search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waiting"

    • விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வீரமரணமடைந்த விவசாய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. போராட்டத்தை மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் அவினாசி சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் சிறப்புரையாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய்துறை வட்டாட்சியர் (திருசெங்கோடு), உதவி இயக்குநர் (வேளாண்மை) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் உழவர் ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    • பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன.

    சிவகாசி

    சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக தெருக்களும் ரோடுகளும் சுருங்கி விட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தா லும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும் குடியிருப்புகள், சாலை கழிவு கள், தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

    மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் தெருக்க ளில் ஓடுகிறது. இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு நட வடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    சிவகாசி, திருத்தங்கல் 2 பகுதிகளுக்கும் சேர்த்து 150 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ நத்தம், நாரணாபுரம், அனுப்பங்குளம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், பள்ளபட்டி உள்ளிட்ட 9 முதல் நிலை ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை.

    இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் சிவகாசி யூனியன் பகுதிக்குள் உள்ளது. இந்த ஊராட்சி களை மாநகராட்சியோடு இணைத்தால் பாதாள சாக்கடை திட்டத்தின்படி 360 கிலோ மீட்டர் தூரம் அமையவேண்டி இருக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உட னடியாக சிவகாசியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
    • அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு வீட்டு மனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சசிக்குமார் தலைமை வகித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள கோபாலபுரம், ராமகிருஷ்ணாபுரம், வைத்திலிங்காபுரம், மம்சாபுரம், ஆராய்ச்சிபட்டி உள்ளிட்ட கிராமங்களில் வீடற்ற ஏழைகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

    அந்த பட்டாவை புதுப்பித்து நில அளவை செய்து தர வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடந்தது.

    மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ஜுனன், மாவட்ட குழு உறுப்பினர் திருமலை, நகர செயலாளர் ஜெயக்குமார், மாதர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ரேணுகாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    வட்டாட்சியர் ரெங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • உள்ளூர் மக்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கப்படுமா?

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருகின்றனர். ஆன்மீக சுற்றுலா வரும் வெளிநாட்டு பக்தர்களும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகின்றனர்.

    பக்தர்கள் சிரமம்

    ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைெபறும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதில் அதிக அளவில் சிரமம் இருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவிலில் பக்தர்களுக்கு 50 மற்றும் 100 ரூபாய் சிறப்பு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பொது தரிசனமும் நடைமுறையில் உள்ளது.

    ஆனால் இந்த கோவிலில் குறைந்த அளவு கூட்டம் இருந்தாலும் உடனடியாக சாமி தரிசனம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கியூ வரிசைகளை அமைத்து நேரடியாக தரிசனம் செய்யமுடியாத சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளனர். இதனால் 1000 பக்தர்கள் தரிசனத்திற்கு வந்தால்கூட பெரிய கூட்டம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

    இதனால் வெளியூர் பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய செல்கின்றனர். ஆனால் பொது தரிசனத்திற்கு எவ்வளவு கூட்டம் உள்ளதோ? அதே அளவுக்கு சிறப்பு தரிசனத்திற்கும் பக்தர்கள் காத்திருக்கும் அவலநிலை இங்குமட்டும்தான் காண முடிகிறது. அதுவும் மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய தனி கட்டணம், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய தனி கட்டணம் என 2 வகையான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    மேலும் கோவிலில் நுழையும்போது செல்போன்களும் தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுக்கும் தனி கட்டணம் உள்ளது. இதுமட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் கட்டுபாடுகளை மீறி அழைத்து செல்லப்படுவது இன்னும் நடைமுறையில் உள்ளது.

    உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தாலும் அவர்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுமட்டுமின்றி பூஜை நேரங்களில் மணி கணக்கில் பக்தர்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றனர். அப்போது குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் மயங்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

    இதுபற்றி பக்தர்கள் கூறியதாவது:-

    மீனாட்சி அம்மன் கோவிலில் முன்பெல்லாம் நேரடியாக சென்று எளிதாக சாமி தரிசனம் செய்ய முடியும். ஆனால் தற்போது நீண்ட கியூ வரிசை பாதைகளை அமைத்து கூட்டம் இல்லாவிட்டாலும், கூட்டம் இருப்பதுபோல் மாயதோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வரிசை வழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார்கள். இதனால் தேவையின்றி நேர விரையம் ஏற்படுகிறது.

    வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வெளியூர் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். ஆனால் அனைத்து நாட்களிலும் கட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளது. இதனால் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. தற்போது அய்யப்ப பக்தர்கள் வருகை அதிகமாக உள்ளது. இதனால் உள்ளூர் பக்தர்கள் உடனடியாக தரிசனம் செய்ய முடியவில்லை. இதனால் பலர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

    கோவிலில் பல சிலைகள் சேதமாகி உள்ளது. அவைகளை அவ்வப்போது சீரமைத்தால் கோவில் இன்னும் பொலிவுடன் திகழும். ஆனால் கும்பாபிஷேக காலங்களில் மட்டுமே திருப்பணிகள் செய்கின்றனர். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.

    கோவிலுக்கு உண்டியல் வசூல் மட்டுமின்றி சிறப்பு கட்டண வசூல் உள்பட பல்வேறு வருமானங்கள் உள்ளது. அதில் பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்வதில்லை. உபயத்தில் மட்டுமே பணிகளை செய்கின்றனர். கோவில் வருமானத்தை கோவிலுக்கு செலவு செய்யும் திட்டத்தை செயல்படுத்தவேண்டும்.

    மேலும் உள்ளூர் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். இந்த நடைமுறை திருச்செந்தூர் முருகன் கோவிலில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட அனைத்து இந்து கோவில்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.

    பல்வேறு கிராமங்களிலிருந்து திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு படித்து வரும் ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசுப் பஸ்களில் பயணம் செய்து பள்ளிகளுக்கு தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதை அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பள்ளி கல்லூரி நேரங்களுக்கு ஏற்ற காலை மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இதுபோல் தொகுதிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளிலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    • ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட செவித்திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் தலைவர் மோகன்குமார் தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர்.

    அவர்கள் அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் ஒரு சதவீதம் வேலை வழங்க வேண்டும். வறுமை கோட்டின் கீழ் உள்ள எங்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் வழங்க முகாம் அமைக்க வேண்டும். மாதாந்திர உதவி தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்தி றனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்.

    அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவம் மிக்க சைகை மொழி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி காத்திருக்கப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை நல அலுவலர் பூங்கோதை அங்கு வந்து அவர்களிடம் கோரிக்கை குறித்து விசாரித்தார்.

    அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கலெக்டர் அலுவலகத்திற்கு காரில் வந்து இறங்கினார். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த செவித்திறன் குன்றிய மாற்றுத்திறனாளிகளை சந்தித்து கோரிக்கை குறித்து கேட்டு அறிந்தார். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து உள்ளனர்.

    • காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
    • பஸ்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்றால் அடுத்த பஸ்ஸிற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவின் தலைநகரம் நன்னிலம் ஆகும். இங்கு 70க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், 10-க்கும் மேற்பட்ட அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 6-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கலை அறிவியல் கல்லூரி, தனியார் நிதி நிறுவனங்கள் என உள்ள பகுதியாகும்.

    நன்னிலம், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களுக்கு மையத்தில் அமைந்த ஊராகும். நன்னிலத்திற்கு மேற்கண்ட ஊர்களில் இருந்து அரசு ஊழியர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் வருகின்றனர். இவர்கள் காலை மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து ஒன்னேகால் மணி நேரத்திற்கு ஒரு பேருந்தும், மயிலாடுதுறை பகுதியில் இருந்து ஒன்னரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தும், திருவாரூரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. பேருந்துகள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்றால், அடுத்த பேருந்திற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பொதுமக்கள் பணிகள் பாதிப்படைகிறது கவலை தெரிவிக்கின்றனர்.

    காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்கள் எளிதாக சென்றடையும் வகையில், மாலை4.30 மணி அளவில் இருந்து மாலை 6 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கைவைத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அவர் காரில் கடந்து செல்வதை மக்களுடன் நான் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன் என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    நடிகை குஷ்பு சென்னையை பற்றிய தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது:-

    சென்னை எனக்கு புகழ், குடும்பம் என எல்லாவற்றையும் தந்துள்ளது. என் மனதில் இருந்த துன்பத்தை போக்கியது. நான் பாஸ் போர்ட்டில் மும்பை வாசியாக இருந்தாலும், இதயப்பூர்வமாக சென்னை வாசியாக உணர்கிறேன். இந்த சிறப்பான நகரத்துக்கு கடமைப்பட்டு இருக்கிறேன்.

    சென்னை காலத்துக்கேற்ப நிறைய மாறி இருக்கிறது. ஆனாலும் இங்கு கலாசாரம் வேரூன்றி இருக்கிறது. எனது மகள்கள் இங்கே வளர்ந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    ஒரு நடிகையாக, தற்போது விளம்பர பலகைகள், பேனர்களை அண்ணா சாலையில் பார்க்க முடிய வில்லை என்பது சற்று வருத்தம் தான். முன்பெல்லாம் பட ரிலீசின் போது மவுண்ட் ரோட்டுக்கு சென்ற போது பெரிய பெரிய பேனர்களை பார்த்திருக்கிறேன். எனது முதல் தமிழ் படமான ‘தர்மத்தின் தலைவன்’ வெளியான போது நான் மவுண்ட் ரோட்டுக்கு சென்றேன்.

    அங்கு பெரிய அளவில் திரண்டிருந்த ரசிகர்கள் பேனர்களை பார்த்து கொண்டிருந்தனர். அதில் பிரபுவின் படம் மட்டும் இருந்தது. அது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

    எனது கணவர் சுந்தர் சி நடித்த ‘தலைநகரம்‘ படம் வெளியான போது மவுண்ட்ரோட்டில் அவரது படத்துடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டிருப்பதை பார்த்த போது எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. நான் தென்னிந்தியாவில் முதலில் தெலுங்கு படத்தில்தான் நடித்தேன். அந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விஜயவாகினி ஸ்டூடியோவில் 1986-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி தொடங்கியது.

    அந்த நாட்களை என் வாழ்வாளில் மறக்க முடியாது. ரஜினிகாந்துடன் நான் நடித்த ‘பாண்டியன்’ படத்தின் படப்பிடிப்பு முட்டுக்காடு பகுதியில் நடைபெற்ற போது ரசிகர்களும், சுற்றுலா பயணிகளும் பெரிய அளவில் திரண்டிருந்தனர். அதேபோல ‘அண்ணாமலை’ படத்தின் ஒரு பாடல் காட்சி போட்கிளப் பகுதியில் நடந்த போதும் அப்பகுதி பொதுமக்கள் தெரு முழுவதும் திரண்டு நின்று பார்த்தனர். இதை என்னால் மறக்க முடியாது.

    ஒரு அரசியல்வாதியாக எனக்கு முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் பெரிய செல்வாக்கு இருந்தது. இது எனக்கு கிடைத்த அரியாசனமாக உணர்ந்தேன். நான் சென்னையில் நீண்ட காலமாக வசித்த போது தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை நான் பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா மிகவும் துணிச்சலான பெண். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன். அவர் காரில் கடந்து செல்வதை பார்க்க தெருக்களில் மக்கள் அலை போல திரண்டு இருப்பதை பார்த்திருக்கிறேன்.

    ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது தினமும் காலை 9.30 மணிக்கு மியூசிக் அகாடமி ரோட்டில் காரில் செல்வார். நானும் மக்களுடன் சாலையில் காத்து நின்று அவரை பார்த்திருக்கிறேன். அவர் மதியம் சாப்பிட செல்லும் போது சாலையின் எதிர் திசைக்கு சென்று அவரை பார்ப்பேன்.


    இது சில வாரங்கள் சென்று கொண்டே இருந்தது. இதைப் பார்த்த அவர், ஒரு நாள் அவரது மெய்க்காப்பாளர்களை அனுப்பி என்னை யார்? என விசாரித்துள்ளார்.

    எனக்கு அமைதி தேவை என்றால் உடனே மெரினா கடற்கரைக்கு சென்று விடுவேன். தி.நகர் கடைகளுக்கு சென்று சேலைகள் வாங்கியதையும் மறக்க முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பிரதமர் பதவிக்கு தான் போட்டியிட போவதில்லை என சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். #AkhileshYadav #PrimeMinister
    லக்னோ:

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்னோவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதிய பிரதமருக்காக நாடு காத்திருக்கிறது. மோடியை தவிர, வேறு பிரதமர் வேட்பாளர் இருந்தால், பா.ஜனதா அவரை முன்னிறுத்தட்டும். தேர்தல் முடிந்த பிறகு, எதிர்க்கட்சிகளிடம் எத்தனை பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிய வரும். ஆனால், நான் பிரதமர் பதவிக்கான போட்டியில் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #AkhileshYadav #PrimeMinister
    ×