஹெலிகாப்டர்கள் மூலமாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர், தன்னார் வலர்கள் ஆகியோர் மீட்டு முகாம்களில் தங்க வைத்துள்ளனர்.

    எனினும் தூத்துக்குடி மாநகர் பகுதியிலும், மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சாலை துண்டிப்பு, பாலங்கள் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது தற்போதும் சிக்கல் நிலவி வருகிறது. அரசு, மாநகராட்சி, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு இடங் களில் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணிகள் தொடர்ந்து இரவு, பகலாக நடைபெற்று வருகிறது.

    ஆனாலும் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள வீடுகளில் தவிப்போரை மீட்பதில் சிரமம் இருந்து வருகிறது. அவர்களுக்கு மீட்பு குழுவினர் உணவு, தண்ணீர் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். எனினும் சில இடங்களில் அதிக அளவு தண்ணீர் மற்றும் மீட்பு குழுவினர் செல்ல முடியாத நிலை தொடர்வதால் குறிப்பிட்ட இடங்களில் உணவு வழங்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே கனமழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் நாசமாகி உள்ளது. இதே போல் வீடுகள், தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடு, மாடு, கோழிகள் என ஆயிரக்கணக்கான கால்நடைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாநகர பகுதிகளில் வீடுகளை சூழ்ந்துள்ள வெள்ள நீரிலும் ஏராளமான கால்நடைகள் இறந்து மிதக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் இதுவரை 25 பேர் இறந்துள்ளனர் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே முத்தம்மாள் காலனி பகுதியில் தேங்கி உள்ள தண்ணீரில் சுமார் 30-க்கும் மேற்பட்ட சடலங்கள் மிதப்பதாக கூறப்படுகிறது.

    இதே போல் மாவட்டம் முழுவதும் சூழ்ந்துள்ள வெள்ளத்தில் சுமார் 150 பேர் இறந்திருக்கலாம் எனவும் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

    இதுகுறித்து தூத்துக்குடி கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 18 பேரும், சுவர் இடிந்து 2 பேரும், மின்சாரம் தாக்கி 2 பேரும் என இதுவரை மாவட்டத்தில் மழைக்கு 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அங்கு சிகிச்சை அளிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    இதற்கிடையே நெல்லை அரசு மருத்துவமனையில் நேற்றும், இன்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 41 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் 17 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், தற்போது 24 பேரின் உடல்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    எனவே தூத்துக்குடியில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 70-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது.

    எனினும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றிய பின்னரே வேறு ஏதேனும் உடல்கள் அங்கு இருக்கிறதா என கண்டறிந்து அதன் பின்னரே பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.

    இதுகுறித்து அப்பகுதி பொது மக்கள் கூறியதாவது:-

    3-ம் மைல் முதல் திரேஸ்புரம் வரை சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்கிள் ஓடை செல்லும் சாலையின் இருபுறமும் மண் சாலைகளாகவும், தாழ்வாகவும் காணப்பட்டது. இதனால் கனமழை பெய்யும் போது பெருக்கெடுத்து வரும் தண்ணீர் பக்கிள் ஓடைக்கு நேரடியாக செல்லும். ஆனால் தற்போது சாலையின் இருபுறமும் உயரமான அளவில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதனால் வெள்ள நீர் அருகில் உள்ள மாநகர குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று வீடுகளை சுற்றி வெள்ளமாக தேங்கி நிற்கிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மாநகர பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அங்குள்ள பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொது மக்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டாலும் தொடர்ந்து அவர்கள் அங்கேயே இருப்பதால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மேலும் வெள்ளத்தில் சிக்கி ஏராளமான வீடுகளில் இருந்த பொருட்கள் நாசமாகி உள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பல இடங்களிலும் இன்னும் சீரான குடிநீர் வழங்கவில்லை. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மழை நீர் தேங்கிய பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் மேலும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.


    இதற்கிடையே சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள பகுதிகள் மற்றும் மாநகரில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையினர் முதன்மை செயலாளரும், தென்மாவட்டகளுக்கான கண்காணிப்பு அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் காய்ச்சல் பாதித்த 37 பேருக்கும், தொற்று நோய் பாதித்த 104 பேருக்கும், தோல் நோய் பாதிப்படைந்த 49 பேருக்கும், காயம் ஏற்பட்ட 12 பேர், மற்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 16 பேர் என மொத்தம் தூத்துக்குடி மாவட்டத்தில் 221 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர்.
    • சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    சேலம்:

    சேலம் மாநகரில் பயணிகள் நிற்கும் இடங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் சுகாதார வளாகங்கள் இல்லாததால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். ேமலும் பொது இடங்களில் அசுத்தம் செய்து வந்தனர். இதனால் பல பகுதிகளில் சுகாதார கேடு ஏற்பட்டது .

    இதனை கவனித்த சேலம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் மக்கள் கூடும் இடங்களில் ரெடிேமடு சுகாதார வளாகங்களை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி சேலம் அரசு ஆஸ்பத்திரி, சுந்தர் லாட்ஜ் பகுதி ஆகிய இடங்களில் ஆண்களுக்கு 1, பெண்களுக்கு 1 என தலா 2 ரெடி மேடு சுகாதார வளாகங்கள் சிமெண்ட் மேடை அமைத்து பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து அஸ்தம்பட்டி ரவுண்டானா, 4 ரோடு, 5 ரோடு உள்பட 11 இடங்களிலும் ரெடிமேட் சுகாதார வளாகங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன.

    இதற்கு தேவையான தண்ணீரை அருகில் உள்ள அரசு அலுவலகங்கள் அல்லது மாநகராட்சி அலுவலகங்களில் இருந்து எடுத்து பயன்படுத்தும் வகையில் பைப் லைன் அமைக்கவும் நடவ டிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநகரத்தில் சுகாதாரம் பாதுகாக்கப்படும் என்பதால் பொது மக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.Salem District News, சேலம், மாநகராட்சி, 11, சுகாதாரம், வளாகங்கள், Salem, Corporation, 11, Health, Complexes, 

    • கழிவுநீர் நெல் வயல்களில் புகுந்து விடுவதால் விளைச்சல் பாதிக்கப்படுகிறது.
    • சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே கண்டமங்கலம் கிராமம் உள்ளது. முற்றிலும் நெல் விவசாயம் நடைபெறும் கிராமம் இது. இந்த கிராமத்தில் இருந்து வரகூர் செல்லும் தார் சாலையில் ஓரத்தில் விவசாய விளைநிலங்களுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கழிவுநீர், குப்பைகள் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிறைந்து தேங்கி நிற்கிறது. இவ்வாறு தேங்கி நிற்கும் கழிவுநீர் அதன் அருகில் உள்ள நெல் வயல்களில் புகுந்து விடுவதால் நெல் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயி தெரிவிக்கின்றார்.

    எனவே கண்டமங்கலம் கிராமத்தில் கழிவுநீர் தேங்கி கிடக்கும் வாய்க்காலை பார்வையிட்டு கழிவு நீரை அகற்றி சுகாதாரமான முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் வடுகபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் "போசான் அபியான்" என்னும் வளர் இளம் குழந்தைகளுக்கு அடுப்பில்லா ஆரோக்கிய சமையல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவுகள், புரதச்சத்து உணவுகள், மற்றும் உணவுகள் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. இதனை பல்லடம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, பள்ளி தலைமை ஆசிரியை செல்வராணி, உள்ளிட்டோர் உணர்வுகளை சுவைத்து பார்த்து, அதனை சமைத்த போட்டியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், அங்கன்வாடி ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் 50 சதவீதம் பிரசவங்கள் அதிகரித்துள்ளது.
    • தடுப்பூசிகள் போடப்படு–கின்றன.

    மதுரை

    தமிழகத்தில் சுகாதாரத் துறை சார்பில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற மருத்துவ பரிசோதனை மையங்களை மேம்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இந்த மையங்கள் மூலம் விழிப்பு–ணர்வு பிரசாரங்கள் ஏற்ப–டுத்துவதோடு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்க–வும் வழிவகைகள் செய்யப் பட்டுள்ளன.

    மதுரை மாநகராட்சியின் கீழ் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிக–ளுக்கான மருத்துவ சேவை–கள், தாய் மற்றும் குழந்தை நலம், தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய–வற்றை சிறந்த முறையில் வழங்கி வழங்குகின்றன.

    இதன் மூலம் மதுரை நகர மாநகராட்சியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்களில் பிரசவங்கள் 50 சதவீதம் அதிகரித்துள்ள–தாக தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது. கடந்த 10 நாட்க–ளுக்கு முன்பு இரண்டு ஆரம்ப சுகாதார மையங்க–ளில் தாய்மார்களுக்கான புதிய வார்டுகள் திறக்கப் பட்டு அதில் 2 கர்ப்பிணிகள் குழந்தை பெற்றுள்ளனர்.

    கடுமையான நோய்கள், சமூகம் சார்ந்த மற்றும் குழந்தை மருத்துவ சேவை–கள் அளிக்கும் திறன் கொண்டவையாக இந்த நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து நகர சுகாதார அதிகாரி ஒருவர் கூறுகையில், மதுரை மாநக–ராட்சி நகர்ப்புற மருத்துவம–னைகளுக்கு வரும் கர்ப்பி–ணித் தாய்மார்களுக்கு மாதந்தோறும் மருத்துவப் பரிசோதனை செய்யப்படு–கிறது.

    பாலூட்டும் தாய்மார்க–ளுக்கு பாதுகாப்பான மற் றும் கவனமாக சிகிச்சை அளிக்கப்படும் போது குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து உள் ளிட்ட பல்வேறு சோத–னை–கள் மற்றும் தடுப்பூசி–கள் போடப்படு–கின்றன.

    மகப்பேறுக்கு முந்தைய பராம–ரிப்பு திட்டம் உட்பட கர்ப்பிணிப் பெண்களை செவிலியர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்ப–டுத்துகிறார்கள். மேலும் இதன் விளைவாக, சராசரி மாதத்திற்கு 70 முதல் 80 பிரச–வங்கள் என்று இருந் தது தற்போது 120 ஆக அதி–கரித்துள்ளது. இது எங்க–ளுக்கு பெருமைக்குரிய விஷயம்.

    தற்போது, மதுரை மாநக–ராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், மகப் பேறு மற்றும் பிரசவத் திற்கு பின்னர் கவனிக்க வேண் டிய, வசதிகளை ஏற்படுத்த தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கம் மூலம் நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

    மாநகராட்சியில் மேலும் ஆறு நகர்ப்புற ஆரம்ப சுகதார மையங்களில் கூடு–தல் கட்டிடங்கள் கட்டப் பட்டு, மகப்பேறு சிகிச்சை அளிக்க தேவையான வச–திகள் ஏற்படுத்தப்பட்டுள் ளன. இந்த வசதிகளை சுகா–தாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த மாதம் பொதுமக்கள் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    அரசு மருத்துவமனை–களை நம்பியிருக்கும் கர்ப்பி–ணிப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நகராட்சி ஆரம்ப சுகாதார மையங்களில் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக பயனடைந்து வருகின்றனர் என்றார்.

    • குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது.
    • ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் செம்பியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கருவலூர்செல்லும் ரோட்டில்அப்பகுதியில் உள்ள வீடுகள், ஹோட்டல்கள், பேக்கரிகள், காய்கறி கடைகள் ஆகியவைகளில் இருந்து குப்பைகள், மற்றும் கழிவுகளை ரோட்டு ஓரங்கள் மற்றும் கோவில் பகுதிகளில் கொட்டிச் சென்று விடுகின்றனர். இதனால் கடுமையான துர்நாற்றமும், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:- இப்பகுதியை சேர்ந்த அனைத்து குப்பைகளும் தினசரி இங்கு கொண்டு வந்து கொட்டப்படுவதால் குப்பை மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினர் மாதக்கணக்கில் குப்பைகளை அகற்றுவதே இல்லை. இது குறித்து பல முறை ஊராட்சி நிர்வாகத்துடன் கூறி யும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை என்றனர்.

    • திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே சுகாதார சீர்கேடு
    • வாழ்வாதாரம் காக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

    திருச்சி,

    தமிழகத்தின் மத்திய மாவட்டமான திருச்சிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ரெயில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் வந்து செல்கிறார்கள். இதற்கிடையே திருச்சி மத்திய பேருந்து நிலையம் வ.உ.சி. ரோடு பகுதியில் 15-க்கும் மேற்பட்ட சாலையோர உணவு கடைகள் உள்ளன. இதில் பஸ், கண்டக்டர் டிரைவர்கள், வெளியூர் பயணிகள் உணவு அருந்தி வருகின்றனர். இங்கு சைவ மற்றும் அசைவ உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் தண்ணீர் மேற்கண்ட சாலையோர உணவு கடைகளை சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த இடத்தில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதனால் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.மேலும் அவர்கள் கூறும் போது, நாங்கள் கொரோனாவுக்கு முந்தைய காலம் வரை மாநகராட்சிக்கு சேவை வரி செலுத்தி வந்தோம். இப்போது மாநகராட்சியின் சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை பெற்று வரி செலுத்த தயாராக இருக்கின்றோம். மழைநீர் கடைகளில் தேங்கி நிற்பதால் மக்கள் வருவதற்கு அச்சப்படுகிறார்கள். வடிகால் மண் நிரம்பி அடைந்து கிடக்கிறது.நாங்கள் தான் தண்ணீரை அப்புறப்படுத்தி வியாபாரத்தை செய்கிறோம். இருப்பினும் திடீரென மழை பெய்தால் மீண்டும் தண்ணீர் சூழ்ந்து விடும். மாநகராட்சி நிர்வாகத்துக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது.
    • ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள்

    விழுப்புரம்:

    உலக சுகாதாரம் மற்றும் கல்வி பாதுகாப்பு அமைப்பின் தொடக்க விழா விழுப்புரத்தில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வேலூர் காவல்துறை சரகஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி. கவிஞர் கனககேசன்,பார்த்திபன், ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து டிஎஸ்பி பேசியதாவது,  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .

    அதுபோல் நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அனைத்து செல்வங்களையும் பெற முடியும் குறிப்பாக நாம் இருக்கும் வீடு நாம் இருக்கும் சுற்றுப்புறம் நாம் இருக்கும் பகுதி நாம் இருக்கும் ஊர் சுகாதாரமாக இருக்க வேண்டும். மேலும் இந்த அமைப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் மிக அற்புதமாக உள்ளது. இந்த அமைப்பு அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நான் கருதுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக இவ்வமைப்பின் நிறுவனர் மணிகண்டன் அனைவரையும் வரவேற்று பேசினார். இதில்அய்யனாரப்பன்,சுரேஷ்,சங்கீத்குமார்,ராகவேந்திரன், அய்யனார். சுரேந்திரன் பாஸ்கரன் சிவராஜ் சரத்குமார் சக்திவேல் ஐயப்பன் கந்தன் கல்யாண சுந்தரம் அபூபக்கர் சாந்தமுருகன், மணிகண்டன், ராம்குமார் உள்ளிட்டர் பலர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் தெருக்களில் ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கால்வாய்களை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாச் சேரி தெரு திருவண்ணாமலை ஊராட்சியின் எல்லையில் உள்ளது. இந்தப்பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இங்கு பல மாதங்களாக கழிவுநீர் கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட வில்லை என கூறப்படுகிறது.

    இதனால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக் களில் கழிவுநீர் தேங்குகிறது. கால்வாயின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டு உள்ளதால் கழிவு நீர் வடியாமால் குடியிருப்பு களை சுற்றி தேங்கி நிற்கிறது.

    அங்கன்வாடி மையம், சமுதாய கூடம், சிறுவர் பூங்கா மற்றும் கோயில் அருகிலும் கழிவு நீர் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு குழந்தை கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

    எனவே கழிவுநீர் கால் வாய்களை தூர்வார வேண் டும் என்றும், தெருக்களில் கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் திருவண்ணா மலை ஊராட்சி நிர்வாகத் திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.

    நாகர்கோவில்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவ தையடுத்து தடுப்பு நடவ டிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் உள்ள 9 ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி களிலும் நடமாடும் குழுக்கள் மூலமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது ஒவ்வொ ருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் 2 பேரும் மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.பாதிக்கப்பட்ட 3 பேரும் வீட்டு தனிமை யில் உள்ளனர். அவர்களு டன் தொடர்பில் இருந்த வர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி களில் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

    ×