search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pongal gifts"

    ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது என்று பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார். #pollachijayaraman #Jayalalithaa

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியில் உள்ள ரே‌ஷன் கடைகளில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டது. இதில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 ரொக்க பணத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது-

    தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விட்டு சென்ற அனைத்து மக்கள் நலத் திட்டங்களும் தற்போது வரை தொடர்கிறது.

    தற்போதுள்ள ஆட்சியில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. ஏழை மக்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் இந்த ஆண்டு பொங்கல் பரிசுடன் ரூ. 1000-மும் வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் காயத்ரி, முன்னாள் நகர்மன்றத்தலைவர் கிருஷ்ணகுமார், அ.தி.மு.க. சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜேம்ஸ்ராஜா, அ.தி.மு.க. நிர்வாகிகள் அக்னீஸ் முகுந்தன், அருணாசலம், செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். #pollachijayaraman #Jayalalithaa

    ×