search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sewer work"

    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ரூ.1.43 கோடி செலவில் அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர். தெ.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் முதல் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ 38.48 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 கிமீ நீளம் தார் சாலை அமைத்திட ரூ 29.80 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை தார் சாலை அமைத்திட ரூ.12.66 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,மின் நகர் பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ.14.54 மதிப்பீட்டில் பணியையும், என மொத்தம் ஒரு கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கேஎஸ்ஏ.மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கேஜி பூபதி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    • போக்குவரத்து பாதிப்பு
    • போலீசார் பேச்சு வார்த்தை

    காவேரிப்பாக்கம்:

    பாணாவரம் பேரூராட்சியில் பாணாவரம் - காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடைபெற்ற வருகிறது. இதற்காக சாலையின் ஓரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டது.

    கழிவுநீர் தேக்கம்

    ஆனால் கழிவுநீர் கால்வாய் கட்டும்பணிகளை விரைந்து முடிக்காமல் கால தாமதம் ஏற்படுவதால் பள் ளங்களில் கழிவுநீர் தேங்கு கிறது.

    இதனால் அப்பகுதியில் துர் நாற்றம் வீசுகிறது. மேலும் டெங்கு, காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் எனபொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாணாவ ரம் ரெயில்வே மேம்பாலம் அருகே திடீர் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பாணாவரம் போலீசார் சம் பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடு பட்டவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • பாதாள சாக்கடை பணிகள் தொடங்குவது எப்போது? என்று பொதுமக்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
    • மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தாலும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன.

    சிவகாசி

    சிவகாசி நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டது. பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் சிவகாசி, திருத்தங்கல் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதுடன் ஆக்கிரமிப்புகள் அதிகம் காரணமாக தெருக்களும் ரோடுகளும் சுருங்கி விட்டன.மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில் ஓடைகள் இருந்தா லும் பெரும்பாலானவை தூர்வரப்படாமல் மேடாகி விட்டன. அனைத்து தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டிருந்தாலும் குடியிருப்புகள், சாலை கழிவு கள், தொழிற்சாலைகளின் கழிவுகளை வெளியேற்றும் அளவிற்கு போதுமானதாக இல்லை.

    மழைக்காலங்களில் சாக்கடை கழிவு நீர் தெருக்க ளில் ஓடுகிறது. இதற்காக சிவகாசியில் பாதாள சாக்கடை அமைப்பதற்காக 15 ஆண்டுகளுக்கு முன்பு நட வடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

    சிவகாசி, திருத்தங்கல் 2 பகுதிகளுக்கும் சேர்த்து 150 கிலோ மீட்டர் தூரம் பாதாள சாக்கடை அமைக்க கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ நத்தம், நாரணாபுரம், அனுப்பங்குளம், செங்கமல நாச்சியார்புரம், ஆனையூர், பள்ளபட்டி உள்ளிட்ட 9 முதல் நிலை ஊராட்சிகள் தற்போது நிர்வாகத்தில் இல்லை.

    இந்த ஊராட்சிகள் சிவகாசி மாநகராட்சியோடு இணைக்கப்படாமல் சிவகாசி யூனியன் பகுதிக்குள் உள்ளது. இந்த ஊராட்சி களை மாநகராட்சியோடு இணைத்தால் பாதாள சாக்கடை திட்டத்தின்படி 360 கிலோ மீட்டர் தூரம் அமையவேண்டி இருக்கும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இருந்து உட னடியாக சிவகாசியில் பாதாள சாக்கடை பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×