search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
    X

    போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

    விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

    • விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
    • இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டம் ஏமப்பள்ளி கிராமம் பிளிக்கல்மேடு பகுதியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. முன்னதாக வீரமரணமடைந்த விவசாய தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. போராட்டத்தை மாநில சட்ட விழிப்புணர்வு அணி செயலாளர் அவினாசி சதீஷ் குமார் தொடங்கி வைத்தார். கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் தங்கவேல் சிறப்புரையாற்றினார்.

    போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் வருவாய்துறை வட்டாட்சியர் (திருசெங்கோடு), உதவி இயக்குநர் (வேளாண்மை) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். விவசாயிகளின் கோரிக்கையை கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.

    மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயமணி, கிழக்கு மாவட்ட செயலாளர் உழவர் ஆனந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்லமுத்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தினர். இதில் விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×