search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jayalalitha"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வி.கே.சசிகலா உள்பட 8 பேர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரை.
    • சட்ட வல்லுநர்களின் ஆலோசனையை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு முடிவு.

    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் இறுதி விசாரணை அறிக்கையில் வி.கே.சசிகலா, கே.எஸ்.சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஒய்.வி.சி. ரெட்டி மற்றும் டாக்டர் பாபு ஆபிரகாம், அப்போதைய தலைமை செயலாளர் டாக்டர் ராமமோகன ராவ் ஆகியோர் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தொடர்பாக அரசாங்கம் முடிவு செய்து விசாரிக்கலாம் என்றும் ஆணையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா மரண விவகாரத்தில் ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 8 பேர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை செயலாளருக்கு தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு உத்தரவிட்டுள்ளார். சில குறிப்பிட்ட நபர்களுக்கு எதிராக ஆணைய அறிக்கையின் பரிந்துரை மீது சட்ட வல்லுநர்கள் ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
    • மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடந்து வருகிறது. இதுவரை விசாரிக்கப்படாத புதிய நபர்களிடம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமி, அவரது மகன் செந்தில்குமார் மற்றும் உதவியாளர் பழனிசாமி, புதுச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். நேற்று முன்தினம் 3-வது நாளாக முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் விசாரணை நடந்தது.

    தொடர்ந்து, நேற்று மதுரையை சேர்ந்த டெக்ஸ்டைல் அதிபரான லாஜி வோரோவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில்,

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரிடம் தனிப்படை இன்று விசாரணை நடத்தி வருகிறது. மன்னார்குடி சேரம்குளத்தை சேர்ந்த குணசேகரனை கோவையில் தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

    கனகராஜ் குறித்து ஜெயலலிதாவிடம் சிறிது காலம் கார் ஓட்டுநராக இருந்த குணசேகரனிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. குணசேகரன் அதிமுக ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்துக்காக டிராவல்ஸிலும் கார் ஓட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

    அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

    எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.

    அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.

    ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.


    இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.

    எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஜெயலலிதா வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் என்று தேர்தல் பிரசாரத்தில் சரத்குமார் பேசியுள்ளார்.

    தூத்துக்குடி:

    ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று மாலையில் பேரூரணி, கூட்டாம்புளி, குலையன்கரிசல், ஸ்பிக்நகர், மாப்பிள்ளையூரணி, சிலுவைப்பட்டி மற்றும் தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் திரண்டு இருந்த மக்கள் மத்தியில் கூறியதாவது:-

    ஓட்டப்பிடாரம் வந்ததும் நினைவிற்கு வருவது வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வ.உ.சி., வாஞ்சிநாதன் ஆகியோர் தான். வீரம் நிறைந்த மண் ஓட்டப்பிடாரம். அந்த மண்ணில் நின்று வேட்பாளர் மோகனுக்கு வாக்கு கேட்கிறேன். கடந்த 2011-ம் ஆண்டு ஜெயலலிதா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி சிறப்பாக செயல்பட்டார். அவர் இல்லாத இந்த தேர்தலை சந்திப்பது ஒரு வருத்தம் தான். அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கான முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்தி ஜெயலலிதா பாதையில் பயணிக்கிறார். தமிழகத்தில் சிறந்த ஆட்சி நடந்து வருகிறது.

    அவர் வழியில் தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சி செய்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பதவி மீது மட்டுமே மோகம். மக்களுக்கு சேவை செய்தால் மட்டுமே தலைவர் ஆக முடியும். அ.தி.மு.க.வினருக்கு மக்கள் மீது தான் மோகம். மு.க.ஸ்டாலின் குறுக்கு வழியில் முதல்-அமைச்சர் ஆக நினைக்கிறார். அது நடக்காது. அதற்கு அவர் தகுதியற்றவர். அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. மக்கள் ஆதரவோடு வெற்றி பெறும். அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் முதல்வரக முடியும். மாற்றுக்கட்சியில் அதற்கான வாய்ப்பு கிடையாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    வருமான வரி பாக்கிக்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு முடக்கப்பட்டது என்று சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #chennaihighcourt #jayalalithapoesgarden

    சென்னை:

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை கே.கே.நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் ஜெயலலிதாவிற்கு ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் இருப்பதாகவும், இவற்றை யார் நிர்வகிக்க வேண்டும் என ஜெயலலிதா உயில் இல்லாததால், ஐகோர்ட்டே நிர்வாகியை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள்ளிட்ட சொத்துக்களை முடக்கி வைத்துள்ளதாக வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ், சரவணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.


    அப்போது, வருமான வரித்துறை துணை ஆணையர் சோபா பதில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    2016 - 2017 ஆண்டுக்கான வருமான வரித்துறை கணக்குப்படி ஜெயலலிதாவிற்கு ரூ. 16.37 கோடி மதிப்பிலான நிலம், கார் உள்ளிட்ட சொத்துகளும், வங்கியில் ரூ.10 கோடி இருப்பும் உள்ளது.

    1990-91 முதல் 2011-12 வரை ரூ.10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது. 2005-06 முதல் 2011-12 வரை ரூ.6.62 கோடி வருமான வரி பாக்கி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம், ஜதராபாத் வீடு உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும், சுமார் ரூ.1000 கோடி மதிப்புள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நபரை நிர்வாகியாக நியமிக்க கோரி வழக்கு தொடர முடியாது. எனவே, இந்த வழக்கே விசாரணைக்கு உகந்தது அல்ல’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கின் இறுதி விசாரணையை வருகிற ஜூன் 6-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #chennaihighcourt #jayalalithapoesgarden

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார் என்று சொன்னவர்களுடன் அதிமுக கூட்டணி வைத்து உள்ளதற்கு தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். #dinakaran #admk #pmk

    ஓசூர்:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சியை நான் பதிவு செய்யவில்லை. இதனால் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றனர். எதற்காக நான் கட்சியை பதிவு செய்யவில்லை. நான் தனியாக கட்சி தொடங்கினால் நான் இரட்டை இலை சின்னத்திற்காக நடத்திய உரிமை போராட்டத்தை நடத்த முடியாது என்ற காரணத்தால் தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை தொடங்கினேன்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர போகிறார்கள்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக தேர்தல் அறிக்கை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் தேசிய கூட்டுறவு, வங்கிகளில் வாங்கிய அனைத்து விவசாய கடன்கள், மாணவர்களின் கல்வி கடன்கள் ரத்து செய்யப்படும். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் திருமண உதவியாக ரூ.2 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். ஆற்றுப்பாசனம், கிணற்று பாசனம் இல்லாத கிராமங்களில் விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தி ஆழ்குழய் கிணறுகள் அமைக்கப்படும்.

    ஜாக்டோ- ஜியோ அமைப்பு உள்ளிட்ட அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும். அரசு அலுவலகங்களில் அனைத்து சலுகை விலையில் உணவகம் அமைக்கப்படும். நெசவாளர்கள், மீனவர்கள் உள்பட அனைத்து தொழிலாளர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகையும், முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக வழங்கப்படும். இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு திட்டங்கள் உருவாக்கி தரப்படும்.

    ஜெயலலிதாவை குற்றவாளி எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் சிறைக்கு சென்றிருப்பார். அவருக்கு மணி மண்டபம் கட்டக்கூடாது என்று பழித்து பேசியவர்களுடன், தற்போது அ.தி.மு.க.வினர் கூட்டணி வைத்துள்ளனர். அப்போது 37 தொகுதிகளில் வெற்றியை அளித்து, மோடி வேண்டாம் என மக்கள் தீர்ப்பளித்தனர்.

    ஆனால், தற்போது மோடி எங்களுக்கு தந்தை (டாடி) என அ.தி.மு.க.வினர் பேசி வருகின்றனர். மோடியல்ல யார் வந்தாலும் இனி இவர்களை காப்பாற்ற முடியாது. இடைத் தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை எனில் தமிழகத்தில் ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு சின்னம் வழங்குவதில் இடையூறுகள் அளிக்கப்பட்டன. ஆனால் நாம் யாரையும் நாடாமல் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல், உச்சநீதிமன்றம் சென்று, பொதுசின்னமாக பரிசு பெட்டகத்தை பெற்றுள்ளோம். இந்த பரிசு பெட்டி அவர்களின் பணப்பெட்டியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது.

    அ.ம.மு.க.வை சேர்ந்த 40 நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்களும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் 18 வேட்பாளர்களும் தான் தமிழகத்திலும், மத்தியிலும் ஆட்சி மாற்றத்தை கொண்டு வரப்போகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #dinakaran #admk #pmk

    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போது ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்று திருவண்ணாமலையில் நடந்த பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். #MKStalin #jayalalitha

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில் உள்ள மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தி.மு.க. வேட்பாளராக சி.என்.அண்ணாதுரை உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளார். அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். தி.மு.க.தலைவர் கருணாநிதி 1957-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை பல தேர்தல்களில் நின்று தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளார்.

    ஒரு முறை கூட தோல்வியை பெறாத அவர் வெற்றி பெற்ற சின்னம் தான் உதயசூரியன். அந்த சின்னத்தில் உங்களிடத்தில் நான் வாக்கு சேகரிக்க வந்து உள்ளேன். திருவண்ணாமலை என்பது திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வெற்றிக்கு முக்கியமான இடமாகும்.

    1957-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. களம்கண்டபோது 15 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் முதன்முதலாக நுழைந்தது. அதில் அறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி போன்றோர் இடம் பெற்று இருந்தனர். அந்த சமயத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடைபெற்றது. அப்போது தி.மு.க. சார்பில் நின்ற 2 பேர் வெற்றி பெற்றார்கள். ஈ.வி.கே.சம்பத், திருவண்ணாமலையை சேர்ந்த தருமலிங்கம் ஆகியோர்தான் அவர்கள்.

    40 தொகுதியில் வெற்றி பெறும் தருணத்தில் திருவண்ணாமலையில் தான் அதிகமான அளவிற்கு வாக்குகள் பெற்று வெற்றி பெற போகிறோம் என்ற நம்பிக்கை உள்ளது.

    40 பாராளுமன்ற தொகுதிகள் மட்டுமின்றி 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடக்கிறது. அந்த 18 தொகுதியிலும் வெற்றி பெற்று 100-க்கு 100 என்ற வெற்றி இலக்கை அடைய இருக்கிறோம்.

    தலைவர் கருணாநிதி திருவாரூரையும், திருவண்ணாமலையையும் ஒரு போதும் பிரித்து பார்த்தது கிடையாது. ஏனென்றால் திருவாரூரை போல திருவண்ணாமலையும் தி.மு.க.வின் கோட்டை தான். 1967-ல் ஆட்சி அமைப்பதற்கு அடித்தளம் அமைத்த ஊர் தான் திருவண்ணாமலை என்று பெருமையோடு கூறுகிறேன்.

    தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை எதிர்த்து நிற்க கூடிய ஆளுங்கட்சி வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். பிரசாரம் தற்போது சூடுபிடித்து கொண்டு இருக்கிறது.

    தி.மு.க.வை வன்முறை என்கிறார் ராமதாஸ். வன்முறையின் அடையாளமே பா.ம.க. தான் என்று நான் சொல்லவில்லை. சட்டப்பேரவையில் முதல்வராக இருந்த ஜெயலலிதா விரிவாக பேசி இருக்கிறார். மகாபலிபுரத்தில் பா.ம.க. நடத்தும் மாநாட்டை சுட்டிகாட்டி பா.ம.க. மறு பெயர் வன்முறை என்று ஜெயலலிதா பேசினார்.

    பா.ம.க. வன்முறை அற்றது என்று அமைச்சர் சி.வி.சண்முகத்தால் சொல்ல முடியுமா? ஸ்டாலின் திமிர் பிடித்தவர் என்று எடப்பாடி பேசி உள்ளார். நான் தான் கடவுள் என்று சொல்கிறார் எடப்பாடி. அந்த திமிர், ஆணவம் எங்கிருந்து வந்தது. என் வளர்ப்பு சரியில்லை எடப்பாடி சொல்லி உள்ளார். என்னை பற்றி பேச முதல் அமைச்சருக்கு என்ன அருகதை, தகுதி இருக்கிறது? என்னை பற்றி நாட்டிற்கு தெரியும். 15 வயதில் அரசியலுக்கு வந்தவன்.

    கொலை வழக்கில் இருந்து தப்பிக்க ஊரை விட்டு ஓடி ஒளிந்து, அரசியலில் நுழைந்து எங்களை காப்பாற்றி கொண்டு இருப்பவர்கள் நாங்கள் அல்ல. சசிகலா காலில் மண்புழு போல ஊர்ந்து ஆட்சிக்கு வந்த பரம்பரை போல் நான் வரவில்லை.

    இன்று அ.தி.மு.க. ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. பொல்லாத ஆட்சிக்கு உதாரணம் பொள்ளாச்சி. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் போஸ் என்பவர் வெற்றி செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது. அந்த தேர்தல் நடைபெற்ற நேரத்தில் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இடைத்தேர்தலின் போது அந்த கட்சி வேட்பாளரை அறிவித்து விட்டது. ஆனால் சின்னத்தை ஒதுக்கும் நேரத்தில் தலைவரோ, பொது செயலாளரோ படிவத்தில் கையெழுத்து போட்டு கொடுக்க வேண்டும். ஜெயலலிதாவால் கையெழுத்து போட முடியாததால் கை ரேகை வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தீர்ப்பு வந்துள்ளது. அந்த கைரேகை ஜெயலலிதாவுடையது அல்ல என்று தீர்ப்பு வந்தது. இதை எப்படி தேர்தல் கமி‌ஷன் அனுமதித்தது.


    திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின் போதே ஜெயலலிதா உண்மையிலேயே உயிருடன் தான் இருந்தாரா என்ற சந்தேகம் தற்போது வருகிறது. இதற்கு தொடர்ந்து முறையான விசாரணை வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.

    தொடர்ந்து நாங்கள் சொல்கிறோம். உயிரிழந்தது ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர். அதில் மர்மம் உள்ளது. இந்த சம்பவத்தை மூடி மறைக்கின்றனர். நாம் ஆட்சிக்கு வந்த பிறகு திட்டங்களை தீட்டுகிறோம். மக்களுக்கு வேண்டிய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

    மேலும் முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. இதை கண்டுபிடித்து அதற்கு யார் உடந்தையாக இருந்தார்களோ அவர்களை குற்றவாளி கூண்டில் ஏற்றுவோம். அது மட்டுமின்றி இதற்கு உடந்தையாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை பெற்று தருவது தான் இந்த ஸ்டாலினின் முதல் வேலையாக இருக்கும்.

    தேர்தல் அறிக்கையை நாம் தயாரித்து வெளியிட்ட போது சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்து இருந்தோம். இதில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. என்னவென்றால் இதில் அனைத்து வகை விவசாய கடன்களும் தள்ளுபடி செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். இந்ததேர்தல் அறிக்கை பல்வேறு உறுதி மொழிகள் உள்ளது. இந்த உறுதி மொழி வெறும் தேர்தலுக்காக என நினைக்க கூடாது. நாங்கள் சொல்வதைத்தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #jayalalitha

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. #ArumugasamyCommission #opanneerselvam
    சென்னை:

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வரும் 28-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, ஆறுமுகசாமி ஆணையம்  சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வரும் 27-ஆம் தேதி அப்பலோ மருத்துவமனை மருத்துவர்கள் ஏழு பேரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதி அளித்துள்ளது.

    ஜெ.மரணம் குறித்து விசாரிக்க மேலும் 4 மாதம் அவகாசம் தந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. #ArumugasamyCommission #opanneerselvam
    பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் வெற்றியை ஜெயலலிதாவின் நினைவிடத்தில் சமர்ப்பிக்க உறுதி ஏற்க வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளனர். #opsandeps #admk
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்- அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொண்டர்களுக்கு எழுதி உள்ள மடலில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க.வின் நிரந்தரப் பொதுச் செயலாளர்,  அம்மா அவர்களின் 71-வது பிறந்த நாளில் அவரைப் பற்றிய இனிய நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளவும், அவர் காட்டிய வெற்றிப் பாதையில் தொடர்ந்து நடைபோட உறுதி ஏற்கவும், கழக உடன்பிறப்புகளை அழைக்கும் இந்த அன்பு மடல் வழியாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

    புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய தன்னிகரில்லாத மக்கள் இயக்கமாகிய நம் அ.தி.மு.க.வை தனது வாழ்வின் மூச்சாகக் கொண்டு, கழகத்திற்காகவே அர்ப்பணிக்கப்பட்டவராய் தவ வாழ்வு வாழ்ந்த அற்புதமான அரசியல் ஞானி நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். அவருடைய அறிவையும், ஆற்றலையும், உழைப்பையும், பன்முகத் திறமைகளையும் எல்லாவற்றிற்கும் மேலாக மக்கள் அனைவரையும் உள்ளார்ந்த அன்புடன் அவர் நேசித்ததையும் கழக உடன்பிறப்புகளாகிய நாம், அவரோடு நேரடியாகப் பழகிய அனுபவத்தால் எண்ணி, எண்ணி வியந்துபோகிறோம். ``அம்மா’’ அவர்களைப் போல இன்னும் ஓர் அதிசயப் பிறவி, இனி ஒருவர் தோன்ற முடியுமா? என்று திகைத்து நிற்கிறோம்.

    ஒரு பள்ளி மாணவியாக அம்மா நிகழ்த்திய சாதனைகளையும், படிப்பில் மட்டும் அல்லாமல் விளையாட்டு, நாட்டியம், இசை போன்ற திறன் வளர்க்கும் துறை களிலும் புரட்சித் தலைவி அம்மா தன்னிகரின்றி திகழ்ந்ததையும் அவருடன் பள்ளிப் பருவத்தில் உடன் இருந்தவர்கள் இப்பொழுதும் நினைவுகூர்ந்து வியக்கிறார்கள்.

    இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா தனது 15-வது வயதில் திரையுலகில் அடியெடுத்து வைத்த போது, வயதிலும், அனுபவத்திலும், திறமையிலும் மூத்தவர்கள் பலர் கோலோச்சி வந்தனர். இருப்பினும் தனது தனித் தன்மையால் கலை உலகின் தங்கத் தாரகையாக நம் அம்மா மிளிர்ந்தார்கள்.

    புரட்சித் தலைவி அம்மா தன்னுடைய சிறப்புமிக்க குணநலன்களால் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மதிப்பிற்கு உரியவரானார். புரட்சித் தலைவி அம்மாவின் எதிர்காலம் எப்படி இருக்கும்; எப்படி இருக்க வேண்டும் என்று துல்லியமாகக் கணித்த கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , 1982-ம் ஆண்டு அவரை கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளராக்கி, நம் இயக்கத்தை வழிநடத்தத் தேவையான பயிற்சிகளை வழங்கினார்.

    1984-ம் ஆண்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். , நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பின ராக, அம்மாவை புதுடெல்லிக்கு அனுப்பி, அரசியல் அனுபவங்களைப் பெறவைத்தார்.

    நாடாளுமன்ற அனுபவங்களால் அரசியல் வாழ்வுக்குத் தேவையான பயிற்சிகள் பலவற்றைப் பெற்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள், புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று ஆற்றிய பணிகளால் இன்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இந்திய அரசியல் அரங்கில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

    தமிழகத்தின் முதல்- அமைச்சராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அரும்பணியாற்றிய புரட்சித் தலைவி அம்மாவின் மனிதாபிமானம் மிக்க ஆட்சி முறையாலும், தொலை நோக்குப் பார்வை கொண்ட திட்டங்களை அவர் செயல்படுத்தியதாலும், இந்தியாவின் தலைசிறந்த மாநிலங்களில் ஒன்றாக தமிழ் நாடு வளர்ந்திருக்கிறது.

    கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு, உள்கட்டமைப்பு வசதி, பெண்கள் முன்னேற் றம், விவசாயிகள் நலன் காத்தல் என்று ஒவ்வொரு துறையிலும் சாதனைகள் பலவற்றை நிகழ்த்தும் மாநிலமாக தமிழ் நாடு திகழ்கிறது.

    புரட்சித் தலைவி அம்மாவால் பயிற்றுவிக்கப்பட்ட அவருடைய அன்பு உடன் பிறப்புகளாகிய நாம், அம்மாவின் நினைவைப் போற்றி, புகழ்ந்து, நினைத்து, நெஞ்சம் உருகி அவரை வணங்கும் இந்த வேளையில், நாம் அவருக்கு ஆற்ற வேண்டிய நன்றிக் கடமைகள் பல உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.

    நம்மையெல்லாம் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி விட்டு நம் இதய தெய்வம் அம்மா மறைந்தாலும், பக்குவத்தோடும், ஒற்றுமை யோடும் செயல்பட்டு, நம் புரட்சித் தலைவி அம்மா விட்டுச்சென்ற பணிகளைத் தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். பல்வேறு சோதனைகளுக்கிடையே கழகத்தைக் காத்திருக்கிறோம். புரட்சித் தலைவர் நமக்க ளித்த வெற்றிச் சின்னமாம் ``இரட்டை இலை’’ சின்னத்தை மீட்டிருக்கிறோம்.

    கழக அரசை மக்கள் அனைவரும் போற்றும் வகையில் மக்கள் நலன் காக்கும் அரசாக நடத்தி வருகிறோம்.

    அம்மா காட்டிய பாதையில், அவர் செய்த சாதனைகள் தொடரும் வகையில் எண்ணற்றத் திட்டங்களை நிறைவேற்றி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்திருக்கிறோம். இந்த சாதனைகளைத் தொடர்ந்து நிகழ்த்திட உறுதி ஏற்று உழைக்கிறோம். அதுவே நாம், நம் இதய தெய்வம் அம்மா அவர்களுக்கு செலுத்தும் நன்றிக் கடன்.

    நாடாளுமன்ற மக்களவை பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், 1998-ம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அமைத்தது போன்று, தேச நலன் காக்கும் வெற்றிக் கூட்டணியை இந்தத் தேர்தலுக்காக நாம் உருவாக்கியுள்ளோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தனது அடிப்படைக் கொள்கை களான மாநில சுயாட்சி, மதச் சார்பின்மை, சமூக நீதி, பெண்களுக்கு முக்கியத் துவம், ஏழை, எளியோர் உழைக்கும் மக்களுக்கு சமூகபொருளாதார பாதுகாப்பு, தமிழ் இன எழுச்சி ஆகியவற்றில் உறுதியோடு அரசியல் பயணத்தைத் தொடரும். அதுதான், எத்தகைய களமாக தேர்தல் களம் அமைந்தாலும் நமது நிலைப்பாடு. அப்படித்தான் இப்பொழுதும் தனது பாதை யையும், பயணத்தையும் தேர்வு செய்து களத்தில் வலிமையோடு கழகம் நிற்கிறது.

    புரட்சித் தலைவி அம்மா பெற்றதைப் போன்ற மகத்தான வெற்றிகளை எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், சட்டமன்ற இடைத் தேர்தல்களிலும் பெற்று அந்த வெற்றியை புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு வெற்றி மாலையாக அவர் நீடு துயில் கொள்ளும் நினைவிடத்தில் சமர்ப்பிக்க நாம் உறுதி பூண வேண்டும்.

    நம்மை எல்லாம் அன்புடன் அரவணைத்து, அரசியல் பாடம் சொல்லி, வழிநடத்திய நம் அன்பு அம்மா அவர்களின் பிறந்த நாளில் நாம், கழகம் காக்கவும், கழகத்தை தேர்தல்களில் மகத்தான வெற்றி பெறச் செய்திடவும், அயராது உழைப்போம்! உழைப்போம்! உழைப்போம்! என்று உளமார உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். #opsandeps #admk
    தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என் பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    சென்னை:

    மதுரை தோப்பூரில் ரூ.1264 கோடியில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    விழா முடிந்து செல்லும்போது பிரதமர் மோடியிடம் தமிழக முதல்வர் பழனிசாமி 17 கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:



    தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா மற்றும் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்.

    மேகதாது அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகாவுக்கு வழங்கிய அனுமதியை திரும்பப் பெற வேண்டும்.

    சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்ட வேண்டும், கஜா புயல் பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளது. #PMModi #EdappadiPalanisamy #Anna #MGR #Jayalalithaa #Mekedatu
    ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #pollachijayaraman #Jayalalithaa

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது.

    தற்போதுள்ள ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரூ. 1000-மும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் காயத்ரி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், அருணாசலம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachijayaraman #Jayalalithaa

    ×