என் மலர்
நீங்கள் தேடியது "ராமதாஸ்"
- செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது.
- அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே பாக்கம்-கெங்கவரம் காப்புக்காடு 1897-ம் ஆண்டு காப்புக்காடாக அறிவிக்கப்பட்டது. இக்காடு கிழக்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். 7 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு கொண்ட இக்காட்டில் சிறுத்தை, கரடி, அரியவகை சிலந்திகள், அழிந்துவரும் நிலையில் உள்ள பாம்புகள், பெரிய அணில், லங்கூர் குரங்குகள், எறும்பு திண்ணி, தங்கப்பல்லி, புல்புல் ரேசர் ஸ்னேக் என்கிற அரியவகை பாம்பு, 15 குடும்பங்களைச் சேர்ந்த 56 வகை பாம்புகள், தவளைகள், தேரைகள் உள்ளது என்று உள்நாட்டு பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்துள்ளது.
எனவே நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து பேசி முடிவெடுத்து வருகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் பாக்கம்-கெங்கவரம் பகுதியில் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்படும் என அறிவித்து அழிந்துவரும் வனவிலங்குகளையும், இயற்கையையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
- நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பா.ம.க. சார்பாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக விருப்ப மனுவை பெற்றார். இதையடுத்து அதற்கான நேர்காணல் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்த நிலையில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான முதற்கட்டமான வேட்பாளர் நேர்காணல் நடைபெற்றது. நாளை மற்றும் நாளை மறுநாள் மீதி உள்ள மாவட்டங்களுக்கு நேர்காணலை ராமதாஸ் நடத்துகிறார்.
இந்த நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் முடிவு எடுக்கவில்லை. விரைவில் கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகம் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை.
- தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி தைலாபுரத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரு தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம். அந்த கட்சியை வழிநடத்தக் கூடிய தலைவருக்கான மிகப்பெரிய சக்தி, அதையும் தாண்டி கூட்டணி. அதற்கும் மேல் அந்த தொகுதியில் வேட்பாளர்களுக்குரிய முக்கியத்துவம். இதெல்லாம் சேர்ந்ததுதான் வெற்றி.
அந்த அடிப்படையில் இதையெல்லாம் கூட்டி கழித்து நேர்காணல் நடத்தி டாக்டர் ராமதாஸ் தலைமையில் ஒரு நல்ல முடிவு எடுப்போம்.
பா.ம.க. இன்று ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தால் கூட டாக்டர் ராமதாஸ் பின்னால் கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்கள், பா.ம.க.வின் அனுதாபிகள், மூத்த நிர்வாகிகள் ஆகியோர் உள்ளனர். அவர்கள் இந்த தேர்தலில் டாக்டர் ராமதாசின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
டாக்டர் ராமதாசை பாதுகாக்க வேண்டும் என்று பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இந்த தேர்தல் டாக்டர் ராமதாசுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
கேள்வி: கூட்டணி தொடர்பான அறிவிப்பு எப்போது வெளியாகும்?
பதில்: கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க டாக்டர் ராமதாசுக்கு பொதுக்குழு அதிகாரம் கொடுத்து உள்ளது. அதற்கு பிறகு 3 கட்ட நிர்வாக குழு கூட்டம் நடத்தப்பட்டது. நிர்வாக குழுவிடம் டாக்டர் ராமதாஸ் கருத்து கேட்டார். மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களிடம் தனித்தனியாகவும் கருத்து கேட்டார். அந்த கருத்தின் அடிப்படையில் நல்ல முடிவு எடுப்பார். முடிவை வேகமாக அறிவிக்காமல் சற்று காலதாமதம் ஆவதற்கு என்ன காரணம் என்றால் நல்ல முடிவாக இருக்கணும்.
வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டாக்டர் ராமதாஸ் இடம் பெறுகிற கூட்டணிதான் ஆட்சியை பிடிக்கக் கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர் அலசி ஆராய்ந்து, யோசனை செய்து கொண்டிருக்கிறார். நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார்.
கேள்வி: த.வெ.க. சார்பில் கூட்டணி தொடர்பாக பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பும் பேசுகிறார்கள். தேர்தல் என்று சொன்னாலே சில கட்சிகள் தலைமையில் நேரடியாக பேசுவார்கள். சில கட்சியின் சார்பில் யாராவது ஆள் அனுப்பி பேசுவார்கள். இதெல்லாம் இயல்பானது. இறுதி முடிவுதான் உறுதியானது. இறுதி முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார்.
கேள்வி: கூட்டணி அமைப்பதில் ஏதாவது சிக்கல் இருக்கிறதா?
பதில்: கூட்டணி அமைப்பதில் டாக்டர் ராமதாசுக்கு எந்த சிக்கலும் இல்லை. ஒரே ஒரு சிக்கல். வெற்றி கூட்டணி எது என்று கண்டறிவதை தவிர வேறு எதுவும் இல்லை.
கேள்வி: மாம்பழம் சின்னம் யாருக்கு?
பதில்: கட்சி யாருக்கு, மாம்பழம் சின்னம் யாருக்கு என்பதை மிக தெளிவாக விரைவில் உங்களிடம் டாக்டர் ராமதாஸ் சொல்வார்.
கேள்வி: அ.தி.மு.க. தலைமையில் இருந்து உங்களிடம் பேசினார்களா?
பதில்: எல்லா தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. அதை இப்போது வெளியில் சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது.
கேள்வி: பா.ம.க. இடம்பெறும் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று திருமாவளவன் கூறி இருக்கிறாரே?
பதில்: தேர்தலில் ஒவ்வொருவரும் ஒரு கருத்து சொல்வார்கள். இன்னொருவர் கருத்துக்கு நாம் பதில் சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது. தேர்தலின் போது எல்லோருடனும் இணக்கமாக இருக்க வேண்டும். நான் அப்படித்தான் இருப்பேன்.
கேள்வி: திருமாவளவனை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்ததா?
பதில்: அப்படி எதுவும் எனக்கு தெரியவில்லை.
கேள்வி: பா.ம.க.வுக்கு கடந்த காலங்களை போல தொகுதிகள் கிடைக்கும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: பா.ம.க. வலிமையான சக்தி. டாக்டர் ராமதாசின் வலிமை எப்போதும் குறையாது. தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத சக்தியாக பா.ம.க.வும், டாக்டர் ராமதாசும் இருக்கிறார்கள்.
கேள்வி: கூட்டணி தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலுவிடம் சென்னையில் உள்ள தனியார் விடுதியில் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறதே?
பதில்: இது உங்கள் கற்பனை மற்றும் யூகம்தான்.
கேள்வி: உங்களை தி.மு.க.வின் கைக்கூலி என்று விமர்சித்து சொல்லப்படுகிறதே?
பதில்: டாக்டர் ராமதாசுக்கும், அன்புமணிக்கும் ஏற்பட்ட பிரிவுக்கு நான் தான் காரணம் என்று சொல்கிறார்கள். கைக்கூலி என்றும் சொல்கிறார்கள். டாக்டர் ராமதாசையும், அன்புமணியையும் பிரிப்பதற்கு எனது மனசாட்சி இடம் கொடுக்குமா? ஒன்றாக இணைக்கும் முயற்சியை 5 மாதமாக மேற்கொண்டேன். அது நடக்கவில்லை என்ற வருத்தம் இன்று வரை இருக்கிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக பேச வேண்டும் என்று நினைக்கிற முதல் ஆள் நான்தான். அவர்கள் இணைய தடையாக இருக்க மாட்டேன். கைக்கூலி என்று சொல்வதை கனத்த இதயத்துடன் தாங்கிக் கொண்டு வாழ்கிறேன் என்றார்.
- தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார்.
- மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் பீகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்டதற்கு மது தான் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்ற வாக்கியம் ஏட்டளவில்தான் என்பதற்கு சான்றுதான் பிகார் கூலி தொழிலாளி, அவரது மனைவி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை. இக்கொலைக்கு அடிப்படைக்காரணம் மது.
ஒரு பெண், ஒரு குழந்தை இவர்களில் யாரையாவது கொல்ல வேண்டும் அல்லது அருகே உள்ள மதுவை அருந்தவேண்டும் என்ற கதைக்கேற்ப மதுவை அருந்திவிட்டு பெண்ணை அடைய தடையாக இருந்த குழந்தையை கொன்று பின் அப்பெண்ணையும் கொன்றதாக அக்கதை முடியும். ஆக மது அனைத்தையும் செய்யவைக்கும் என்பதே இக்கதையின் சாராம்சம்.
அண்மையில் தஞ்சையில் நடைபெற்ற திமுக மகளிர் மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் உருவாக்கியதால்தான் தமிழகத்தில் அதிக அளவிலான பெண்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றுகிறார்கள் என்றார். அப்படி சொன்ன மறுநாளே தமிழகத்தையே உலுக்கிய கொடூர கொலை. வேலை கேட்டு நம்பி வந்த குடும்பத்தை நம்பிக்கை துரோகம் செய்து மதுபோதையில் கொன்றதாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ஆனால் பஞ்சம் பிழைக்க வந்த வெளிமாநிலத்தவரையும் விட்டுவைக்காத மது போதை ஒரு குடும்பத்தையே நிர்மூலமாக்கியுள்ளது. பெண்கள் அச்சமின்றி வாழ இனியாவது மதுவை அறவே ஒழிக்க அரசு மதுகடைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். இலவசங்களை அளிக்க மது வருவாயை தவிர்த்து வேறுவகையில் வருவாயை பெற பல வழிகள் உள்ளது" என்று தெரிவித்தார்.
- திமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
- வருங்காலங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்
கடந்த 2021 தேர்தலின்போது திமுகவால் கொடுக்கப்பட்ட 159வது வாக்குறுதியான கல்விக்கடன் தள்ளுபடி என்ன ஆனது என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கல்விக்கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு; அன்று ஒரு பேச்சு; இன்று ஒரு பேச்சு; 2021 சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழ்நாடு கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழ்நாடு மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடனை செலுத்த இயலாவிட்டால் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும்" என திமுக 159-வது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, முன்னுரிமைத் துறை கடனின் கீழ் வங்கிகளின் நிலுவையில் உள்ள கல்விக் கடன் இலாகா டிசம்பர் 31, 2023 நிலவரப்படி ரூ.11,122.65 கோடியாக இருந்தது, இது செப்டம்பர் 2023 நிலவரப்படி ரூ.11,589.93 கோடியிலிருந்து ரூ.467 கோடி குறைந்துள்ளது. முன்னுரிமைத் துறை கடனின் கீழ் கல்விக் கடன் வாராக்கடன் டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.4,123.91 கோடியாக இருந்தது. மாநிலத்தில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை ரூ.2,857.75 கோடி கல்விக் கடன்களை அனுமதித்துள்ளன. மேலும் கடன்கள் (முந்தைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டவை உட்பட) ரூ.2,064.06 கோடி வரை வழங்கப்பட்டுள்ளன என்று தரவுகள் காட்டுகிறது.
2017 ஜூன் மாதம் அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2013 –ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8,86,752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.16,313.06 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9,60,202 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013 -லிருந்து 2015-ம் ஆண்டு 22.3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் ரூ.1,50,478 யாக இருந்தது. அது 2015-ல் ரூ.1,69,892 யாக மட்டுமே உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் வெறும் 13 சதவீதம் தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ''வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்'' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதல்வர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும்.
வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசு கடந்த 3.2.2025-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும் என வலியிறுத்திய முதல்வர் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது வரவேற்கதக்கது. ஆனால் திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகாலமாக கல்விக்கடன் நிலுவையில் உள்ளதால் வங்கிகள் வாராக்கடன்கள் முடிவு செய்துள்ளதை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. வருங்காலங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்." என்றுக் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது
- கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது
கல்விக்கடன் தள்ளுபடியில் திமுகவின் நிலைப்பாடு - அன்று ஒரு பேச்சு, இன்று ஒரு பேச்சு என்று உள்ளது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2021 சட்டமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயின்று, தமிழக கல்லூரிகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வங்கிக்கடன் பெற்ற தமிழக மாணவர்கள் ஓராண்டு காலத்திற்குள் கடனை செலுத்த இயலாவிட்டால் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களின் கல்விக்கடனை அரசே திருப்பி செலுத்தும்" என திமுக 159-வது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தது.
தமிழ்நாடு மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தரவுகளின்படி, முன்னுரிமைத் துறை கடனின் கீழ் வங்கிகளின் நிலுவையில் உள்ள கல்விக் கடன் இலாகா டிசம்பர் 31, 2023 நிலவரப்படி ரூ.11,122.65 கோடியாக இருந்தது, இது செப்டம்பர் 2023 நிலவரப்படி ரூ.11,589.93 கோடியிலிருந்து ரூ.467 கோடி குறைந்துள்ளது. முன்னுரிமைத் துறை கடனின் கீழ் கல்விக் கடன் வாராக்கடன் டிசம்பர் 2023 நிலவரப்படி ரூ.4,123.91 கோடியாக இருந்தது. மாநிலத்தில் உள்ள வங்கிகள் ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரை ரூ.2,857.75 கோடி கல்விக் கடன்களை அனுமதித்துள்ளன. மேலும் கடன்கள் (முந்தைய ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்டவை உட்பட) ரூ.2,064.06 கோடி வரை வழங்கப்பட்டுள்ளன என்று தரவுகள் காட்டுகிறது.
2017 ஜூன் மாதம் அப்போதைய திமுக பொருளாளர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 2013 –ம் ஆண்டில், தமிழகத்தை சேர்ந்த 8,86,752 மாணவர்களின் கல்விக்கடன் ரூ.13,343.65 கோடி நிலுவையில் இருந்தது. ஆனால் 2015-ம் ஆண்டில் அந்த கல்விக் கடன் நிலுவைத் தொகை ரூ.16,313.06 கோடியாகவும், மாணவர்களின் எண்ணிக்கை 9,60,202 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளிவிவரப்படி, மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் 2013 -லிருந்து 2015-ம் ஆண்டு 22.3 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 8 சதவீதம் மட்டுமே உயர்ந்திருக்கிறது.
அதேபோல் 2013-ம் ஆண்டு மாணவர்கள் பெற்ற சராசரி கல்விக்கடன் 2013-ல் ரூ.1,50,478 யாக இருந்தது. அது 2015-ல் ரூ.1,69,892 யாக மட்டுமே உயர்ந்துள்ளது. இது சதவீத அடிப்படையில் வெறும் 13 சதவீதம் தான் உயர்வு பெற்றுள்ளது. இவை அனைத்தும், கல்விக்கடன் குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதித்துறை அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்களை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் ''வங்கிகளில் கல்விக்கடன் பெற்று வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்கடனை அரசே திருப்பிச் செலுத்தும்'' என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் ஆட்சிக்கு வந்ததும் போட்ட முதல் கையெழுத்தில் மாணவர்களுக்கான கல்விக்கடனை முதல்வர் ஜெயலலிதா அறவே மறந்து விட்டார். அந்த முதல் கையெழுத்தில் கல்விக்கடன் தள்ளுபடி அறிவித்திருந்தால் மதுரை லெனின் உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கும்.
இன்றைக்கு தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்விக் கடன் பெறுவது அதிகரித்து வருகிறது என்ற புள்ளிவிவரங்கள் வெளிவந்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கி 84 லட்சம் பேர் வேலையில்லாமல் காத்திருக்கும் நிலையை அறவே நீக்கிட அதிமுக அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதிமுக தேர்தல் வாக்குறுதியில் சொன்னது போல் வேலை வாய்ப்பு இல்லாத மாணவர்களின் கல்விக் கடனை அரசே திருப்பிச் செலுத்துவதுடன், கல்விக் கடன் பெற்ற அனைத்து மாணவ- மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் கருதி, மாணவர்களின் கல்வி கடன் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்'' என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆனால், தமிழக அரசு கடந்த 3.2.2025-ம் தேதி வெளியிட்ட அறிக்கையில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு 1972-1973 முதல் 2002-2003 மற்றும் 2003-2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன்களில் ரூ.48.95 கோடி நிலுவைத் தொகையினை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் அனைத்து மாணவ-மாணவிகளின் கடன்களையும் திருப்பிச் செலுத்த அதிமுக அரசு முன்வர வேண்டும் என வலியிறுத்திய முதல்வர் கடந்த ஆண்டு பட்டியலின மாணவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தது வரவேற்கதக்கது. ஆனால் திமுக தன் தேர்தல் அறிக்கையில் தமிழக மாணவர்கள் என குறிப்பிட்டுவிட்டு பட்டியலின மாணவர்களின் கல்விக்கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.
மேலும், வசூலிக்க சரியான பதிவேடுகள் மற்றும் விவரங்கள் ஏதும் அலுவலக ஆவணங்களில் இல்லாததாலும் மற்றும் வசூலிக்க வேண்டிய நபர்களை அடையாளம் காண இயலாததாலும், ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதும் தள்ளுபடி (Write off proposal) செய்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 15 ஆண்டுகாலமாக கல்விக்கடன் நிலுவையில் உள்ளதால் வங்கிகள் வாராக்கடன்கள் முடிவு செய்துள்ளதை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடதக்கது. வருங்காலங்களில் திமுக தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கும்போது நிபந்தனைகளுக்குட்பட்டது என்று குறிப்பிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது
- இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் நலன் கருதி இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2009-மே மாதம் 31-05-2009 தேதி வரை நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், ஜூன் 1-ம் தேதிக்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் இடையே அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை குறைவான ஊதியம் தான் அளிக்கப்படுகிறது.
2006-11 ம் ஆண்டு காலத்தில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் தான் மக்கள் நலப்பணியாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி போல இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்டது. பின்னர் 16 ஆண்டுகளை கடந்தும் இந்த அநீதி துடைக்கப்படவில்லை. இந்த அநீதியைக் களைய வேண்டும்; சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி 2009-ம் ஆண்டு மே மாதத்திற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை கைது செய்து அடைத்து வைப்பது, போராடும் ஆசிரியர்களை கைது செய்து இரவு நேரங்களில் சென்னைக்கு வெளியில் வெகுதொலைவில் கொண்டு சென்று இறக்கி விடுவது என திமுக அரசு ஈடுபட்டு வருகிறது.
டிசம்பர் 26-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தைத் தொடங்கிய போது, பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. அதனால், ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், அரையாண்டு விடுமுறை முடிந்து ஜனவரி 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன. அதன்பின் நடக்கும் போராட்டத்தால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலங்களில் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் இவ்வளவு நாள்கள் நீடித்ததில்லை; மாணவர்களின் படிப்பும் இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டதில்லை. இன்னும் ஒரு மாதத்தில் ஆண்டுத் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், ஆசிரியர்களின் போராட்டம் நீடித்தால் மாணவர்கள் மேலும் மோசமாக பாதிக்கப்படுவார்கள்.
ஆனால், இதுகுறித்த எந்தக் கவலையும் திமுக அரசுக்கு இல்லை. ஒருபுறம் ஆசிரியர்களுக்கு அநீதி தொடர்கிறது; இன்னொருபக்கம் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது எனும் போது, ஆசிரியர்களுடன் பேச்சு நடத்தி சிக்கலுக்குத் தீர்வு காண்பது தான் மக்கள் நலனில் அக்கறையுள்ள அரசின் கடமையாக இருக்க முடியும்.
ஆனால், 25-ஆம் நாளாக போராட்டம் நீடிக்கும் போதிலும், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள திமுக அரசு மறுத்து வருகிறது. இது தொடர்பாக பல முறை பேச்சுகள் நடத்தப்பட்ட போதிலும், ''நிதிநிலை சரியானவுடன் ஆசிரியர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என்பதையே அரசு மீண்டும், மீண்டும் கூறி வருகிறது. இதை ஏற்றுக்கொள்ள ஆசிரியர்கள் தயாராக இல்லை. அவர்களின் நிலைப்பாடு சரியானதும் கூட.
சென்னையில் கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. அதையடுத்து ஆசிரியர்களுடன் பேச்சு நடத்திய அமைச்சர்கள் குழுவினர், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு கோரிக்கை தொடர்பாக ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய 3 உறுப்பினர் குழு அமைக்கப் பட்டிருப்பதாகவும், அந்தக் குழு அடுத்த 3 மாதங்களில் தாக்கல் செய்த பின், அதனடிப்படையில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தனர்.
ஆனால், அதன்பின் 3 ஆண்டுகளாகும் நிலையில் அறிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை; ஆசிரியர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் வெற்று வாக்குறுதிகளை ஏற்க மறுக்கும் இடைநிலை ஆசிரியர்கள், தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்பதில் உறுதியாக உள்ளனர்.
மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் திமுக அரசு இனியும் அலட்சியம் காட்டக்கூடாது. அடக்குமுறைகள் மூலம் ஆசிரியர்களை பணிய வைத்து விடலாம் என்ற மனப்பான்மையை கைவிட்டு, இடைநிலை ஆசிரியர்களின் சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
- அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்
- திகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றவுள்ளார்.
இந்த பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சிகளின் சின்னங்கள் இடம்பெற்றுள்ளது. அந்த வகையில் பாமகவின் மாம்பழ சின்னம் இடம்பெற்றுள்ளது. அதற்கு தான் உருவாக்கிய மாம்பழ சின்னத்தை பிரதமர் பங்கேற்கும் மேடையில் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
"இன்று மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) தேர்தல் பிரச்சாரத் தொடக்க விழாவில், நான் நிறுவிய பாட்டாளி மக்கள் கட்சியின் வரலாற்றுச் சின்னமான 'மாம்பழம்' சின்னம் மேடையின் பின்னணியில் பயன்படுத்தப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் நிலவும் தலைமைப் போட்டியால் 'மாம்பழம்' சின்னம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ள ஒரு பிரிவினர் (அன்புமணி தரப்பு), தேர்தல் ஆணையத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படாத ஒரு சின்னத்தை, நாட்டின் பிரதமரே பங்கேற்கும் ஒரு பொதுக்கூட்ட மேடையில் காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது மற்றும் அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.
இதன் மூலம் நான் தெரிவித்துக் கொள்வது:
தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள ஒரு சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. பிரதமர் பங்கேற்கும் ஒரு நிகழ்வில், இத்தகைய சட்டவிரோதச் செயல்களைச் செய்வது பிரதமரின் பதவிக்கும், ஜனநாயக மரபுகளுக்கும் இழைக்கப்படும் அவமரியாதையாகும். 'மாம்பழம்' சின்னம் பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களின் அடையாளம். அது இன்னும் யாருக்கும் ஒதுக்கப்படாத நிலையில், அதனை ஒரு குறிப்பிட்ட அணி தனக்கானதாகக் காட்டிக்கொள்வது தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பூர்வமான தலைமை மற்றும் சின்னம் குறித்த வழக்கு நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில், அதிகார பலத்தைப் பயன்படுத்திச் சின்னத்தை அபகரிக்க நினைக்கும் இச்செயலைத் தேர்தல் ஆணையம் உடனடியாகக் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் அறமற்ற இந்தச் செயலைத் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள அன்புமணி, மாம்பழம் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம்தான் கேட்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
- கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள்.
- இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான்.
சென்னை:
பா.ம.க. டாக்டர் ராமதாஸ் தலைமையிலும், டாக்டர் அன்புமணி தலைமையிலும் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது. டாக்டர் அன்புமணிதான் பா.ம.க. தலைவர் என்றும் கட்சி மற்றும் கட்சியின் சின்னம் அவரிடம்தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையில் டாக்டர் ராமதாஸ் பல்வேறு சட்ட போராட்டங்களை நடத்திய நிலையில் சுமார் 2 மாதங்களுக்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டில் ஒரு தீர்ப்பு வெளிவந்தது. இந்த நிலையில் இப்போது சென்னையில் உரிமையியல் கோர்ட்டில் கட்சி தனக்கே சொந்தம் என்று உரிமைக்கோரி டாக்டர் ராமதாஸ் நேற்று மீண்டும் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இது தொடர்பாக டாக்டர் அன்புமணி தரப்பு கொள்கை பரப்பு செயலாளர் வக்கீல் பாலு கூறியதாவது:-
எந்த அரசியல் கட்சியிலும், எந்த கட்சி தலைவரும் செய்யாத வேடிக்கை மற்றும் வினோதங்களை டாக்டர் ராமதாஸ் தலைமையில் செய்து வருவதுதான் மிகப் பெரிய வேடிக்கை.
டாக்டர் அன்புமணிக்குத் தான் கட்சி சொந்தம், சின்னமும் சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் இது நீதிமன்ற அவமதிப்பாகும். நான்தான் கட்சி தலைவர் என்றெல்லாம் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
கோர்ட்டில் எங்களுக்குத்தான் வெற்றி கிடைத்து இருக்கிறது என்று இனிப்பு கொடுத்து வெற்றியை கொண்டாடினார்கள். தங்களுக்கு வெற்றி கிடைத்தால் மீண்டும் மீண்டும் டாக்டர் ராமதாசை தலைவராக தேர்வு செய்வதாக ஏன் அறிவிக்க வேண்டும்? ஒரே வருடத்தில் 4 முறை அவரை தலைவராக தேர்வு செய்ததாக அறிவித்து உள்ளார்கள்.
எந்த கோர்ட்டிலும் அவர்கள் வெற்றி பெற முடியாது என்பது சட்டம் தெரிந்த எல்லோருக்கும் தெரியும். டெல்லி கோர்ட்டில் தங்களுக்குத்தான் வெற்றி கிடைத்தது என்று கொண்டாடியவர்கள்.
அப்படியென்றால் 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏன் கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இது முழுக்க முழுக்க டாக்டர் ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவரை சுற்றி இருக்கும் பூசாரிகளான ஜி.கே.மணி, அருள் போன்றவர்கள் நடத்தும் நாடகம். இந்த வழக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனை வழக்குகள் போட்டாலும் சரி, அவர்களுக்கு கிடைப்பது பட்டை நாமம்தான். வழக்குகளை சட்டப்படி நாங்கள் சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
- பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ம.க. இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க.விற்கு உரிமைகோரி சிவில் மற்றும் ரிட் வழக்குகளை ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மனுவில், பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ரிட் மனுவில், பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது
- பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ்,
டெல்லி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்தவாறும், நீதிமன்ற தீர்ப்பின்படியும் அன்புமணிதான் பாமகவின் தலைவர் என்று சொல்லமுடியாது; சொல்லக்கூடாது. பாமகவின் அடிப்படை உறுப்பினராகக்கூட அவர் இருக்கமுடியாது என செயற்குழு, நிர்வாககுழு, பொதுக்குழு என மூன்று குழுக்களும் சொல்லியபிறகும், அவர் பாமகவின் தலைவர் என சொல்லிக்கொண்டு திரிகிறார். இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். நான்தான் பாமக தலைவர் என அன்புமணி கூறுவதை ஊடங்கள் வெளிப்படுத்தக்கூடாது என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீதிமன்ற தீர்ப்பின்படி கட்சியின் கொடி, சின்னம், பெயரை அவர் பயன்படுத்தக்கூடாது. என தெரிவித்தார்.
தொடர்ந்து தேர்தல் கூட்டணி குறித்து பேசிய அவர்,
பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும்; இதுதான் 'சிறந்த கூட்டணி, நல்ல கூட்டணி, நாணயமான கூட்டணி" என்று மக்கள் பேசுகின்ற அளவிற்கு இந்தக் கூட்டணி அமையும். அப்படிப்பட்ட கூட்டணியை அமைக்க தீவிரமாக முயன்று வருகிறோம். என தெரிவித்தார்.
அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர்,
தேர்தல் வாக்குறுதிகளில் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். எப்படியாவது ஓட்டு வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அந்த வகையில் மக்கள்தான் தீர்ப்பளிப்பர் என தெரிவித்தார்.
- கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி பங்கேற்கவில்லை.
- பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
திண்டிவனம்:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன டாக்டர் ராமதாஸ் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு அன்புமணி பங்கேற்ற நிலையில் தற்போது இருவருக்கும் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அன்புமணி இன்று டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பங்கேற்கவில்லை.
டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் அவரது மனைவி சரஸ்வதி அம்மையார், மகள் ஸ்ரீகாந்தி, பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தன் மற்றும் நிர்வாகிகள் மற்றும் குடும்பத்தினர், மாவட்ட செயலாளர்கள் பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். இந்த பொங்கல் விழாவில் ஒயிலாட்டம், சிலம்பாட்டம் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.






