search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல்"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2008-ம் ஆண்டு அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர்.
    • பின்னர் பல்வேறு காரணங்களால் அவர்கள் விளையாடுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

    உலகளவில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் மிகவும் பிரபலமானது. சுமார் இரண்டு மாதங்கள் நடைபெறும் இந்தத் தொடரில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் இடம் பிடித்து விளையாடுவார்கள்.

    கோடிக்கணக்கில் பணம் கொட்டிக்கொடுப்பதாலும், மைதானம் நிறைந்து காணப்படும் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதாலும், ஐபிஎல் தொடரில் விளையாடுவதில் ஆர்வம் காட்டுவார்கள்.

    2008-ம் ஆண்டு முதன்முதலாக ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டது. தொடக்க சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். தன்வீர் சோஹைல், உமர் குல், கம்ரான் அக்மல் போன்ற வீரர்கள் விளையாடினார்கள்.

    அதன்பின் எல்லையில் தீவிரவாத செயல்களை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் கிடையாது என்று இந்திய அரசு முடிவு செய்தது. அரசியல் பதற்றம்காரணமாக அது தொடர்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ள.

     அதன்பின் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை தொடங்கியது. இருந்தபோதிலும், பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் கிரிக்கெட்டில் பங்கேற்பது குறித்து தங்களது விருப்பதை தெரிவித்து வருவது வழக்கம்தான்.

    அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஹசன் அலியும், ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹசன் அலி கூறுகையில் "ஒவ்வொரு வீரரும் ஐபிஎல் போட்டியில் விளையாட விரும்புகிறார்கள். நானும் அங்கே சென்று விளையாட விரும்புகிறேன். உலகத்தில் உள்ள மிகப்பெரிய லீக்கில் ஐபிஎல் லீக்கும் ஒன்று. எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவானும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான், "ஐபிஎல் போட்டியில் விளையாட முடியவில்லை என்பதை குறித்து பாகிஸ்தான் வீரர்கள் கவலையடையக் கூடாது" எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐபிஎல் 2024 சீசனுக்கான வீரர்கள் ஏலம் துபாயில் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சென்னை அணியில் இருந்து எட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
    • 2024 ஐ.பி.எல். தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 தொடருக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன், அணிகள் தங்களது வீரர்களை பரிமாற்றிக்கொள்ள முடியும். அதன்படி வீரர்களை தங்களது அணியில் வைத்துக்கொள்ளவும், விடுவிக்கவும் முடியும்.

    அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல். தொடருக்காக ஒவ்வொரு அணியும் தக்கவைத்துக் கொண்ட, விடுவித்த வீரர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றன. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் எம்.எஸ். தோனி தக்கவைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் சென்னை அணியில் இருந்து பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்ஷூ சேனாபதி, அம்பதி ராயுடு, கைல் ஜேமிசன், ஆகாஷ் சிங், சிசண்டா மகலா என மொத்தம் எட்டு வீரர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த அறிவிப்பின் படி, 2024 ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்.எஸ். தோனி களமிறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

    சென்னை அணியில் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்கள் விவரம் பின்வருமாறு..

    எம்.எஸ். தோனி, டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜின்க்யா ரகானே, ஷேக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர், மொயின் அலி, ஷிவம் தூபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கரேக்கர், தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி, பிரஷாந்த் சொலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே மற்றும் மதீசா பதிரனா.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது
    • கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட 5 அணிகள் தொடரில் பங்கேற்கின்றன

    ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெறும் 20-20 ஐபிஎல் (IPL) தொடரை போல், பெண் கிரிக்கெட் வீராங்கனைகளை கொண்ட அணிகளுடன் டபிள்யுபிஎல் (WPL) எனும் போட்டித்தொடர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சங்கத்தால் (BCCI) இந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    மும்பை இண்டியன்ஸ், யு.பி. வாரியர், குஜராத் ஜியன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் என 5 அணிகள் இந்த போட்டி தொடரில் பங்கு பெற்றன. முதல் ஏலத்தின் போது ஒவ்வொரு அணிக்கும் ரூ.12 கோடி வழங்கப்பட்டது.

    கடந்த மார்ச் 4 முதல் மார்ச் 26 வரை முதல் தொடர் போட்டிகள் நடைபெற்றன. இறுதி போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்று மும்பை இண்டியன்ஸ் அணி கோப்பையை தட்டி சென்றது.

    2023க்கான பரிசுத்தொகை ரூ.10 கோடி என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

    வரும் 2024 வருடத்திற்கான டபிள்யுபிஎல் போட்டித்தொடருக்கு டிசம்பர் 9 அன்று ஏலம் நடைபெற உள்ளது.

    கிட்டத்தட்ட ஒரு நாள் முழுவதும் நடைபெறப்போகும் இந்த ஏலத்தில், 5 அணிகளிலும் 30 இடங்கள் போட்டிக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வெளிநாட்டு வீராங்கனைகளுக்கான 9 இடங்களும் அடங்கும்.

    கடந்த முறை ஏலத்தில் கிடைத்த தொகையில் செலவினங்கள் போக மீதம் உள்ள தொகையும், தங்களிடம் உள்ள வீராங்கனைகளை விடுவிப்பதால் கிடைக்கும் தொகையையும் தவிர, இந்த முறை ஒவ்வொரு அணிக்கும் ரூ.1.5 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.

    தற்போதைய சாம்பியன்களான மும்பை இண்டியன்ஸ் அணி தங்களிடம் உள்ள தொகையை முழுவதும் பயன்படுத்தி விட்டது.

    இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டிகள், இந்தியாவில் மும்பை மற்றும் பெங்களூரூ என இரு நகரங்களில் மட்டுமே நடைபெற போகின்றன.

    இத்தொடரில் 5 அணிகளும் ஒன்றுடன் ஒன்று இரு முறை போட்டியிடும். முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் "நாக்-அவுட்" சுற்றுக்கு முன்னேறும்.

    கடந்த அக்டோபர் மாதம், பி.சி.சி.ஐ. (BCCI), 5 அணிகள் தக்க வைத்துள்ள வீரர்கள் மற்றும் வெளியேற்ற விரும்பும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி 60 வீராங்கனைகள் தக்க வைத்து கொள்ளப்பட்டுள்ளனர்; 29 பேர் வெளியேற்றப்பட உள்ளனர்.

    ஒவ்வொரு அணியின் வீராங்கனைகளின் இறுதி பட்டியல், ஏலம் நிறைவடைந்ததும் வெளியாகும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐ.பி.எல். தொடர் மிகப்பெரிய வர்த்தகமாக விளங்குகிறது.
    • சவுதி அரேபியா கால்பந்து மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் முதலீடுகளை செய்து உள்ளது.

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித்தொடர் இந்தியாவில் 2008-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆண்டு தோறும் இப்போட்டி தொடர் நடத்தப்பட்டு வருகிறது.

    இதுவரை 16 சீசன்கள் நடந்து உள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள ஐ.பி.எல். தொடர் மிகப்பெரிய வர்த்தகமாக விளங்குகிறது. அதன் மதிப்பும் அதிகமாகி வருகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல்லில் முதலீடு செய்ய சவுதி அரேபியா விருப்பம் தெரிவித்துள்ளது.

    சவுதி அரேபியா கால்பந்து மற்றும் கோல்ப் உள்ளிட்ட விளையாட்டுகளில் முதலீடுகளை செய்து உள்ளது. இதற்கிடையே சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் ஆலோசகர்கள், ஐ.பி.எல். அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த கட்டமைப்பை 30 பில்லியன் டாலர் (ரூ.2.5 லட்சம் கோடி) மதிப்புள்ள ஹோல்டிங் நிறுவனமாக மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.

    கடந்த செப்டம்பர் மாதம் முகமது பின் சல்மான் இந்தியாவுக்கு வந்த போது, ஐ.பி.எல். நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த முதல்கட்ட பேச்சுவார்த்தையில் சவுதி அரேபியா அரசு இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கைப் போலவே, ஐ.பி.எல். அமைப்பில் சுமார் 5 பில்லியன் டாலரை (ரூ.41 ஆயிரம் கோடி) முதலீடு செய்ய தயாராக உள்ளதாக தெரிவித்து ஐ.பி.எல். கட்டமைப்பை மற்ற நாடுகளுக்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் வகையில், பில்லியன் டாலர் முதலீடு செய்ய சவுதி தயாராக இருப்பதாக பேச்சுவார்த்தையின்போது தெரிவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சவுதி அரேபியா அரசு ஐ.பி.எல். அமைப்பில் 5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக முடிவு செய்தாலும், மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் முடிவு எடுக்க செய்ய வேண்டும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது.
    • ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்தியாவில் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 16-வது ஐ.பி.எல். போட்டி சமீபத்தில் நடந்தது. இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது.

    ஐபிஎல் கோப்பையை மும்பை மற்றும் சென்னை அணிகள் 5 முறை கைப்பற்றியுள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் 2 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் ஐதராபாத் அணி புதிய தலைமை பயிற்சியாளரை நியமித்துள்ளது. லாராவின் பதவி காலம் முடிந்த நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரியை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நிர்வாகம் நியமித்துள்ளது.

    முன்னதாக ஆர்சிபி அணி புதிய பயிற்சியாளரை நியமித்தது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம்.
    • அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நினைப்போம்.

    நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 5 முறை கோப்பையை வென்ற மும்பை அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது. சென்னை அணி கோப்பையை கைப்பற்ற தீபக் சாஹரும் ஒரு காரணமாக திகழ்ந்தார்.



    இந்த ஐபிஎல் தொடரில் தீபக் சாஹரிடம் நிறைய முறை டோனி வம்பிழுப்பது போன்ற வீடியோக்களை காண முடிந்தது. இந்நிலையில் தீபக் சாஹரை போதை மருந்துடன் டோனி ஒப்பிட்டுள்ளார்.


    தீபக் சாஹர் குறித்து டோனி கூறியதாவது:-

    தீபக் சாஹர் ஒரு போதை மருந்து போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால், அவர் எங்கே இருக்கிறார் என தேடுவோம். அவர் இருந்தால், அவர் ஏன் இங்கே இருக்கிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள்.

    வயதுக்கேத்த மெச்சூரிட்டி அவரிடம் இல்லை. அதற்கு நீண்டகாலம் ஆகும். எனது மகள் 8 வயதில் கொண்டுள்ள புத்திசாலித்தனத்தை தீபக் 50 வயதில் பெற்று விடுவார். ஓயின் எப்படி நாளாக நாளாக சிறப்பு பெறும் என கூறுவார்களோ, அப்படித்தான் தீபக் சாஹரும். ஆனால் அந்த ஒயினை நான் குடிக்க முடியாது. தீபக் முதிர்ச்சி அடைவதற்குள் எனக்கு வயதாகிவிடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.
    • ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

    இந்தியா தோல்வி அடைந்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. சர்ச்சை கருத்துகளும் பரவிய வண்ணம் உள்ளது.

    இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியதாவது:-

    உலகக் கோப்பையை வெல்வதை விட ஐபிஎல் கோப்பையை வெல்வது கடினமானது. ஐபிஎல் தொடரில் 14 லீக் போட்டிகளுக்கு பிறகுதான் பிளே ஆஃப் விளையாட முடியும்.

    ஆனால், உலகக் கோப்பையில் 4-5 போட்டியில் விளையாடினாலேயே அரையிறுதியில் விளையாடலாம்.

    ஐபிஎல் போட்டியில் கோப்பையை வெல்ல 17 போட்டிகளை விளையாட வேண்டியிருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.
    • 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.

    மும்பை:

    ஐ.பி.எல். டெலிவிஷன் உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48 ஆயிரத்து 390 கோடிக்கு விற்பனையானது. ஏலம் முடிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்த தகவலை தெரிவித்தது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். ஒளிபரப்பு ஒப்பந்தம், 20 ஓவர் உலக கோப்பை குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் கங்குலி பேட்டி அளித்துள்ளார்.

    அப்போது அவர் வீரர்கள் பணத்துக்காக மட்டும் விளையாடுவார்கள் என நினைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கங்குலி கூறியதாவது:-

    ஐ.பி.எல். ஒளிபரப்பு மெகா ஒப்பந்தம் மூலம் இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்த இது அரிய வாய்ப்பாகும். இன்னும் வலுவான உள்கட்டமைப்பை உருவாக்க கிரிக்கெட் வாரியத்துக்கு உதவும். கிரிக்கெட் வீராங்கனைகளின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.

    ஐ.பி.எல். ஒளிபரப்பு உரிமத்திற்கான திட்டமிடல் 2 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டு. இது நுணுக்கமாக கையாளப்பட்டது. இந்த ஒளிபரப்பு உரிமத்தை வாங்கிய நிறுவனங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். வீரர்கள் பணத்துக்காக மட்டுமே விளையாடுகிறார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் அந்தஸ்துக்காகவும், பெருமைக்காகவும் ஆடுகிறார்கள். ஒவ்வொரு வீரரும் பெரிய சர்வதேச போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார்கள்.

    ஐ.பி.எல். போட்டியை விட சர்வதேச போட்டிகளில் தான் மதிப்பு அதிகம். ஐ.பி.எல். போட்டியால் இரு நாடுகள் இடையேயான தொடர் பாதிக்காது. அதற்கு ஏற்ற வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்படுகிறது. ஜூனியர் கிரிக்கெட்டுக்கு நாங்கள் அதிக அளவில் முக்கியத்துவம் கொடுப்போம். இளம் வீரர்களை தொடர்ந்து உருவாக்குவோம்.

    ஐ.பி.எல். போட்டியால் வீரர்களுக்கு சோர்வு இருப்பதாக கருதவில்லை. 20 ஓவர் உலக கோப்பைக்காக வீரர்களை தயார் செய்யும் பணியில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஈடுபட்டு உள்ளார்.இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இருந்து வாய்ப்பு உள்ள வீரர்களுடன் விளையாட தொடங்குவோம்.

    இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

    ×