search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கந்திலி ஒன்றியத்தில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் பணி
    X

    சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ரூ. 43 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    கந்திலி ஒன்றியத்தில் தார்சாலை, கழிவுநீர் கால்வாய் பணி

    • கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • ரூ.1.43 கோடி செலவில் அமைகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர்மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் ஸ்வச் பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.43 இலட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை கலெக்டர். தெ.பாஸ்கர பாண்டியன் திருப்பத்தூர் எம்.எல்.ஏ. அ.நல்லதம்பி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    தொடர்ந்து சு.பள்ளிப்பட்டு ஊராட்சியில் முதல் - அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ 38.48 லட்சம் மதிப்பீட்டில் பணியையும், மொளகரம்பட்டி முதல் கீழ்குரும்பர் தெரு வரை 1 கிமீ நீளம் தார் சாலை அமைத்திட ரூ 29.80 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,ஆதியூர் முதல் தங்கபுரம் சாலை வரை தார் சாலை அமைத்திட ரூ.12.66 லட்சம் மதிப்பீட்டில் பணியையும்,மின் நகர் பகுதியில் தார் சாலை அமைத்திட ரூ.14.54 மதிப்பீட்டில் பணியையும், என மொத்தம் ஒரு கோடியில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கே.ஏ.குணசேகரன், கேஎஸ்ஏ.மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி, ஊராட்சி மன்ற தலைவர் சைனம்மாள் சுப்பிரமணி, ஒன்றிய கவுன்சிலர் கேஜி பூபதி, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உட்பட பல கலந்து கொண்டனர்.

    Next Story
    ×