search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kamal Haasan"

    • புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
    • அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

    கல்கி 2898 கி.பி., படம் வெளியீடு நெருங்கி வரும் நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. கல்கி படத்தின் ஐந்தாவது சூப்பர் ஸ்டார் பைரவாவின் சிறந்த நண்பர் "புஜ்ஜி"யின் அறிமுகம் மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இது தொடர்பாக வெளியாகி இருக்கும் வீடியோ 'From Skratch EP4: Building A Superstar' என்ற தலைப்பு கொண்டுள்ளது. வீடியோவில், 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த பயணம் நம்மை வியக்க வைக்கிறது. "சூப்பர் ஹீரோ", "பைரவாவின் சிறந்த நண்பன், " புஜ்ஜி" என பில்ட் அப் வசனங்களுடன் புஜ்ஜி தயாரிக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    2 நிமிடம் 22 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, கேரேஜ் அமைப்பிலான செட்டிங்கில், பிரபாசுடனான சந்திப்பு காட்சிகளைக் காட்டுகிறது, இது மே 22 ஆம் தேதி வெளியாகவுள்ள புஜ்ஜியின் பிரமாண்ட அறிமுகத்திற்கான ஆர்வத்தை அதிகரிக்கிறது.

    சமீபத்தில் 2898 கி.பி கல்கியின் சாம்ராஜ்யத்தில் அமிதாப் பச்சனின் அஸ்வத்தாமா தோற்றம், ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் வெளியாக இருக்கிறது.

    நாக் அஸ்வின் இயக்கத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், மற்றும் திஷா பதானி போன்ற இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களின் கூட்டணியில் இந்த படம் உருவாகிறது.

    வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் கல்கி 2898 AD இந்த ஆண்டின் மிக முக்கிய படைப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

     28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் . 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

    திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் மே 22 ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டுள்ளனர். போஸ்டரில் குதிரையில் சில் அவுட் ஷாட்டில் கமல்ஹாசன் வருகிறார். இந்த அறிக்கையினால் ரசிகர்கள் மிகவும் கொண்டாடத்தில் இருக்கின்றனர். படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது.
    • இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

    சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் திரைப்படம் தமிழ் சினிமாவின் டிரண்ட் செட்டர் படமாக அமைந்தது. லஞ்சத்தை எதிர்த்து போராடும் சுதந்திர போராட்ட தியாகி என்ற ஒன் லைனர் சேனாபதி கதாபாத்திரத்தில் கமலின் தனித்துவமான நடிப்பில் மெருகேறியிருக்கும். இதற்கிடையே இந்தியன் படத்தின் 2 ஆம் பாகம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் ஜூலை 12 ஆம் தேதி மொஹரம் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    முன்னதாக ஜூன் மாதமே படம் வெளியாகும் என கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் 1 மாதம் தாமதமாக படம் வெளியாவது ரசிகர்களை கவலையடையச் செய்தது. இந்நிலையில் ரசிகர்களின் வாட்டத்தைப் போக்கும் வகையில், படத்தைக் குறித்த மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 டிரைலர் விரைவில் பிரமாண்டமான முறையில் வெளியிடப்படும் என்றும் இந்தியன் 2 படத்தின் இறுதியில் இந்தியன் 3 படத்திற்கான டிரைலரும் இடம்பெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்தியன் 2 படத்தின் கதை மிக நீளமாக சென்றதால் படத்தை 2 பாகங்களாக வெளியிட முடிவெடுக்கப்பட்டு அதன்படி, இந்தியன் 2 படத்துடன் இந்தியன் 3 படத்திற்கான காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படத்தின் ரிலீஸும் தாமதமாகியுள்ளதாக தெரிகிறது. எது எப்படியாக இருந்தாலும் சேனாபதியை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

    இதற்கிடையே ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - ஆரசிபி மோதும் மேட்ச் இன்று (மே 18) மாலை சின்னச்சாமி அரங்கில் நடைபெற உள்ள நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் லைவில் மாலை 6மணியளவில் இயக்குனர் சங்கரும், கமல்ஹாசனும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் கமல் கட்சிவெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது.
    • மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவேன் என்று சூளுரைத்துக் கொண்டு களம் இறங்கியவர் கமல்ஹாசன். தி.மு.க.,

    அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நீதி மய்யம் தமிழக அரசியலில் மாற்று சக்தியாக நிச்சயம் உருவெடுக்கும் என்று கட்சி தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் கமல்ஹாசன் கூறி வந்தார். கடந்த 2018-ம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய கமல்ஹாசன் அடுத்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலை சந்தித்தார். இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இருப்பினும் முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க அளவில் வாக்கு சதவீதத்தை அந்த கட்சி பெற்றது.

    இதைத் தொடர்ந்து 2021 -ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் சில கட்சிகளோடு கூட்டணி அமைத்த மக்கள் நீதி மய்யம் 142 இடங்களில் கள மிறங்கியது. கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டார். அங்கு அதிக வாக்குகளை வாங்கிய அவர் பா.ஜ.க. வேட்பாளரான வானதி சீனிவாசனிடம் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு தேர்தலிலும் கமல்ஹாசனின் தேர்தல் பிரசாரம் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளையும் கடுமையாக சாடும் வகையில் அமைந்திருந்தது.

    இது தொடர்பாக அவர் வீடியோக்களையும் வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதில் கமல்ஹாசன் ஆத்திரத்தில் தொலைக்காட்சி பெட்டியை உடைக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தன. இப்படி தேர்தல் களத்தில் மிகவும் ஆவேசமாக காணப்பட்ட கமல்ஹாசன் தொடர்ந்து தனித்தே களம் காண்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டணி அரசியல் பக்கம் அவர் செல்லமாட்டார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கமல்ஹாசனோ நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றார். நீண்ட நெடிய பேச்சுவார்த்தைக்குப் பிறகு அவருக்கு கூட்டணியில் இடம் கிடைத்தது.


    ஆனால் போட்டியிடுவதற்கு சீட் கிடைக்க வில்லை. ஒரு மேல் சபை எம்.பி. பதவியை தருவதாக தி.மு.க. தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் வரும் நாட்களில் மேல் சபை எம்.பி.யாக டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக வருகிற 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் சில இடங்களை பெற்றுக் கொண்டு தி.மு.க. கூட்டணியிலேயே மக்கள் நீதி மய்யம் கட்சி களம் காண உள்ளது. இப்படி கூட்டணி அரசியலால் மாற்றத்தை நோக்கி பயணித்த மக்கள் நீதி மய்யம் கட்சி திசை மாறி பயணிக்க தொடங்கியுள்ளது.

    இதனால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் எதிர்காலம் என்ன? என்பதும் மிகப்பெரிய கேள்வியாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளில் தி.மு.க., அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே இந்த இரண்டு கட்சிகளின் முதுகில் ஏறியே பயணம் மேற்கொள்ள வேண்டியகட்டாயத்தில் உள்ளன.

    ஏனென்றால் தனித்துப் போட்டியிட்டால் நிச்சயம் மற்ற கட்சிகளால் வெற்றி பெற முடியாது என்கிற நிலையே காணப்படுகிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல கட்சிகளை இதற்கு உதாரணமாக கூறலாம். மக்கள் நீதி மய்யம் கட்சியும் வருகிற நாட்களில் இந்த கட்சிகளின் வரிசையில் பத்தோடு பதினொன்றாக சேரும் நிலையே ஏற்பட்டுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது.


    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களை கமல்ஹாசன் நடத்த திட்டமிட்டுள்ளார். தி.மு.க. கூட்டணி சார்பில் மேல் சபை எம்.பி.யாக அவர் பதவி வகிக்கும் பட்சத்தில் நிச்சயம் தி.மு.க. கூட்டணியிலேயே பயணிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும்.

    இதனால் தி.மு.க. சார்பில் கொடுக்கும் தொகுதிகளை பெற்றுக் கொண்டு சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. கூட்டணியிலேயே தொடர வேண்டிய கட்டாயமும் நிர்பந்தமும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஏற்பட்டு உள்ளது. மாற்றத்துக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து பயணித்த அந்தக் கட்சியின் நிர்வாகிகளுக்கு இது ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு திராவிட கட்சிகளுக்கும் மாற்றாக கமல்ஹாசன் கட்சியை வளர்த்தெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் கூட்டணி அரசியலுக்குள் முடங்கிப் போய் இருப்பதாகவே அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மாற்றத்தை நோக்கி பயணித்த கமல்ஹாசன் கூட்டணி அரசியலுக்குள் சென்றதன் மூலம் இனி அவரது பழைய பயணம் தடைபடும் என்றும் கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சி சொல்வதையே கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர்கள், கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதன் மூலம் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் கமல்ஹாசன் எத்தனை இடங்களை கேட்டு பெறுவார் என்கிற கேள்வி இப்போதே எழத் தொடங்கி உள்ளது.

    • பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.
    • இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார். கமலுக்கு மகனாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் சிம்பு கதாப்பாத்திரத்தின் ப்ரோமோ கிலிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் படத்தின் அடுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை ஏபி இண்டர்நேஷனல் மற்றும் ஹோம் ஸ்கிரீன் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்த உரிமையை மட்டும் 63 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதுவே தமிழ் படத்திற்கு அதிக விலைக் கொடுத்து வாங்கிய திரைப்படமாகும்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர்.

    நிதி பற்றாக்குறையால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்தை கட்டி முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தை முழுமையாக கட்டி முடிக்க மேலும் ரூ.40 கோடி தேவைப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் சங்கத்தின் சார்பில் அதற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.

    முன்னணி தமிழ் நடிகர்கள் பலர் தாமாக முன்வந்து அதிகளவில் நிதி வழங்கி வருகின்றனர். அந்த வகையில், கடந்த வாரம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதி வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து தற்போது, நடிகர் தனுஷ், சங்க கட்டிட பணிகளுக்காக ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளார். அவருக்கு நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

    முன்னதாக தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் கமல் ஹாசன், விஜய், நெப்போலியன் ஆகியோர் கட்டிட பணிகளுக்கு தலா ரூ.1 கோடி நிதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆண்டுக்குள் கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று நடிகர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தின் இறுதிகட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் காலஅவகாசம் தேவை.
    • எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த படம் இந்தியன். 1996 -ம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு விழிப்புணர்வு அதிரடி படமாகும். இதில் கம்ல் 'சேனாபதி' என்ற வயதான சுதந்திரப் போராட்ட வீரராக நடித்தார்.

    ஊழலுக்கு எதிராக போராடிய சேனாதிபதி இந்தியாவை விட்டு ஓடிப்போய் ஹாங்காங் செல்வதுடன், ஊழல் எப்போதாவது திரும்பினால் திரும்பி வருவேன் என்று மிரட்டுவதுடன் 'இந்தியன்' முதல் பாகம் முடிந்தது.




    இந்நிலையில் தற்போது 28 ஆண்டுகளுக்கு பிறகு 'இந்தியன் 2 ' படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெய்ண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்தை ஜூன், அல்லது ஜூலை மாதம் வெளியிட திட்டமிட்டனர்.

    தற்போது இப்படம் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பு மட்டும் எடுக்க வேண்டி உள்ளது.




    இந்நிலையில் வருகிற ஆகஸ்ட் மாதம் 'இந்தியன் 2' வெளியாக உள்ளது என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதி கட்டப் பணிகளில் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இருப்பதால் கால அவகாசம் அதிகம் தேவைப்படுகிறது.

    எனவே ஆகஸ்ட் மாதத்திற்கு 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டது தற்போது உறுதியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

     

    • சிம்பு ஒரு சண்டை காட்சியில் கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் சுடுவது போன்று அமைந்துள்ளது
    • டெல்லியில் படப்பிடிப்பில், கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன

    நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்கிறார்.

    தக்லைப்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், 2-ம் கட்ட படப்பிடிப்பு செர்பியாவிலும் நடந்தது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் கமல், திரிஷா பங்கேற்றனர்.இப்படத்தில் துல்கர் சல்மான் விலகியதால் அவருக்கு பதிலாக சிம்பு இணைந்ததாக கூறப்பட்டது.




    இந்நிலையில் 'தக் லைப்' படத்தில் நடிகர் சிம்பு இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தற்போது இணைய தளத்தில் வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

    அதில் நடிகர் சிம்பு ஒரு சண்டை காட்சியில் வேகமாக ஒரு கார் ஓட்டிக் கொண்டு துப்பாக்கியால் எதிரிகள் மீது சுடுவது போன்று அமைந்துள்ளது. இது தற்போது இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.




    மேலும், டெல்லியில் தற்போது தொடங்கிய படப்பிடிப்பில், நடிகர் கமல், சிம்பு தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இப்படத்தில் கமலுக்கு மகனாக சிம்பு நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது
    • இதில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி நடித்து வருகின்றனர்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    கமல்ஹாசன் தேர்தல் பிரசசாரங்களில் ஈடுபட்டிருந்த போது, சிம்பு உள்ளிட்ட சில நடிகர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை மணிரத்னம்.படமாக்கி வந்தார்.




    இந்நிலையில் 'தக்லைப்' படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் தற்போது நடந்து வருகிறது. நடிகர் கமல் டெல்லிக்கு சென்று இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சங்கத் மோட்சம் அனுமான் கோவிலில் கடந்த சில தினங்களாக 'தக்லைப்' படப்பிடிப்பு நடந்து வருகிறது.



    இந்த கோவிலில் நடைபெறும் படப்பிடிப்பில் கமல், சிம்பு, திரிஷா, கவுதம் கார்த்திக், நாசர், அபிராமி உள்பட பலரும் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் சிம்பு பற்றிய அறிமுக வீடியோவை படக்குழு நாளை  வெளியிட உள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.


     நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'. இந்த படம் 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்து உள்ளனர். இப்படத்திற்கு  ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .




    இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டார். அதன்பின் கமல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.




    இப்படத்தில் கமிட்டாகி இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் கால்சீட் பிரச்சினையால் வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை தக்லைப் படத்தில் இணைத்து விட்டதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த வேடத்தில் அசோக் செல்வன் கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் 'தக்லைப்' படத்தில் இருந்து விலகிய ஜெயம் ரவி மீண்டும் அப்படத்தில் இணைய வில்லை என்பது தெரியவந்து உள்ளது.

    தற்போது 'தக்லைப்' படத்தில் கமலுடன் சிம்பு, அசோக் செல்வன் நடித்து வருகிறார்கள்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர்.
    • இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட் படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.

    இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கான காட்சிகளை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. படத்தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தக் லைஃப் படத்தில் இருந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    எ நியூ தக் இன் டவுன் அரைவிங் ஆன் மே 8 என போஸ்டரை வெளியிட்டனர். அதில் கருப்பு நிற கார் புழுதியை கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்ந்து வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. நடிகர் சிம்புவின் இண்டிரோ வீடியோவாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் திரிஷா கலந்துக்கொண்டார்.
    • இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்று வருகிறது.

    பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ''நாயகன்' படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு 'தக் லைப்' என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

    இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

    இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. செர்பியாவில் நடந்த படப்பிடிப்பில் திரிஷா கலந்துக்கொண்டார். இப்படத்தில் கமல் 3 வேடங்களில் நடிக்க உள்ளார்.

    மேலும் இப்படத்தில் நடிக்க இருந்த ' துல்கர் சல்மான், நடிகர் ஜெயம் ரவி ஆகியோர் 'கால்ஷீட்' பிரச்சினை காரணமாக சமீபத்தில் விலகினர். இதனால் அந்த 2 வேடங்களில் நடிக்க படக்குழு வேறு நடிகர்களை தேடியது. அதை தொடர்ந்து அந்த வேடத்தில் சிம்புவை நடிக்க வைக்க படக்குழு பேசியது.

    இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கான காட்சிகளை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. படத்தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில் நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிம்பு, அபிராமி, வையாபுரி உள்ளிட்டோர் இருக்கின்றனர். சிம்பு ஸ்டைலாக கண்ணில் கூலர்ஸ் போட்டுக் கொண்டு இருக்கிறார். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு மகனாக சிம்பு நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×