search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.

    மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

    • ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.
    • வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியம் மன்னம்பந்தல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினர்.

    துணை தலைவர் அமலா கிராம நிர்வாக அலுவலர் அருணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் ரஜினி வரவேற்றார்.

    இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் மஞ்சுளா கலந்துகொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களிடம் அரசு செயல் திட்டங்களை விளக்கி எடுத்துக் கூறினர்.

    நடைபெற்று வரும் திட்ட பணிகளை தரமுடன் செயல்படுத்தி வருவதாகவும், சுகாதாரம், குடிநீர், தெரு விளக்கு பராமரித்து வருவதாகவும் இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

    பின்னர் ஊராட்சிக்கு தேவையான 2023-24 ஆண்டிற்க்கான கிராம வளர்ச்சி திட்ட பணிகளை தயார் செய்தனர்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய பணி மேற்பார்வையாளர் அபிராமி மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×