search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கமல் ஹாசன்"

    • கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன்.
    • ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், கோவையில் முகாமிட்டு கடந்த 3 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று இரவு அவர் கோவை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து ராஜவீதியில் பிரசாரம் செய்தார்.

    கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எனக்கு தோல்வி என்றார்கள். கையில் பணமின்றி மக்களின் அன்பை மட்டுமே முதலீடாக வைத்து கிடைத்த வாக்கை நான் தோல்வியாக பார்க்கவில்லை.

    காமராஜருக்கு தோல்வி கிடையாது. அவர் தோற்றாலும் அவரின் ஆட்சியை பின்பற்றுவதாக கூறிய கட்சிகள் ஏராளம். நான் கருணாநிதியிடம் கற்றுக் கொண்டவன். பெரியாரின் சீடன். என்னிடம் தோல்வியை காட்டி பயமுறுத்த முடியாது. மக்கள் தலைநிமிர்ந்து நடமாடும் இந்த ராஜவீதியில் நான் நடந்து இருக்கிறேன். மீண்டும் நடப்பேன்.

    இப்போது நாம் எடுத்து இருக்கும் பாதை நாட்டிற்கானது. கருப்பு பணத்தை ஒழிக்க போகிறோம் என்று கூறி பணமதிப்பிழப்பு செய்ததை நான் அண்ணாந்து பார்த்தேன். அது மக்கள் தலையில் விழுந்த இடி. 70 கோடி மக்களின் சொத்தை 21 நபர்களின் கையில் கொண்டு சேர்த்தது பாரதிய ஜனதா அரசு. அதை பகிரங்கமாக கேட்டவன் நான்.

    தன் வீட்டை நாட்டுக்கு எழுதிக் கொடுத்த நேரு வாழ்ந்த நாடு இது. தமிழத்துக்கு நீதி கேட்டால் ஏற்கனவே கொடுத்தது பிச்சை என்று கூறுகிறார்கள். ஜி.எஸ்.டி.யால் கோவையில் நூற்பாலைகள் பஞ்சாய் பறந்து விட்டது.

    கடந்த 75 ஆண்டுகளாக நாம் போட்ட உரத்தால் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. வரி செலுத்தாத பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு நிதியை அள்ளி கொடுக்குறீர்கள். அங்கும் முன்னேற்றம் இல்லை. அங்கிருந்து இங்கு வேலைக்கு வருகிறார்கள்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செங்கல்லை எடுத்து காட்டினால் உங்களுக்கு கோபம் வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு ஊரிலும் செங்கல்லை மட்டும் வைத்து செல்கிறது. அதை உதயநிதி ஸ்டாலின் இன்னொரு கோட்டையை உருவாக்கி விடுவார்.

    பாராளுமன்றத்தில் தமிழனுக்கான குரல் கேட்க வேண்டும். இந்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உலகிலேயே சக்தி வாய்ந்த தேர்தல் இந்தியாவில் தற்போது நடக்கின்ற தேர்தல் தான். எந்த காரணத்தை கொண்டும் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து விடக் கூடாது. சனாதனத்தை நாம் அனுமதிக்க கூடாது. திராவிட மாடல் ஆட்சி இந்தியா முழுமைக்கும் தொடர வேண்டும். சுயமரியாதையை காக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
    • இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். கண்டிப்பாக விருது பெறும்"

    மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் 'தி கோட் லைப்' ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி உள்ளார்.

    இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது. இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.

    படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.




    இந்நிலையில் இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

    இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ' பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

    அதன் பின் நடிகர் கமல் படம் பற்றி கூறியதாவது ;-

    ''தி கோட் லைப்' படம் பார்த்து மனம்குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெகுசிறப்பாக அமைந்து உள்ளது. இதில் நடித்த நடிகர்கள் மிகுந்த 'சிரமம்' எடுத்து நடித்து உள்ளனர்.




    இப்படத்தில் நடித்துள்ள நடிகர்,நடிகைகளுக்கு எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். இந்த படம் கண்டிப்பாக விருது பெறும்" என்றார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார்.
    • மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கோவை:

    அடுத்த ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும் இப்போதே பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன.

    அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியும் பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை தொடங்கி உள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கோவை-அவினாசி ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னையில் இருந்து விமானம் மூலமாக இன்று காலை 11 மணிக்கு கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அவர்களின் வரவேற்பை கமல்ஹாசன் ஏற்றுகொண்டார். பின்னர் அவர் காரில் அங்கிருந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்ற ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றார்.

    அங்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார். இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மேற்கு மண்டல பகுதிகளான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் நீலகிரி போன்ற பகுதிகளில் இருந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி நிர்வாகிகளுடன் மேற்கு மண்டலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும். எந்தெந்த பகுதிகளில் மக்களை சந்திக்க வேண்டும்.

    மக்களிடம் என்னென்ன குறைகள் உள்ளன. எதையெல்லாம் நிவர்த்தி செய்ய வேண்டும் என்று ஒவ்வொரு பகுதியாக சென்று மண்டல நிர்வாகிகள் மக்களிடம் கலந்துரையாட வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

    பாராளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் நீதிமய்யம் கட்சி தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டணி அமைத்து போட்டியிட்டால் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது, என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் விரிவாக ஆலோசித்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் எந்த தொகுதியில் போட்டியிடலாம் என்பது குறித்தும் நிர்வாகிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

    ஏற்கனவே கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்பதை கட்சியினர் ஆய்வு செய்தனர். அதன்படி தென்சென்னை, கோவை அல்லது மதுரை தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட்டால் வெற்றி பெறலாம் என்று என கட்சி நிர்வாகிகள் கருதினர். அது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் தெரிவித்த அனைத்து கருத்துக்களையும் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து பாராளுமன்ற தேர்தலில் தொண்டர்கள் தீவிர பணியாற்றி கட்சிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

    கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு முடிந்ததும் அவர் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் கருமத்தம்பட்டி பார்க் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்கிறார். விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் விருதுகள் வழங்கி கவுரவிக்கிறார்.

    விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று. அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

    • நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள்.
    • மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும்.

    சென்னை:

    புதிய பாராளுமன்றத்தில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு முதல் மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கிய நாள். நமது பாராளுமன்ற இருக்கை புதிய வீட்டிற்கு மாறியுள்ளது. இந்த புதிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. இதனை நமது தேசத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரான இந்திய பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்ட கால அநீதியை சரி செய்வதற்கு வழிவகுக்கும் என மகிழ்ச்சி அடைகிறேன். இதனை நான் முழு மனதுடன் பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும்.

    இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வருகிறது.

    இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைக்கு மட்டுமே பொருந்தும். மேல்சபை மற்றும் மாநில சட்ட கவுன்சில்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். எந்த ஒரு உறுதியான நடவடிக்கையின் உதவியும் இல்லாமல் சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு விகிதாசார பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாளை நான் எதிர் நோக்குகிறேன்.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார்.
    • ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    நடிகர் கமல் திரையுலகில் நினைத்ததை சாதிக்க முடிந்தது. ஜெயிக்க முடிந்தது. அதேபோல் அரசியலிலும் சாதித்து விடலாம் என்று போட்ட கணக்கு கிட்டத்தட்ட தப்பு கணக்காகவே மாறி போனது. இப்போது சினிமாவையும் விட முடியாமல் அரசியலையும் கைவிட முடியாமல் அங்கு ஒரு கால், இங்கு ஒரு கால் என்ற ரீதியில் சென்று கொண்டிருக்கிறார்.

    சினிமாவை எப்படி ஓ.டி.டி. தளத்திற்கு கொண்டு செல்கிறார்களோ அதே போல் அரசியலையும் ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஜெயித்து பார்க்கலாம் என்று நினைக்கிறாரோ என்னவோ இப்போது அவர் எங்கிருந்தாலும் ஆன்லைன் வழியாக அரசியலையும் நடத்தி வருகிறார். தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் கலந்துரையாடுவது, ஆலோசனைகள் வழங்குவது என்று தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறார். தன்னால் நேரடியாக முழு நேரமும் அரசியலில் ஈடுபட முடியாததால் பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தில் அருணாச்சலம் என்ற நிர்வாகியை நியமித்து உள்ளார். இப்போது கட்சி பணிகளை பெரும்பாலும் அவரே பார்த்துக் கொள்கிறார். அதேநேரம் நடந்தது என்ன? அடுத்த திட்டம் என்ன? என்று எல்லா விசயங்களையும் கமலுக்கு அப்டேட் செய்து விடுகிறாராம்.

    களத்தில் இறங்கி நடந்தும் ஓடியும் கூட அரசியலில் சாதிக்க முடியாமல் பலரும் தவிக்கும் நிலையில் ஆன்லைனில் தொடரும் இந்த அரசியல் எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது வருகிற பாராளுமன்ற தேர்தலில் தெரிய வரும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது.
    • தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    கோவை:

    கோவையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக மக்களோடு மய்யம் என்கிற தலைப்பில் வீடு வீடாக சென்று, மக்களிடம் நேரடியாக குறைகள் கேட்கப்பட்டு வருகிறது. மக்கள் தெரிவிக்கும் குறைகளை கேட்டு, உடனே அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு தலைமையில் மாநில நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.

    பின்னர் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் தங்கவேலு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறோம்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான பணிகளை மக்கள் நீதிமய்யம் தொடங்கி விட்டது. அதற்கான பணிகளை தீவிரபடுத்தியுள்ளோம்.

    அடுத்த ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இருந்தாலும் இதில் தலைவர் எடுக்கும் முடிவே இறுதியானது.

    பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடலாமா? அல்லது கூட்டணியுடன் இணைந்து நிற்கலாமா என்பது குறித்து மக்களிடம் வீடு, வீடாக சென்று கேட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல்ஹாசன் கருதுகிறார்.
    • தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

    கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப்போகும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

    சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டு 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 42,384 வாக்குகள் பெற்றிருந்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜன் போட்டியிட்டு 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் சுமார் 1½ லட்சம் வாக்குகள் பெற்றிருந்தது.

    வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல் ஹாசன் கருதுகிறார்.

    கோவை தொகுதி மக்களை கவரும் வகையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பஸ் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்தார்.

    கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய்களை நகர்த்தி வருவதால் அவர் போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது. கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் பா.ஜனதா வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

    கடந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ஆகிவிட்டார். கமல்ஹாசனை எதிர்த்து நிறுத்தும் வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் நினைக்கிறது.

    மேலும் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

    வானதி சீனிவாசன் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இருந்தாலும் அவரையே மீண்டும் களம் இறக்க கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.
    • சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கமலின் அரசியல் பிரவேசம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும், புதிய மாற்றம் வரும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ஒரு காலத்தில் இருந்தது என்னவோ உண்மை. ஆனால் அரசியல் களத்தில் மய்யம், மய்யம் கொண்ட இடத்தில் அப்படியே நிற்கிறது. பெரிய அளவில் நகரவில்லை.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலும் வருகிறது. இந்த தேர்தலில் அவரது நிலைப்பாடு எப்படி இருக்கும்? என்பது கமல் ரசிகர்களின் கேள்வி.

    ராகுலின் நடை பயணத்தில் கலந்து கொண்டதால் காங்கிரசுடன் கூட்டணி சேரலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவும் சொல்லவில்லை. அதற்கு அவர் வெளிநாடு சென்றதை காரணம் காட்டினார்கள்.

    தற்போது சென்னை திரும்பிவிட்ட கமல் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கமலை பொறுத்தவரை சினிமாவில், தான் செய்ய நினைப்பதை செய்து முடிப்பார். அதில் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படமாட்டார். அதேபோல்தான் அரசியலிலும்...! அவரிடம் பின்வாங்கும் எண்ணம் இல்லையாம்.

    பாராளுமன்ற தேர்தலிலும் கட்டாயம் போட்டியிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். கூட்டணியா? இல்லையா? என்பது பற்றி மட்டும் இன்னும் உறுதியான முடிவுக்கு வரவில்லை என்கிறார்கள்.

    • உரிமைத் தொகை வழங்குவதற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம் என கமல் கூறி உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2023- 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் அண்ணா நினைவு நாளான செப்டம்பர் மாதம் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என்றும், மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இந்த அறிவிப்பை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக கமல் கூறியிருப்பதாவது:-

    இல்லத்தரசிகளுக்கு ஊதியம் எனும் கனவை முன்னெடுத்த முதல் இந்தியக் கட்சி மக்கள் நீதி மய்யம். புரட்சிகரமான இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் குடும்பத்தலைவிகளின் உரிமைத்தொகையாக உருவெடுத்திருப்பதில் மகிழ்கிறேன்.

    வரலாற்று சிறப்புமிக்க இந்த அறிவிப்பிற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாராட்டுகிறேன். இல்லத்தரசிகளைப் போற்றுவதில் தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது.
    • ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி வருகிற 28-ந்தேதி அன்று சென்னையில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை திறந்து வைப்பதற்கான அழைப்பிதழை அமைச்சர் சேகர்பாபு இன்று கமல்ஹாசனிடம் நேரில் வழங்கினார். ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மேயர் பிரியா உடன் இருந்தார்.

    • ஒரு இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் பங்கேற்றதாக கமல் பேசினார்.
    • அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்.

    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் கலந்துகொண்டார். பின்னர் செங்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்று உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    நான் இந்த யாத்திரையில் பங்கேற்க வேண்டாம் என பலரும் வலியுறுத்தினார்கள். ஒரு இந்திய குடிமகனாக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன். மாற்று கொள்கைகள் இருந்தாலும் தேச ஒற்றுமைக்காக இந்த யாத்திரையில் பங்கேற்றுள்ளேன்.

    என்னுடைய தந்தை காங்கிரசைச் சேர்ந்தவர். ராகுல் காநதி தன்னை ஒரு தமிழன் என குறிப்பிட்டிருந்தார். அதனால் அவர் எனக்கு சகோதரர். ராகுல் காந்தி நேருவின் கொள்ளுப்பேரன், நான் காந்தியின் கொள்ளுப்பேரன். அரசமைப்பு சட்டத்திற்கு நெருக்கடி வந்தால் வீதியில் இறங்கி போராடுவேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
    • தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான ஜூன் 20-ந்தேதி மட்டும் தமிழ்நாட்டில் ஒரேநாளில் 11 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனை தடுக்க தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதைப்போல பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள், மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×