search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரியில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா
    X

    குமரியில் ஒரே நாளில் 3 பேருக்கு கொரோனா

    • தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
    • இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.

    நாகர்கோவில்

    தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவ தையடுத்து தடுப்பு நடவ டிக்கைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்திலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.மாவட்டம் முழுவதும் உள்ள 9 ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.பள்ளி களிலும் நடமாடும் குழுக்கள் மூலமாக பரிசோதனை நடைபெற்று வருகிறது.

    காய்ச்சல் பாதிப்பு உள்ள வர்கள் மற்றும் சளி பாதிப்பு உள்ளவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் தொடக்கத்தில் குமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பூஜ்ஜியம் என்ற நிலையில் இருந்தது.

    இந்த நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அவ்வப்போது ஒவ்வொ ருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 84 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார்.இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியில் 2 பேரும் மேல்புறம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் ஒருவருக்கும் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் இரண்டு பேர் பெண்கள், ஒருவர் ஆண் ஆவார்கள்.பாதிக்கப்பட்ட 3 பேரும் வீட்டு தனிமை யில் உள்ளனர். அவர்களு டன் தொடர்பில் இருந்த வர்களையும் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனடியாக பக்கத்தில் உள்ள ஆஸ்பத்திரி களில் சென்று பரிசோதனை செய்து கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரி கள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்.

    Next Story
    ×