search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    மாரிமுத்து எம்.எல்.ஏ. மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    திருத்துறைப்பூண்டி பஸ் நிலையத்தில் எம்.எல்.ஏ. ஆய்வு

    • மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளது.
    • காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பகுதியில் விவசாய தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.

    பல்வேறு கிராமங்களிலிருந்து திருத்துறைப்பூண்டி நகரப் பகுதிக்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு படித்து வரும் ஏழை எளிய மாணவ மாணவிகள் அரசுப் பஸ்களில் பயணம் செய்து பள்ளிகளுக்கு தினந்தோறும் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் மாலை நேரத்தில் பள்ளி விட்டு இரவு 8 மணிவரை பஸ்சுக்கு காத்திருக்கும் நிலை உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

    இதை அறிந்த திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. மாரிமுத்து திடீரென்று புதிய பஸ் நிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    உடனடியாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பள்ளி கல்லூரி நேரங்களுக்கு ஏற்ற காலை மாலை நேரங்களில் கூடுதலாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுப்பேன்.

    இதுபோல் தொகுதிக்கு உட்பட்ட மற்ற பகுதிகளிலும் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.

    Next Story
    ×